செ.பராந்தகன்
நாளை முதல் செய்த வேலையையே
திரும்பிச் செய்ய வேண்டியதில்லை..
நேரங்கலெல்லாம்
இனி என் கையில் தவழும்.
மலர்ந்த பூக்களையும்
காய் கனிகளையும்
கவனித்து மகிழலாம்.
உண்ணும் உணவின் ருசி
நன்கு புரியும்.
கண்கள் காணாத காட்சியெல்லாம்
காணப்போகின்றது..
அடுக்கிவைத்த வாசிக்காத புத்தகங்கள்
வரவேற்கும்
நான் வாசிக்க போகும் நேரங்களை…
ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம்
நாளைமுதல்
Leave a Reply