? ? ? அன்றாட  வாழ்வின் கேள்விகள்
  • By Magazine
  • |
– காளீஸ்வர் 1. கார் மற்றும் பைக் இஞ்சின்களை சிசி (CC) எனும் அளவீட்டில் குறிப்பிடுகிறார்களே அப்படி என்றால் என்ன? CC என்பது Cubic Centimeter (கன சென்டிமீட்டர்) என்பதன் சுருக்கம். இது என்ஜினின் சிலிண்டருக்குள் பிஸ்டன் (Piston) நகரும்போது ஏற்படும் இடத்தின் மொத்த கன அளவைக் குறிக்கிறது. அதிக சிசி இருந்தால், அதிக எரிபொருள் எரிக்கப்பட்டு அதிக ஆற்றல் (Power) உருவாகும். அதனால்தான் இருசக்கர வாகனங்களுக்கு குறைந்த சிசி அளவிலான என்ஜின் வழங்கபடுகிறது 2. மின்னல் […]
Read More
“பல்பு திருடன்”
  • By Magazine
  • |
– குமரி எழிலன் மாலை மயங்கும் நேரம்…. கடையின் வாசல் விளக்கை எரியவிட பொத்தானைஅழுத்தினார் மெடிக்கல் நம்பி… விளக்கு வெளிச்சமில்லை…. “மின்வெட்டுப் போலிருக்கிறது…. பூசைப்பட விளக்கு எரிகிறதே…அது மின்சேமிப்பானிலுள்ள (வீஸீஸ்மீக்ஷீtஷீக்ஷீ) மின்சார மோ…. இல்லையே… மின்சேமிப்பானுடன் பூசைப்பட விளக்குக்குத்  தொடர்பில்லையே ….” தனக்குள் பேசிக்கொண்டே வாசலில்  மேலே பார்த்தார்…  பல்பைக் காணவில்லை…  எதிர்த்த பலசரக்குக் கடை,  தங்கண்ணன், “தம்பியோ என்னத்தத் தேடுக…. கரண்ட காணல்லியா…?” என கிண்டலுடன் விசாரித்தார்.  “இல்லண்ணே கரண்டுல்லாம் இருக்கு பல்பத்தான்…காணல்ல…”என்றார் மெடிக்கல்க்காரர்.  “உங்க […]
Read More
புதிய கண்டுபிடிப்பு
  • By Magazine
  • |
பூமியின் அரிதான தனிமம் புற்றுநோய் சிகிச்சையில் புரட்சி – முனைவர் மோகனா, பழனி ஓர் அரிதான, குறுகிய காலமே இருக்கக்கூடிய தனிமம் ஒன்று மருத்துவத்தின் மிகத் துல்லியமான புற்றுநோய் கொல்லியாக மாறக்கூடும் என அறிஞர்கள் கணித்துள்ளனர். இதற்கான ஆய்வினை டெக்சாஸ் A & M பல்கலைக்கழக சைக்ளோட்ரான் நிறுவனம் செய்துள்ளது. இத்தகவல் 2025, நவம்பர் 11- ஆம் நாள் Science daily-ல் வெளியிடப்பட்டுள்ளது.   அஸ்டட்டின்-211  புற்றுநோய் எதிர்ப்பு   டெக்சாஸ் A & M பல்கலைக்கழக […]
Read More
  • By Magazine
  • |
– ஓஷோ மக்கள் பலர் ஒளியைப் பற்றி சிந்திக்கும் போது இருட்டைப் பற்றிக் கவலைப்படத் தொடங்குகிறார்கள். வாழ்க்கையை பற்றி நினைக்கும் போது, சாவை எதிர்த்து சண்டைப் போடத் தொடங்குகிறார்கள். அதனால் தான் கடவுள் இருள், ஒளி இரண்டும் சேர்ந்தவர் தான் என்று சொல்லும் ஐதிகம் உலகில் இன்று வரை இல்லை. ஒரு ஐதிகம் கடவுள் ஒளியானவர், இருள் அற்றவர் என்று சொல்லுகிறது. கடவுள் ஒளி மயமானவர் என்று நம்பும் மக்கள் அவர் இருளே அற்றவர் என்று நினைப்பார்கள். […]
Read More
தொழிலாளர் நலனுக்காக எதிரான சட்டங்கள்!
