• By Magazine
  • |
கா. திலிபன், தமிழாசிரியர் தூசுதட்டிய உன்கூந்தல் உதிரும்போது வருந்துவாயோ? உன் கரம்பிடித்தே- வீட்டை வலம் வருவார்! வாய்ச் சண்டையில் உன்னையே “பிஞ்சிடும்”  என்பார்! வீட்டைத் தூய்மை செய்யும் நீயோ இறுதியில் வெளியில் கிடக்கின்றாய்! உன்னைப் படைத்தவனோ- உன்னைக்கண்டு ஒருநாளும் வருந்தியதில்லை! வாய் இருந்தால் கேட்டுவிடு என்னை வாழவிடு என்று!
Read More
  • By Magazine
  • |
இரா.சிவானந்தம் உருவாகிறதோ புதியதாக ஒரு வேறுபட்ட உலகம் லஞ்சம்- ஊழல் நிறைந்தாக..? காண சகிக்கவில்லை எங்கும் பரந்து நிகழும் பாலியல் – வன்முறை கொடுமை! மக்களிடமிருந்து விடைபெற்று காணாமல் போய் கொண்டிருக்கிறது பண்பாடும்- கலாச்சாரமும் எங்கு தேடியும் காண முடியாமல் உள்ளம் ஏங்கித் தவிக்கிறதே மனிதநேயமும் – அன்பு தழுவலும் பணமே பிரதானமாக மாறிக் கொண்டிருக்கிறது உறவிலும்- பாசத்திலும் அவசரத்திற்கு உதவுவாரும் ஆபத்தில் காப்பவரும் காணா தேசமாய் மாறுதே கூட்டுக்குடும்ப வாழ்க்கையும் முதியோர்களைப் பேணுவதும் குறைந்து – […]
Read More
சுதந்திரம்…
  • By Magazine
  • |
கமல. அருள் குமார் சிறகை விரிக்க சிட்டுக்கு வானம் முழுவதும் சுதந்திரம்… மணத்தை பரப்ப மொட்டுக்கு காற்று முழுவதும் சுதந்திரம்.. கண்டபடி ஆட மீனுக்கு கடல் முழுவதும் சுதந்திரம்… வண்டு போல ஓட மானுக்கு காடு முழுவதும் சுதந்திரம்… சுதந்திரம் பெற்ற மனிதனுக்கு சொந்த நாட்டிலும் இல்லை சுதந்திரம்… இயற்கை போடுவதில்லை எதற்கும் தடை.. செயற்கைத் தடையென்றால் சினம் கொண்டதை உடை..
Read More
பகுத்தறிவைப் பயன்படுத்து!
  • By Magazine
  • |
கே.பி.பத்மநாபன் பகுத்தறிவைப் பயன்படுத்திப்                 படிப்பறிவை உயர்த்திக் காட்டு வகுத்திட்ட பழமை மூட                 வழக்கத்தை ஒழித்துக் காட்டு தகுமென்றோ தகாத தென்றோ                 தனியறிவால் பிரித்துக் காட்டு தொகுத்த பல நூல்கற்றாலும்                 தூயவையா தென்றே காட்டு! மிகுதியான கற்பனைகள்                 மெய்யற்ற பொய்க் கதைகள் மகுடியின் முன் நாகம்போல் உன்                 மதியினையே மயக்கும் தம்பி புகுந்திட்ட ஐயம் நீக்கப்                 புத்தியுடன் வினாவெழுப்பு தகுதிவிடை கிட்டா தாயின்                 தள்ளிவிடு மூட மென்றே! […]
Read More
  • By Magazine
  • |
குமரி எழிலன் கண்ணெதிரே உள்ளகாட்சி            காண்பதற்கு பெண்மறைவில் மறைந்ததென்ன            மாயம் பெண்இடத்தைக் காலிசெய்த             உடனே தூண்மறைவில் சென்றதென்ன             நியாயம் ஒருகண்ணால் நீ பார்த்த             போதும் ஒளிர் மின்னல் என்மீது              மோதும் தளிர்கொடியாய் நெஞ்சத்தில்               படரும் குளிர் கொம்பாய் என்நெஞ்சு                மாறும்.. பார்வையாலே நீ என்னைக்                 கொல்கிறாய் பாவி என்னை பரிதவிக்க                  வைக்கிறாய்.. நேராகப் பார்த்தால்தான்                 பெண்ணே நிலவு முகம் தேய்ந்திடுமா                  […]
