சில மூலிகை பழமொழிகள்
- By Magazine
- |
-
– கஸ்தூரிபா ஜாண்ஸன்
உணவு மருந்தாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும். சில மூலிகை பழமொழிகள் பற்றி பார்ப்போம்.
- அழிஞ்சில் ஐந்தும் செய்யும் ஆவிரை அழகு செய்யும்’
- அப்படா நீலி அவுரியடா அறுபத்து நான்கு பெயரைக் கொன்றவளடா!
அங்காரிக் காரியைச் சங்கீதம் பாடச் சொன்னால் வெங்காயம், கறிவேப்பிலை என்று தான் பாடுவாள்.
- அத்திப்பழத்தை பிட்டுப் பார்த்தால் அத்தனையும் புழு.
- அண்டத்தை சுமக்கிறவனுக்கு சுண்டைக்காய் பாரமா?
- அவசர சோறு ஆபத்து!
- ஆவாரைப் பூத்திருக்க…சாவாரைக் கண்டதுண்டோ?
- ஆடாதோடாவுக்கும் ஐந்து மிளகுக்கும் பாடாத நாவும் பாடும்.
- ஆடிப்பயிர் காட்டும் ஆவாரை நெல் காட்டும்.
- ஆடிப்பட்டம் தேடி விதை
- ஆலும் வேலும் பல்லுக்குறுதி.
- ஆனை மதத்தால் வாழைத்தண்டு…ஆண் மதத்தால் கீரைத்தண்டு.
- இஞ்சிக்கு கஞ்சி துணை…கஞ்சிக்கு இஞ்சி துணை.
- இளைத்தவனுக்கு எள்ளு…கொழுத்தவனுக்கு கொள்ளு.
- இரைப்பை புண்ணுக்கு எலுமிச்சை சாறு.
- இரத்த கொதிப்புக்கு அகத்திக்கீரை
- இருமலைப் போக்கும் வெந்தயக்கீரை.
- எட்டி பழுத்தாலும் இனிக்காது நெட்டி பருத்தாலும் கணக்காது!
- எள்ளும் தினையும் எழுபது நாள்.
- எள்ளையும், கரும்பையும் கசக்கினால் தான் பலன் உண்டு.
- உமி போன அரிசி முளைக்காது.
- கடுக்காய் நூறு தாய்க்கு சமம்.
- கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.
- கண்ணுக்குத் தெளிவு பொன்னாங்கண்ணி.
- ஒரு மிளகு ஒரு வண்டி வாழ்த்துக்குச் சமம்.
- கல்லீரல் பலம் பெற கொய்யாப்பழம்
- கொலஸ்டிரால் குறைக்க பன்னீர் திராட்சை.
- காமாலை போக்க கரிசலாங்கண்ணி.
- கொக்கில் இளம் குஞ்சு கண்டவனுமில்லை. கோணாத தென்னை மரம் பார்த்தவனுமில்லை.
- கீரைதோட்டம் நமது மருந்துப் பெட்டி
- சீந்தில் இருக்க காய்ச்சல் ஏது
- சீரகம் இல்லா உணவும், சிறுபிள்ளைகள் இல்லா வீடும் சிறக்காது.
- சுக்குக்கு மிஞ்சிய வைத்தியர் இல்லை!
- சிறுநீர் கடுப்புக்கு அன்னாசி…சூட்டைத் தணிக்க கருணைக்கிழங்கு
- சித்தம் தெளிக்கும் வில்வம்…பித்தம் தணிக்கும் நெல்லிக்காய்
- சுக்கு வீட்டில் இருந்தால் சுகம் உடம்பில் இருக்கும்.
- தலைவலி நீங்க முள்ளங்கிச்சாறு
- தேனுடன் இஞ்சி இரத்தத் தூய்மை
- பொன்னை எறிந்தாலும் பொடி கீரையை எறியாதே
- பொன்னாங்கண்ணிக்கு புளியிட்டு ஆக்கினால் உண்ணாப் பெண்ணும் ஓர் உழக்கு உண்ணும்.
- பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டில் கூட உண்ணலாம்.
- ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது.
- பளபள பார்வைக்கு பப்பாளி, தள தள மேனிக்கு தக்காளி
- பூண்டில் இருக்கு பென்சிலின் சக்தி
- பனையை வளர்த்தவன் பார்த்துட்டு சாவான். தென்னை வளர்த்தவன் தின்னுட்டு சாவான்
- வல்லாரை வெல்ல வல்லாரை சாப்பிடு
- வாய்ப்புண் நீங்க மணத்தக்காளி! வயிற்றுப்புண் நீங்க சோற்றுக் கற்றாழை.
- வாழை வாழ வைக்கும்
- வாந்திக்கு மருந்து மணத்தக்காளி
- வாதநோய் தடுக்க அரைக்கீரை
- வாய் துர்நாற்றம் நீங்கும் ஏலக்காய்
- வெந்தால் தெரியும் வெங்காயத்தின் மகிமை.
- வீட்டுக்கு ஒரு முருங்கை ஊருக்கு ஒரு அவரை.
- மாதா ஊட்டாத சோற்றை மாங்காய் ஊட்டும்.
- மல்லிகை கடைக்கு மணமே விளம்பரம்.
- மிஞ்சும் நோயெல்லாம் வஞ்சகம் இல்லாமல் தடுக்கும் இஞ்சி.
- மூட்டுவலி போக்க முடக்கற்றான்
- மூலநோய் தீர வாழைப்பூ கூட்டு
- மாதுளை, தூதுளை வளர்த்த வீடு வயிற்றிலே, நெஞ்சிலே களங்கமில்லை.
- மேனி துலங்க குப்பைமேனி.
- வீட்டுச் செல்வம் மாடு, தோட்டச் செல்வம் கீரை.
- பருமன் குறைய முட்டைகோஸ்
- நன்னாரி விரும்ப பொன்னாகும் மேனி.
- நித்திய கல்யாணியாம் புற்றினை போக்கும் கண் அவளாம்!
Leave a Reply