சேலை
  • By Magazine
  • |
– சபா. முருகன் பாரம்பரியம் பண்பாடு நாகரிகம் பெருமிதங்கொண்டு பெண்மை அணியும் பேருணர்வு !! ஒப்பற்ற ஓர் ஓவியந்தீட்டும் ஓவியனின் கலையுணர்வும் கவனமும் சேலைகட்டும் சிரத்தையாயிருக்கிறது !! தலைமுறைப் பெருமையை தக்கவைக்கும் தகவமைப்பே சேலைகட்டல் உடலையும் உள்ளத்தையும் அழகுபடுத்தும் மடலாய் விரிந்து ஒரு மாமலராய் தோணவைக்கிறது பெண்மையை !! ஒரு சோலையின் சுகந்தத்தை ஓர் அழகிய உருவமாய் வனைகிறது சேலை புடவையின் பூரிப்பில் பெண்மையின் புன்னகையில் புதுப் பொலிவுகொள்ளும் பூலோகம் !! நிலங்கொண்ட நிறைமதியிவளென்று உளங்கொள்ளும் ஒழுக்கம் […]
Read More
ஜனவரி 12 ம்.. டிசம்பர் 6 ம்..
  • By Magazine
  • |
– குமரி எழிலன் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டு தீட்டிய மரத்தில் அம்பெய்து கூர்பார்த்த சோகம் நிகழ்ந்த நாள்……, செப்டம்பர்..11 ராமர் பிறந்த இடங்களில் ஒன்றாய் கருதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள்.. டிசம்பர்..6 இவைதானே உங்கள் நினைவில் நிற்கின்றன.. இவ்விரண்டும் நடத்தப்பட்டது… செப்டம்பர் 11, சிகாகோ அனைத்துலக மாநாட்டில்…. அனைவரும் சீமான்களே.. சீமாட்டிகளே என விழித்துப் பேசுகையில் சகோதரிகளே சகோதரர்களே என அழைத்து முழங்கிய ஆனந்தனின் விவேகக்கொடி பறந்தநாள் டிசம்பர்6 இயற்கையின் ஈகையால் ஓடும் நதி நீரை […]
Read More
தேரைத் தேடும்  முல்லை
  • By Magazine
  • |
– க. இராசன் பிரசாத் செயற்கை மேல் மோகம் கொண்டு இயற்கைதனை அழித்ததனால் தயக்கந்தான் எதுவுமின்றி இயற்கைதான் வெகுண்டெழுந்து தண்டனைதான் தந்ததன்றோ- முன்பு கண்டறியாத நோய்வடிவில் கண்ணறியாக் கிருமியாலே- மக்கள் எண்ணற்றோர் மாண்டனரே சீனாவில் உருவாகிச் சிலகாலம் வளர்ந்ததுவே தானாக இடம்மாறித் தரணியெலாம் சென்றதுவே ஏனென்று கேட்குமுன்னே எட்டடிதான் பாய்ந்ததுவே வானமே எல்லையென்று வலம் வந்து வருத்தியதே கொரோனா என்றதுமே குலைநடுங்கச் செய்ததுவே வராதீர் அருகினிலே என்றுரைக்க வைத்ததுவே ஒரேயொரு உறவானாலும் தூரநிற்கச் செய்ததுவே துரோகிகள் பலபேர்க்குத் […]
Read More
  • By Magazine
  • |
– ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் பிரத்யேகமாக போடப்பட்ட அரங்கம் பிரபலமான வர்ணனையாளர் எல்லாம் தயாராக காத்திருந்த அந்த நொடியும் வர காரில் இருந்து இறங்கினார் கம்பீரமான எழுத்தாளர் பார்வையாளர்களின் ஆர்வத்தை கூட்டும் வகையில் தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு புன்னகை மாறா முகத்தோடு எதிர் கொண்டார் நிறைவான கேள்வி என வினாவுகிறார் உங்களின் நிறைவேறாத விருப்பம் ? என சராசரி பெண்போல நானும் உதிர்க்க வேண்டும் சிவப்பு திரவத்தை என்றார் அரங்கம் அமைதி பூண்டது ஒரு திருநங்கையின் விருப்பத்துக்கு மௌன அஞ்சலி […]
Read More
  • By Magazine
  • |
– எம்.எம்.பைசல் ஒரு தேநீர்க் கடையில் நானும் அவளும் ஒற்றைத் தேநீர் எங்கள் முன் அவளும் குடிக்கிறாள் அடிக்கடி என் கண்களைப் பார்கிறாள் நானும் அதுவே வார்த்தை இறுத்து பேசுகிறோம் நானும் குடிக்கிறேன் திரும்பத் திரும்ப குடிக்கிறோம் தீராத( அன்பை) தேநீரை
Read More
  • By Magazine
