• By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் அந்த வயதான தாய் வேலைக்குப் புதிது என்று நினைக்கின்றேன். நசுநசுத்திருக்கும் குப்பை மேட்டை ஊடறுத்து நடுவில் அமர்ந்திருந்தாள், காற்று புகுந்து விளையாடிய சிமிண்ட் சாக்குப்பைதான் காட்டிக்கொடுத்தது. அவளை! அசைந்தாளா என்ன? ஆம். மஞ்சள் தகிக்கும் மாரியம்மன் சிலையின் அசைவு. அவளுக்கு புரியவில்லை பட்டாசுக் குப்பைகளுக்குள் பழசு கிடைக்காது. மறுசுழற்சிக்கு பட்டாசில் என்ன இருக்கின்றது? வெடித்துப் பிளந்த காகிதங்கள், மரங்களின் தூளில் உருவானவை அவை. மருந்துப்பொடிகளின் மிச்சங்கள், விரல்களின் ரேகைகள் அதிலிருக்கலாம். கொஞ்சம் வெடிக்காத […]
Read More
அழகு
  • By Magazine
  • |
பாவலர் கருமலைத்தமிழாழன் சோலைக்குப் பூவழகு; நீலவானை                 சொக்கவைக்கும் நிலவழகு; செம்மைபூசும் காலைக்குக் கதிரழகு; கிராமத்திற்குக்                 கரும்பச்சை வயலழகு; இல்லத்திற்கு மாலையிட்ட நல்மனையாள் அழகு; தூய்மை                 மனங்கள் தாம் மாந்தர்க்கழகு; ஓங்குயர்ந்த ஆலைகளே நாட்டழகு; வளத்தைக் கூட்டும்                 அருந்தொழில்கள் உழைப்பிற்கே அழகைச் சேர்க்கும் ! புல்லிற்குப் பனிமுத்தே அழகு; தேனே                 புறவழகுப் பூவிற்கு அழகு; நிற்கும் கல்மலையே பூமிக்கு அழகு; அந்தக்                 கல்மலைக்கு வெண்முகிலே அழகு; பாட்டின் பல்சுவைக்கோ உவமைகளே […]
Read More
  • By Magazine
  • |
கே.பி.பத்மநாபன் பெண்ணென்றும் ஆணென்றும் காண்பதெல்லாம்                 பிறவியெனும் இயற்கை தன் உருவாக்கங்கள்; பெண்ணுக்கும் ஆணுக்கும் உருவமன்றிப்                 பெரும்பண்பில், பேரறிவில், பேதம் இல்லை; பெண்ணென்றும் ஆணுக்கே அடிமை என்றே                 பிழையுரைப்போர் யாவருமே மூடராவர்; பெண்நீதி ஆண்நீதி என்றில்லாமல்                 பிழையற்ற சமநீதி காணல் நீதி! பெண்ணுக்குள் மென்மையெனும் மேன்மைப் பண்பு                 பேராற்றல் கொண்டொளிந்து நிற்றல் உண்மை; பெண்ணவளின் மென்மையினால் சக்தியற்ற                 பேதையவள் என்றெண்ணும் மூடரெல்லாம் பெண்மையினை வன்புணர்வால் ஆள எண்ணிப்                 பெருங்குற்றம் […]
Read More
  • By Magazine
  • |
– வீரபாலாஜி அழிவும் பாதை நடக்கும் மனிதா விஞ்ஞானி என்பதும் உன் பெயரோ உண்டி உடை உறையுள் அன்றித் தேவை ஏதும் உனக்குளதோ உணவே என்று முன் முதல் தேடல் உன் உழைப்பு அதற்கே அஃதுண்மை தட்டின்றி உணவு நீ பெற்றிடவே பயிர்த்தொழில் ஒன்றே ஒரேவழி நிலத்தை அகழ நீ துடிப்பதுவோ ஹட்ரோ கார்பன் தானே உன் ஆசை பசி தீர்க்க அதை நீ உண்பாயோ சுட்டெரிக்கும் கதிரவன் நீ அறியாயோ வெயில் தரும் சக்திக்கு ஏது […]
Read More
ஒவ்வொரு வருடமும்  கொலு வைக்கிறார்கள்  பள்ளியில்
  • By Magazine
  • |
– சிவ. விஜயபாரதி. கும்பகோணம் ஆர்வத்துடன் குழந்தைகளும் அடுக்கி வைக்கிறார்கள் பொம்மைகளை. விதவிதமான உணவுகள் தானிய வகைகள் வரிசை படுத்தப்பட்டிருக்கின்றன பூஜை தயாரானதும் வரிசையில் நிற்க வைக்கப்படுகிறார்கள் சீருடையில் குழந்தைகள். புதிதாக சேர்க்கப்பட்ட குழந்தைகளின் விரல் பிடித்து நெல்லில் எழுதுகிறார்கள் “அகரத்தை”. “சரஸ்வதி நமோ ஸ்துப்யம்” பாடல் ஒலிக்க தீபாராதனை ஒளியில் அழகாக தெரிகிறது குழந்தைகள் தொலைத்த புன்னகை பொம்மைகளில் ஒளிர்வது
