சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA -வின் 300 வது மாதக் கருத்தாய்வு கூட்டமும், 25-வது ஆண்டு வெள்ளிவிழா விருது வழங்கும் நிகழ்ச்சியும் திரு.அருள்தாஸ் ஆசான் தலைமையில் டாக்டர்.அக்ரி.ஒய்.இராஜகுமார், திரு.முழங்குழிலாசர், திரு.கே.செல்வநாதன், வர்ம மறுமலர்ச்சியின் தந்தை டாக்டர்.த.இராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் 06.06.2026 அன்று மதியம் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் திரு. கே.செல்வநாதன் 25-வது ஆண்டு வெள்ளிவிழா 30.05.2026 அன்று மூலச்சல் அரசு உயர்நிலைப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது குறித்தும் சிறந்த சித்த மருத்துவ வல்லுநர்களுக்கும், களரி, […]
Read More
மூலநோய்
  • By Magazine
  • |
டாக்டர் என்.கே. சுரேஷ் MD(S) ஜீரணமண்டலப் பாதையின் கடைசி பகுதியான மலக்குடலின் (Rectum) உள்ளே உள்ள இரத்தநாளங்களில் வீக்கம் மற்றும் தாபிதம் ஏற்பட்டு இரத்தம் கசிதல், வலி, எரிச்சல் மற்றும் வெளியில் முளை பிதுங்கி காணுதல் போன்ற குறிகுணங்களை காட்டி துன்பப்படுத்தும் நோயை மூலநோய் என்கிறோம். மூலநோயால் இந்தியாவில் சுமார் 11 சதவீதம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். மூலநோய் பொதுவாக உணவுபழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறை மாற்றங்களால் உருவாகிறது. மூலநோயால் பாதிக்கப்படுபவர்கள் புத்துணர்ச்சி இன்றி, எரிச்சலுடன், கடுகடுப்பாக இருக்கும் மனநிலைக்கு […]
Read More
அகில உலக சித்த ஆயுர்வேத வர்ம களரி கழகத்தின் (SAVKIA) வெள்ளிவிழா
  • By Magazine
  • |
அகில உலக சித்த ஆயுர்வேத வர்ம களரி கழகத்தின் (SAVKIA) வெள்ளி விழா, மருத்துவ நூல்கள் வெளியீடு, மூத்த ஆசான்களுக்கு விருது வழங்குதல் மற்றும் வர்ம மருத்துவச் செயலாலரங்கம் உள்ளிட்ட முப்பெரும் விழாக்கள் கன்னியாகுமரி மாவட்டம்  மூலச்சல் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மிகச் சிறப்பாக நடநதது. துவக்க விழாவும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் வர்ம மறுமலர்ச்சியின் தந்தை Dr.T. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில்  கிரீன் அக்ரி கிளப் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் Agri.Y. இராஜகுமார் மற்றும்  மரு. […]
Read More
வர்மம் எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான தெக்ஷணைக்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் கவளிக்காலம் பற்றி அறிவோம். புறங்கையின் பெருவிரல் கவளியில் கவளிக்காலம் அமைந்துள்ளது. இவ்வர்மம் கவளி வர்மம், கைக்கவளி வர்மம், கைக்கவளிக்காலம் எனவும் அழைக்கப்படுகிறது.                 “மரணமென்று கவர் நேர் ஒன்றரையிறைக்கும்                 மைந்தனே கவளிவர்மம்”.                                                                 – வர்ம குருநூல்                 “கைப்பெருவிரல் கவளியில் கவளிவர்மம்”.                                                                                                 – வர்ம கலைக்களஞ்சியம் என குறிப்பிடுகிறது. போடும் […]
Read More
கீழாநெல்லியின் மருத்துவகுணங்கள்
  • By Magazine
  • |
கஸ்தூரிபா   ஜாண்ஸன் தாவர இயலில் பைலானதஸ் அமரஸ் (Phyllanthus amarus) என்று அழைக்கப்படும் இம்மூலிகை யூபோர் பயேசியே (Euphorbiaceae) என்ற குடும்பத்தை சேர்ந்தது. தமிழ்நாட்டில் பரவலாக மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு குறுஞ்செடி. சுமார் 15 சென்டிமீட்டர் உயரம் வரை வளரும். இம்மூலிகையின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன் தருகிறது. பயன்கள் மஞ்சள் காமால நோய் தீர்க்க வேருடன் கூடிய முழுச் செடியையும் நீரில் கழுவி அரைத்து 5 முதல் 7 நாட்கள் மோரில் கலந்து காலை […]
Read More
குடல்புண்
  • By Magazine
  • |
டாக்டர் என்.கே. சுரேஷ் MD(S) வயிற்றில் ஏற்படும் புண்களையும், சிறுகுடலின் முன்பகுதியில் ஏற்படும் புண்களையும் பொதுவாக நாம் வழக்கத்தில் குடல்புண் (அல்சர் – Peptic ulcer) என்று அழைக்கிறோம். நாட்பட்ட குடல்புண்நோய் உள்ளவர்கள் உடலும், மனமும் குன்றி போவதால் இதனை குன்மம் என சித்தமருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வயிற்று பகுதியில் ஏற்படும் புண்களை வயிற்றுப்புண், Gastric ulcer, Stomach ulcer என்று அழைப்பதுண்டு. வயிற்றுபகுதியை தொடர்ந்து வரும் சிறுகுடலில் ஏற்படும் புண்களை- சிறுகுடல் புண் (duodenal ulcer)) என்று […]
Read More
வர்மம் எனும்  மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் தெக்ஷணைக்காலம் சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான புயவர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் தெக்ஷணைக்காலம் பற்றி அறிவோம். இவ்வர்மம் உள்ளங்கை வெள்ளை வர்மத்தின் நேர் பின்புறம் புறங்கையில், நடுவிரலுக்கும், மோதிர விரலுக்குமிடையில் அமைந்துள்ளது. இவ்வர்மத்திற்கு தெக்ஷண வர்மம், தெக்ஷணைக்காலம், மொழிப்பிறங்கண் வர்மம் என்னும் வேறுபெயர்களும் உண்டு. “அறுதியென்ற உள்ளங்கை வர்மத்தின் பின் தெக்ஷணையின் காலமென்பார்”.                                                                                                                 – வர்ம குருநூல் என குறிப்பிடுகிறது. சாந்தமாம் தெக்ஷணையின் காலம் […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA – 298-வது கருத்தாய்வு கூட்டமானது திரு.அருள்தாஸ் ஆசான் தலைமையில், திரு. கே.செல்வநாதன் ஆசான், மரு.கமலக்கண்ணன், மூலச்சல் டாக்டர்.த.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 04.04.2026 அன்று மதியம் சுமார் 2 மணியளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் திரு. அருள்தாஸ் ஆசான் ஆறறிவு விளக்கம் குறித்துப் பேசினார். மேலும் மூலநோய்களுக்கு கந்தக செந்தூரம், நரம்புச்சுருக்கம், கட்டிகளுக்கு வெடியுப்பு சுண்ணம் செய்முறையைக் கூறினார். திரு. சுப்பிரமணிய ஆசான் தமரக வாயு குணமாக மருந்து, சொறி, சிரங்கு, படை, […]
Read More
கிரியேட்டினின் பற்றி அறிவோம்
  • By Magazine
  • |
– கஸ்தூரிபா ஜாண்ஸன் கிரியேட்டினின் (Creatinine) என்பது அன்றாட செயல்பாட்டின் போது தசைநார்கள் சிதைவடைவதால் உருவாகும் ஒரு கழிவுப்பொருளாகும். சுருக்கமாகச் சொன்னால் கிரியேட்டினின் சிறுநீரகத்தின் செயல்பாட்டை அளவிட உதவும் ஒரு முக்கியமான இரத்தக் கழிவுப்பொருள் எனலாம். கிரியேட்டின் சில செய்திகள் இரத்தத்தில் கிரியேட்டின் அளவு அதிகரிப்பது, சிறுநீரகங்கள் சரியாகச் செயல்படவில்லை என்பதைக் குறிக்கும் முக்கிய அறிகுறியாகும். ஆரோக்கியமான சிறுநீரகங்கள் இரத்தத்தில் உள்ள இந்த கழிவைக் வடிகட்டி சிறுநீர் வழியாக வெளியேற்றுகின்றன. தசை ஆற்றலை பயன்படுத்தும் போது கிரியேட்டினின் […]
Read More
வாய்ப்புண்
  • By Magazine
  • |
டாக்டர் என்.கே. சுரேஷ் MD(S) வாயில் ஆரம்பித்து ஆசனவாயில் முடிவடையும் ஜீரணமண்டலத்தில், வாய் முதல் பகுதியாக உள்ளது. வாய்ப்புண் பல காரணங்களால் ஏற்பட்டு, உணவு உண்பதற்கும், உணவு விழுங்குவதற்கு சிரமத்தை கொடுக்கிறது. உதடுகளின் உட்புறம், கன்னத்தின் உட்புறம், நாக்கு, பல்ஈறு ஆகிய பகுதியில் ஏற்படும் புண்களை, வாய்ப்புண் என்று அழைக்கிறோம். பொதுவாக வாய்ப்புண் 4 நாட்களிலிருந்து 14 நாட்களுக்குள் ஆறிவிடும். வாய்ப்புண்ணை அக்கரம் என அழைப்பதுண்டு.  மேலும்  Apthousulcer, Stomatitis என்பதும் வாய்ப்புண்ணை குறிக்கும். வாய்ப்புண் உண்டாவதற்கான […]
Read More