எங்கள் ஓட்டு…
  • By Magazine
  • |
மயூரி சித்தாராமன் எங்கள் ஓட்டு உங்களுக்கே….. ஆங்… ஞாபகம் வந்திட்டு… இப்ப நா வாக்காளரு…! அய்யா நா சொல்லியத கொஞ்சம் கேட்டுட்டு போங்கய்யா.. கட்சிய விட கட்சி மானம் கொடிகட்டிப் பறக்காமே ? அவிய தேர்தல் முடியிறவர சூடு சொரணைய வாடகைக்கு வுட்டுருக்காவளாம்…! அதோ பாருங்க ஒரு கட்சிக்க இனிசியலுக்கு அப்பன் பெயரா மகன்பெயராண்ணு ரெத்தத்தின் ரெத்தங்களுக்கு பாலூத்துயாவளாம்… அப்பப்பா… பருப்புக் கொழம்புக்குள்ள மீனை போட்டு சமச்சமாதி கூட்டணி தயார்… அய்யா.. அரசியல் பிரம்மாக்களே.. தேர்தல் வாக்குறுதி […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
– வழக்கறிஞர்    பி. விஜயகுமார் முதல் மனைவி இறந்து போயிருந்தாலும் இரண்டாவது மனைவிக்கு கணவரின் ஓய்வூதியம் வராது தற்சமயம் ஒரிசா உயர் நீதிமன்றத்தில் நடந்த வழக்கு இது. கணவர் அரசு ஊழியர். அவருக்கு முதல் மனைவி இருந்தார். முதல் மனைவிக்கு குழந்தைகள் இல்லை. ஆதலால் கணவர் முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாவதாக இன்னொரு பெண்ணை மணந்து கொண்டார். திடீரென கணவர் இறந்து போகிறார். இப்போது கணவரின் ஓய்வூதியம் பெறுவது சம்மந்தமாக முதல் மனைவிக்கும் இரண்டாம் மனைவிக்கும் […]
Read More
தூக்கமின்மை
  • By Magazine
  • |
– கஸ்தூரிபா   ஜாண்ஸன் வாழ்வில் நமக்கு உணவு எவ்வளவு முக்கியமோ அதே போல் தூக்கமும் அவசியம். இரவு நன்கு தூங்கினால் தான் உடலில் உள்ள அனைத்து சுரப்பிகளும் நன்கு வேலை செய்யும். தூக்கம் ஒரு இரவு இல்லை என்றால் உடல் நலம் கெட்டு விடும்.  இரவில் நன்கு தூங்கும் போது தான் மூளையின் செல்கள் ஒழுங்காகவும், பாதிப்புகள் இல்லாமல் இருக்கும். ஆழ்ந்த தூக்கம் சுமார் 8 மணி நேரம் இருந்தால் சிறுநீரகம், இதயம் சம்பந்தமான நோய்கள், நரம்புத்தளர்ச்சி, […]
Read More
தமிழர் தற்காப்பு கலையான   களரிக்கு சர்வதேச அங்கீகாரம்
  • By Magazine
  • |
அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் அவர்கள் வலியுறுத்தல் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில், தமிழர்களின் வீரப் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் “தமிழர்களின் தற்காப்பு கலைகளைப் பாதுகாப்போம்” என்ற முழக்கத்துடன் களரி கலை விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழர் மரபு தற்காப்புக் கலைகளின் பெருமையை மீண்டும் சமூகத்தின் மையத்துக்கு கொண்டு சேர்க்கும் வகையில் அமைந்த இந்த விழா, ஒரே நேரத்தில் ஒரு போட்டி நிகழ்வாகவும், ஒரு பாரம்பரிய விழிப்புணர்வு நிகழ்வாகவும் அமைந்தது. இன்றைய நவீன காலகட்டத்தில் பல்வேறு வெளிநாட்டு […]
Read More
வர்மம் எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் கைமுட்டு வர்மம் சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான விசபந்த வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் கைமுட்டு வர்மம் பற்றி அறிவோம். இவ்வர்மம் கைமுட்டின் வெளிப்புறக்குழியில் அமைந்துள்ளது. கைமுட்டி வர்மம், புறமூட்டு வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் இவ்வர்மம் வழங்கப்படுகிறது. “குணமான கைமுட்டுக் குழியிலப்பா முட்டுவர்மமிதற்கு பேரு”.                                                                                                                 – கலைக்கண்ணாடிச் சூத்திரம் “ஆகுமே முட்டுக்குழி மேல்பக்கத்தில்                 அடிகொண்டால் கை வீங்கும் களைப்புண்டாகும் மட்டறிய காதிரைச்சல் மயக்கம் […]