  • By Magazine
  • |
பூ.வ.தமிழ்க்கனல் இந்தியாவில் நடைமுறையில் இருந்து வரும் 44 தொழிலாளர் நலச் சட்டங்களை நீக்கிவிட்டு, அவற்றுக்குப் பதிலாகத் தொழிலாளர் நலம் குறித்த 4 வழிகாட்டுதல் தொகுப்புகளை ஊதியம் குறித்த தொகுப்பு, தொழில்துறை உறவுகள் குறித்த தொகுப்பு, பணி இடப் பாதுகாப்பு, உடல் நலம் மற்றும் பணி நிலைகள் குறித்த தொகுப்பு, சமூகப் பாதுகாப்பு குறித்த தொகுப்பு இயற்றி, அவற்றைச் சட்டம் ஆக்கி நவம்பர் 21 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தி இருக்கிறது ஒன்றிய அரசு. மேற்குறிப்பிட்ட 44 தொழிலாளர் […]
Read More
  • By Magazine
  • |
சுமார் 900,000-800,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவை 1,280 இனப்பெருக்க உயிரினங்கள் மட்டுமே..! – முனைவர் மோகனா, பழனி பூமியில் மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் மனிதகுலம் கிட்டத்தட்ட முற்றிலுமாக அழிக்கப்பட்ட காலம் என்ற ஒன்று இருந்தது . அதுதான், சுமார் 900,000-800,000 ஆண்டுகளுக்கு முன்பு, உலக மக்கள் தொகை,என்பது சுமார் 1,280 இனப்பெருக்க உயிரினங்கள் மட்டுமே இருந்தன என்ற ஆபத்தான நிலையை அடைந்தது. இந்த மிகக் குறைந்த நிலையை அடைந்து, 117,000 ஆண்டுகள் இதே […]
Read More
  • By Magazine
  • |
வெ. சின்னசாமி பிறந்தவுடன் பூச்சிகள் பறக்கவும், விலங்குகள் நடக்கவும், மீன்கள் நீந்தவும் தொடங்கி விடுகின்றன. ஆனால் மனிதன் மட்டும் பிறந்ததும் நடப்பதில்லை. சில மாதங்களுக்குப் பிறகு பிறர் துணையுடன் நடக்கக் கற்று கொள்கிறான். பேச, வளர, வாழ பிறர் மூலம் தான் கற்றுக் கொள்கிறான். கற்றுக் கொள்வது என்பது வாழ்வியலின் அடிப்படையாகும். வாழ்வியலை வகுத்து, பகுத்து, விரித்து சொல்கிறது திருவள்ளுவரின் அற்புதப் படைப்பாம் திருக்குறள். மெய், வாய் (நாக்கு, கண், மூக்கு, செவி இவற்றை ஐம்புலன் என்கிறோம். […]
Read More
தமிழ்நாட்டின் வானம்பாடி                          கவிஞர் முடியரசன்!
  • By Magazine
  • |
பூ.வ.தமிழ்க்கனல் ‘தன்மானக்குன்றம்-கொள்கைமாறாச்சிங்கம்- திராவிட இயக்கத்தின் முன்னோடிக்கவிஞர், இயக்கத்தின் ஈடு இணையற்ற தளகர்த்தர்களில் ஒருவர்… இன்று திராவிட இயக்கம் நிமிர்ந்து நின்று கோலோச்சுகிறதென்றால்…. அன்று முடியரசனார் ஆற்றிய இலக்கியப் பணியும் காரணம்” என கருணாநிதியால் போற்றப்பட்ட அன்பு உடன்பிறப்பு அவர்தான், ‘தமிழ்நாட்டின் வானம்பாடி” எனப் போற்றப்பட்ட கவிஞர் முடியரசன். ‘ கவிஞன் யார் என்பதற்கு எடுத்துக்காட்டு தானய்யா பகுத்தறிவுக் கவிஞர் முடியரசன்” என்கிற பெரியாரின் பாராட்டுச் சான்றிதழ் முடியரசின் கொள்கை உரத்துக்குக் காலத்துக்கும் அழியாத சான்று! தேனிமாவட்டம், பெரியகுளம் […]
Read More
மாற்றுத் திறனாளிகள்குறித்த பார்வைகள்
  • By Magazine
  • |
A. தர்மராஜ் (த.ராசு) முந்தைய பாகத்தின் தொடர்ச்சி… 2021-ஜீன் மாதத்தில் தமிழக முதலமைச்சரின் உத்தரவுப்படி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்ற போது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 நபர்களுக்கு சுமார் 3 லட்சம் மதிப்பீட்டில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. அதே ஆண்டு அதே மாதத்தில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் தலைமையில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறைத் திட்டங்கள் […]
Read More
வீரனாக ஆவதற்காக களரி படித்தேன்    களரி ஆசான் பூராடன் பேட்டி
  • By Magazine
  • |
வீரன் ஆவதற்காக ஆசைப்பட்டு களரி கலையை படித்தேன் என்கிறார் 85 வயதான பூராடன் ஆசான் அவர்கள். கன்னியாகுமரி மாவட்டம் எஸ். டி. மங்காடு, அருகே பருத்திவிளை என்ற கிராமத்தில் உள்ள  அவரது வீட்டில் புதிய தென்றலுக்காக சந்தித்தோம் . தள்ளாத வயதிலும் படிக்கட்டு இல்லாத தனது பழைய வீட்டில் இருந்து தனியாக இறங்கிவந்து தன்னம்பிக்கையுடன்    வீரமாக அவர் பேட்டி கொடுத்தார். இதோ அவர் சொல்வதை நீங்களும் கேளுங்கள்.. நீங்கள் களரி கலையை பயிற்சி செய்ய காரணம் என்ன […]
Read More