நான்_ நீ_ நாம்   கொச்சி ஹோர்தூஸ்
  • By Magazine
  • |
நவம்பர்  27_30 ,2025 – கிருஷ்ணகோபால் வழக்கமாக தென்மேற்கு பருவமழை காலங்களில்தான் கேரளாவுக்கு சுற்றுலாச் செல்வோம். ஆனால் தற்போது தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்த காலகட்டத்தில் கொச்சியில் நடக்கும்  ஹோர்த்தூஸ் இலக்கிய விழாவுக்கு நண்பர்கள் சென்றோம்.   சென்னை குருவாயூர் இரயிலில் நண்பர்கள் சிலர் திருநெல்வேலியிலிருந்தும் ,சிலர் இரணியலிலிருந்தும் ஏறினர். நான் நாகர்கோவில் டவுனிலிலிருந்து ஏறினேன்.இரயில் ஏறும் போது இரவு பதினொரு மணி.  எப்போதுமில்லாத தோணலாய் இரயில் ஒரு  நடமாடும் கூட்டுக்குடும்பம் போல் தோன்றியது.   இடையிடையே ஒரு […]
Read More
காந்திவழி நடப்போம்!
  • By Magazine
  • |
– கே.பி.பத்மநாபன் சத்திய சோதனையில் சாத்தியம் வெற்றி என்றே நித்திய வாழ்வில் காட்டி நீண்டநாள் வாழ்ந்தார் காந்தி புத்தியை வாய்மை ஆள                 புலன்களை அகிம்சை ஆள கத்தியின் குருதியின்றிக்                 களத்தினில் வென்றார் காந்தி எத்தனை இடர்வந்தாலும்                 எதிர்ப்பவர் நாணும் வண்ணம் சத்தமாய் பேசிடாமல்                 சாந்தமாய் வென்றார் காந்தி நித்தமும் ராட்டை சுற்றி                 நெய்தநல் கதராடைதான் ஒத்தது நம்நாட்டுக்கென்று                 உரைத்தயல் உடை நீக்கிட்டார். இத்தரை போற்றும் வண்ணம்                 எளிமையின் […]
Read More
புதிய கண்டுபிடிப்பு
  • By Magazine
  • |
பூமியின் அரிதான தனிமம் புற்றுநோய் சிகிச்சையில் புரட்சி – முனைவர் மோகனா, பழனி ஓர் அரிதான, குறுகிய காலமே இருக்கக்கூடிய தனிமம் ஒன்று மருத்துவத்தின் மிகத் துல்லியமான புற்றுநோய் கொல்லியாக மாறக்கூடும் என அறிஞர்கள் கணித்துள்ளனர். இதற்கான ஆய்வினை டெக்சாஸ் A & M பல்கலைக்கழக சைக்ளோட்ரான் நிறுவனம் செய்துள்ளது. இத்தகவல் 2025, நவம்பர் 11- ஆம் நாள் Science daily-ல் வெளியிடப்பட்டுள்ளது.   அஸ்டட்டின்-211  புற்றுநோய் எதிர்ப்பு   டெக்சாஸ் A & M பல்கலைக்கழக […]
Read More
ஒப்பந்தம் எழுதிக்கொடுத்து தற்காப்பு கலை படித்தேன்முருகன் ஆசான் பேட்டி
  • By Magazine
  • |
தற்காப்பு கலையின் மீது உள்ள ஆர்வத்தால் 15 ஆண்டுகள் ஒப்பந்தம் எழுதிக் கொடுத்து தற்காப்பு கலை கற்றுக் கொண்டேன் என்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் முட்டைக்காடு அருகே உள்ள முருகன் ஆசான் பூவங்கா பரம்பு என்ற பகுதியை சேர்ந்த சித்த வர்ம வைத்தியரும், களரி கராத்தே பயிற்சியாளருமான திரு. முருகன் ஆசான் அவர்களை புதிய தென்றலுக்காக சந்தித்தோம். நீங்கள் யாரிடமிருந்து களரி தற்காப்பு கலை கற்றுக் கொண்டீர்கள் ? நான் பாரம்பரியமாக களரி குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் எனது […]
Read More
  • By Magazine
  • |
