வர்மம்’எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
 முனைவர் முல்லைத்தமிழ் சலப்பிற வர்மம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான பின்னல்வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் சலப்பிறவர்மம் பற்றி அறிவோம். மூத்திரக்காலத்திற்கு நேர் பின்புறம் முதுகெலும்புத்தொடரில் அமைந்துள்ளதே சலப்பிற வர்மமாகும். இவ்வர்மம் ஜலப்பிற வர்மம், சடப்பிறக்காலம், சரடயந்த காலம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. “ஆனந்தமான மூத்திரக்காலத்தின் பின் சலப்பிறவர்மம்”.                                                                                 – கால வர்மநூல் “அறுதி ஜலப்பையினுட புறதாரைக்குள் அறிஞர் உரை சலப்பிறவர்மம்”.                                                                                                  – வர்ம குருநூல் […]
Read More
போர்த் தின்னும் மனிதம்
  • By Magazine
  • |
இரா. அரிகரசுதன் போர்ச்சிதறிலின் எச்சங்களில் வாழும் தனது குடும்பத்திற்கு உணவுப் பொருளை எடுத்துச்சென்ற இரண்டு சிறுவர்களின் மேல் வீசியெறியப்படுகின்றது குண்டு… வானிலிருந்தோ தொலைதூரத்திலிருந்தோ வெடித்துச் சிதறிய உன்மத்தத்தைக் கண்டுகொண்டிருப்பவனின் மனம்.. தற்செயலாலானதா என்ன? இணையம் உலாவவிடும் இக்காட்சிக்குள் மாட்டிக்கொண்ட மலைகள் கடல்கள் தாண்டிய தூரத்தில் வாழும் ஓர் ஆசிரியனின் இதயம் உருகிப் பாய்கிறது! யுத்தங்களே இந்த உலகின் சுற்றுச்சூழல் சீர்கேடு. யுத்தங்களே மனதின் ஆகப்பெரும் கழிவு. இதயங்களை களற்றிய தோரணங்களுக்குள் அமர்ந்து தங்கள் தேநீர்களை அளவெடுத்துக் கொண்டிருப்பவர்கள் […]
Read More
குழந்தைகளைப் பேணுவோம்
  • By Magazine
  • |
கை. செல்லத்தங்கம் குழந்தைகள் நமது செல்வங்கள். எதிர்காலத்தின் தூண்கள். குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பர். குழந்தைப்பருவம் மிக முக்கியமானது. அந்தப் பருவத்தில் அவர்கள் பார்த்து, கேட்டு அறிவது பசிமரத்தாணி போல மனதில் பதிந்து விடும். இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் பராமரிப்பது என்பது பெற்றோர் இருவரும் பணிக்குச் செல்லும் குடும்பங்களில் சவாலாகவே உள்ளது. கூட்டுக்குடும்ப வாழ்க்கை மறந்து போன நிலையில் குழந்தைகள் உறவுகள், தாத்தா பாட்டியிடம் இருந்து பெறும் அன்பும் அனுபவ அறிவும் கிடைப்பதில்லை. இரவு பகலாக […]
Read More
ஆறா காயங்கள்
  • By Magazine
  • |
கா.திலீபன், தமிழாசிரியர்  மேடு பள்ளம் நிறைந்த மலை கிராமம் அது.  முகிலன்  காலையில் குதூகலமாய் பள்ளிக்கு கிளம்பினான். மேட்டில் ஏறி பள்ளிக்குச் செல்லும் வேளையில் ஏடே! நில்லுடா என்ற கூச்சலுடன்  ஓடோடி வந்தாள் முகிலனின் செல்லப் பாட்டி. என்ன கிழவி இவ்வளவு நேரம் வீட்டுல தான இருந்தேன். இப்டி துரத்திக்கிட்டு வர்ற என்று  கோபத்தில் முகிலன் திட்டினான்.  தள்ளாடும் வயதில் இளப்புடன் தன் முந்தானையில் முடிந்து வைத்திருந்த இரண்டு ரூபாயைக் கையிற்குள் மறைத்து தந்தாள். சரி வர்றேன்.. […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA -வின் 288-வது கருத்தாய்வுக் கூட்டமானது மருத்துவர்.கமலகண்ணன் அவர்கள் தலைமையில் மூலச்சல் மரு.த.இராஜேந்திரன், திரு.கே.செல்வநாதன் ஆகியோர் முன்னிலையில் 07.06.2025 அன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் மருத்துவர்.கமலகண்ணன் அவர்கள் சோரியாசிஸ் குணமாவதற்கான தைலம் மற்றும் மேல்பூச்சு முறைகளைத் தெளிவாகக் கூறினார். மேலும் வாயுப்பிரச்சனைகளுக்கு சூரணம் செய்முறையையும் கூறினார். அடுத்ததாக திரு.கே.செல்வநாதன் ஆசான் அஸ்வகெந்தி சூரணம் செய்முறையை கூறினார். அடுத்ததாக மரு.ஷேக் முகமது ஏங்கலிழைப்பு, இரைப்பு இவற்றுக்கு தங்க ரத்தினாதி […]
Read More
  • By Magazine
  • |
 ஜெகன் தங்கையா. B பறந்து திரியும் வண்ணத்துப்பூச்சிகளின் இறகுகளில் பளபளக்கும் வண்ணத்துகள்கள் பிடிக்கும் விரல்களில் ஒட்டிக் கொள்ளும் வசீகரம் குறைந்து போகும்… உதிர்ந்த மயிர் என்பதால் மனிதகுலமே ஒதுக்கித் தள்ளினாலும் மயிலிறகின் வசீகரம் வாழ்நாள் முடிந்த பின்பும் வாழ்ந்து கொண்டிருக்கும்..!                   
