வர்மம்’எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் மலப்பிற வர்மம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான சலப்பிற வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் மலப்பிறவர்மம் பற்றி அறிவோம். மலப்பிற வர்மம், ஜலப்பிற வர்மத்திற்கும், பூவல் வர்மத்திற்கும் இடையே முதுகுப்பகுதியில் அமைந்துள்ளது. அதாவது மலாசயத்தின் நேர் எதிர்புறம் அமைந்ததே இந்த வர்மம் ஆகும். இவ்வர்மம் மலப்புற வர்மம், மலபந்த வர்மம், சரடு அயர்ந்த காலம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. “வன்னெல்லின் ஆறிறை கீழ் தப்பிறவர்மம் மாத்திரையாம் […]
Read More
  • By Magazine
  • |
தலையங்கம் வயிற்றுக்குப் போராடும் ஏழைகளுக்கு தான் வாழ்க்கைப் போராட்டம்… அந்த ஏழைகளை வைத்துப் பிழைக்கும் போராட்டம் தான் ஒரு சூட்சும போராட்டம். வாழ்க்கையின் எல்லா தளங்களிலும் வஞ்சிக்கப்படுபவர்கள் ஏழைகளே! ஏழ்மையும், இயலாமையும், இல்லாமையும் இவர்களை பிறர் காலடியில் வீழ்ந்து கிடக்க வழிவகுக்கிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் தன்னை மறந்து, தன் வாழ்வை மறந்து, சிந்தனை மறந்து வாழும் சிறகிழந்த பறவைகள். பறக்கவிட்டால் பறந்துவிடும். ஆனால் பறக்கமுடியாத அளவிற்கு முடமாக்கப்படும் மூடம். காற்றை சுவாசிக்கக் கூட கடமையாற்றும் இவர்களை […]
Read More
ஆபத்தில் இருக்கும் போது விழிப்போடு இருக்கிறோம்…
  • By Magazine
  • |
– ஓஷோ ஜப்பானில் ஒரு சிறந்த ஆசிரியர் இருந்தார். அவருடைய கலையே உயர்ந்த தேவதாரு மரங்களின் மீது எப்படி ஏறுவது என்று சொல்லித் தருவது தான். நேராக மரங்களின் மீது எப்படி ஏறுவது என்பதை மக்களுக்கு கற்றுத் தருவார். காரணம் ஒருவர் தவறி விழுவதற்கு எல்லா வாய்ப்புகளும் இருக்கிறது. அவரிடமிருந்து கற்றுக் கொள்ள ஒரு இளைஞர் வந்தார். அந்த ஆசிரியர் எப்படி ஏற வேண்டும் என்று கற்றுக் கொடுத்துவிட்டு, அவனை மரம் ஏறச் சொன்னார். அந்த ஆசிரியருக்கு […]
Read More
காத்திருப்பு
  • By Magazine
  • |
– துவாரகா சாமிநாதன் உனக்கான உருவத்தை சொற்களாய் விரித்து எளிதில் வடிவம் கொண்டு விடுகிறாய் மேகமே. கலைத்தும் கலைந்தும் ஏவாளின் மனக்காட்சியை வெளிப்படுத்தி குறிப்பால் உணர்த்துகிறாய் உயிரிணையும் காலத்தை. எனக்குத்தான் வெட்கம் மயில் போல் தோகை விரித்தாட முடியாது. நசித்து விடுகிறேன் ஆசைகளை இருந்துமென்ன  மழைத்துளிகளோடு கலப்புற்று வாசம் வீச வறண்ட நிலம் போல தயாராக வெடித்துக் கிடக்கிறேன் படர்ந்து ஈரம் பரவட்டுமே. என்றோ ஒருநாள் நீராய் மாறி வந்து நதிபோல் தழுவுவாய் என… வறள் நிலமாகி […]
Read More
நிராகரிப்பு…
  • By Magazine
  • |
–பாலமுருகன். லோ “ஏம்பா! “கொஞ்சம் காலையில சாப்பிட்டு தான் போயேன். இப்படித் தினமும் காலையில நீ சாப்பிடாம போனீனா உடம்பு என்னத்துக்கு ஆகும். “அப்பா அதெல்லாம் ஒன்னும் ஆகாது. தேவையில்லாம நீங்கதான் இந்த விஷயத்தில சீரியஸா இருக்கீங்க.” அதற்குச் சொல்லலைப்பா. ஏதோ ஒருநாள் என்றால் சரி, போனா போகுது என்று விட்டு விடலாம். காலேஜுக்கு சரியான நேரத்திற்குத் தான் போக வேண்டும் அதை நான் மறுக்கல. ஆனா நீ என்னடானா! காலையில அதுக்குன்னு இப்படிய சாப்பிடாம போவதா? […]
Read More
வெள்ளையரை எதிர்த்து போராடிய வீரபெண்மணி பிக்காஜி ருஸ்தம் காமா என்ற மேடம்காமா