  • |
கைபேசி கையடக்க கைபேசி கையில் வைத்து பேசுவதினால் கைபேசி வாஞ்சையுடன் அன்பை பகிர்ந்திட கைபேசி வகைவாயாய் வர்த்தகம் செய்ய கைபேசி தபால் தந்தி காணாமல் போகச் செய்த கைப்பேசி காலையில் எழுந்திட அலாரமான கைபேசி ஊரிலிருந்து கொண்டே வேறு ஊரில் இருக்கிறேன் என்று பொய் பேசி நாடகமாட கைபேசி நன்மைகள் நடக்க உடனடி தகவல் தர கைபேசி உள்ளங்கையில் உலகை காட்டும் கைபேசி வங்கிக்கடன் பரிமாற்றத்துக்கு கைபேசி வழிதுணையாக நண்பன் போலான கைபேசி கர்ணன் கவச குண்டலம் […]
Read More
  • By Magazine
  • |
கமல. அருள் குமார் காற்றுக் கூட சிலநேரம் மூங்கிலைத் தேடும் இசையாகத் தன் குரலை கேட்க… நாற்றுக் கூட சிலநேரம் தென்றலைத் தேடும் தன் பச்சை பட்டாடையை ஸ்பரிசித்துப் பார்க்க.. அலைகள் கூட சிலநேரம் படகினைத் தேடும் தன் முகடுகளின் உதடுகளில் முத்தமிட்டுச் செல்ல.. முகத்தை மலரும் மலரென்றோ அகத்தை ஒளிரும் நிலவென்றோ வர்ணனை கேட்க சில வயது அகங்களும் காத்திருக்கும்… பேராசைகளும் பெரும் ஓசைகளும் அல்ல.. சின்னச் சின்ன ஆசைகளும் சன்னமான ஒசைகளுமே இதயப் பூட்டினை […]
Read More
உழவனை வாழ்த்து !
  • By Magazine
  • |
– கே. பி. பத்மநாபன் கோழி கூவும் நேரத்தில்      குடிசை வீட்டில் எழுந்திடுவான்; மேழி தன்னை எடுத்திடுவான்;      மேட்டு வரப்பில் நடந்திடுவான்; ஆழி சூழ்ந்த உலகினிலே      அனைத்து மாந்தர் பசியாற நாழி உணவைப் பெறுதற்காய்      நன்றாய் நிலத்தை உழுதிடுவான்; தாழி தன்னில் கொண்டு வந்த      தண்ணீர் மோரும் கலந்திட்ட கூழினையே குடித்திடுவான்;       கொதிக்கும் வெயிலில் உழைத்திடுவான்; கீழிருக்கும் ஆழ்மண்ணைக்      கீழ் மேலாக ஆக்கிடுவான்; பூழிச்சேற்றில் காலூன்றிப்      […]
Read More
நெஞ்சு நிறை வாழ்த்து மடல்
  • By Magazine
  • |
பழனி அரங்கசாமி சித்த மருத்துவச் சிந்தனைக் குறிப்புடன் வர்ம அறிவியல் வண்டமிழ் வளமொடு சிறுகதை கட்டுரை சிறப்பொடு திகழும் குமரியின் தென்றல் குன்றாது வாழியவே! அரசியல் சூழல் அணுகிட விடாமல் நேர்மை நெறிநின்று வாய்மை வழி நடந்து சட்டங்கள் வழிகாட்டிச் சரித்திரம் படைத்திடும் தென்குமரித் தென்றல் திசையெங்கும் வாழியவே! சுற்றுச்சூழலொடு அறிவியல் கருத்துக்கள் வரலாறு புதினம் வளமான கவிதையொடு திங்களில் வீசிடும் தங்கத்தமி¢ழ்த் தென்றல் பொங்கிடும் புத்துணர்வாய் பொன்றாது வாழியவே! அனைவர்க்கும் பயன்தரும் அருங்கலைப்பெட்டகமாய் கலைக்களஞ்சியம் இதுவென […]
Read More
உயிரற்றவைகளின் உரையாடல்கள்
  • By Magazine
  • |
சிவ. விஜயபாரதி தாகத்திற்கு இறைஞ்சுகிறது பாவப்பட்ட உயிர். கைககளை அகல விரிக்கின்றன ஞானமிகு பழைமைகள். தற்காலிக கதையொன்றினை அளந்து ஒருக்களித்து நகர்கிறார்கள் நிலைமை உணர்ந்த யாவரும். குரல்வளை நெறிக்கின்றன கையளிக்கப்பட்ட நீரினை கேட்டு வரும் அலையழைப்புகள் . வற்றும் முன் வழிந்தோடிய உப்பு நீர்த்தடங்கள் குறித்து அதன் சிற்றுயிர்கள் எழுப்பும் வினாவிற்கு உயிர்ப்பற்ற புன்னகையைப் பதிலெனக் கொடுப்பதற்குள் விளையாட்டு பொம்மைகள் கேட்டு அழ மலங்க மலங்க விழிக்கிறதந்த உயிர் மங்கும் விழிகளோடு மரங்களிடம் இறைஞ்ச அசைந்து அது […]
Read More