குடல் நோய்களுக்கு சிறந்த “புடல்”
  • By Magazine
  • |
இது ஒரு வெள்ளரி குடும்பத்தை சார்ந்த கொடிவகை. காய்கள் பச்சை நிறத்துடன் வெண்ணிற மேல்படிவத்தைக் கொண்டு நீண்டு நுனியில் வளைந்து தொங்கும். பார்ப்பதற்கு பாம்பு போன்று இருப்பதால் ஆங்கிலத்தில் இதனை Snake gourd என்பர். புடல் வகைகளில் கொத்துபுடல், நாய்புடல், பன்றிபுடல், பேய்புடல் என பல வகைகளுண்டு. இவைகளில் கொத்துபுடல், நாய்புடல் இவ்விரண்டும் குத்து செடியாக வளரும். பன்றிபுடல் செடியாக இருந்து அதன்காய் நீளம் குறுகியதாக இருக்கும். பேய்புடல் மிகவும் கசப்புடையது. இதனை உணவாக உண்பதில்லை. உணவாக […]
Read More
டங்ஸ்டன் சுரங்கமும் தமிழின அழிப்புகளும்
  • By Magazine
  • |
மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டிப் பகுதியில் டங்ஸ்டன் என்ற கனிமத்தை எடுக்க 07.11.2024 அன்று ஏலம் விடப்பட்டுள்ளது. ஏலப் பகுதிக்குள்ளாக  அரிட்டாப்பட்டி என்ற ஊரை உள்ளடக்கிய ‘மாநிலத்தின் முதல் பல்லுயிர்ப் பாரம்பரியத் தளம்” அமைந்துள்ளதால், வேதாந்தா என்ற தனியாருக்கு ஏலம் விட்ட ஒன்றிய அரசுக்கெதிராக உள்ளுர் மக்களின், சுற்றுச்சூழல் அமைப்புகளின் பலத்த எதிர்ப்பு வீரியம் கொண்டு வருகிறது. சுரங்கம் தோண்டஏலம் விடப்பட்ட இடம் தமிழ்நாடு அரசு 2002 -ஆம் ஆண்டின் உயிரியல் பன்முகத்தன்மைச் சட்டத்தின் கீழ், […]
Read More
நீரிழிவு நோய் வர்ம மருத்துவ கருத்தரங்கம்
  • By Magazine
  • |
நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நீரிழிவு நோய் வர்ம மருத்துவ கருத்தரங்கம்   நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மூலச்சல். இராஜேந்திரா மருத்துவமனை ஆடிட்டோரியத்தில் வைத்து நீரிழிவு நோயும் வர்ம மருத்துவமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.  இந்த கருத்தரங்கத்தில் வர்ம மருத்துவ மறுமலர்ச்சியின் தந்தை டாக்டர்.த.  இராஜேந்திரன் அவர்கள் வர்ம மருத்துவத்தில் நீரழிவு நோயின் வரலாறு , வர்ம மருத்துவத்தின் மூலம் நீரிழிவை எப்படி கட்டுப்படுத்துவது என்பது போன்ற தலைப்புகளில் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் நீரிழிவும் […]
Read More
விரோதிகள் இறப்பது உனக்கு இழப்பு
  • By Magazine
  • |
ஏதாவது ஒன்று இனிப்பாக இருக்கிறது என்றால் இன்னொன்று கசப்பாக இருக்க வேண்டும். ஏதாவது ஒன்று நன்றாக இருக்கிறது என்றால் இன்னொன்று மோசமானதாக இருக்க வேண்டும். ஏதாவது ஒன்று தெய்வீகமாக இருக்க வேண்டும் என்றால் இன்னொன்று அசுரத்தனமாக இருக்க வேண்டும். ஞானிகளின் புகழ்மிக்க கட்டளை நமக்குத் தெரியும். விரோதியிடமும் அன்போடிரு. லாவோத் சூ அதைவிட ஆழமாகப் போகிறார். வெறுப்புக்கு நல்லியல்பே பதிலாகட்டும் என்கிறார். இதற்கு வெகு ஆழமான காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக ஞானிகள் விரோதியிடம் அன்பாயிரு என்று சொல்லும் […]
Read More
பத்திரிகையாளர்களுக்குப் பாதுகாப்பு
  • By Magazine
  • |
மக்கள் சமுதாயத்தில் கருத்துப் பரிமாற்றத்துக்கு நூல்களும் செய்திப் பரிமாற்றத்துக்கு நாளிதழ்களும் துணை புரிகின்றன. வானொலி, தொலைக்காட்சி, மடிக்கணிணி, கைபேசி போன்ற ஊடகச் சாதனங்கள் மிகுதியாக இருந்தாலும், செய்தி பத்திரிக்கைகளின் பரவலாக வளர்ச்சியை அவை தடுக்க முடியவில்லை. ஏராளமான நாட்டு நடப்புச் செய்திகளையும், வணிகம், தொழில் முன்னேற்றம், அறிவியல் வளர்ச்சி மற்றும் அரசியல் கருத்துக்களையும் நாளிதழ் தருவதால் அவற்றின் முக்கியத்துவம் குறையவில்லை. பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா, யுனைட்டெட் பிரஸ் போன்ற பெரும் செய்தி நிறுவனங்கள் கொடுக்கும் செய்திகளைத் […]
Read More
இதயத்தை பாதுகாக்கும் மாதுளை!
