தொழிலாளர் நலனுக்காக எதிரான சட்டங்கள்!
  • By Magazine
  • |
பூ.வ.தமிழ்க்கனல் இந்தியாவில் நடைமுறையில் இருந்து வரும் 44 தொழிலாளர் நலச் சட்டங்களை நீக்கிவிட்டு, அவற்றுக்குப் பதிலாகத் தொழிலாளர் நலம் குறித்த 4 வழிகாட்டுதல் தொகுப்புகளை ஊதியம் குறித்த தொகுப்பு, தொழில்துறை உறவுகள் குறித்த தொகுப்பு, பணி இடப் பாதுகாப்பு, உடல் நலம் மற்றும் பணி நிலைகள் குறித்த தொகுப்பு, சமூகப் பாதுகாப்பு குறித்த தொகுப்பு இயற்றி, அவற்றைச் சட்டம் ஆக்கி நவம்பர் 21 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தி இருக்கிறது ஒன்றிய அரசு. மேற்குறிப்பிட்ட 44 தொழிலாளர் […]
Read More
  • By Magazine
  • |
சுமார் 900,000-800,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவை 1,280 இனப்பெருக்க உயிரினங்கள் மட்டுமே..! – முனைவர் மோகனா, பழனி பூமியில் மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் மனிதகுலம் கிட்டத்தட்ட முற்றிலுமாக அழிக்கப்பட்ட காலம் என்ற ஒன்று இருந்தது . அதுதான், சுமார் 900,000-800,000 ஆண்டுகளுக்கு முன்பு, உலக மக்கள் தொகை,என்பது சுமார் 1,280 இனப்பெருக்க உயிரினங்கள் மட்டுமே இருந்தன என்ற ஆபத்தான நிலையை அடைந்தது. இந்த மிகக் குறைந்த நிலையை அடைந்து, 117,000 ஆண்டுகள் இதே […]
Read More
  • By Magazine
  • |
வெ. சின்னசாமி பிறந்தவுடன் பூச்சிகள் பறக்கவும், விலங்குகள் நடக்கவும், மீன்கள் நீந்தவும் தொடங்கி விடுகின்றன. ஆனால் மனிதன் மட்டும் பிறந்ததும் நடப்பதில்லை. சில மாதங்களுக்குப் பிறகு பிறர் துணையுடன் நடக்கக் கற்று கொள்கிறான். பேச, வளர, வாழ பிறர் மூலம் தான் கற்றுக் கொள்கிறான். கற்றுக் கொள்வது என்பது வாழ்வியலின் அடிப்படையாகும். வாழ்வியலை வகுத்து, பகுத்து, விரித்து சொல்கிறது திருவள்ளுவரின் அற்புதப் படைப்பாம் திருக்குறள். மெய், வாய் (நாக்கு, கண், மூக்கு, செவி இவற்றை ஐம்புலன் என்கிறோம். […]
Read More
தமிழ்நாட்டின் வானம்பாடி                          கவிஞர் முடியரசன்!
  • By Magazine
  • |
பூ.வ.தமிழ்க்கனல் ‘தன்மானக்குன்றம்-கொள்கைமாறாச்சிங்கம்- திராவிட இயக்கத்தின் முன்னோடிக்கவிஞர், இயக்கத்தின் ஈடு இணையற்ற தளகர்த்தர்களில் ஒருவர்… இன்று திராவிட இயக்கம் நிமிர்ந்து நின்று கோலோச்சுகிறதென்றால்…. அன்று முடியரசனார் ஆற்றிய இலக்கியப் பணியும் காரணம்” என கருணாநிதியால் போற்றப்பட்ட அன்பு உடன்பிறப்பு அவர்தான், ‘தமிழ்நாட்டின் வானம்பாடி” எனப் போற்றப்பட்ட கவிஞர் முடியரசன். ‘ கவிஞன் யார் என்பதற்கு எடுத்துக்காட்டு தானய்யா பகுத்தறிவுக் கவிஞர் முடியரசன்” என்கிற பெரியாரின் பாராட்டுச் சான்றிதழ் முடியரசின் கொள்கை உரத்துக்குக் காலத்துக்கும் அழியாத சான்று! தேனிமாவட்டம், பெரியகுளம் […]
Read More
மாற்றுத் திறனாளிகள்குறித்த பார்வைகள்
  • By Magazine
  • |
A. தர்மராஜ் (த.ராசு) முந்தைய பாகத்தின் தொடர்ச்சி… 2021-ஜீன் மாதத்தில் தமிழக முதலமைச்சரின் உத்தரவுப்படி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்ற போது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 நபர்களுக்கு சுமார் 3 லட்சம் மதிப்பீட்டில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. அதே ஆண்டு அதே மாதத்தில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் தலைமையில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறைத் திட்டங்கள் […]
Read More
வீரனாக ஆவதற்காக களரி படித்தேன்    களரி ஆசான் பூராடன் பேட்டி
