சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA–297 வது கருத்தாய்வு கூட்டமானது 07.03.2026 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் திரு. அருள்தாஸ் ஆசான் தலைமையில் திரு.இராஜன் ஆசான், மரு.கமலக்கண்ணன், மருத்துவர்.த.இராஜேந்திரன், திரு.ஜாண் ஆகியோர் முன்னிலையில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் திரு.இராஜன் ஆசான் உடல் உஷ்ணம், நரம்பு வலிமை இவற்றுக்கு அமிர்த சஞ்சீவி சூரணம் செய்முறையைக் கூறினார். திரு. அருள்தாஸ் ஆசான் பாசாண விசம் முறிக்கும் மருந்து செய்முறையைக் கூறினார். மேலும் ஒடிவுமுறிவு, புண், தீபட்டபுண், அடிபட்ட காயம் […]
Read More
  • By Magazine
  • |
வர்ம அறிவியல் மாமேதை மூலச்சல் Dr.T. இராஜேந்திரன் சென்ற மாத இதழின் தொடர்ச்சி… பேரண்ட (பிரபஞ்சம்) தோற்றம் பற்றிய அறிவியல் ஆய்வுகள் பேரண்டத் தோற்றம் பற்றி சமயம் சார்ந்தும், அறிவியல் சார்ந்தும் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. அவை, தத்தம் கொள்கைகளுக்கேற்ப நம்பிக்கைக்குரியதாய் காணப்படுகின்றன. 1. கடவுள் எனும் ஓர் ஒப்பற்ற ஆற்றல் படைத்தவர் நேரடியாகவே பிரபஞ்சத்தையும் அதன் உயிரினங்களையும் படைத்தார். 2. சூனியத்திலிருந்து பிரபஞ்சம் உருவாகியது. 3. இப்பிரபஞ்சம் கண்ணுக்குப் புலப்படாத பரமாணுக்களின் சேர்க்கையில் உருவானது என்பன […]
Read More
கூடாரத்தில் கசிந்த குளம்படி
  • By Magazine
  • |
அகிலா கிருஷ்ணமூர்த்தி மருத்துவமனையின் நுழைவு வாயில். வெள்ளை வண்ணம் பூசிய பழங்காலத்துக் கட்டிடமாக இருந்தது. அதற்கு நூற்றாண்டுகால வரலாறு இருப்பதாகச் சொன்னார்கள். ஏதோ ஒரு வகையில் அங்கே பணிபுரிவதற்கான வாய்ப்பு கிடைப்பது அரிதாக இருந்தது. அதன் வலப்பக்கத்தில் சிறிது தூரத்தில் பெரிய வேப்ப மரம். அதைக்கடந்து தான் பிரசவ வார்டுக்கு செல்ல வேண்டும். எந்தக் காலமும் அந்த மரத்தை தனித்துப் பார்த்ததே இல்லை. பறவைகளோடு சேர்த்து பிரசவத்திற்கு வந்தவர்கள், அவர்களுக்காகக் காத்திருப்பவர்கள், உணவு, உறைவிடம் என இல்லாதவர்களுக்கு […]
Read More
வர்மம் எனும்  மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் கூட்டுக்காலம் சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான கோச்சக்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் கூட்டுக்காலம் பற்றி அறிவோம். கையின் அக்குள் பகுதியில் கூட்டுக்காலம் அமைந்துள்ளது. இவ்வர்மம்  கைக்கூட்டுக்காலம், கரக்கூட்டுக்காலம், கமுக்குழி வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. இந்த கூட்டுக்காலத்தில் அத்திப்பதை அத்திக்காந்தாரி நரம்புகளும், அகச்சூத்திர புறச்சூத்திர நரம்புகளும் கூட்டாக பின்னி செயல்படுவதால் தான் இப்பெயர் ஏற்பட்டது. இந்த தலமும் சார்பும் பல்வேறு வர்ம பிணிகளை தீர்க்கும் வல்லமை […]
Read More
  • By Magazine
  • |
– காளீஸ்வர் சமீபத்திய உலக அரசியல் சூழல் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் எரிவாயு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டிற்கு வழி வகுத்திருக்கிறது. நிலைமை சீராகுமா எனும் சந்தேகங்கள் ஒருபுறம் இருக்கும் இடத்தில், எங்கே எரிபொருள் கிடைக்காது போய்விடுமோ என்கிற அச்சத்தில்! எரிபொருள் நிலையங்களில் மக்கள் செய்யும் விஷ பரீட்சைகளை பார்க்கும்போது நெஞ்சம் பதைபதைக்கிறது. குடிதண்ணீர் கேன்கள், குடங்கள் என கிடைக்கும் பொருட்களில் எல்லாம் பெட்ரோலை வாங்கி மக்கள் நிரப்பி கொள்வதற்காக இணையம் முழுவதும் பல காணொளிகள் பரவுகிறது. […]
Read More
தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம் அய்யா வைகுண்டர்
  • By Magazine
  • |
– கிருஷ்ணகோபால்  பிரெட்ரிக் ஏங்கல்ஸ், காரல் மார்க்ஸ் இருவரும் சேர்ந்து  1848 ஆம் ஆண்டு ஏழைப் பணக்காரன் என்றப் பாகுபாடு இல்லாத சமத்துவ உலகை கற்பனைச் செய்து கம்மியூனிச அறிக்கையை வெளியிட்டனர். அவர்கள் சமதர்மக் கொள்கையை உலகிற்கு அறிமுகம் செய்வதற்கு 15  வருடத்திற்கு முன்பே   1833 -ம் ஆண்டு  கல்வி  அறிவில் தாழ்ந்து இருப்பவர்களையும், பொருளாதாரத்தில் வீழ்ந்து கிடப்போரையும் உயர்த்திடும் நோக்கம் கொண்டு தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம்’ என்று எளியவர்கள் பக்கம் நின்று  கிளர்ச்சி முழக்கமிட்டவர் அய்யா […]
Read More
மூலச்சலில் இலவச கண்மருத்துவ முகாம்
  • By Magazine
  • |
மூலச்சல் பவர் டிரஸ்ட் இந்தியா மற்றும் மார்த்தாண்டம் பெஜான்சிங் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கமும் இணைந்து நடத்திய இலவச கண் மருத்துவ முகாம் மூலச்சல் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடந்தது. முகாமை இராஜேந்திரா மருத்துவமனை தலைமை டாக்டர்.த.இராஜேந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து கண்மருத்துவர் கிருஷ்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கண்நோய் சம்மந்தமான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் ஏராளமான நோயாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Read More
இந்தி ஆதிக்க எதிர்ப்பு
  • By Magazine
  • |
பூ.வ.தமிழ்க்கனல் இந்தியாவை ஒற்றைக் குடையின் கீழ்க் கொண்டு வர இந்தியைப் பயன்படுத்த விரும்பினார் காந்தி. இதற்கு வட மாநிலங்களில் இருந்த ஆதரவு, தென்னிந்தியாவில் அவருக்குக் கிடைக்கவில்லை. எனவே, 1916-இல், தென்னிந்தியாவில் இந்தியைப் பரப்புவதற்காக, ‘தட்சிணபாரத இந்திப்பிரச்சார சபை” என்கிற அமைப்பை ஏற்படுத்தினார். 1937, சூலை 12-ஆம் நாள் அச்சபையின் நிகழ்ச்சிக்கு வந்த முதலமைச்சர் இராசாசி, இந்தியைப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கப் போவதைப் பற்றிப் பேசினார். மொழிப்போர் முதல் கட்டம் உடனே, தமிழ் ஆர்வலர்கள், சுயமரியாதை இயக்கம், நீதிக் […]
Read More
புத்திசாலிகளின் பொருட்களின் மீதான காதல்!
  • By Magazine
  • |
– ஓஷோ ஒருமுறை என் பக்கத்து வீட்டில் ஒரு பேராசிரியர் இருந்தார். வார்த்தைகள் அடங்கிய மனிதர். அவர் ஒரு கார் வாங்கினார். தினமும் காலையில் அதை சுத்தம் செய்வார். அது எப்போதுமே கடையில் இருப்பது போல் புத்தம் புதிதாக, காட்சி¢ பொருளாகவே தானிருக்கும். ஒரு போதும் அவர் அதை சாலைக்கு எடுத்துச் சென்றதேயில்லை. வருடக்கணக்காக நான் அதை கவனித்தேன். தினமும் காலையில் அதைத் துடைத்து சுத்தம் செய்ய அதிக சிரத்தை எடுத்துக் கொள்வார். ஒருமுறை நாங்கள் இருவரும் […]
Read More
தேசபற்றால் கணவனையே கொன்ற வீரமங்கை நீரா ஆர்யா
  • By Magazine
  • |
பேராசிரியர் முளங்குழி பா.லாசர் உத்திரபிரதேச மாநிலம் பாகுபத் மாவட்டத்தில் சேத்சஜீமால் என்ற செல்வந்தரின் செல்ல மகளாக 1905- ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் நாள் பிறந்தவர் தான் வீரமங்கை நீரா ஆர்யா. தன் அன்புமகள் உத்திரபிரதேசத்தில் கல்வி பயின்றால் அவளது எதிர்காலம் சிறப்பாக அமையாது என்று எண்ணிய சேத்சஜீமால் பெரும் செலவு செய்து கொல்கத்தா அனுப்பினார். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற பழமொழிக்கேற்ப அவர் விருப்பப்படி திறம்பட கல்வி கற்று முதல் மாணவியாகத் திகழ்ந்தார்.  […]
Read More