  • By Magazine
  • |
பேராசிரியர் முளங்குழி பா.லாசர் பம்பாயில் ஏழை பர்சி குடும்பத்தில் பிறந்த பிக்காஜி பட்டேல், ருஸ்தம் காமா என்பவரை மணந்து கொண்ட காரணத்தால் பிக்காஜி ருஸ்தம் காமா ஆனார்… மேடம் காமா என அழைக்கப்பட்டார். கணவரோடு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் விவாகரத்து பெற்று 1902- ஆம் ஆண்டு லண்டன் சென்றார். இந்திய நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப்பட்டிருப்பதைக் கண்டு பொறுக்க முடியாமல் அவர்களுக்கு எதிராக வீரமுடன் போராடினார். இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை உருவாக்கியவர்களில் ஒருவராகிய தாதாபாய் நவுரோஜி பிரிட்டீஸ் […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
– வழக்கறிஞர்  பி. விஜயகுமார் சைபர் குற்ற வங்கி பணம் முடக்கப்படுவதும் விடுவிக்கப்படுவதும்Breezing and unbreezing bank Accounts involved cyber crime திடீரென வங்கியிலிருந்து நமக்கு ஒரு அழைப்பு வரும். உங்கள் வங்கிக் கணக்கின் பணம் முடக்கப்பட்டுள்ளது என்று. நாம் பயந்தபடி வங்கிக்கு  ஓடுவோம். விபரங்கள் கேட்போம். வங்கி மேலாளரோ கேரள மாநில சைபர் குற்றப்பிரிவு போலீசார் உங்கள் வங்கி கணக்கை முடக்க உத்தரவிட்டுள்ளதாக ஆணை பிறப்பித்துள்ளார்கள் என்று சொல்லுவார்கள். இதற்காக யாரும் பயப்படத் தேவையில்லை. […]
Read More
முரண்
  • By Magazine
  • |
கமல அருள் குமார் தொலைவில் அழகாய் தெரியும் சில அருகே ஆபத்தைத் தரலாம்.. வளைவில் முடிவாய் தெரியும் சில வளைந்த பின் வியப்பைத் தரலாம்.. கலையில் கவர்ச்சியாய் தெரியும் சில களைத்த பின் கவலையும் தரலாம்… விலையில் வீழ்ச்சியாய் தெரியும் சில உழைத்த பின் உயர்ச்சியும் தரலாம்… பார்வைக்கு பளபளப்பாய் தெரியும் சிலர் பழகின பின் பாம்பாகவும் மாறலாம்.. அழகும் ஆபத்தும் எப்போதும் அருகருகே… அறிவும் அறியாமையும் எப்போதும் எதிர் எதிரே…
Read More
“நாளைய உலகம்” (இசைப்பாடல்)
  • By Magazine
  • |
குமரி எழிலன் எல்லைகளில்லா உலகம் – இது ஏற்ற தாழ்விலா கழகம் எங்கே எதுவிளைந்தாலும்-அது பெற்றவர்க்கெல்லாம் சொந்தம்                                 (எல்லைகளில்லா…) உழைப்பில் உருவான உலகம் -இது உலகோர்க் கெல்லாம் சொந்தம் பசித்த வயிறு நிறைத்து – மகிழும் பாரோர் எல்லாம் பந்தம்..                                 (எல்லைகளில்லா …) விற்பனை என்பது பனையா – அட கற்பனை போல் ஒரு வினையா என்றொரு கேள்வி எழணும் – நாம் எந்நாளும் எல்லாமும் பெறணும்                                 (எல்லைகளில்லா …) போரெனும் ஆயுதம் […]
Read More
  • By Magazine
  • |
எம். ஞானசேகர் சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை சமர்ப்பித்து பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசிய மாண்புமிகு சிறு, குறு மற்றும் நடுத்தரத்துறை அமைச்சர் திரு.தா.மோ.அன்பரசன் அவர்களின் அறிவிப்புகள் 1. 2025/26-ம் நிதி ஆண்டில் வங்கிகள் மூலம் தமிழ்நாட்டின் 10 லட்சம் சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கு ரூ.25 லட்சம் கோடி கடனாக வழங்கப்படும். 2. சிட்கோ மூலம் திருமுடிவாக்கம், நாயனூர், நாகம்பள்ளி, சூரியர், கருத்தப் புளியம்பட்டி, தனிச்சியம், நடுவூர், நரசிங்கநல்லூர் ஆகிய 9 இடங்களில் 308 ஏ பரப்பில், […]
Read More