‘வர்மம்’எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
கைக்கிட்டிக்காலம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான தும்மிக்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் கைக்கிட்டிக்காலம் பற்றி அறிவோம். “பார் சிப்பி கீழ்வாறின் பக்க சார்வில் பரிவான கைக்கிட்டிக்காலம்”.                                 – வர்ம குருநூல் “……………….. தும்பிக்காலம் நின்றதன் நாலிறையின் கீழ் கைக்கிட்டிக்காலம்”.                                 – வர்ம கடிகார நரம்புச்சூத்திரம் மேலும், கொள்ளும் கைகெட்டிக்காலம் கொண்டால்                 குருவருளால் குறியதினை கூறக்கேளு            விள்ளும் வாய்பிளந்து நீர் பாயுமப்பா                 வெகுவான […]
Read More
உயிர்கள் தட்டான்களாக பறந்து திரியும் மய்யழிக்கரை
  • By Magazine
  • |
பயணக்கட்டுரை – கிருஷ்ணகோபால் கேரளாவில் பல இடங்களுக்குச் சென்றிருக்கிறோம் ஆனால் இது வரைக்கும்  வடகேரளத்திற்கு சென்றதில்லையே என நண்பர்கள் மலபார்  சுற்றுலாவுக்கு திட்டமிட்டப் போது  நான்  மகிழ்ந்தேன். முப்பது வருடத்திற்குப் பிறகு கோழிக்கோடு மண்ணில் கால்பதிக்கப் போகிறோம் என்ற மிதப்பு என்னை மகிழச் செய்தது. பத்தாம் வகுப்பு  ஆண்டு இறுதித் தேர்வு முடிந்து  விடுமுறைகாலத்தில் விளையாடும் போது எனக்கும் தம்பிக்கும்   ஓயாமல் சண்டை நடப்பதை சமாளிக்க முடியாத அம்மா  என் உறவினர் ஒருவரோடு  கொத்தன், கையாள் வேலைக்கு  […]
Read More
தை பிறந்தால் வழிபிறக்கும்
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் “மாடு கட்டிப் போரடித்தால் மாளாது என்று சொல்லி, ஆனை கட்டி போரடித்த மருத நிலம் எங்க நிலம்…” என்றப் பாடலை தமிழ்மண்ணில் எங்கு வில்லிசை நடந்தாலும் நம்மால் கேட்காமல் இருக்க முடியாது. பல்லாயிரம் ஆண்டுகளாக விவசாயத்தில் தலை நிமிர்ந்து நின்றது நம்நாடு. உணவில் நாவுக்கு சுவை பார்த்து உண்டு மகிழ்ந்தவன் தமிழன் என்பது உலகறிந்த உண்மை. ஏனைய நாட்டாரெல்லாம் தம் நாட்டில் விளைந்த உணவுப் பொருட்களைப் பச்சையாகவும், சுட்டும், வெறுமையாய் அவித்தும் உண்டு […]
Read More
வர்மம்’எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான வாறிளகி வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் தும்மிக்காலம் பற்றி அறிவோம். “ஈடழியும் பித்துக்காய் அதன் பின்பக்கம் தும்மி என்ற வர்மம்”.                                                                                – வர்ம குருநூல் “வளமான வன்னெல்லு ஒட்டையின் கீழ் தும்மிக்காலம்”. – வர்ம அகஸ்தியசாரி “பண்பான தும்மியதன் காலம் கேள் தொடரான பித்துக்காய் பிறமேதானே”.                                                                                                – கால வர்மநூல் மேலும், போமப்பா காறயஸ்தி பூணெல்லின் கீழ்                                 […]
Read More
  • By Magazine
  • |
– ஓஷோ வாழ்க்கை ஒரு பிரச்சனையே அல்ல. வாழ வேண்டிய ஓர் அற்புதமேயன்றி தீர்க்க வேண்டிய பிரச்சனையல்ல. ஆனால் அது ஒரு பிரச்சனையாகிப் போகிறது. எதையும் ஒத்தி வைத்துக் கொண்டே போவதால் நாளைக்குச் செய்து விடலாம் என்று ஒத்தி வைத்து போவதால் அது ஒரு பிரச்சனையாகிப் போகிறது. இன்றைக்குச் செய்ய வேண்டியதை, இன்றைக்கு செய்ய முடிவதை நாளைக்குச் செய்ய முடியாது. இன்று அருமையான நிகழ்வாக இருந்திருக்கக் கூடியது. வாழவேண்டிய அற்புதமாக இருந்திருக்கக் கூடியது. நாளைக்கு மிகச் சிரமமானதும் […]
Read More
தமிழ்நாட்டுக்காக உயிர் நீத்த சங்கரலிங்கனார்
  • By Magazine
  • |
பூ.வ. தமிழ்க்கனல் அக்டோபர் 13-ஆம் தேதி தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாள். உலகத்திலேயே கொள்கைக்காக உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த மாமனிதர் சங்கரலிங்கனார். சிறைத்தண்டனை                 சங்கரலிங்கனார் விருதுநகர் மாவட்டம் மண்மலைமேடு என்ற ஊரில் 1895- ஆம் ஆண்டு ஜனவரி 26- ஆம் தேதி பிறந்தார். தந்தை பெயர் கருப்பசாமி. தாயார் பெயர் வள்ளியம்மை. விருதுநகரில் காமராசர் படித்த பள்ளியில் எட்டாம் வகுப்பு வரை படித்தார். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றுப் பல முறை சிறைத்தண்டனை பெற்றார்.                 […]
Read More
எம்.ஜி.ஆர் படம் பார்த்து சிலம்பம் கற்றுக்  கொண்டேன்
  • By Magazine
  • |
85 வயது சிலம்ப ஆசான் இன்பதாஸ் எம்.ஜி.ஆரின் திரைப்படங்களில் உள்ள சிலம்ப சண்டை காட்சிகளை பார்த்த வியந்து சிலம்பம் கற்றுக் கொண்டேன் என்கிறார் 85 வயதான சிலம்ப ஆசான் இன்பதாஸ் அவர்கள. புதிய தென்றலுக்காக மூலச்சலில் உள்ள சிலம்ப பயிற்சி களத்தில் அவரை சந்தித்தோம். அப்போது அவர் தனது சிலம்பாட்ட அனுபவங்களை புதிய தென்றலுக்காக பகிர்ந்து கொண்டார். நான் 1963- ஆம் ஆண்டு முதல் சிலம்பம் பயிற்சி அளித்து வருகிறேன். நான் சிறுவயதில் எம்ஜிஆர் நடித்த தாயை […]
Read More
மூலரோக நிவாரணி “துத்தி”
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் துத்திமூலநோய்களுக்கு  மிகவும் பிரபலமானது. இது 5 அடி உயரம் வரை வளரக் கூடியது. சாலையோரங்களில் அதிகமாக காணப்படும். இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அதிகம் வளர்கிறது.  மேலும், இலங்கை, மலேசியா, அமெரிக்காவிலும் இது காணப்படுகிறது.                 இலை வெல்வெட் போன்று மென்மையாக, சாம்பல் நிறம் கலந்த பச்சை நிறத்தில் இதயவடிவில் காணப்படும். பூ மஞ்சள் நிறத்தில் இருக்கும். காய் கம்மல் போன்று காணப்படும்.                 துத்தியின் அனைத்து பகுதிகளும் மருத்துவகுணங்களை கொண்டுள்ளது. தாவரவியல் பெயர் […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
– வழக்கறிஞர். பி. விஜயகுமார் குழந்தை சாட்சியம் (Child Witness) நமது இந்திய சட்டத்தில் குழந்தைகள் என்றால் 18 வயதுக்குக் குறைந்தவர்கள் ஆகும். இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாகப் பொருந்தும். திருமண வயதை எடுத்துக் கொண்டோமா£னல் ஆண்களுக்கு 21 வயதும் பெண்களுக்கு 18 வயதும் கடந்தவர்களாக இருக்க வேண்டும். இதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வயது பாகுபாடு இருப்பதால் பெண்களுக்கு திருமண வயதை 21 ஆக உயர்த்திக் கொள்ளலாமா என்று மத்திய அரசு ஒரு எண்ணத்தில் உள்ளது. பெரும்பாலும் […]
Read More
சொகுசான பிரபஞ்ச பயணம்
  • By Magazine
  • |
– முனைவர் மோகனா, பழனி நம் தாயகம் பால்வழி மண்டலம்  நிலவற்ற மேகமற்ற வானை மின்விளக்குகளின் தொந்தரவு இன்றி கொஞ்சம் அண்ணாந்து பாருங்களேன். உங்கள் ஊரில் வாய்ப்பு இருக்கிறதா. இல்லை எனில், மின் ஒளி இல்லாத ஓர் இடத்துக்கு வந்து பாருங்கள். தெற்கில் இருந்து வடக்காக உச்சிவானில் லேசான மெல்லிய பால் மேகம்  மிதப்பது போன்ற ஒரு காட்சி விண்மீன்களின் ஊடே தெரியும். அது தானுங்க நம் சூரியக்குடும்பத்தின் தாய் வீடான பால்வழி மண்டலம். இப்ப மழை […]
Read More