Read More
படிப்பதற்கு நேரம் ஓதுக்குங்கள் !
  • By Magazine
  • |
 – சஜிபிரபு மாறச்சன் மனிதனுக்கும் அவனுடைய தலைவிதிக்கும் இடையே உண்மையாக உரையாடி அவனை நடுநிலைப்படுத்துவதே புத்தகம் தான். மனிதனாக பிறந்துள்ள ஒவ்வொருவரும் விலக்க முடியாத முடிவாக புத்தகங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளன. மனித இனத்தில் சிறப்புடைய மனிதனாக உயர, நாளைய தினம் நன்மைகளைக் கண்டுபிடிக்க உதவுவது புத்தகம் தான். மனிதனுக்கு நிறைய கனவுகள் உள்ளன. போற்றி வைத்து பாதுகாத்து வரும் அந்த கனவுகள், உண்மையில் நிஜமாக உருவானதால் தான் ஜெயித்தோம். கனவுகளை நிஜமாக்க முயற்சி செய்யும் போது ஏற்படும் தடைகள் […]
Read More
பெண்களே ! உங்கள் உரிமைகளை பேசுங்கள் !
  • By Magazine
  • |
பூ.வ.தமிழ்க்கனல் விடுதலை, ஆழ்கடலில் தேங்கிப்போன உடலுக்குக் கிடைத்த ஒரு பிடி காற்று. விடுதலை இறுகிப்போன கல்லறை மேல் விழுந்து நெகிழச் செய்யும் மெல்லிய முளரி இதழ். விடுதலை, அடக்கி வைக்கப்பட்ட உணர்வுகளின் ஒட்டுமொத்த விடுவிப்பு. விடுதலை, வரையறைக்குள் அடக்க முடியாத உணர்வு. ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்று மீண்டதை நெஞ்சு நிமிர்த்திக் கொண்டாடுகிறோம். குடும்ப வரையறை, சமூக வரையறை எனக் கட்டுப்பாடுகளுக்குள் அடங்கி, தனித்தன்மையை, விடுதலை உணர்வைத் தொலைத்த பெண்களின் உணர்வுகளைப் பற்றி எண்ணுகிறோமா? படிக்கும் படிப்பிலிருந்து திருமணநாள் […]
Read More
பழங்கால தமிழகத்தில் (வில் ஊணி) அனகோண்டா பாம்பா?
  • By Magazine
  • |
பாம்பு வைத்தியர் அதிர்ச்சி தகவல் …!!! பழங்கால தமிழகத்தில் வில் ஊணி என்ற அனகோண்டா போன்ற பிரம்மாண்டமான பாம்பு வாழ்ந்திருக்கலாம் என்று கூறுகிறார் பாரம்பரிய விஷ வைத்தியர் ராஜரத்தினம். கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு அருகே கண்ணங்கரை விளை பகுதியைச் சேர்ந்த பாரம்பரிய விஷ வைத்தியர் ராஜரத்தினம் (66) அவர்களை புதிய தென்றலுக்காக அவரது வீட்டில் சந்தித்தோம். பாரம்பரிய விஷ வைத்தியரான அவர் மொபைல் போன் பயன்படுத்துவதில்லை. குறிப்பாக அவரது வீட்டில் இதுவரை மின்சார இணைப்பு இல்லை. செல்போன், […]
Read More
  • By Magazine
  • |
கமல. அருள் குமார் கத்தரிப்புகள் இன்றி மரம் கூட அழகாவதில்லை.. சித்தரிப்புகள் இன்றி மன்னர் கூட மாவீரன் ஆவதில்லை.. மட்டம் தட்டாமல் மண் கூட செம்மையாவதில்லை.. மட்டம் தட்டுபவர்கள் இன்றி மனம் கூட வன்மையாவதில்லை.. கத்தரிப்புகளும் சுத்திகரிப்புகளும் அவரவரால் இயலாது.. அடுத்தவர் தரும் அவமானங்களால் இயலும்..
Read More