தமிழர் தற்காப்பு கலையான   களரிக்கு சர்வதேச அங்கீகாரம்
  • By Magazine
  • |
அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் அவர்கள் வலியுறுத்தல் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில், தமிழர்களின் வீரப் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் “தமிழர்களின் தற்காப்பு கலைகளைப் பாதுகாப்போம்” என்ற முழக்கத்துடன் களரி கலை விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழர் மரபு தற்காப்புக் கலைகளின் பெருமையை மீண்டும் சமூகத்தின் மையத்துக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்த இந்த விழா, ஒரே நேரத்தில் ஒரு போட்டி நிகழ்வாகவும், ஒரு பாரம்பரிய விழிப்புணர்வு நிகழ்வாகவும் அமைந்தது. இன்றைய நவீன காலகட்டத்தில் பல்வேறு வெளிநாட்டு […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
 SAVKIA-வின் 249-வது கருத்தாய்வுக் கூட்டமானது திரு.இராஜன் ஆசான் தலைமையில் மரு.கமலக்கண்ணன் ஆசான், திரு.கே.செல்வநாதன்  ஆசான் ஆகியோர் முன்னிலையில் 06.12.2025 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில், மரு.கமலக்கண்ணன் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சூரணம் செய்முறையையும், வாதநோயை குணப்படுத்தும் சூரணம் செய்முறையையும் தெளிவாகக் கூறினார். திரு.இராஜன் ஆசான் சூலை-18, வாதம், மார்புவலி, தோள்பட்டை வலிக்கும், தாதுபுஷ்டிக்கும் எட்டி விதை மாத்திரை செய்முறையை கூறினார். திரு.செல்வநாதன் ஆசான் இருமலுக்கான மாத்திரை […]
Read More
மாற்றுத் திறனாளிகள் குறித்த பார்வைகள்
  • By Magazine
  • |
A. தர்மராஜ் (த.ராசு) முந்தைய பாகத்தின் தொடர்ச்சி… மாற்றுத்திறனாளிகள் திருமணத்துக்கு தங்கத்தில் தாலி வழங்குவதற்கு ஒரு புதிய திட்டம் தொடங்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் இத்திட்டத்தை 2023 ஏப்ரல் மாதத்தில் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயிலில் தொடங்கி வைத்து முதல் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, வரகுபாடி கிராமத்தைச் சேர்ந்த பாப்பாத்தி என்பவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. முதுகலை தமிழ் பட்டதாரியான இவர் மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச மற்றும் தேசிய அளவிலான […]
Read More
கோபம் எப்படி ஏற்படுகிறது?
  • By Magazine
  • |
மூலச்சல் Dr.T. இராஜேந்திரன் M.sc, MD(Hom), Ph.D. நமது உடலின் அதிவேகமான எதிர் உணர்ச்சிகளில் ஒன்றுதான் கோபம். “கோபம் கட்டுப்பட்டு விட்டாலே மனிதன் அரைஞானி ஆகிவிடுகிறான்”. “சிரிப்பினால் சாதிக்கும் ஆயிரம் விசயங்கள் கூட சிந்தனையற்ற ஒரு துளி கோபத்தால் சிதைந்து விடுகின்றது”. ஆம்… மனிதன் பல்வேறு விசயங்களுக்காக உணர்ச்சி வசப்படுகிறான். அவ்வாறு படும் எல்லா உணர்ச்சிகளிலும் மிகமிக மோசமானது கோபம் மட்டுமே… நமது மூளையில் பனி ரெண்டு முக்கிய இணை நரம்புகள் உள்ளன. இந்த பனிரெண்டு இணை […]
Read More
மந்தத்தை போக்கும் “மந்தாரை”
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் அழகிற்காக தோட்டத்தில் வளர்க்கப்படும் சிறு செடிவகையை சார்ந்த மந்தாரை, அதிக மருத்துவ குணங்களையும் பெற்றுள்ளது. மந்தாரையின் பூர்விகம் மலேசியா, இந்தோனேசியா, இந்தியா மற்றும் சைனா என்றும் சொல்லப்படுகிறது. மந்தாரையில் பல இனங்கள் உண்டு. அவைகளில் முக்கியமானவை. வெள்ளை, சிவப்பு, மஞ்சள் நிற பூக்களை கொண்டது. இதில் சிவப்பு நிற பூக்களை கொண்ட மந்தாரை அதிக மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. மந்தாரையின் இலைகள் பிளவுபட்டு வண்ணத்துப்பூச்சியின் இறகு போன்ற வடிவத்தில் காணப்படும். பூக்கள் 5 […]
