டாக்டர் என்.கே. சுரேஷ் MD(S)
ஜீரணமண்டலப் பாதையின் கடைசி பகுதியான மலக்குடலின் (Rectum) உள்ளே உள்ள இரத்தநாளங்களில் வீக்கம் மற்றும் தாபிதம் ஏற்பட்டு இரத்தம் கசிதல், வலி, எரிச்சல் மற்றும் வெளியில் முளை பிதுங்கி காணுதல் போன்ற குறிகுணங்களை காட்டி துன்பப்படுத்தும் நோயை மூலநோய் என்கிறோம்.
மூலநோயால் இந்தியாவில் சுமார் 11 சதவீதம் பேர் பாதிக்கப்படுகிறார்கள்.
மூலநோய் பொதுவாக உணவுபழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறை மாற்றங்களால் உருவாகிறது.
மூலநோயால் பாதிக்கப்படுபவர்கள் புத்துணர்ச்சி இன்றி, எரிச்சலுடன், கடுகடுப்பாக இருக்கும் மனநிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
மூலநோய்க்கு சித்தமருத்துவத்தில் முளைநோய், மூலமுளைநோய் என்ற பெயரும் உண்டு. மூலநோய்க்கு ஆங்கில வழக்கச்சொல் றிவீறீமீs ஆகும். பிமீனீஷீக்ஷீக்ஷீலீஷீவீபீs என்பது மூலநோய்க்கான மருத்துவச்சொல் ஆகும்.
மூலநோயை பொதுவாக இரண்டாக பிரிக்கலாம். அவை உள்முலம் (internal piles) வெளிமூலம் (External piles)
மலக்குடலின் (Rectum) உட்புறத்திலிருந்து ஆரம்பிக்கும் மூலநோயை உள்மூலம் என்றும் ஆசனவாயை சுற்றி வெளிப்புறமாக இருக்கும் மூலநோயை வெளிமூலம் என்றும் அழைப்பதுண்டு.
மூலநோய் வருவதற்கான காரணங்கள்
மூலநோய்க்கான குறிகுணங்கள்
இரத்தகசிவு
மலம்கழிக்கும் முன் அல்லது மலம் கழித்தபின் அல்லது மலத்துடன் செந்நிற (Fresh blood)) இரத்தம் கசியும்.
வலி
வலி அல்லது எரிச்சல் மலம் கழிக்கும் போதும் மலம் கழித்த பிறகும் உண்டாகலாம்.
அரிப்பு தன்மை
சிலருக்கு ஆசனவாயை சொறிய வேண்டும் என்ற உணர்வு ஏற்படும்.
சதை வெளிவருதல்
சிலருக்கு சதைபோன்ற முளை மலம் கழிக்கும் போது வெளிவந்து, மலம் கழித்த பின் அதுவே உட்சென்று விடும்.
சிலருக்கு கையை வைத்து அழுத்தி விட்டால்தான் உட்செல்லும்.
சிலருக்கு உள்ளே செல்லாமல் வெளியே தங்கிவிடும்.
சளிபோன்ற திரவம் கசிதல்
மூலநோய் உள்ளவர்களுக்கு சளி போன்ற திரவம் சிலநேரங்களில் கசியலாம்.
உள்மூலம் நோய்க்கும் வெளிமூல நோய்க்கும் உள்ள வேறுபாடுகள்
உள்மூலநோய்
பொதுவாக வலி இருப்பதில்லை. செந்நிற இரத்தம் வடியும், ஊரல் அதிகமாக இருப்பதில்லை. முளை வெளியில் தெரிவதில்லை. ஆனால் நாட்பட்ட நிலையில் முளை உள்ளிருந்து வெளியே தள்ளும்.
வெளிமூலநோய்
அதிகமாக வலியோடு இருக்கும். பொதுவாக இரத்தம் வடிவதில்லை. ஊரல் இருக்கும். முளை வெளியில் பார்வைக்கு தெரியும்.
மூலநோய் வராமல் தடுக்கும் முறைகள்
மூலநோயாளர்களுக்கு பயன்படும் காய்கறிகள்
மூலநோயாளர்களுக்கு பயன்படும் பழவகைகள்
மூலநோயாளர்களுக்கு ஆகும் உணவு பொருள்கள்
மூலநோய்க்கு வீட்டு வைத்தியம்
மூலநோய்க்கு நாட்டுவைத்தியம்
கருணைகிழங்கு லேகியம்
10 கிராம் அளவு தினம் இருவேளை சாப்பிடலாம்.
சதாவரிநெய்
தினம் ஒரு கறண்டி இருவேளை பாலில் கலந்து சாப்பிடலாம். இரத்த முலம், உடல் உஷ்ணம் இவற்றிற்கு சிறந்தது.
நாயுருவி நெய்
தினம் ஒரு கறண்டி இருவேளை வீதம் வெந்நீரில் கலந்து சாப்பிடலாம்.
மலக்குடார தைலம்
இரவு மட்டும் ஒரு கரண்டி தைலத்தை வெந்நீரில் கலந்து குடிக்கலாம். மூலநோயுடன் கூடிய மலச்சிக்கல், மூலகாந்தல் அகலும்.
நிலவாகை சூரணம்
மலச்சிக்கல் இருப்பின் 5 கிராம் அளவு சூரணத்தை வெந்நீரில் கலந்து இரவு ஆகாரத்திற்கு பிறகு சாப்பிடலாம்.
இடுப்பு குளியல்
ஒரு பரந்த பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை விட்டு அதில் இரு கரண்டி திரிபலா சூரணத்தை கரைத்து வைக்க வேண்டும். இதில் மூலம் படும்படி 5 முதல் 10 நிமிடங்கள் உட்கார வேண்டும். இப்படி தினம் 2 அல்லது 3 வேளை செய்துவர மூலநோயில் உண்டான வலி, ஊரல், வீக்கம் குறையும்.
திரிபலா சூரணம்
2 கிராம் அளவு எடுத்து தண்ணீர் கலந்து தினம் இருவேளை சாப்பிடலாம்.
மேலும், சித்த வைத்தியத்தில் மூலநோய்க்கு
நாகபற்பம், வெள்லங்க பற்பம், தேற்றான்கொட்டை லேகியம், பிரண்டை சூரணம் போன்ற பல மருந்துகள் உள்ளன இவைகள் மருத்துவர் ஆலோசனைப்படி பயன்படுத்த வேண்டும்.
கவனிக்க வேண்டியவைகள்
அதிகமான இரத்தபோக்கு, தளர்ச்சை, தலைச்சுற்று போன்றவை இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுகி மருத்துவம் பார்க்க வேண்டும்.
Leave a Reply