அண்ணலின்  அழுகை அறிந்தார் யார்?
  • By Magazine
  • |
கே.பி.பத்மநாபன் அண்ணலார் அமரராகி ஆண்டுகள் எழுபத்தேழும் மண்ணிதில் மறைந்து போச்சு; மகானையே மறந்து மாச்சு; உண்மையே உரைத்தோன் நாட்டில் ஊழலும் பெருகிப் போச்சு; பெண்மையை மதித்தோன் நாட்டில் பெண்மைவன் முறையுமாச்சு; கண்ணியம் கட்டுப்பாட்டைக் கடமையாய்க் கொண்டோன் மண்ணில் பண்ணிடும் பாதகங்கள் பலப்பல பெருகியாச்சு; அண்டியோர் தம்மை அன்பாய் ஆதரித்தோனின் மண்ணில் எண்ணிலாக் கலவரங்கள் எனதினம் ஆகியாச்சு; உண்ணுதல் உடுத்தல் தம்மில் உயரிய எளிமை கண்ட கண்ணிய காந்தி மண்ணில் கருநிதி பெருகியாச்சு; புண்ணியன் வாழ்ந்திம் மண்தான் புதுமைகள் […]
Read More
  • By Magazine
  • |
C. சுந்தரி சொக்கலிங்கம் அனைவரின் ஆனந்தம் ஆனந்த தேனூற்று சங்கமத்தின் சங்கீதம் குடும்பத்தின் குதூகலம் திகட்டாத தித்திப்பு மாசில்லா மரகதம் சொக்கவைக்கும் சொர்க்கம் வீணையின் நாதம் மொத்தத்தில் இது ஓர் பேரானந்தம்.
Read More
  • By Magazine
  • |
 ஓஷோ குழப்பத்திலிருந்தும், துன்பத்திலிருந்தும் விடுபடுவதற்கான வழி ஒன்றுமில்லாத பூமியில் தாவோவுடன் வாழ்வதாகும். எவன் மற்றவர்களை அடக்கி ஆள்கிறானோ அவன் துன்பத்தில் வாழ்கிறான். நீங்கள் மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்தும் போது குழப்பத்தில் வாழ்வீர்கள், அதே போல் மற்றவர்கள் உங்கள் மீது அதிகாரம் செலுத்த அனுமதிக்கும் போதும் நீங்கள் துன்பத்தில் வாழ்கின்றீர்கள். ஏனெனில் ஒரு அடிமை பேரானந்தத்தில் இருக்க முடியாது. சீன மதமான தாவோ வேண்டுவது என்னவெனில் யாரையும் வசப்படுத்த வேண்டாம். யாராலும் வசப்பட வேண்டாம்; நீங்கள் ஒருவரையும் […]
Read More
  • By Magazine
  • |
கா. திலிபன், தமிழாசிரியர் தூசுதட்டிய உன்கூந்தல் உதிரும்போது வருந்துவாயோ? உன் கரம்பிடித்தே- வீட்டை வலம் வருவார்! வாய்ச் சண்டையில் உன்னையே “பிஞ்சிடும்”  என்பார்! வீட்டைத் தூய்மை செய்யும் நீயோ இறுதியில் வெளியில் கிடக்கின்றாய்! உன்னைப் படைத்தவனோ- உன்னைக்கண்டு ஒருநாளும் வருந்தியதில்லை! வாய் இருந்தால் கேட்டுவிடு என்னை வாழவிடு என்று!