Read More
  • By Magazine
  • |
– திலீபன் காளிதாஸ் – (தமிழாசிரியர் ஒரு வீட்டில் தண்ணீர் கேட்டால் நான்தான் சிறப்பு விருந்தினர். எனக்கென தனி டம்ளர், என்னிடம் பணம் கொடுக்கும் நீயோ கையை உயர்த்திப் போடுகிறாய். நான் கொடுத்தப்  சில்லறையை வாங்கிச் சட்டைப்பையிற்குள் போடுகிறாய். உன் வீட்டைத் தூய்மை செய்து மூக்கை மூடி, வீதியில் போடுகிறாய். என் பிழைப்போ விரும்பி தெருவை சுத்தம் செய்வது. என் பணியோ தூய்மைப் பணியாளர், உங்களின் மத்தியில் குப்பைக்காரன்! என் உடையோ அழுக்கு நிறம், எத்தனை சாயம் […]
Read More
தீபாவளிக் கவிதைகள் – 02
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் நீண்ட பாலங்கள் பரவித் தெரிகின்ற நகரம் சாலைகளில் மின்னுகிறது பண்டிகையின் வெறுமை பத்தி விற்றுக் கொண்டிருந்த பாட்டி கம்பி மத்தாப்பு வித்துக்கொண்டிருக்கின்றாள் துவைத்த சுத்தமான உடையில் நூறு ருபாய் கேட்டு வயதான தம்பதியினர் வலித்த கால்கள் திரியும் தெருக் கடைகள் ஏழைகளைக் குறிபார்த்து கைநீட்டும் யாசகர்கள் வாழ்த்துகளையும் சிரிப்புகளையும் யாரும் யாருக்கும் கடத்தாத தெருக்கள் அங்கேதான் மோப்பம் பிடித்துக்கொண்டிருந்த வறுமையை நான் கண்டு கொண்டேன் அது சாபத்தை ஓதி எறிந்து விளையாடிக் கொண்டிருந்தது […]
Read More
வெறுப்பின் கொற்றம் வீழ்க
  • By Magazine
  • |
– குமரி எழிலன் வெறுப்பின் கொற்றம் வீழ்த்துவோம் வெற்றுக் குரல்களை நீக்குவோம் இருளின் கொடுமையை மாற்றுவோம் கருணை ஒளியை ஏற்றுவோம்… அன்பே அறமென எழுவோம்… அனைவரும் ஒன்றென முழங்குவோம் அத்தனையும் இனி உலகில் அனைவர்க்கு மென்றே வழங்குவோம் கண்முன் அனைவரும் சமமே.. இதை கருத்திலும் விதைப்போம் தினமே இருப்பது  பொதுவாய்ப் போனா.. இனி அறமே வெல்லும் தானா.. வளமையென்பது இயற்கை வறுமை என்பது செயற்கை இயற்கையைத் தொடர்ந்தால் இன்பம் செயற்கையைத் தொடர்ந்தால் துன்பம் அறஞ்செய விரும்பினாள் அவ்வை […]
Read More
அண்ணலின்  அழுகை அறிந்தார் யார்?
  • By Magazine
  • |
கே.பி.பத்மநாபன் அண்ணலார் அமரராகி ஆண்டுகள் எழுபத்தேழும் மண்ணிதில் மறைந்து போச்சு; மகானையே மறந்து மாச்சு; உண்மையே உரைத்தோன் நாட்டில் ஊழலும் பெருகிப் போச்சு; பெண்மையை மதித்தோன் நாட்டில் பெண்மைவன் முறையுமாச்சு; கண்ணியம் கட்டுப்பாட்டைக் கடமையாய்க் கொண்டோன் மண்ணில் பண்ணிடும் பாதகங்கள் பலப்பல பெருகியாச்சு; அண்டியோர் தம்மை அன்பாய் ஆதரித்தோனின் மண்ணில் எண்ணிலாக் கலவரங்கள் எனதினம் ஆகியாச்சு; உண்ணுதல் உடுத்தல் தம்மில் உயரிய எளிமை கண்ட கண்ணிய காந்தி மண்ணில் கருநிதி பெருகியாச்சு; புண்ணியன் வாழ்ந்திம் மண்தான் புதுமைகள் […]
Read More
  • By Magazine
  • |
C. சுந்தரி சொக்கலிங்கம் அனைவரின் ஆனந்தம் ஆனந்த தேனூற்று சங்கமத்தின் சங்கீதம் குடும்பத்தின் குதூகலம் திகட்டாத தித்திப்பு மாசில்லா மரகதம் சொக்கவைக்கும் சொர்க்கம் வீணையின் நாதம் மொத்தத்தில் இது ஓர் பேரானந்தம்.
Read More