Read More
  • By Magazine
  • |
– வழக்கறிஞர்   பி. விஜயகுமார் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் பெருந்தன்மை மாரீஸ்வரி- எதிர்- தமிழ்நாடு அரசு என்ற வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் 2015-ம் ஆண்டுகால கட்டத்தில் நடந்தது. வழக்கின் தன்மை என்னவென்றால் கணவன் மனைவி இருவரும் பார்வை இல்லாத தம்பதியர்கள். கணவருக்கு பிறவியிலேயே பார்வை கிடையாது. மனைவிக்கோ 12-ம் வகுப்பு முடிக்கவும் பார்வை போயிற்று. இருவருக்கும் திருமணம் நடந்த முதலில் மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. தம்பதியர்கள் சிகிட்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்குச் […]
Read More
வர்மம் எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் விசபந்த வர்மம் சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான துதிக்கை வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் விசபந்த வர்மம் பற்றி அறிவோம். இவ்வர்மம் மேற்புற முழங்கை மத்தியில் அமைந்துள்ளது. விஷபந்த வர்மம், விசபந்தக்காலம், விஷமணிபந்த வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் இவ்வர்மம் வழங்கப்படுகிறது. “ஆரடா பெருவிரல் மேல் சுட்டுவர்மம் அப்பனே அஞ்சிறை மேல் விசமணியின்பந்தம்”.                                                                                                                                 – ஒடிமுறிவு நூல் “வீழுமந்த முழங்கையில் மையம் பற்றி விசமான மணிபந்த […]
Read More
சீனிவாசன்
  • By Magazine
  • |
– பைசல் நான் ஒரு தேநீர் கடையில் தேனீர் குடிக்கும் போது ஒரு முதிர்ந்த கண்கள் என்னை கூர்ந்து நோக்கியது. என்ன காரணம் என்பது தெரியவில்லை திரும்பவும் கூர்ந்து நோக்கினார். நான் கண்களின் பார்வையை மாற்றி அமைக்க வேண்டியதாயிருந்தது. அப்படியான கண்களுக்கு சொந்தக்காரர் தான் நடிகர் சீனிவாசன் சமூகத்தை உற்று நோக்கி விமர்சிக்கும் பகடி செய்யும் கலையறிந்தவர் பல வேளைகளில் அவரையே அவர் பகடி செய்து கொள்வார். சென்னை திரைப்படக் கல்லூரியில் நடிப்பு கலையை கற்றவர் அந்த […]
Read More
? ? ? அன்றாட  வாழ்வின் கேள்விகள்
  • By Magazine
  • |
– காளீஸ்வர் 1. கார் மற்றும் பைக் இஞ்சின்களை சிசி (CC) எனும் அளவீட்டில் குறிப்பிடுகிறார்களே அப்படி என்றால் என்ன? CC என்பது Cubic Centimeter (கன சென்டிமீட்டர்) என்பதன் சுருக்கம். இது என்ஜினின் சிலிண்டருக்குள் பிஸ்டன் (Piston) நகரும்போது ஏற்படும் இடத்தின் மொத்த கன அளவைக் குறிக்கிறது. அதிக சிசி இருந்தால், அதிக எரிபொருள் எரிக்கப்பட்டு அதிக ஆற்றல் (Power) உருவாகும். அதனால்தான் இருசக்கர வாகனங்களுக்கு குறைந்த சிசி அளவிலான என்ஜின் வழங்கபடுகிறது 2. மின்னல் […]
Read More
“பல்பு திருடன்”
  • By Magazine
  • |
– குமரி எழிலன் மாலை மயங்கும் நேரம்…. கடையின் வாசல் விளக்கை எரியவிட பொத்தானைஅழுத்தினார் மெடிக்கல் நம்பி… விளக்கு வெளிச்சமில்லை…. “மின்வெட்டுப் போலிருக்கிறது…. பூசைப்பட விளக்கு எரிகிறதே…அது மின்சேமிப்பானிலுள்ள (வீஸீஸ்மீக்ஷீtஷீக்ஷீ) மின்சார மோ…. இல்லையே… மின்சேமிப்பானுடன் பூசைப்பட விளக்குக்குத்  தொடர்பில்லையே ….” தனக்குள் பேசிக்கொண்டே வாசலில்  மேலே பார்த்தார்…  பல்பைக் காணவில்லை…  எதிர்த்த பலசரக்குக் கடை,  தங்கண்ணன், “தம்பியோ என்னத்தத் தேடுக…. கரண்ட காணல்லியா…?” என கிண்டலுடன் விசாரித்தார்.  “இல்லண்ணே கரண்டுல்லாம் இருக்கு பல்பத்தான்…காணல்ல…”என்றார் மெடிக்கல்க்காரர்.  “உங்க […]
Read More