Read More
  • By Magazine
  • |
இரா.சிவானந்தம் உருவாகிறதோ புதியதாக ஒரு வேறுபட்ட உலகம் லஞ்சம்- ஊழல் நிறைந்தாக..? காண சகிக்கவில்லை எங்கும் பரந்து நிகழும் பாலியல் – வன்முறை கொடுமை! மக்களிடமிருந்து விடைபெற்று காணாமல் போய் கொண்டிருக்கிறது பண்பாடும்- கலாச்சாரமும் எங்கு தேடியும் காண முடியாமல் உள்ளம் ஏங்கித் தவிக்கிறதே மனிதநேயமும் – அன்பு தழுவலும் பணமே பிரதானமாக மாறிக் கொண்டிருக்கிறது உறவிலும்- பாசத்திலும் அவசரத்திற்கு உதவுவாரும் ஆபத்தில் காப்பவரும் காணா தேசமாய் மாறுதே கூட்டுக்குடும்ப வாழ்க்கையும் முதியோர்களைப் பேணுவதும் குறைந்து – […]
Read More
மாலிப்டினம் சுரங்கத்திட்டம்
  • By Magazine
  • |
பூ.வ.தமிழ்க்கனல் பேராபத்து ஒன்று தமிழ்நாட்டு மக்களை நோக்கி வந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநியில் மாலிப்டினம் சுரங்கம் அமைக்க ஒன்றியஅரசு திட்டமிட்டிருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல், அப்பகுதிமக்களைத் தூக்கமிழக்கச் செய்துள்ளது.                 திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 400 சதுரகிலோமீட்டர் (சுமார் 1 லட்சம் ஏக்கர்) பரப்பளவில் மாலிப்டினம் எனும் அரியவகைத் தனிமம் இருப்பதாகவும் அதனை வெட்டி எடுக்க ஒன்றியஅரசு முடிவு செய்திருப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மாலிப்டினம் தனிமம் எடுப்பதற்காக, பழநி வட்டத்திற்குட்பட்ட மேற்குத்தொடர்ச்சி மலை […]
Read More
மின்னணுவியலின் கதை
  • By Magazine
  • |
 – காளீஸ்வர் நமது நவீன உலகின் அடித்தளமாக விளங்கும் மின்னணுவியல், ஒரே இரவில் தோன்றிய மாயாஜாலம் அல்ல. இது படிப்படியாக, பல கண்டுபிடிப்பாளர்களின் உழைப்பாலும், விடாமுயற்சியாலும் உருவான பிரம்மாண்ட அறிவியல் பயணம். எலெக்ட்ரான்கள் பற்றிய புரிதல் ஏற்பட்ட பின்னர்தான் ‘மின்னணுவியல்’ என்ற தனித் துறையே உருவானது.  எலெக்ட்ரானின் பிறப்பு மின்னணுவியலின் தொடக்க புள்ளியானது, ஜே.ஜே. தாம்சன் (J.J.Thomson) என்ற ஆங்கில இயற்பியலாளரின் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பில்தான் இருக்கிறது. 1897 ஆம் ஆண்டில், கேத்தோடு கதிர்க் குழாய்கள் (Cathode […]
Read More
  • By Magazine
  • |
கை. செல்லத்தங்கம் தாத்தா, அப்பா வந்தாச்சு என்று பேத்தியின் குரல் கேட்டு வாசலுக்கு வந்தார் ராஜன். வாப்பா எப்படியிருக்க என்ற தந்தைக்கு நான் நல்லாயிருக்கேன். நீங்கள் எப்படி இருக்கீங்க என்று கேட்டபடி தந்தையை லேசாக கட்டிப்பிடித்தான் கோகுல். நில்லுப்பா ஆரத்தி எடுக்கிறேன், அம்மா. எனக்கும் சேர்த்து எடுங்க பாட்டி என்ற பேரனுக்கும், மகன், மருமகள், பேத்தி சேர்ந்தே ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் வந்தனர். நான் தான் மூணு மாசத்துக்கு ஒரு தடவை வாறேனே… இதுக்கு போய் என்னம்மா […]
Read More
  • By Magazine
  • |
– வழக்கறிஞர்   பி. விஜயகுமார் எப்படியெல்லாம் சட்டம் வேலை செய்யுது பாருங்க! கண்ணன் மற்றும் ராதா இருவரும் கணவன் மனைவியர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஆனால் கண்ணன் பெயரில் ஏகப்பட்ட சொத்துக்கள் இருந்தன. வயது ஆகிக் கொண்டே இருந்தது. தமது காலத்திற்குப் பிறகு தமது சொத்துக்களை யாருக்காவது சென்றடைய வேண்டும் எண்ணத்தில் கண்ணன் ஒரு உயில் எழுதினார். தனது இறப்பிற்குப் பிறகு மனைவி ராதா உயிரோடு இருந்தால் அவரது சொத்துக்கள் அனைத்தும் ராதாவிற்கு செல்ல வேண்டுமென்றும், ஒருவேளை […]
Read More
  • By Magazine
  • |
பேராசிரியர் முளங்குழி பா.லாசர் வங்கம் வணங்குகின்ற வீரமங்கை பிரித்திலதா. வெள்ளையரை எதிர்த்து ஆயுதமேந்தி நேருக்கு நேர் போர் செய்து வரலாற்றில் இடம் பிடித்த வீரமங்கை பிரித்திலதா. இன்றைய வங்காள தேச சிட்டகாங் நகரில், நகராட்சி தலைமை எழுத்தரின் மகளாய் செல்வக்குடும்பத்தில் பிறந்தார். கல்கத்தா பெதுனே கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். விடுதலை வேட்கையால் மாபெரும் புரட்சி வீரன் சூர்யா சென்னின் யுகாந்தர் அமைப்பில் சேர்ந்தார். அவரின் நம்பிக்கையைப் பெற்று கல்பனாதத்தாவும், பிரித்திலதாவும் வீர சாகசங்கள் செய்தனர். சூர்யாசென் […]
Read More