• By Magazine
  • |
வெ. சின்னசாமி தோல்வியைத் தாங்கிக் கொள்ள முடியாமல் நமது நாட்டில் நாற்பது வினாடிக்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தோல்வி நிலையென நினைத்தால் மனிதன்  வாழ்வை நினைக்கலாமா? தோல்வி உன்னைத் துரத்துகின்றது என்றால், நீ வெற்றியை நெருங்குகின்றாய் என்று அர்த்தம். தோல்வி என்பது வெற்றிக்கு எதிர்திசை அல்ல. வெற்றிக் கதவை திறப்பதற்கு முன்பு நீங்கள் தட்ட வேண்டிய முதல் கதவே அதுதான். தோல்வியை ஆணியாக நினைத்தால் உறுத்தும். ஏணியாக நினைத்தால் உயர்த்தும் என்கிறார் எழுத்தாளர் […]
Read More
  • By Magazine
  • |
பூ.வ.தமிழ்க்கனல் 2026 தேர்தலில் தமிழ்நாட்டு அரசு ஆட்சியில் யாருமே எதிர்பார்க்காத ஒரு மாற்றம் ஏற்பட்டது. கடந்த 60 ஆண்டுகளாகத் தமிழ்நாட்டைத் தங்கள் பிடிக்குள் மாறி மாறி வைத்துக் கொண்டிருந்த இரு திராவிட கட்சிகளுக்கிடையில் ஒரு புதிய கட்சி தோன்றி, ஒரு சில ஆண்டுகளுக்குள் இரு கூட்டணிகளையும் தனியாக நின்று வென்றிருக்கிறது. தி.மு.க.விற்கும் அ.தி.மு.க.விற்கும் இடையில் இன்னொரு புதியகட்சி தோன்றி வளர்ந்து விடக்கூடாது என்று இரு கட்சிகளுமே ஒருமித்த கருத்துடன் மிகவும் எச்சரிக்கையாகவும் கவனத்துடனும் இருந்து வந்தன. இதனால் […]
Read More
அண்டத்தோற்றத்தின் அறிவியல் கொள்கைகள்
  • By Magazine
  • |
வர்ம அறிவியல் மாமேதை மூலச்சல் Dr.T இராஜேந்திரன் சென்ற மாத இதழின் தொடர்ச்சி… உயிர்களின் தோற்றம் முன்னுரை உயிர்களின் தோற்றம் பற்றி உலகம் முழுவதும் பல்வேறு ஆய்வுகள் நடந்து கொண்டிருந்தன. எதிலும் முழுமையான தீர்வு எட்டப்படவில்லை. எனினும் ஆய்வாளர்களின் முயற்சிகளும் குறைந்தபாடில்லை. ரஷ்யநாட்டின் உயிர் வேதியல் ஆய்வாளரான அலெக்சாண்டர் – ஐ – ஒப்பாரின் (Alexander-I-Oparin-1924) அவரைத் தொடர்ந்து ஆங்கில உயிரியல் அறிஞர் ஜே.பி.எஸ். ஹால்டேன் (J.B.S Haldane -1929)  இவர்கள் இருவரும் ஆரம்பகாலத்தில் எப்போதும் மாறிக்கொண்டே […]
Read More
கல்விக்கண்
  • By Magazine
  • |
பத்மநாபன் அறியாமை இமையிங்கே அடைந்திருந்தால்      அவனியிலே அனைவருக்கும் குருட்டுப் பார்வை அறியாமை புரைவிழியின் படலம் தன்னை      அடைத்திருந்தால் அனைவருக்கும் மங்கும் பார்வை அறியாமை எனும் நீண்ட துயிலைக் கொண்டால்      அவனியதன் அசைவினையே அறிதல் ஏது? அறியாமை எனும் போலித் தவமிருந்தால்      ஆன்மாவின் துடிப்பறிதல் என்ப தேது? அறியாமை எனுமிருட்டு அடர்வனத்துள்      அடிவைத்து நடப்போர்கள் வாழ்வுப் பாதை நெறியேதும் தெரியாமல் தத்தளித்தே      நெடுமாழப் புதைக்குழிக்குள் வீழ்ந்தே மாய்வர் அறியாமை இமைதிறந்து […]
Read More
சமூக அவலம்
  • By Magazine
  • |