  • By Magazine
  • |
வீரன் ஆவதற்காக ஆசைப்பட்டு களரி கலையை படித்தேன் என்கிறார் 85 வயதான பூராடன் ஆசான் அவர்கள். கன்னியாகுமரி மாவட்டம் எஸ். டி. மங்காடு, அருகே பருத்திவிளை என்ற கிராமத்தில் உள்ள  அவரது வீட்டில் புதிய தென்றலுக்காக சந்தித்தோம் . தள்ளாத வயதிலும் படிக்கட்டு இல்லாத தனது பழைய வீட்டில் இருந்து தனியாக இறங்கிவந்து தன்னம்பிக்கையுடன்    வீரமாக அவர் பேட்டி கொடுத்தார். இதோ அவர் சொல்வதை நீங்களும் கேளுங்கள்.. நீங்கள் களரி கலையை பயிற்சி செய்ய காரணம் என்ன […]
Read More
நீங்கள் உங்களை மறந்து விடாதீர்கள்
  • By Magazine
  • |
– ஓஷோ முன்னொரு காலத்தில் ஒரு அரசர் இருந்தார். அவர் ஜோதிடத்திலும் வல்லவராக இருந்தார். அவர் நட்சத்திரங்களை பற்றிக் கற்பதில் மிகவும் ஆர்வமுடையவராக இருந்தார். திடீரென்று அவர் இதயத்தில் பயத்தை உணர்ந்தார். ஏனெனில் இவ்வருடத்தில் அறுவடையாகும் பயிர்களை உட்கொண்டால் அபாயகரமான விளைவுகள் ஏற்படும் என்பதை உணர்ந்தவராக இருந்தார். யார் அந்தப் பயிரை உண்டாலும் அவர்கள் பைத்தியமாகி விடுவார்கள். ஆகவே அவர் தனது பிரதம மந்திரியைக் கூப்பிட்டு நடக்கப் போகும் விஷயத்தைப் பற்றி சொன்னார். நட்சத்திரங்கள் சரியாக இருக்கின்றன. […]
Read More
தமிழரும் பாரம்பரிய மருத்துவமும்
  • By Magazine
  • |
மூலச்சல் Dr.T.இராஜேந்திரன் M.Sc, MD(Hom),Ph.D., தமிழர்கள் மருத்துவக்கலையில் தலைசிறந்து விளங்கியவர்கள். இதன் உயர்வையும், நன்மதிப்பையும் மருந்துகளின் பெயரிலேயே பல புலவர்களின் பெயர்களும், இலக்கியங்களும் இருப்பதிலிருந்து எளிதில் உணர்ந்துகொள்ள முடிகிறது. தமிழர் மருத்துவம் உலகில் தமிழர்கள் பரவி வாழ்ந்த அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றன. எனினும் குமரி மாவட்டம் இன்றும் இதில் தலைசிறந்து விளங்குகின்றது. லெமூரியாக் கண்டம் என நம்மால் கருதப்படும் பகுதியின் எச்சமாகக் கருதப்படும் குமரி மாவட்டத்தில் தமிழரின் பாரம்பரியமிக்க மருத்துவம் பொதுமருத்துவம், சிறப்பு மருத்துவம், கை மருத்துவம், […]
Read More
சஜீவின் தெய்யத்தின் முகங்கள் நூல் குறித்த ஒரு பார்வை
  • By Magazine
  • |
– கிருஷ்ணகோபால்     கடந்த 2024 ம் ஆண்டு ஜுன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு முன்னால் நண்பர்களோடு வட கேரளத்திற்கு மூன்று நாட்கள் சுற்றுலா சென்று வந்தேன். அதன் ஒரு பகுதியாக கண்ணூர் அருகே தெய்யம் கலைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்ட சிறக்கல் அருங்காட்சியகத்தை பார்வையிடும் போது தெய்யத்தின் பல முகங்களை பார்க்க முடிந்தது . அதை பார்த்ததும்  தெய்யம் எனும் களியாட்டம் நிகழும் இடத்திற்குச் சென்று பார்க்க வேண்டும்  என  ஆர்வம் பொங்க அங்குள்ளவர்களிடம் […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-293 -வது கருத்தாய்வுக் கூட்டமானது மரு.கமலகண்ணன் ஆசான் தலைமையில் திரு.கே.செல்வநாதன் ஆசான், மூலச்சல் த.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 01.11.2025 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில், மரு.கமலகண்ணன் ஆண்மைக்குறைவு, மலட்டுத்தன்மை இவற்றுக்கு மருந்தினையும், தோல்நோய்கள், வெரிக்கோஸ், சோரியாசிஸ் இவற்றுக்கு மருந்தினையும், பிண்ட தைலம் செய்முறை மற்றும் மாந்தம், சீதக்கழிச்சல் இவற்றுக்கு சூரணம் செய்முறையையும் தெளிவாகக் கூறினார். அடுத்ததாக திரு.ஜெகஜீவன் ஆசான் வாதநோய்களை குணப்படுத்தும் மருந்தினையும், பெரும்பாடு, வெள்ளை, […]
Read More