மறுமலர்ச்சி என்பது…
  • By Magazine
  • |
ஆசிரியர்  மருத்துவர். த. இராஜேந்திரன் இந்தியாவின் அரசியல் சூழல் வெளியுலகத்திற்கு ஒரு வெப்ப ஆற்றலை விதைத்து வருகிறது. உலகின் பலநாடுகள் இந்தியாவின் அனைத்து வளங்களின் மீதும் ஒரு கழுகு பார்வையைக் கொண்டிருந்தாலும் எளிதில் ஏறி விளையாடி விடலாம் எனும் நினைப்பில் மண் விழுந்தவர்களாகவே உள்ளனர். எனினும் பகுத்தலுக்கேற்ற ஓர் ஒப்பற்ற நாடாகக் கருதி இயங்க அவர்கள் தயங்குவதில்லை. எத்தனையோ வளங்களிலிருந்தும் கோடிக்கணக்கான மக்கள் வாழ்வில் முன்னேற முடியாத முன்னேற்றப்படாத சூளல். வறுமையில் வாடும் பொருள் வளமற்ற வீழல். […]
Read More
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் சுற்றுலா என்பது பொதுவாக மனதிற்கு இதமளிக்கும் கடற்கரைகளுக்கோ, அமைதி தரும் ஆன்மீகத் தலங்களுக்கோ அல்லது வரலாற்றைப் பறைசாற்றும் நினைவுச் சின்னங்களுக்கோ செல்வதாகவே இன்றும் பார்க்கப்படுகிறது. ஆனால்,  காலமாற்றத்திற்கு  தகுந்தோ அல்லது சுற்றுலா வணிகம் ஏற்படுத்தும் புதிய அறிமுகங்களுக்கு தகுந்தோ சுற்றுலாவின் பரிமாணங்கள் மாறி வருகின்றன. அந்த வகையில், தெலுங்கானா மாநில சிறைத்துறை நிர்வாகம் சஞ்சல்குடாவில் அறிமுகப்படுத்தியுள்ள “Feel the Jail”  (சிறையை உணர்) என்ற திட்டம், சுற்றுலாத் துறையில் ஒரு புதிய விவாதத்தை […]
Read More
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் 2021-ல் சீனா தனது கல்வி முறையில் ஒரு மிகப்பெரிய புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்தது. இது Double Reduction” Policy (Shuang Jian – இருமடங்கு குறைப்பு கொள்கை) என்று அழைக்கப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம், ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி (K-9) வணிகமயமாகக் கூடாது என்பதாகும். இதன் பின்னணியில் உள்ள முக்கிய விவரங்கள் இதோ: சீன அதிபர் ஷி ஜின்பிங் (Xi Jinping),), இந்தக் கல்விச் சீர்திருத்தத்தை (Double Reduction Policy) […]
Read More
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் “கைநிறையச் சம்பளம் வருது.. ஆனா நிம்மதி?” – 24 வயது இளம்பெண் ஒருவரின் இந்தக் கதறல்,  சமூக ஊடகங்களின் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.  இக்குரல் நடுத்தர மக்களின் கதவுகளையும் தட்டியிருக்கிறது. ஏசி அறைகள், வார இறுதி விடுமுறைகள், பளபளக்கும் அடையாள அட்டைகள் என வெளியிலிருந்து பார்க்க மினுக்கும் கார்ப்பரேட் வாழ்க்கை, உள்ளே ஒரு தலைமுறையின் ஆன்மாவையே சிதைத்துக் கொண்டிருக்கும் அச்சம் இப்போது மேலெழுந்து நிற்கிறது. வாழ்வின் நோக்கமும் வெற்றி எனும் சொல்லின் பொருளும் […]
Read More
  • By Magazine
  • |
மானுடம் கண்ட அறிவியல் முன்னேற்றங்களும், தொழில்நுட்பப் பாய்ச்சல்களும் நம்மை விண்வெளியின் விளிம்பிற்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றன. ஆனால், இன்னொரு புறம் நாம் இன்னும் கற்காலத்து வன்முறை மனப்பான்மையிலிருந்து விடுபடவில்லை என்பதையே தற்போதைய போர்களும்,  மோதல்களும் பறைசாற்றுகின்றன. இரக்கம் அற்ற இந்தபோர்களைக் கண்ணுறும்போது நாம் நாம் உரக்கச் சொல்ல வேண்டிய ஒற்றைச் சொல்: “யுத்தம் வேண்டாம்!” யுத்தம் என்பது வெறும் நாடுகளுக்கு இடையிலான மோதல் அல்ல; அது பல்லாயிரக்கணக்கான அப்பாவி மக்களின் கனவுகளின் மீது ஊற்றப்படும் ரத்தம். பீரங்கி […]
Read More
வாக்கு என்பது வாழ்வாதாரம்? தமிழகத்தின் தேவை என்ன?
