மூலச்சலில் இலவச கண்மருத்துவ முகாம்
  • By Magazine
  • |
மூலச்சல் பவர் டிரஸ்ட் இந்தியா மற்றும் மார்த்தாண்டம் பெஜான்சிங் கண் மருத்துவமனை, மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கமும் இணைந்து நடத்திய இலவச கண் மருத்துவ முகாம் மூலச்சல் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடந்தது. முகாமை இராஜேந்திரா மருத்துவமனை தலைமை டாக்டர்.த.இராஜேந்திரன் அவர்கள் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து கண்மருத்துவர் கிருஷ்ணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் கண்நோய் சம்மந்தமான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை அளித்தனர். இந்த முகாமில் ஏராளமான நோயாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
Read More
இந்தி ஆதிக்க எதிர்ப்பு
  • By Magazine
  • |
பூ.வ.தமிழ்க்கனல் இந்தியாவை ஒற்றைக் குடையின் கீழ்க் கொண்டு வர இந்தியைப் பயன்படுத்த விரும்பினார் காந்தி. இதற்கு வட மாநிலங்களில் இருந்த ஆதரவு, தென்னிந்தியாவில் அவருக்குக் கிடைக்கவில்லை. எனவே, 1916-இல், தென்னிந்தியாவில் இந்தியைப் பரப்புவதற்காக, ‘தட்சிணபாரத இந்திப்பிரச்சார சபை” என்கிற அமைப்பை ஏற்படுத்தினார். 1937, சூலை 12-ஆம் நாள் அச்சபையின் நிகழ்ச்சிக்கு வந்த முதலமைச்சர் இராசாசி, இந்தியைப் பள்ளிகளில் கட்டாயப் பாடமாக்கப் போவதைப் பற்றிப் பேசினார். மொழிப்போர் முதல் கட்டம் உடனே, தமிழ் ஆர்வலர்கள், சுயமரியாதை இயக்கம், நீதிக் […]
Read More
புத்திசாலிகளின் பொருட்களின் மீதான காதல்!
  • By Magazine
  • |
– ஓஷோ ஒருமுறை என் பக்கத்து வீட்டில் ஒரு பேராசிரியர் இருந்தார். வார்த்தைகள் அடங்கிய மனிதர். அவர் ஒரு கார் வாங்கினார். தினமும் காலையில் அதை சுத்தம் செய்வார். அது எப்போதுமே கடையில் இருப்பது போல் புத்தம் புதிதாக, காட்சி¢ பொருளாகவே தானிருக்கும். ஒரு போதும் அவர் அதை சாலைக்கு எடுத்துச் சென்றதேயில்லை. வருடக்கணக்காக நான் அதை கவனித்தேன். தினமும் காலையில் அதைத் துடைத்து சுத்தம் செய்ய அதிக சிரத்தை எடுத்துக் கொள்வார். ஒருமுறை நாங்கள் இருவரும் […]
Read More
தேசபற்றால் கணவனையே கொன்ற வீரமங்கை நீரா ஆர்யா
  • By Magazine
  • |
பேராசிரியர் முளங்குழி பா.லாசர் உத்திரபிரதேச மாநிலம் பாகுபத் மாவட்டத்தில் சேத்சஜீமால் என்ற செல்வந்தரின் செல்ல மகளாக 1905- ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் நாள் பிறந்தவர் தான் வீரமங்கை நீரா ஆர்யா. தன் அன்புமகள் உத்திரபிரதேசத்தில் கல்வி பயின்றால் அவளது எதிர்காலம் சிறப்பாக அமையாது என்று எண்ணிய சேத்சஜீமால் பெரும் செலவு செய்து கொல்கத்தா அனுப்பினார். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற பழமொழிக்கேற்ப அவர் விருப்பப்படி திறம்பட கல்வி கற்று முதல் மாணவியாகத் திகழ்ந்தார்.  […]
Read More
ஆட்சிமொழிக் காவலர் இராமலிங்கனார்
  • By Magazine
  • |
பழனி அரங்கசாமி தமிழக வரலாற்றில் வடமொழிக் கலப்பினால் சிக்குண்டு கிடந்த செந்தமிழுக்குப் புத்துயிர் கொடுத்தவர் மறைமலை அடிகளார். கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பெருத்த அளவில் தமிழில் வடமொழிச் சொற்கள் புகுந்தன. வடமொழியின் கலப்பு தமிழ்ப் பாடல்களில் மட்டுமன்றி உரைநடையிலும் புகுந்தது. மணிப்பிரவாளம் எனும் இந்தக் கலப்புத் தமிழும் பெருகி ஒரு கட்டத்தில் வடமொழி இன்றேல் தமிழில்லை என்று சுவாமிநாத தேசிகர் போன்ற வடமொழி வாணர்கள் பேசத் தொடங்கினர். தமிழுக்கு ஏற்பட்ட இத்தகைய இழிதகவு கண்ட மறைமலையார் தனித்தமிழ் […]
