ஆலயங்களிலிருந்து வெளியேறுதல்
  • By Magazine
  • |
நூற்றாண்டுகளுக்குப்பின் அங்கு செல்ல முடிந்த நான் அதன் இறுகித் திரண்டெழுந்து நிற்கும் கனத்த பெரிய கதவம் காண்கிறேன் சட்டை களைய வைக்கப்பட்டேன் வெற்று மார்போடு எனக்கான தேவதைகளைக் கண்டு குறைதீர்க்க வேண்டுமென்று சோதிடம் வழி உள்ளேறினேன் கருங்கல் பாவிய பிரகாரம் முழுதும் புறக்கணிப்பின் கூக்குரலால் நிறைந்திருப்பதை உணரத் தொடங்கியபோது பதற்றமுற அவசரமானேன் யாழிகளின் கோரைப் பற்களில் மனித சதைத் துணுக்குகள் சிற்பங்களின் அழகில் வடிகிறது செங்குருதி எனக்கெதிரே இன்னொரு மொழியில் யாரோ தீர்மானஞ்சொல்ல கலவரமடைந்தேன் வெளியேறும் திசைகளில் […]
Read More
கவிதை
  • By Magazine
  • |
யானையொன்றை விழுங்குவதுபோல் நான் கண்ட கனவு விடிகாலையின் பாயில் சுருட்ட முடியாமலிருந்தது. யானையாகக் கண்டது எனது காலத்தையா கற்பனையையா என்னையா நானொரு கோயில் யானையிடம் நாலைந்து நாள் பேசிப்பார்த்தேன் யானை என்னிடம் பேசிய மொழி தமிழைப்போல் எனக்குப் புரிந்தது சாலையோரத்தில் வாகனங்களின் சக்கரங்கள் காறித்துப்பும் மழை வெளியில் எனது முகம் போய் அலைகிறது. யானை போல்  ஊர்திகள் சாலையை நிரப்புகின்றன எதுவும் சொல்வதற்கில்லை அனாதைக் கனவாய் திசைகளில் அடித்துச் செல்லப்படுகிறது பெருஞ்செவிகள். ஒருமுறை வானவில்லில் எனது நிறத்தையும் […]
Read More
ஒரு பஞ்ச் ஒரு கிக் அவ்வளவுதான்
  • By Magazine
  • |
சிரிப்புகள் ஒன்றை ஒன்று முட்டிப் திரியும் வகுப்பறைக்குள்ளே ஆசிரியை சொல்லிக்கொண்டிருந்தார் “குழந்தைகளே உங்களை யாராவது விரும்பத் தகாத வழியில் தொட அனுமதிக்கக் கூடாது” உடலின் குறிப்பிட்டப் பாகங்களை சுட்டிக் காட்டினார். கிச்சுகிச்சு மூட்டிய உணர்வோடான சிரிப்பில் குழந்தை முகங்கள் “அவ்வாறானசூழலில் என்ன செய்வீர்?” ஆசிரியையின் கேள்வியில் வகுப்பறை அமைதியாயிற்று. கிணற்றுள் கல்லெறியும் தொனியில் ஒரு குழந்தை “அவங்களுக்கு டிஸ்யும் டிஸ்யும்தான் ஒரு பஞ்ச் ஒரு கிக் அவ்வளவுதான் அப்படியே காலி பண்ணிருவேன்” குழந்தையின் அடவுகளில் கராத்தேவின்  மஞ்சள் […]
Read More
கதவுக்குள்ளிருந்து கிரீச்சிடுவது ஒரு வட்டமே
  • By Magazine
  • |
இருபக்கங்களிலும் ஒவ்வாமையை வளர்த்தியிருக்கிறது கதவு உளுத்துபோன மரத்தால் ஆகியிருக்கின்றது கதவின் மனம் சிலுவை என அடிக்கப்பட்டிருக்கும் நிலையின் கண்ணி விடுவதாயில்லை கதவை அதன் கனத்தையும் தாண்டி புலம்பலை ஒரு சாபமென துப்பிக்கொண்டிருக்கின்றது கதவு இருபக்கங்களிலும் அங்கிருக்கும் இருபக்கங்களும் தனக்கான இருபக்கங்களை உற்பத்தி திறன்கொண்டு வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன அவ்வாறே கதவுகளும் பக்கங்களும் பக்கங்களும் கதவுகளும் என சுழலும் ஒரு வட்டம் தன்னுள் ஒளி பொருந்தியதாய் தன்னை நினைத்துக் கொள்கிறது பார்த்துக்கொண்டிருக்கும் சிறுவன் தன்கை ஓட்டுச்சில்லால் அடிக்கின்றான் சில்லு சில்லாகும் […]
Read More
  • By Magazine
  • |
பிறரை வென்று வாழ்வதற்காய்ப்                 பித்தலாட்டம் செய்வதுவும் உறவை எல்லாம் மிதிப்பதுவும்                 உண்மை தன்னை மறைப்பதுவும் திறமையாக ஏய்ப்பதுவும்                 திருடிப் பொருளைச் சேர்ப்பதுவும் புறமே கூறி நடப்பதுவும்                 புகழைத் தருமென்(று) எண்ணாதே! அறமே இல்லாச் செய்கைகளால்                 ஆதிநாளில் கிடைப்பதெலாம் இறவாப் புகழென்றாகாதே;                 ஈசல் வாழ்வே அதற்குண்டு: மறந்தும் கேடு செய்யாமல்                 மனிதநேயத் தொண்டுடனே சிறந்த செயலைச் செய்வோர்க்கே                 சீரும் பேரும் நிலைத்திருக்கும்! நிறமும் இனமும் மதமுமெலாம்                 […]
