மூலரோக நிவாரணி “துத்தி”
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் துத்திமூலநோய்களுக்கு  மிகவும் பிரபலமானது. இது 5 அடி உயரம் வரை வளரக் கூடியது. சாலையோரங்களில் அதிகமாக காணப்படும். இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அதிகம் வளர்கிறது.  மேலும், இலங்கை, மலேசியா, அமெரிக்காவிலும் இது காணப்படுகிறது.                 இலை வெல்வெட் போன்று மென்மையாக, சாம்பல் நிறம் கலந்த பச்சை நிறத்தில் இதயவடிவில் காணப்படும். பூ மஞ்சள் நிறத்தில் இருக்கும். காய் கம்மல் போன்று காணப்படும்.                 துத்தியின் அனைத்து பகுதிகளும் மருத்துவகுணங்களை கொண்டுள்ளது. தாவரவியல் பெயர் […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
– வழக்கறிஞர். பி. விஜயகுமார் குழந்தை சாட்சியம் (Child Witness) நமது இந்திய சட்டத்தில் குழந்தைகள் என்றால் 18 வயதுக்குக் குறைந்தவர்கள் ஆகும். இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமாகப் பொருந்தும். திருமண வயதை எடுத்துக் கொண்டோமா£னல் ஆண்களுக்கு 21 வயதும் பெண்களுக்கு 18 வயதும் கடந்தவர்களாக இருக்க வேண்டும். இதில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வயது பாகுபாடு இருப்பதால் பெண்களுக்கு திருமண வயதை 21 ஆக உயர்த்திக் கொள்ளலாமா என்று மத்திய அரசு ஒரு எண்ணத்தில் உள்ளது. பெரும்பாலும் […]
Read More
சொகுசான பிரபஞ்ச பயணம்
  • By Magazine
  • |
– முனைவர் மோகனா, பழனி நம் தாயகம் பால்வழி மண்டலம்  நிலவற்ற மேகமற்ற வானை மின்விளக்குகளின் தொந்தரவு இன்றி கொஞ்சம் அண்ணாந்து பாருங்களேன். உங்கள் ஊரில் வாய்ப்பு இருக்கிறதா. இல்லை எனில், மின் ஒளி இல்லாத ஓர் இடத்துக்கு வந்து பாருங்கள். தெற்கில் இருந்து வடக்காக உச்சிவானில் லேசான மெல்லிய பால் மேகம்  மிதப்பது போன்ற ஒரு காட்சி விண்மீன்களின் ஊடே தெரியும். அது தானுங்க நம் சூரியக்குடும்பத்தின் தாய் வீடான பால்வழி மண்டலம். இப்ப மழை […]
Read More
இரணகள்ளியின் மகத்துவம்….
  • By Magazine
  • |
– கஸ்தூரிபா ஜாண்ஸன் நம் உடல் நலத்துக்காக, நோய்களை தீர்ப்பதற்காக நாம் பயன்படுத்தும் பல்வகைத் தாவரங்களில் ஒன்று இரணகள்ளி. இது ஒரு கள்ளி இனத்தைச் சேர்ந்த செடி. இத்தாவரம் நீளவட்ட வடிவில் நீர் பற்று அதிகமாகவும் காணப்படும். இலைகளின் விளிம்புகள் வளைவுகளாகவும் காணப்படுகிறது. இது ஓர் விதையற்ற தாவரம். இதன் இலைகளின் ஓரங்கள் அல்லது விளிம்புகளிலிருந்து புதிய கன்றுகள் வளர்வதைக் காணலாம். இதற்கு மலைக்கள்ளி என்ற பெயரும் உண்டு. இரணகள்ளி மூலிகையின் இலைகளை காலையில் வெறும் வயிற்றில் […]
Read More
வர்மம்’எனும் மர்மக்கலை…!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் வாறிளகி வர்மம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான சிப்பிச்சக்கரவர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் வாறிளகிவர்மம் பற்றி அறிவோம். கைச்சிப்பி எலும்பின் கீழ்குழியிலிருந்து (7th rib border) முதுகெலும்பு நோக்கி இருவிரல் தள்ளி தசைகள் பொருந்தும் குழியில் அமைந்துள்ளது. இவ்வர்மம் பின்கமுந்தான் வர்மம், வாறிளக்கி வர்மம், சிப்பிச்சதை வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. “வானென்ற வாறிளகி தலத்தைக்கேளு வன்மையுள்ள சீப்பெலும்பில் தானே தானென்ற தாழ் குழியோரஞ்சார்ந்த உள்வளைவில் […]
Read More
நல்ல வார்த்தை பேசுங்க
  • By Magazine
  • |