  • By Magazine
  • |
தினமும் வெறும் வயிற்றில் 1 மாதுளையை சாப்பிட்டு வந்தால் உடலில் பாக்டீரியா தொற்று ஏற்படும் அபாயம் குறைகிறது. மாதுளையை தொடர்ந்து சாப்பிடுவதால் மன அழுத்தம் மற்றும் உடலில் உள்ள வீக்கம் குறைவதாக சுகாதார நிபுணர்களின் கூறுகிறார்கள். மாதுளை இதய நோய், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோயிலிருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது.      மாதுளையில் ஆண்டி-ஆக்சிடெண்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. மாதுளை இதய நோய்களுக்கு நிவாரணம் அளிக்கின்றது. மாதுளை சாப்பிடுவது உடலில் கொலஸ்ட்ரால் அளவு […]
Read More
கடிதம் கண்டீரா?
  • By Magazine
  • |
மதிப்பிற்குரிய ஆசிரியர் பெரும்தகை அவர்களே ஒருவர் எதைக் கற்றுக் கொள்ளவில்லையோ அதை பயிற்றுவிப்பது மட்டும் கல்வி அல்ல. நாம் எப்படி இல்லையோ அப்படி மாற்றுவது தான் கல்வி என்பதை நீங்கள் உணர்வீர்கள். பாடநூலை மட்டும் கற்றுத்தரும் இயந்திரமாக செயல்படாதீர்கள். மாறாக வாழ்க்கை கல்வி வாழ்க்கை மூலம் மற்றும் வாழ்க்கை முழுவதும் கல்வி என்னும் நுணுக்கங்களை கற்றுத்தாருங்கள். ஒரு பறவைக்கு வேண்டிய தீனியை அதை பார்த்து எறிந்தால் அந்த பறவை பறந்து போவதில்லை மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து அந்த […]
Read More
ஆண்களை விட பெண்களின்ஆயுட்காலம் அதிகம்… உண்மையா…?
  • By Magazine
  • |
அதிக  ஆயுள்  உள்ள  பெண்கள்.. பெண்கள் ஆண்களை விட பலவீனமானவர்கள். நீண்ட காலம் வாழ்வதில்லை இப்படி ஒரு பொதுக்கருத்து நிலவி வருகிறது இது உண்மையா? இல்லை. உண்மையே இல்லை. பெண்களுக்கு மெதுவாக வயதாகிறதா?  ஆம் என்பதே உண்மை. ஆனால் ஒவ்வொரு வயதிலும் அவர்கள் மிகவும் வலுவாக இருக்கிறார்கள். இதனை விட முரண்பாடாக  பெண்களுக்கு இறப்பு விகிதம் குறைவாக இருந்தாலும், ஆண்களை விட ஒட்டுமொத்த உடல் நோய்களின் விகிதம் அதிகமாக உள்ளது. பெண்களின் வாழ்நாள்… மனிதனின் வாழ்நாளைக் கணக்கிட்டால், […]
Read More
மக்களின் பயத்தை போக்குவதற்காக பஜனை பாடினேன்
  • By Magazine
  • |
ஆசான் கோலப்பன் அவர்கள் பேட்டி கன்னியாகுமரி மாவட்டம் திக்கணங்கோடு அருகே மத்திகோடு பகுதியில் வாழ்ந்து வருபவர் கோலப்பன் ஆசான் அவர்கள். புதிய தென்றலுக்காக அவரை சந்திப்பதற்காக அவரது வீட்டுக்கு சென்ற போது அவர் தனது விவசாயத் தோட்டத்திற்கு சென்றுள்ளதாக தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தோட்டத்தில் சுறுசுறுப்பாக இளைஞரை போல வேலை செய்து கொண்டிருந்த சிலம்ப ஆசான் கோலப்பன் அவர்களை சந்தித்தோம். அப்போது அவர் தனது வாழ்வில் நடந்த சம்பவங்களையும் தனது வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் நம்முடன் […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
ஓடி ஒளியும் எதிர்தரப்பினருக்கு சம்மன் வழங்கும் முறை Civil (உரிமையியல்) வழக்குகளில் பிரதிவாதிகள் வாதியின் சம்மனை வாங்காமல் டிமிக்கி கொடுத்துக் கொண்டே இருப்பர். சம்மன் வாங்கினால் நீதிமன்ற ஆணைக்கு கட்டுப்பட வேண்டியிருக்கும். ஆதலால் சம்மன் வாங்காமல் ஓடி ஒழிந்து கொண்டிருப்பர். வாதிக்கோ, பிரதிவாதிக்கு சம்மன் கொடுத்தால் மட்டுமே அவர் இடத்தில் பிரதிவாதி கட்டுமானம் செய்வதை தடை செய்ய முடியும் என்ற நிலை ஏற்பட்டிருக்கும். சம்மன் பிரதிக்கு வழங்கப்படாததால் வாதி மிகவும் மன உளைச்சலில் இருப்பார். இப்பேர்பட்ட சூழ்நிலைகள் […]
Read More