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் தமிழகம் மீண்டும் ஒரு தேர்தல் திருவிழாவிற்குத் தயாராகி வருகிறது. வீதிகளில் கொடிகளும், காற்றில் வாக்குறுதிகளும் பறக்கத் தொடங்கிவிட்டன. ஆனால், ஆரவாரங்களுக்கு மத்தியில் சாமானிய மனிதனின் அடிப்படைத் தேவைகள் என்னவாக இருக்கின்றன என்பதை அரசியல் கட்சிகள் ஆழமாகச் சிந்திக்க வேண்டிய தருணம் இது. ஒரு தேர்தல் என்பது வெறும் ஆட்சி மாற்றம் மட்டுமல்ல; அது மக்களின் வாழ்க்கைத் தரத்தில் ஏற்படும் மாற்றத்திற்கான திறவுகோல். இன்றைய சூழலில் தமிழக மக்கள் எதிர்கொள்ளும் இரண்டு முக்கிய சவால்கள்: […]
Read More
புத்தாண்டின் நம்பிக்கை
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் ஒவ்வொரு புத்தாண்டும் வருகையிலும் மனிதர்கள் இந்த ஆண்டு நாம் பெற்ற கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து அடுத்த ஆண்டில் நல்ல விஷயங்கள் நடக்காதா? என்கின்ற எதிர்பார்ப்புகளை சுமந்து புத்தாண்டுகளை எதிர்கொள்கிறார்கள். மனித மனம் அன்றாடங்களில் உள்ள சிக்கல்களின் வழியாக பெற்ற அனுபவங்களின் மூலம் எதிர்காலத்தின் மீது நம்பிக்கையைத் தவிற வேறு என்ன வைக்க இயலும் என்கின்ற அடிப்படையில் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.      மனிதர்களுக்கு ஒன்று முடிந்து இன்னொன்று துவங்க வேண்டும் என்கின்ற வாழ்வின் […]
Read More
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் சமூகம் அறிவார்ந்த மேம்பட்ட சமூகமாக மாற வேண்டும் என்றால் அதற்கு இரு துறையினரை முக்கியமாக பொறுப்புமிக்கவர்களாகக் குறிப்பிடுவர்.                 ஒன்று ஆசிரியர்கள் மற்றொன்று ஊடகவியலாளர்கள். இருவரும் சமூகத்தை செம்மையிடுவதிலும் வளர்த்தெடுப்பதிலும் மிக முக்கியப் பங்காற்றுகின்றனர்.  ஆசிரியர்கள்  அவர்களிடம் வந்துச் சேரும்    குழந்தைகளை சிறந்த ஆளுமைகளாக, ஆற்றல்கொண்டவர்களாக, தலைவர்களா உருஏற்றி இச்சமூகத்திற்கு  கொடுக்கின்றார்கள்.                 அவ்வாறு உருபெற்றவர்களால் இச்சமூகத்தில் ஒவ்வொரு துறைகளும் இயங்குகின்றது. மேலும் இயக்கவும் படுகின்றது. அவ்வாறு இயங்குகையில் அவர்கள் தவறுகள் செய்வார்களே […]
Read More
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்க இயலவில்லை எனும் செய்திகளை படிக்கும்போது நம்மால் கவலைபடாமல் இருக்க இயலவில்லை.  இதைவிட ஒரு துயரம் வேறு இருக்க முடியாது. சமூகத்தின் பல்வேறு துறைகளிலும் பல ஆக்கப்பூர்வமான பங்கேற்புகளை வழங்கி சமூகமுன்னேற்றத்தில் பங்கெடுத்துக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்கள் இன்று ஊழியர்களுக்கு மாதச் சம்பளம்/ஓய்வூதியம் வழங்கக்கூட அரசைக் கையேந்தும் அவலநிலையில் உள்ளது. சான்றிதழ்களை அச்சிடக்கூடப் பணமின்றித் தவிப்பதை படிக்கையில் துயரம் கௌவுகின்றது.                 “இந்தப் பொருளாதார நெருக்கடிக்கான முதன்மைக் காரணம், […]
Read More
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் மக்கள் கூடும் நிகழ்வுகளான, அரசியல் பேரணிகள், விளையாட்டு மைதானங்கள், கேளிக்கை நிகழ்ச்சிகள்,  வழிபாட்டுத் தலங்கள் போன்ற இடங்களில் எதிர்பாராத விதமாக நெரிசல் ஏற்பட்டு, சிலர் உயிரிழக்கும் துயரச் சம்பவங்கள் நிகழும்போது நாம் மிகவும் வருந்துகிறோம். ஆனால் இப்பகுதிகளில் ஒரு தனிநபராக நம் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கின்றன அல்லது இருக்க வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு நம் மக்களிடம் இருக்கின்றதா என்பதைப் பற்றியும் நாம் யோசிக்க வேண்டும்.  போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளின்மை, திட்டமிடல் குறைபாடுகள் […]
Read More