ஏழையின் குமுறல்! முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்… வாங்கிய கடனுக்கு வழியில்லை வரதட்சணைக் கொடுமையின் வாழாவெட்டியான மகள்… வழிமறிக்கும் கந்துவட்டியின் கத்திக்குத்துக்குப் பயந்து… ஒரு லட்சம் கடன் வாங்கி ஒழுகிய வீட்டையும் வார்க்கை வீடாக்கியது தவறாகிப்போனது கொரானாவின் கொடுமையில் வசிப்பதற்கே வழியில்லை ஏலத்தால்… நிலத்தையும் இழந்த சோகம்! பசிதீர்க்க வழியில்லை படுத்து இளைப்பாறவும் இடமில்லை…! அரசுகளின் அநியாய ஆட்சிகளால்… அகால மரணத்துக்குள் தள்ளப்படும் நாங்கள் யாரிடம் சொல்லி அழ… கோடிகள் ஆயிரம் வாங்கினால் ஓடிவிடலாம் அயல்நாட்டுக்கு… வாங்கிய கடன்களுக்காய் வாழ்விழந்து […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA -வின் 300 வது மாதக் கருத்தாய்வு கூட்டமும், 25-வது ஆண்டு வெள்ளிவிழா விருது வழங்கும் நிகழ்ச்சியும் திரு.அருள்தாஸ் ஆசான் தலைமையில் டாக்டர்.அக்ரி.ஒய்.இராஜகுமார், திரு.முழங்குழிலாசர், திரு.கே.செல்வநாதன், வர்ம மறுமலர்ச்சியின் தந்தை டாக்டர்.த.இராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் 06.06.2026 அன்று மதியம் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் திரு. கே.செல்வநாதன் 25-வது ஆண்டு வெள்ளிவிழா 30.05.2026 அன்று மூலச்சல் அரசு உயர்நிலைப்பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது குறித்தும் சிறந்த சித்த மருத்துவ வல்லுநர்களுக்கும், களரி, […]
Read More
  • By Magazine
  • |
– வழக்கறிஞர் பி. விஜயகுமார் கணவர் இறந்து போனாலும் மனைவிக்கு தொடரும் ஜீவனாம்சம் பொதுவாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது என்னவென்றால் ஒரு கணவருக்கும் அவர் மனைவிக்கும் விவாகரத்து ஆகிவிட்டால் கணவருக்கும் மனைவிக்கும் உள்ள அத்தனை தொடர்பும் ரத்தாகி விட்டது. அதனால் கணவர் மனைவிக்கு ஜீவனாம்சமோ சொத்துரிமையோ கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று. ஆனால்  கணவர் மனைவியை விவாகரத்து செய்திருந்தாலும் மனைவி இரண்டாவது திருமணம் முடிக்கும் வரை கணவரின் வாரிசாகத்தான் மனைவி இருப்பாள்.  கணவன் வேறு ஒரு […]
Read More
சில மூலிகை பழமொழிகள்
  • By Magazine
  • |
– கஸ்தூரிபா ஜாண்ஸன் உணவு மருந்தாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும். சில மூலிகை பழமொழிகள் பற்றி பார்ப்போம். அங்காரிக் காரியைச் சங்கீதம் பாடச் சொன்னால் வெங்காயம், கறிவேப்பிலை என்று தான் பாடுவாள்.
Read More
  • By Magazine
  • |
– பைசல். தக்கலை ஒரு கவிஞன் விவசாயிகளைப் போல மொழியை உழுது பயிரிடுகிறான் களையெடுக்கிறான் அறுவடையின் போது எந்த லாபமும் இல்லை செய்வதறியாது திகைக்கும் நிமிடங்களில் அவனால் ஒரு முழு கவிதைத் தொகுப்பினுள் தற்கொலை செய்யமுடியாது அந்தத் தொகுப்பில் மரம் ,கயிறு ,விஷம் குறித்த எந்த கவிதையும் அவன் எழுதவில்லை
Read More
  • By Magazine
  • |
பழனி அரங்கசாமி நமக்கு முன்னர் வாழ்ந்த பல்துறைப் பெருமக்களைப் பற்றிக் கேள்விப்படுகிறோம். அவர்களை ஓவியமாகவும், படமாகவும் பார்க்கிறோம். அவர்கள் வாழ்வு நமக்குப் பாடமாகவும் அமையும் என்பதை அவர்களது வாழ்க்கை வரலாற்றில் தான் அறிந்து கொள்ள முடிகிறது. சுமகாலத்தில் வாழ்கின்ற பெரிய மனிதர்களைக் கூட நேரில் கண்டு அவர்களது அனுபவங்களைக் கேட்கும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. அவர்களது அறிவும் ஆற்றலும் உழைப்பும் உறுதியும் அறிய வேண்டுமாயின், அவர்களது வாழ்க்கைக் சரிதமே நமக்குத் துணை. தன் வரலாற்றுக் குறிப்புகள் இன்றைய இளைஞர் […]
Read More