புத்தக மதிப்புரை
  • By Magazine
  • |
“பாற்கடலும் தேவதையின் பூனைக்குட்டியும்” என்ற இத்தொகுப்பு, கவிதை உலகில் ஒரு புதிய அதிர்வையும், பரவலான சிந்தனையையும் நமக்கு அள்ளித் தருகிறது. பாரதி கவிதைகளின் முன்னோடி வடிவம் போல, இந்த எளிய கவிதை வடிவத்தின் முன்னோடியாக சுதே கண்ணன் திகழ்கிறார் என்று கூறினால் அது மிகையாகாது. இந்நூலில் சுதே கண்ணன் அவர்கள் கவிதைகளைச் சிறுகதை வடிவிலும், வாசிப்பாரை மயக்கும் எளிய நடையிலும் தந்துள்ளார். இக்கவிதைகளைப் படிக்கும் வாசகர்களுக்கு எந்தவொரு ஐயமும் இன்றி, கதையைப் போல மனதை நெகிழச் செய்து, […]
Read More
மூலநோய்
  • By Magazine
  • |
டாக்டர் என்.கே. சுரேஷ் MD(S) ஜீரணமண்டலப் பாதையின் கடைசி பகுதியான மலக்குடலின் (Rectum) உள்ளே உள்ள இரத்தநாளங்களில் வீக்கம் மற்றும் தாபிதம் ஏற்பட்டு இரத்தம் கசிதல், வலி, எரிச்சல் மற்றும் வெளியில் முளை பிதுங்கி காணுதல் போன்ற குறிகுணங்களை காட்டி துன்பப்படுத்தும் நோயை மூலநோய் என்கிறோம். மூலநோயால் இந்தியாவில் சுமார் 11 சதவீதம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். மூலநோய் பொதுவாக உணவுபழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறை மாற்றங்களால் உருவாகிறது. மூலநோயால் பாதிக்கப்படுபவர்கள் புத்துணர்ச்சி இன்றி, எரிச்சலுடன், கடுகடுப்பாக இருக்கும் மனநிலைக்கு […]
Read More
அகில உலக சித்த ஆயுர்வேத வர்ம களரி கழகத்தின் (SAVKIA) வெள்ளிவிழா
  • By Magazine
  • |
அகில உலக சித்த ஆயுர்வேத வர்ம களரி கழகத்தின் (SAVKIA) வெள்ளி விழா, மருத்துவ நூல்கள் வெளியீடு, மூத்த ஆசான்களுக்கு விருது வழங்குதல் மற்றும் வர்ம மருத்துவச் செயலாலரங்கம் உள்ளிட்ட முப்பெரும் விழாக்கள் கன்னியாகுமரி மாவட்டம்  மூலச்சல் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மிகச் சிறப்பாக நடநதது. துவக்க விழாவும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் வர்ம மறுமலர்ச்சியின் தந்தை Dr.T. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில்  கிரீன் அக்ரி கிளப் ஆப் இந்தியா அமைப்பின் தலைவர் Agri.Y. இராஜகுமார் மற்றும்  மரு. […]
Read More
வர்மம் எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான தெக்ஷணைக்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் கவளிக்காலம் பற்றி அறிவோம். புறங்கையின் பெருவிரல் கவளியில் கவளிக்காலம் அமைந்துள்ளது. இவ்வர்மம் கவளி வர்மம், கைக்கவளி வர்மம், கைக்கவளிக்காலம் எனவும் அழைக்கப்படுகிறது.                 “மரணமென்று கவர் நேர் ஒன்றரையிறைக்கும்                 மைந்தனே கவளிவர்மம்”.                                                                 – வர்ம குருநூல்                 “கைப்பெருவிரல் கவளியில் கவளிவர்மம்”.                                                                                                 – வர்ம கலைக்களஞ்சியம் என குறிப்பிடுகிறது. போடும் […]
Read More
மறுமலர்ச்சி என்பது…
  • By Magazine
  • |
ஆசிரியர்  மருத்துவர். த. இராஜேந்திரன் இந்தியாவின் அரசியல் சூழல் வெளியுலகத்திற்கு ஒரு வெப்ப ஆற்றலை விதைத்து வருகிறது. உலகின் பலநாடுகள் இந்தியாவின் அனைத்து வளங்களின் மீதும் ஒரு கழுகு பார்வையைக் கொண்டிருந்தாலும் எளிதில் ஏறி விளையாடி விடலாம் எனும் நினைப்பில் மண் விழுந்தவர்களாகவே உள்ளனர். எனினும் பகுத்தலுக்கேற்ற ஓர் ஒப்பற்ற நாடாகக் கருதி இயங்க அவர்கள் தயங்குவதில்லை. எத்தனையோ வளங்களிலிருந்தும் கோடிக்கணக்கான மக்கள் வாழ்வில் முன்னேற முடியாத முன்னேற்றப்படாத சூளல். வறுமையில் வாடும் பொருள் வளமற்ற வீழல். […]
Read More
விடத்தை  தங்கமாக மாற்றலாமா ?