Read More
காத்திருப்பு
  • By Magazine
  • |
– துவாரகா சாமிநாதன் உனக்கான உருவத்தை சொற்களாய் விரித்து எளிதில் வடிவம் கொண்டு விடுகிறாய் மேகமே. கலைத்தும் கலைந்தும் ஏவாளின் மனக்காட்சியை வெளிப்படுத்தி குறிப்பால் உணர்த்துகிறாய் உயிரிணையும் காலத்தை. எனக்குத்தான் வெட்கம் மயில் போல் தோகை விரித்தாட முடியாது. நசித்து விடுகிறேன் ஆசைகளை இருந்துமென்ன  மழைத்துளிகளோடு கலப்புற்று வாசம் வீச வறண்ட நிலம் போல தயாராக வெடித்துக் கிடக்கிறேன் படர்ந்து ஈரம் பரவட்டுமே. என்றோ ஒருநாள் நீராய் மாறி வந்து நதிபோல் தழுவுவாய் என… வறள் நிலமாகி […]
Read More
  • By Magazine
  • |
குமரி எழிலன் இரவு என்பது உறங்க அல்ல விழித்துக்கொள்ள… கனவு என்பது ஏங்க அல்ல இயங்க… பார்வை என்பது மறக்க அல்ல பதிந்து கொள்ள பயணம் என்பது பார்க்க அல்ல அனுபவிக்க கடல் என்பது அலைவீச அல்ல உயிர்கள் வாழ வாழ்க்கை என்பது வாய் பேச அல்ல வாழ்ந்து காட்ட… புரிவது என்பது சொற்களாலல்ல செய்கைகளால் இருப்பது என்பது கற்பனை அல்ல செயல்படுவது… உயிரால்மட்டும் வாழ்வது விலங்கு உணர்வோடும் வாழ்பவன் மனிதன்.. இன்பம் என்பது கையளவு அல்ல […]
Read More
  • By Magazine
  • |
கா.திலீபன்  தமிழாசிரியர் பௌர்ணமியைப்  போல் அலங்கரித்துச் சுற்றித்திரிந்த விண்மீனே! கால் வயிறு கஞ்சிக்காகவும், தன் மகனின் ஆசைக்காகவும், உடல் கருத்தும்! கண்கள் சிவந்தும்! கரும் நிலவாக சுற்றிக்கொண்டிருக்கிறாய்! அதனால்தான் என்னவோ? அதை அமாவாசை என்கிறார்களோ? என் ஆசை அம்மா! என்றும் உயர்ந்திருக்கிறாய்.
Read More
முரண்
  • By Magazine
  • |
கமல அருள் குமார் தொலைவில் அழகாய் தெரியும் சில அருகே ஆபத்தைத் தரலாம்.. வளைவில் முடிவாய் தெரியும் சில வளைந்த பின் வியப்பைத் தரலாம்.. கலையில் கவர்ச்சியாய் தெரியும் சில களைத்த பின் கவலையும் தரலாம்… விலையில் வீழ்ச்சியாய் தெரியும் சில உழைத்த பின் உயர்ச்சியும் தரலாம்… பார்வைக்கு பளபளப்பாய் தெரியும் சிலர் பழகின பின் பாம்பாகவும் மாறலாம்.. அழகும் ஆபத்தும் எப்போதும் அருகருகே… அறிவும் அறியாமையும் எப்போதும் எதிர் எதிரே…
Read More
“நாளைய உலகம்” (இசைப்பாடல்)
  • By Magazine
  • |
குமரி எழிலன் எல்லைகளில்லா உலகம் – இது ஏற்ற தாழ்விலா கழகம் எங்கே எதுவிளைந்தாலும்-அது பெற்றவர்க்கெல்லாம் சொந்தம்                                 (எல்லைகளில்லா…) உழைப்பில் உருவான உலகம் -இது உலகோர்க் கெல்லாம் சொந்தம் பசித்த வயிறு நிறைத்து – மகிழும் பாரோர் எல்லாம் பந்தம்..                                 (எல்லைகளில்லா …) விற்பனை என்பது பனையா – அட கற்பனை போல் ஒரு வினையா என்றொரு கேள்வி எழணும் – நாம் எந்நாளும் எல்லாமும் பெறணும்                                 (எல்லைகளில்லா …) போரெனும் ஆயுதம் […]
Read More