Read More
உலகைப் படிப்பவன்
  • By Magazine
  • |
எப்போதும் எதிலும் ஒழுங்கைக் கடைபிடிக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கு காணும் எல்லாவற்றிலும் நீளும் தாமதம் காணச் சகிக்காமல் தலைக்கேறும் கோபத்தில் தானாகவே கிடைத்து விடுகிறது சிடுமூஞ்சிப் பட்டம் தேவையின் உச்சத்தில் காலைப் பிடித்தும் காயை நகர்த்தியும் காரியம் சாதித்துவிடும் எதிர் வீட்டுக்காரருக்கு சாமர்த்தியசாலிப் பட்டம் பொருந்திப் போகிறது. எப்போதும் உதவியென யார் கேட்டாலும் ஓடிச்செய்யும் மாடி வீட்டு நண்பருக்கு எளிதில் கிடைக்கிறது இளிச்சவாயன் பட்டம் எப்படி வாழ்வதென்ற கேள்வியோடும் எதைப் படிப்பதென்ற ஏக்கத்தோடும் எனைச் சுற்றியுள்ளோரைக் கண்டு மனிதர்களின் […]
Read More
சாலையில்  இறந்து கிடக்கும் பூனைக்கான இரங்கல் குறிப்பு
  • By Magazine
  • |
வண்டியில அடிபட்டு செத்துகிடக்குது பாருங்கப்பா, பாவம் அந்த பூனை. சாம்பல்கரிய நிறத்தில் உப்பிப்போய் கிடந்த அந்தப் பூனையின் உடலில் வண்டியின் தடயங்களைக் கண்டறிய இயலவில்லை. இதோட அப்பா பூனை எங்கப்பா இருக்கும்?… தேடிவரும்ல. நெஞ்சுக்கு முன்னிருந்தது அவனின் குரல்… அப்பாவை எவ்வளவு பெரிய உருவமாக எழுப்பிவிட்டான்! கடுகுக்குள்ளிருந்து எகிறும் குரலை குறுகத் தறித்தால் எங்கு கொண்டு பொத்தி வைப்பது. அது பெரிய பூனைதான் என்பதையும் தனித்தலையும் திறன் கொண்டது என்பதையும் நான் சொல்லவில்லை. அவ்வாறே அது கைவிடப்பட்டதாகவோ […]
Read More
கவிதை
  • By Magazine
  • |
கரிசனையோடு உச்சுகொட்டும் சிலரும் கண்டும் காணாமல் பலருமாயிருக்கும் ஒரு மத்தியான வெய்யிலின் உக்கிரத்தில் மாரெலும்பு தெந்நிய ரோட்டோரச் சிறுமி நெருப்பைக் கடப்பதுபோல ரோட்டைக் கடக்கிறாள் பட்டுப்போன மர இலைகளுக்கு நன்றியோடு நானெழுதிக்கொண்டிருக்கும் இந்த கவிதை என்னை அருவருப்பாய் பார்க்கிறது. – டாக்டர் கி. பாபு
Read More
உறவு!
  • By Magazine
  • |
உறவுகளே இல்லாத உலகமாக உருமாறும் நாள்களையே காண்கின்றோமே; பிறந்திட்ட பிள்ளையெலாம் வளர்ந்த பின்னர் பெற்றோரை தள்ளிடுவர் படுகுழிக்குள்; சிறந்திட்ட கல்விதனில் தேர்ந்த பின்னர் செல்கின்றார் எங்கெங்கோ செல்வம் சேர்க்க; உறவுசுற்றம் யாவினையும் நீக்கி வைத்தே ஒரு வட்டத்துள்ளெங்கோ சுழலுகின்றார் ! பறக்கின்ற வரையிங்கே பாதுகாக்கும் பறவைகளின் வாழ்வையின்று மாந்தர் கொண்டார்; சிறகிங்கே முளைத்தவுடன் பிரிந்து செல்லும் செல்வமக்கள் உறவறுக்கும் நிலையைக் காண்பார்; நறவென்று நினைத்திங்கே வளர்த்ததெல்லாம் நச்சாக ஆனதென வருந்துகின்றார்; விறகடுக்கில் வேகின்ற நேரத்தும்தம் வித்தான மக்களையே […]
Read More
ஊழ்வினை
  • By Magazine
  • |
நம்மிடையே பாயும் நதிக்கு பெயரில்லை அப்படியே ஏதோவொரு பெயர் வைத்து அழைத்தாலும் அதற்கு பொருந்தவில்லை இதுவரையான வாழ்வின் அத்தனை இன்ப துன்பங்களையும் யாதொரு புகார்களும் இன்றி ஏற்றுக் கொண்டு ஆத்தோடு அதன் போக்கில் போகும் குணம் நமது விட்ட குறை தொட்ட குறையாக விடுபட்ட ஏதோவொரு கணக்கை சமன் செய்ய வந்திருக்கிறாய் திணை திரிந்து தரிசாய்க் கிடந்த நிலத்தில் ஏரோட்டி பிரதி பலன் பாராது விதைக்கிறாய் அன்பெனும் பெரு வித்தை வளர்ந்து பல்கிப் பெருகி நிற்கும் அதன் […]
Read More