  • By Magazine
  • |
– முனைவர் மோகனா, பழனி நண்பர்களே, உங்களுக்கு ஓர் அறிவியல் தகவல் சொல்லப் போகிறேன். உங்களால் நம்ப முடியாது, “விஷம் குடித்து வெறும் “கருத்த கண்டனை” மட்டுமே பெற்ற பெருமை சிவபெருமானுக்கல்ல, இந்தப் புவியில் நஞ்சுண்டு பொன்னை உமிழும் ஓர் உயிரினம் உண்டு”.   அது செய்வது சூனியமன்று; முழுக்க முழுக்க அறிவியல். நான் ரீல் விடுவதாக நினைப்பீர்கள். ஆனால் அது 916 உண்மை. இப்போ விஷயத்துக்கு வருவோமா? இயற்கை விடத்தை பொன்னாக மாற்றுகிறது என்ற ஓர் […]
Read More
எலி உணர்த்தும் மனிதம்
  • By Magazine
  • |
முனைவர். பேரா. எஸ். தினகரன் மேனாள் மாநிலத் தலைவர், தமிழ்நாடு அறிவியல் இயக்கம் எலிகளை பலரும் விரும்புவதில்லை. அருவருப்பு, கூச்சம், வெறுப்பு, அவை ஏற்படுத்தும் பொருளாதார இழப்புகள், எலிகளை பெரும்பாலும் விரும்பாமல் செய்துவிடுகிறது. சில விதிவிலக்குகள் இருக்கலாம். சிலர் செல்லப்பிரணிகளாக வளர்க்கிறார்கள் எனினும், அவை நாம் பார்க்கும், அன்றாடம் புழங்கும் இடங்களில் வாழும் எலிகளாக இருக்காது. ஏன் கிளி சோதிடம் போல் எலி சோதிடம் கூட உண்டு. எலிக்கோயில் கூட உண்டு. எலிகளின் செயல்பாடுகள் கிட்டத்தட்ட மனிதர்களின் […]
Read More
புளியமரம்
  • By Magazine
  • |
– கை. செல்லத்தங்கம் சாயங்காலம் ஆறு மணியிருக்கும் தெருவில் பேச்சரவம் கேட்டது. எட்டிப்பார்த்தேன். என் பெரிய மாமனார் பையன்தான். என்னத்தான் கால்வலி என்று அக்கா சொன்னாங்களே என்றேன். ஆமாமே ஆயுர்வேத ஆஸ்பத்திரியிலே மருந்து வாங்கினேன் என்றார். எத்தனை மருந்து பார்த்தும் கால்வலி குறையல்ல. இப்போ கசாயம் போட்டுக் குடிச்சி எண்ணெய் போட்டு ஒத்தடம் கொடுக்கின்றேன் என்றார்.  கொஞ்சம் காலுக்கு ரெஸ்ட் கொடுங்க அத்தான். ரொம்ப நடக்காதீங்க என்றேன். டாக்டரும் அதை தான் சொன்னார். பதினொன்றாம் வகுப்பு படித்தவுடன் […]
Read More
  • By Magazine
  • |
– ஓஷோ தன்னுடைய வகுப்பில் ஒரு ஆசிரியர் குழந்தைகளுக்கு எதையோ விளக்கிக் கொண்டிருந்தார். தனக்கு பின்னாலிருந்த கரும்பலகையில் ஒரு பெரிய துண்டு வெள்ளைத்தாளை தன் மாணவர்களிடம் இந்தக் கரும்பலகையில் நீங்கள் என்ன பார்க்கிறீர்கள் என்று சொல்ல முடியுமா? எல்லோரும் கையைத் தூக்கினார்கள், அதனால் ஆசிரியர் ஒவ்வொரு மாணவனிடமும் தனித்தனியாக அவன் கரும்பலகையில் என்ன பார்த்தான் என்று கேட்டார். எல்லா மாணவர்களும் சொன்னார்கள், நாங்கள் ஒரு கரும்புள்ளியை பார்க்க முடிகிறது. வகுப்பு முழுவதும் கேட்டுவிட்டு, அவர் உரக்க சிரித்தபடி […]
Read More
மண்ணின் வீரத்தால் மனிதர்களை செதுக்கும் மாமனிதர் – ஜூட்ஸ் பெர்லின் நேர்காணல்!
  • By Magazine
  • |
கன்னியாகுமரி மாவட்டத்தின் விளையாட்டு வரைபடத்தில் ‘மூலச்சல்’ என்ற ஊரைத் தனித்துவமாக அடையாளப்படுத்தியவர் திரு. ஜூட்ஸ் பெர்லின். GFC (Glaring friends club)) மூலச்சல் அமைப்பின் பொருளாளராகவும், தலைசிறந்த பயிற்சியாளராகவும் விளங்கும் இவர், கபடி விளையாட்டின் மூலம் நூற்றுக்கணக்கான இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றி வருகிறார். கேள்வி: GFC மூலச்சல் அமைப்பின் தொடக்கம் மற்றும் அதன் கட்டமைப்பு குறித்துக் கூறுங்கள்? பதில்: மூலச்சலில் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே கபடி விளையாடப்பட்டு வந்தது. ஆனால், அது சரியான வழிகாட்டுதல் இன்றி […]
Read More