சமூக அவலம்

சமூக அவலம்

  • By Magazine
  • |

ஏழையின் குமுறல்!

முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்…

வாங்கிய கடனுக்கு வழியில்லை

வரதட்சணைக் கொடுமையின்

வாழாவெட்டியான மகள்…

வழிமறிக்கும்

கந்துவட்டியின்

கத்திக்குத்துக்குப்

பயந்து…

ஒரு லட்சம் கடன் வாங்கி

ஒழுகிய வீட்டையும்

வார்க்கை வீடாக்கியது

தவறாகிப்போனது

கொரானாவின் கொடுமையில்

வசிப்பதற்கே வழியில்லை

ஏலத்தால்…

நிலத்தையும் இழந்த சோகம்!

பசிதீர்க்க வழியில்லை

படுத்து இளைப்பாறவும்

இடமில்லை…!

அரசுகளின் அநியாய

ஆட்சிகளால்…

அகால மரணத்துக்குள்

தள்ளப்படும் நாங்கள்

யாரிடம் சொல்லி அழ…

கோடிகள் ஆயிரம்

வாங்கினால்

ஓடிவிடலாம்

அயல்நாட்டுக்கு…

வாங்கிய

கடன்களுக்காய்

வாழ்விழந்து

அச்சத்தோடு

மரணத்தைத் தழுவும்

எங்களுக்கு

எந்த அரசு

வந்து என்ன

பயன்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *