மழையின் பெருமை!
  • By Magazine
  • |
கருமேகம் சூழ்கையிலே கழனிமகன் உள்ளம்      கதிரோனைக் கண்டலரும் கமலம்போல் துள்ளும் ; தருக்களுடன் தரைவாழும் இன்னுயிர்கள் யாவும்      தமை மறந்த மகிழ்வாலே தாமாகக் கூவும் ; ஒருதுளிதான் விசும்பின் நீர் வீழ்ந்திட்ட போதில்      உலர்ந்திட்ட பாறையிலும் உயரும்புல் காடு ; நெருப்பெனவே வெய்யோனால் வெந்திட்ட மண்ணும்      நிமிடத்துள் தான் குளிர்ந்து சுகமுண்டு பண்ணும்! அருமகிழ்தாய் மன்னுயிரை வாழ்விக்கும் மாரி      அகத்துனவும் அரும்தாக நீருமென ஆகி கருவறைக்கும் கல்லறைக்கும் இடைப்பட்ட வாழ்வைக் […]
Read More
தேவை
  • By Magazine
  • |
செந்நிற கதிர்கள் பரவ புலரத் தொடங்கியது காலை மணற்பரப்பில் நிரம்பிய காலடித் தடங்களுடன் சிதறி கிடக்கின்றன தீர்ந்துபோன மதுபோத்தல்கள் படகுகள் அருகில் வலையில் சிக்கிய மீன்கள் ஒவ்வொன்றாய் எடுத்த பரதவர்கள் விரிக்கப்பட்ட படுத்தாக்களில் வீசி கொண்டிருக்கின்றனர் நெகிழிப்பைகளில் ஆளுக்கொரு கூறுகளாய் அள்ளி நிரப்பினர் விலை முடிக்கப்பட்ட மீனின் வலியை துள்ளிக்கொண்டிருந்த மீனைப்பார்த்த நிகரன் “உசுரோடருக்குப்பா! இத நம்ம வளக்குலாம்பா? என்றதும் உறைந்திருந்த அம்மீனின் கண்களில் விழுந்தது எங்கிருந்தோ பறந்து வந்த இதய வடிவிலான இலை. அலையின் சாரலோடு […]
Read More
உத்திரத்தில் நிற்கின்றது பண்டிகை
  • By Magazine
  • |
பண்டிகைநாளின் முந்தைய நாட்களிலான முடிவிலா நகமென நீளும் முள்படுக்கையின் மீது நடந்து கடக்க முயலுகிறான் ஒரு அப்பன் மகனோ மகளோ ஆசைபட்டதை வாங்கவில்லை எனும் கோபத்தோடும் அழுகையோடும் பலூன்களாய் மிதக்கிறார்கள் வீட்டிற்குள் அவ்வப்போது வந்து மோதவும் செய்கிறார்கள் இல்லத்தரசியோ அடுக்கி வைத்திருக்கும் கையாலாகாததை வாரிவாரி அறைகிறாள் அவள் அவ்வாறு அறைவது பண்டிகையின் வெளியிரைச்சலையும் தாண்டி வெடித்து பறக்கிறது எருக்கம்பஞ்சின் தன்மையோடு புரளும் குடும்பவன்முறையின் குலுக்காம்பெட்டிக்குள் சேர்ந்து குலுங்குகிறார்கள் பண்டிகையும் அப்பனும் தூரத்திலிருக்கும் அம்மா நினைத்துக் கொண்டிருக்கிறாள் “இந்த […]
Read More
அருகிலிருக்கும் அன்பு
  • By Magazine
  • |
பக்கத்திலிருப்போரின் அன்பைத் தக்க வைக்க ஏதாவது செய்துவிடுங்கள் அதாவது என்ன வேண்டும் என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாய் உங்களை வெட்டித் தின்றுக்கொண்டிருப்பதை நீங்கள் மனம் உவந்து ஏற்றுக் கொள்ளக்கூடாது தெரியாததாகவே ஏற்றுக் கொள்ள வேண்டும் உங்களுக்குத் தெரியாது என்பதை நீங்கள் தெரியப்படுத்திக் கொண்டிருக்க வேண்டும் அதாவது அது ஒரு தொடர் செயல்பாடாகும் சீராய் துடித்துக்கொண்டிருக்கும் இதய முள்ளின் இசை இரவின் அதிர்விலும் வெளிப்படும் அல்லவா அந்த நோக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும் யாமத்திற்கும் வைகறைக்கும் இடையில் எழும்பும் அருகில் துயிலும் […]
Read More
  • By Magazine
  • |
காதல் இயற்கையானது தினம்தினம் புதிது புதிதாய் பூப்பூப்பதுபோல் பூக்கும் காதல் இயற்கையானது.. அதனை தியதிச் சிமிழுக்குள் சிறைவைக்க நினைத்தது யார்? எங்கோ யாரோ ஒருவரின் காதல் வென்ற தினமாம்.. தினம்தினம் வெல்லும் காதல்பூக்கள் சிலபூக்கள் புயல் வேகத்தில் பறந்திடுதல் உண்டுதான்.. ஆனாலும் தினம்தினம் காதல் தினமே.. பெப்ருவரி 14 அவர்களுக்கு. இனி காதலர்களைச் சேர்த்துவைக்க தாலியும் கையுமாய் அலையும் கூட்டத்துக்கு தினம்தினம் வேலை வைப்போம் வெல்க காதல் காதல் இயற்கையானது தியதிச்சிமிழ்கள் இனி அவர்களுக்கு மட்டும்..  – […]
Read More
மருதாணிச் சொல்
  • By Magazine
  • |
விரைவில் விரல்களில் மருதாணி இட்டு வருவதாய் பளபளத்துக் கிடந்த விடியலில் சொல்லிச் சென்றாய்.. சிவந்து கிடக்கும் உன் மெல்விரல் பார்க்கும்       ஆசையில் நாளெல்லாம் காத்துக்கிடக்கின்றேன். அந்திப்பொழுதின் செவ்வானத்தைப் பார்க்கிறேன் வானத்துக்கு யார் இட்டது மருதாணி எனக்கேட்டுக்கொள்கிறேன். பறவைகள் கூடடைந்த பின்பும் என்னிடத்தில் வராத நீ வழக்கம் போலவே வாக்குத் தவறுகின்றாய்.. நீ உச்சரித்துச் சென்ற மருதாணி என்னும் சொல் பச்சையாகப் படர்ந்து சிவக்கத் தொடங்குகின்றது என்னுள்… – கூடல் தாரிக்
Read More
  • By Magazine
  • |
இலையுதிர் காலம் போல                 இங்கொரு வருடம் வீழ்ந்து விலையிலா புதிய ஆண்டு                 விடிதலைக் காண்பாய் நண்பா! கலைந்தன துயரம் என்றும்                 கவிந்திடும் இன்பம் என்றும் அலையலையாக நெஞ்சுள்                 ஆர்த்தெழும் ஆனந்தம் தான்! மலையினைக் கடப்போம் என்றும்                 மடுவினைக் கடப்போம் என்றும் நிலைத்த நற்புகழை எல்லாம்                 நித்தமும் பெறுவோம் என்றும் குலைந்திடா பாரதத்தாய்க்                 குடியர சோங்கும் என்றும் கலைந்திடா கனவோடிங்கே                 களிப்புடன் வரவேற்போம் நாம்! உலகெலாம் போரொழிந்தும் […]
Read More
சேலை
  • By Magazine
  • |
– சபா. முருகன் பாரம்பரியம் பண்பாடு நாகரிகம் பெருமிதங்கொண்டு பெண்மை அணியும் பேருணர்வு !! ஒப்பற்ற ஓர் ஓவியந்தீட்டும் ஓவியனின் கலையுணர்வும் கவனமும் சேலைகட்டும் சிரத்தையாயிருக்கிறது !! தலைமுறைப் பெருமையை தக்கவைக்கும் தகவமைப்பே சேலைகட்டல் உடலையும் உள்ளத்தையும் அழகுபடுத்தும் மடலாய் விரிந்து ஒரு மாமலராய் தோணவைக்கிறது பெண்மையை !! ஒரு சோலையின் சுகந்தத்தை ஓர் அழகிய உருவமாய் வனைகிறது சேலை புடவையின் பூரிப்பில் பெண்மையின் புன்னகையில் புதுப் பொலிவுகொள்ளும் பூலோகம் !! நிலங்கொண்ட நிறைமதியிவளென்று உளங்கொள்ளும் ஒழுக்கம் […]
Read More
ஜனவரி 12 ம்.. டிசம்பர் 6 ம்..
  • By Magazine
  • |
– குமரி எழிலன் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்டு தீட்டிய மரத்தில் அம்பெய்து கூர்பார்த்த சோகம் நிகழ்ந்த நாள்……, செப்டம்பர்..11 ராமர் பிறந்த இடங்களில் ஒன்றாய் கருதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள்.. டிசம்பர்..6 இவைதானே உங்கள் நினைவில் நிற்கின்றன.. இவ்விரண்டும் நடத்தப்பட்டது… செப்டம்பர் 11, சிகாகோ அனைத்துலக மாநாட்டில்…. அனைவரும் சீமான்களே.. சீமாட்டிகளே என விழித்துப் பேசுகையில் சகோதரிகளே சகோதரர்களே என அழைத்து முழங்கிய ஆனந்தனின் விவேகக்கொடி பறந்தநாள் டிசம்பர்6 இயற்கையின் ஈகையால் ஓடும் நதி நீரை […]
Read More
தேரைத் தேடும்  முல்லை
  • By Magazine
  • |
– க. இராசன் பிரசாத் செயற்கை மேல் மோகம் கொண்டு இயற்கைதனை அழித்ததனால் தயக்கந்தான் எதுவுமின்றி இயற்கைதான் வெகுண்டெழுந்து தண்டனைதான் தந்ததன்றோ- முன்பு கண்டறியாத நோய்வடிவில் கண்ணறியாக் கிருமியாலே- மக்கள் எண்ணற்றோர் மாண்டனரே சீனாவில் உருவாகிச் சிலகாலம் வளர்ந்ததுவே தானாக இடம்மாறித் தரணியெலாம் சென்றதுவே ஏனென்று கேட்குமுன்னே எட்டடிதான் பாய்ந்ததுவே வானமே எல்லையென்று வலம் வந்து வருத்தியதே கொரோனா என்றதுமே குலைநடுங்கச் செய்ததுவே வராதீர் அருகினிலே என்றுரைக்க வைத்ததுவே ஒரேயொரு உறவானாலும் தூரநிற்கச் செய்ததுவே துரோகிகள் பலபேர்க்குத் […]
Read More