இரா.சிவானந்தம் நாம் பேசும் வார்த்தைகளுக்கு ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கிறது. எப்போது யாரிடம் எதை பேசினாலும் நல்ல வார்த்தைகளாகவே பேசுங்கள். ஒரு உறவினர் உடம்பு சரியில்லாத ஒரு கவிஞரைப் பார்க்கச் சென்றார். அவரிடம் எங்க தெருவிலும் ஒருவர் இதே போன்று தான் உடம்பு சரியில்லாமல் இருந்தார். எவ்வளவு மருத்துவம் பார்த்தும் சரியாகவில்லை. ரொம்ப கஷ்டப்படுகிறார். மற்றொரு நாள் ஒரு கிராமத்து நண்பர் வந்து நலம் விசாரித்து விட்டு, இதெல்லாம் சரியாகி விரைவில் குணமாகி விடுவீங்க. உங்கள் நல்ல […]
Read More
வழிகாட்டும் ஒளிவிளக்கு
  • By Magazine
  • |
பேசும்போதே மின்னலாய் உற்சாகத்தைப் பாய்ச்சும் மினிப் பிரியாவின் பேட்டி.       கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மினிப்பிரியா, ஒருதொழில்முனைவர் மட்டுமல்லர். ஏராளமான தொழில் முனைவோரைஉருவாக்கிக் கொண்டிருப்பவர். அறிவியல் படிப்பில் ஆராய்ச்சிப் பட்டத்தகுதி கொண்ட மினிப்பிரியா, தன்னைப் போல பலரும் கல்வியிலும் உயர்ந்து வாழ்வில் சாதிக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார். ‘நான் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் பிறந்தேன். எனக்குச் சுமார் 6 வயதாக இருக்கும் போது குழித்துறைக்கு இடம் பெயர்ந்தோம்.      எளிய குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவள் தான் நான். […]
Read More
அரசு அலுவலகங்களில் தவிக்கும் மக்களுக்காக சமூக சேவகர் ஆனேன்
  • By Magazine
  • |
சமூக சேவகர் திரு. ஷாகுல் ஹமீது பேட்டி அரசு அலுவலகங்களில் தங்களுக்கு தேவையான காரியங்களை சாதிக்க வழி தெரியாமல் தவிக்கும் மக்களின் மேல் பரிதாபம் கொண்டு சமூக சேவகர் ஆனேன் என்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த சமூக சேவகர் திரு. ஷாகுல் ஹமீது. புதிய தென்றலுக்காக அவரை குளச்சலில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தோம். அப்போது அவர் கூறியதாவது தாங்கள் சமூக சேவகர் ஆனது எப்படி? நான் சுமார் 30 ஆண்டுகளாக சமூக சேவை […]
Read More
பிழைப்பு
  • By Magazine
  • |
போதை தலைக்கு ஏறியது… கிரிக்கெட் மட்டை, கம்பு, இரும்புக்கம்பி என்று கையில் எது கிடைத்ததோ எடுத்துக் கொண்டார்கள். பத்துபேர் நான்கு இரு சக்கர வாகனங்களில் கிளம்பினார்கள். சமத்துவ கழகம் கட்சியின் வாசலில் குறுக்கும் நெடுக்குமாக வாகனங்களை நிறுத்திய இளைஞர்கள் கட்டையையும் கம்பியையும் எடுத்துக் கொண்டு வெறித்தனமாய் கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்தார்கள். யேய்… யாருப்பா நீங்க… என்ன பண்றீங்க… வட்டமாய் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த வெள்ளை வேட்டி பெரியவர்கள் வெலவெலத்து போனார்கள். போலீஸ்க்கு போன் போடுங்க… சுந்தரத்துக்கு போன் […]
Read More
  • By Magazine
  • |
– வழக்கறிஞர் பி. விஜயகுமார் வக்கீல்களுக்கு சில நிபந்தனைகள் கணவன் – மனைவியிடையே நடந்த விவாகரத்து வழக்கு இது. மனைவி  எதற்கெடுத்தாலும் கணவனிடம் தகராறு செய்யும் நிலையை கொண்டவராக இருந்தாள். இறுதியில் உச்சக்கட்டமாக கணவனிடம் உனது பெற்றோர்களிடமிருந்து பாகப்பிரிவினை செய்து சொத்து வாங்கவில்லை என்றால் நான் தூக்குப்போட்டு சாவேன் என மிரட்டல் விட்டுக் கொண்டிருந்தார். இதனால் கணவரும் அவர் குடும்ப உறுப்பினர்களும் கலக்கத்தில் இருந்தனர். மனைவி தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லவே தாக்குப்பிடிக்காத கணவன் அவள் […]
Read More