Read More
அண்டத்தோற்றத்தின் அறிவியல் கொள்கைகள்
  • By Magazine
  • |
வர்ம அறிவியல் மாமேதை மூலச்சல் Dr.T. இராஜேந்திரன் அறிவியல், மதக் கோட்பாடுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள பல்வேறு அறிவாளிகளை பலிகொடுத்துள்ள கொடுங்கதைகள் மேற்கத்திய வரலாற்றில் உண்டு. அவ்வாறு பல்வேறு இன்னல்களையும், இடர்களையும் தாண்டி முன்னேறிய அறிவியல் தளம் மேற்கத்திய நாட்டிலிருந்து தொடங்கியதால் அந்த வழி மரபினர்களும் – அவ்வழி மரபினர் சொல்லாட்சிகளுமே இன்றுவரை அறிவியல் உலகின் முக்கிய இடங்களைப் பெற்றுள்ளனர். ஆனால், அறிவுத்திறனும், ஆற்றலும் படைத்த கிழக்கத்திய சமூக நாகரீகம் சமயப் பிடிப்புகளிலிருந்து தன்னை பிரித்தறிய முடியாமல் இருந்ததாலும், […]
Read More
கிரீன் டீயும் ஆன்டி ஆக்ஸிடஸ்களும்
  • By Magazine
  • |
கஸ்தூரிபா ஜாண்ஸன் கிரீன் டீ தாவர இயலில் கேமிலியா சினென்சிஸ் (Camellia sinensis) எனப்படும் குறிப்பிட்ட ரகத் தேயிலைச் செடியின் இளம் தளிர்களும், மொட்டுகளும் சேமிக்கப்பட்டு குறைந்த பட்ச சூட்டில் இலைகளின் நிறம், மணம், ருசி மாறாமல் கிரீன் டீ எனப்படும் பசும் தேயிலை தயாரிக்கப்படுகிறது. கொதிக்கும் நீரில் பச்சைத் தேயிலை போட்டு பால் சேர்க்காமல் பற்களில் சிறிது சிறிதாகப் படும்படி அருந்த வேண்டும். சுக்கு, பட்டை, மிளகு, ஏலம், கிராம்பு, துளசி, புதினா இலைகள், ரோஜா இதழ்கள், […]
Read More
மாமனிதர் நல்லகண்ணு
  • By Magazine
  • |
தமிழக அரசியலின் ‘அறம்’ என்கிற சொல்லுக்கு உருவம் கொடுத்தால், அது முதுபெரும் இந்திய கம்யூ. தலைவர் நல்லகண்ணுவாகத்தான் இருக்கும். 101-வது வயதில் அவர் இன்று விடைபெற்றிருப்பது, ஒரு கட்சியின் இழப்பல்ல; இந்த மண்ணின் அரசியல் எளிமையின் மறைவு! அரசியல்வாதிகள் என்றால் ‘சொத்து சேர்ப்பவர்கள்’ என்கிற பிம்பத்தை உடைத்தெறிந்தவர் நல்லகண்ணு. அவரது 80-வது பிறந்தநாளில், கட்சித் தொண்டர்கள் வியர்வை சிந்திச் சேர்த்த ஒரு கோடி ரூபாயையும், ஒரு புத்தம் புதிய காரையும் நல்லகண்ணுவிடம் அன்பளிப்பாக வழங்கினார்கள். மேடையில் அதனைப் […]
Read More
  • By Magazine
  • |
 ஓஷோ வார்த்தைகளை உண்மையிலிருந்து பிரிக்க முயற்சியுங்கள். உங்களின் அன்றாட வாழ்க்கையில் யாராவது நான் உன்னை வெறுக்கிறேன் என்று சொன்னால் அந்த வார்த்தையை நம்பி விடாதீர்கள். அது ஒரு கணத்தில் தோன்றியதாக இருக்கலாம். அது ஒரு அம்சமாக இருக்கலாம், வார்த்தைகளோடு செல்லாதீர்கள். இல்லையெனில் நீங்கள் வாழ்க்கைக்கே எதிரியாக விடுவீர்கள். வார்த்தைகளால் நண்பர்களை உருவாக்கிக் கொண்டது போல், வார்த்தைகளால் எதிரிகளையும் ஏற்படுத்திக் கொள்வீர்கள். வார்த்தைகளுக்காகச் செல்லாதீர்கள். அந்த மனிதனுக்குள் பாருங்கள், கண்களுக்குள் பாருங்கள், முழுமையை உணருங்கள் அது ஒரு கணத்தின் […]
Read More
மறதி-மூளையின் அமைதியான அறிவியல் புரட்சி
  • By Magazine
  • |
– முனைவர் மோகனா, பழனி “நினைவுகள் நம்மை உருவாக்குகின்றன. மறதிகள் நம்மை பாதுகாக்கின்றன.” மரணிப்பு.. வேதனை -துக்கம் – மறதி! நமது நெருங்கிய நண்பர்/ உறவினர் ஒருவர் மரணித்துவிட்டால், நாம் வேதனைப்பட்டு துடிதுடித்துப் போகிறோம். துக்கம் நெஞ்சை அடைக்கிறது. அழுது புலம்புகிறோம். அல்லது ஒரு விபத்தைப் பார்த்தாலோ/ கேள்விப்பட்டாலோ, அதே போல மனம் கலங்குகிறது. ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போகிறோம். ஆனால் நாளாக, நாளாக இது குறைகிறது. அல்லது அதனை கொஞ்சம் கொஞ்சமாக மறக்காது துவங்குகிறோம்.இது ஏன்? […]
Read More