– ஓஷோ மக்கள் பலர் ஒளியைப் பற்றி சிந்திக்கும் போது இருட்டைப் பற்றிக் கவலைப்படத் தொடங்குகிறார்கள். வாழ்க்கையை பற்றி நினைக்கும் போது, சாவை எதிர்த்து சண்டைப் போடத் தொடங்குகிறார்கள். அதனால் தான் கடவுள் இருள், ஒளி இரண்டும் சேர்ந்தவர் தான் என்று சொல்லும் ஐதிகம் உலகில் இன்று வரை இல்லை. ஒரு ஐதிகம் கடவுள் ஒளியானவர், இருள் அற்றவர் என்று சொல்லுகிறது. கடவுள் ஒளி மயமானவர் என்று நம்பும் மக்கள் அவர் இருளே அற்றவர் என்று நினைப்பார்கள். […]
Read More
நூல் மதிப்புரை
  • By Magazine
  • |
பொறியியல் கல்வியை முடித்த ஒரு இளைஞனை செண்டை மேளம் என்ற நாட்டார் கலை ஆட்டிப்படைக்கிறது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் கொடை விழாவில் கண்ட சக்கர தீ வெட்டி தூக்கும் நிகழ்ச்சியில் எழுந்த செண்டை மேளத்தின் ஒலி, வெறும் தகர டப்பாவில் கொய்யா மரக்கம்பால் ஒத்திகை பார்க்கும் அளவுக்கு அவனுள் ஆழமாகப் பதிந்தது. இதுதான் சஜு என்ற கலைஞன் உருவான புள்ளி. “கொட்டடிக்காரன்” என்ற இந்த நூல், சஜுவின் 14 ஆண்டுகால செண்டை மேள அனுபவத்தை, ஒரு […]
Read More
தொழிலாளர் நலனுக்காக எதிரான சட்டங்கள்!
  • By Magazine
  • |
பூ.வ.தமிழ்க்கனல் இந்தியாவில் நடைமுறையில் இருந்து வரும் 44 தொழிலாளர் நலச் சட்டங்களை நீக்கிவிட்டு, அவற்றுக்குப் பதிலாகத் தொழிலாளர் நலம் குறித்த 4 வழிகாட்டுதல் தொகுப்புகளை ஊதியம் குறித்த தொகுப்பு, தொழில்துறை உறவுகள் குறித்த தொகுப்பு, பணி இடப் பாதுகாப்பு, உடல் நலம் மற்றும் பணி நிலைகள் குறித்த தொகுப்பு, சமூகப் பாதுகாப்பு குறித்த தொகுப்பு இயற்றி, அவற்றைச் சட்டம் ஆக்கி நவம்பர் 21 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தி இருக்கிறது ஒன்றிய அரசு. மேற்குறிப்பிட்ட 44 தொழிலாளர் […]
Read More
மனம் எனும் மாயை
  • By Magazine
  • |
இரா. அரிகரசுதன் நீல மலைச்சரிவுகளின் பசிய மரங்களை முட்டும் மேகங்கள் வெட்கம் சுமக்கின்றன. மலையையும் தன்னையும் சுமந்து ஓடிக்கொண்டிருக்கின்றது ஆறு அதன் உள்ளொளியாய் எரிந்துக்கொண்டிருக்கும் ஆழமோ நீரின் மேலே  மெல்ல ஊர்கின்றது தெங்கம் பழங்கள் மிதந்து செல்வதைக் கண்கொள்ளும் குரங்குகள் தங்களுக்குள் நினைவுகளைப் பேசிக் கொள்கின்றன. நீரின் முகமும் நீந்தும் மனமும் தொட்டுக்கொள்ளும் கணத்தில் பிறக்கின்றது பிரபஞ்சத்தின் ஓர் அழகியக் குழந்தை அமைதியின் தாய்ப்பாலை வாய்உறிஞ்சும் அதன் மென்சிரிப்போ சுடரும் மலைமேல் இன்னொருச் சுடராகச் சுடர்கிறது. அவ்வாறே […]
Read More
வேகத்தின் விலை
  • By Magazine
  • |
வேகத்தின் விலை பயணம் என்ற நோக்குடன், பயணித்தன பல உயிர்கள்… பயணிகளின் பாதுகாப்பு ஓட்டுனரின் கால் கைகளில்… சாலையில் ஆங்காங்கே வேகத்தடைகள், வளைவுகளில் முந்தாதீர் பதாகைகள், மித வேகம் மிக நன்று அறிவிப்புகள்… இருந்தும்__ வேகம் கூட்டியதன் விளைவு பறிக்கப்பட்டன பல உயிர்கள்… வேகத்தை விவேகத்துடன் கையாண்டால், தவிர்கப்படுமே உயிர் பலியாகும் தருணங்கள்… செ.பராந்தகன்
Read More