Read More
நூல் மதிப்புரை
  • By Magazine
  • |
முக்கனியின் முத்துக்கள்’ என்ற நூலை படைத்துள்ளார் கவிஞர் இ.க. சுப்பையா கம்பர் அவர்கள்,  இந்நூலில் கம்பனின் பெருமை, கம்பனும் தமிழும், கம்பனின் கவிதை. கம்பனின் எழுத்து. கம்பனின் கவி உலகம். கம்பனின் தமிழ் பெருமை, கம்பனின் சோக பாடல், கம்பனின் கவிநயம், கம்பராமாயணத்தின் சிறப்பம்சம் என்று கம்பனின் பெருமையையும், திருவள்ளுவரின் பெருமை. திருக்குறளின் பெருமை என்று திருவள்ளுவரின் பெருமைகளையும், தமிழ்நாட்டின் பெருமை தமிழ் மொழியின் சிறப்பு தமிழின் பெருமை, கவிதைகளில் நன்மையும் பொய்யும் தமிழ்த்தாயின் பெருமை என்று […]
Read More
மாற்றுத் திறனாளிகள் குறித்த பார்வைகள்
  • By Magazine
  • |
A. தர்மராஜ் (த.ராசு) முந்தைய பாகத்தின் தொடர்ச்சி… மாற்றுத்திறனாளிகள் திருமணத்துக்கு தங்கத்தில் தாலி வழங்குவதற்கு ஒரு புதிய திட்டம் தொடங்கப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் இத்திட்டத்தை 2023 ஏப்ரல் மாதத்தில் சென்னை கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோயிலில் தொடங்கி வைத்து முதல் திருமணத்தை முன்னின்று நடத்தி வைத்தார். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, வரகுபாடி கிராமத்தைச் சேர்ந்த பாப்பாத்தி என்பவர் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. முதுகலை தமிழ் பட்டதாரியான இவர் மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச மற்றும் தேசிய அளவிலான […]
Read More
கோபம் எப்படி ஏற்படுகிறது?
  • By Magazine
  • |
மூலச்சல் Dr.T. இராஜேந்திரன் M.sc, MD(Hom), Ph.D. நமது உடலின் அதிவேகமான எதிர் உணர்ச்சிகளில் ஒன்றுதான் கோபம். “கோபம் கட்டுப்பட்டு விட்டாலே மனிதன் அரைஞானி ஆகிவிடுகிறான்”. “சிரிப்பினால் சாதிக்கும் ஆயிரம் விசயங்கள் கூட சிந்தனையற்ற ஒரு துளி கோபத்தால் சிதைந்து விடுகின்றது”. ஆம்… மனிதன் பல்வேறு விசயங்களுக்காக உணர்ச்சி வசப்படுகிறான். அவ்வாறு படும் எல்லா உணர்ச்சிகளிலும் மிகமிக மோசமானது கோபம் மட்டுமே… நமது மூளையில் பனி ரெண்டு முக்கிய இணை நரம்புகள் உள்ளன. இந்த பனிரெண்டு இணை […]
Read More
வதந்தீ
  • By Magazine
  • |
– குமரி எழிலன் மதியம் ஒன்றரை மணிக்கு குளத்ல போயி குளிக்காட்டா குடியாமுழுகியாப் போகும்….முணுமுணுத்தாள்…தர்மப் பத்தினி… கோசலை “வீடு சொல்லி கேக்காட்டா ஊரு சொல்லி கேக்கும்” என்ற சொலவடை வந்து விழுந்திருக்கும். “முங்கிக் குளிக்கிற சுகம் டவுன்ல பொறந்த உனக்கு எப்பிடித் தெரியும்” பதிலுக்கு முனங்கிக் கொண்டே பைக்கில் பறந்தேன் நான்.. குளத்தின் தொண்ணூறு விழுக்காடு நீர்ப்பரப்பு தாமரை இலை கொண்டு    மூடப்பட்டிருந்தது.பத்து விழுக்காடு இடம் ஆலமர நிழலால் தண்ணீரை குளிரச் செய்தது….. தண்ணீரின் அடி ஆழம் […]
Read More
மந்தத்தை போக்கும் “மந்தாரை”
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் அழகிற்காக தோட்டத்தில் வளர்க்கப்படும் சிறு செடிவகையை சார்ந்த மந்தாரை, அதிக மருத்துவ குணங்களையும் பெற்றுள்ளது. மந்தாரையின் பூர்விகம் மலேசியா, இந்தோனேசியா, இந்தியா மற்றும் சைனா என்றும் சொல்லப்படுகிறது. மந்தாரையில் பல இனங்கள் உண்டு. அவைகளில் முக்கியமானவை. வெள்ளை, சிவப்பு, மஞ்சள் நிற பூக்களை கொண்டது. இதில் சிவப்பு நிற பூக்களை கொண்ட மந்தாரை அதிக மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. மந்தாரையின் இலைகள் பிளவுபட்டு வண்ணத்துப்பூச்சியின் இறகு போன்ற வடிவத்தில் காணப்படும். பூக்கள் 5 […]
Read More