• By Magazine
  • |
 – குமரி எழிலன் …. கல்வி, தேசுமிக்கது தேச எல்லைக் கடந்தும் பேசப்படுவது, கொடுக்க கொடுக்க வளருமே தவிர குறையாது, பிறரால் திருட முடியாதது, கல்வியால் பெறும்புகழ் காலம் கடந்தும் நிற்கும். புத்தக விரும்பிகளாகிய நேரு விவேகானந்தர், அம்பேத்கர், காந்தி, பகத்சிங், அண்ணா, ஆப்ரகாம் லிங்கன், நெப்போலியன் … போன்றோர், அழியாத கல்வியைப் பெற்று, அவனியை ஆண்டவர்கள் . “கல்வி, அறிதலுக்கான கருவி, என்கிறார் கல்வியாளர் நேரு” உலகப் பார்வை கியூபா பின்லந்து நாடுகளில், ஏழு வயதிற்குப் […]
Read More
வெற்றிக்கு தடையல்ல
  • By Magazine
  • |
 – சஜிபிரபு மாறச்சன் “கவிஞனுக்கு காண்பதெல்லாம் கவிதை சிற்பிக்கு தொடுவதெல்லாம் சிலை. எழுத்தாளனுக்கு எதுவும் கரு. வியாபாரிக்கு எல்லாம் லாபம்” என்பனவற்றை போல«, வறுமையில் தவிப்பனும் எப்படியும் சாதிக்கலாம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் போல் நமது கடமையைச் செய்வதற்கு வெட்கப்பட தேவையில்லை. பிறர் என்ன நினைப்பார்கள் என்ற சிந்தனையை தூக்கியெறிந்து விட்டு உழைக்கத் தொடங்கினாலே, நமது பொருளாதார நிலை உயர்ந்து, சமூகத்தில் நல்ல நிலைக்கு வர முடியும். சிலர் நம்மால் அவனைப் போல படிக்க வசதியில்லையே என்று […]
Read More
இந்திய விடுதலைக்காகப் போராடிய மாபெரும் வீராங்கனை ஜாண்சிராணி லட்சமிபாய்
  • By Magazine
  • |
பேராசிரியர். முளங்குழி.பா.லாசர் ஜாண்சிராணி லட்சுமிபாய் 1827- ஆம் ஆண்டு மராத்திய பிராமணர் குலத்தில், மோரோபாண்டு, பாகீரதி அம்மாள் பெற்றோருக்கு மகளாக, காசி என்றழைக்கப்படும் இன்றைய வாரணாசியில் பிறந்தார். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியதோடு, ஆண்களுக்கு நிகராக வாள்வீச்சு, குதிரையேற்றம், துப்பாக்கி சுடுதல், அம்பு எய்தல் போன்ற அத்தனை போர்ப்பயிற்சிகளையும் பெற்றார். இவரது இயற்பெயர் மணிகர்னிகா. மனு என அழைத்தனர். ஜாண்சி நாட்டு மன்னர் கங்காதர்ராவ் மணிகர்னிகாவை மணம் புரிந்து கொண்டார். அப்போது அவருக்கு வயது 15 தான். […]
Read More
வங்கிகளின் நம்பகத்தன்மை
  • By Magazine
  • |
பழனி அரங்கசாமி பொதுமக்களும், உழைப்பாளிகளும், நடுத்தர வர்க்கத்தினரும், ஓய்வூதியம் பெறுகின்ற முதியோர்களும் குடும்ப செலவு போக மீதப் பணத்தை தங்களது வருங்காலத் தேவைகளுக்காகவும், வீடு, மனை, சிறுதொழில்கள் ஆகியவற்றில் முதலீடு செய்வதற்காகவும் சேர்த்து வைக்கின்றனர். இப்படிச் சேமிக்கின்ற பணத்தை தொடர்ந்து வீட்டில் வைத்திருக்க இயலாது. சிற்சில சமயங்களில் நாமோ, துணைவியாரோ, பிள்ளைகளோ வீண்செலவு செய்திடக் கூடும். திருடர் பயம் வேறு. தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் தொழில் தொடங்குவோரிடம் கடனாகவோ பங்குத் தொகையாகவோ கொடுத்தால், பணம் மீண்டும் […]
Read More
தடை செய்தால் அதை செய்யத் தூண்டும்
  • By Magazine
  • |
ஓஷோ எதையும் கெட்டது என்று சொல்லும் போது அது இருப்பதற்கு தளம் போட்டுத் தந்து விடுகிறாய். எப்போதுமே நல்லது எதுவும் கெட்டதைப் போல பலமாக இருப்பதில்லை. பிறர் சொல்லி நீ செய்வது நல்லதாகிறது. நீயே செய்ய விரும்புவது கெட்டதாகிப் போகிறது. சரிதான் நல்லது கெட்டதைப் போலப் பலமானதாக இருப்பதில்லை. கெட்டதை நீயாகத்தான் விரும்பிச் செய்கிறாய்! நல்லது என்பது பிறர் உன்மீது திணித்து வைத்திருப்பது தானே! நல்லதை எதிர்க்கிறாய். அதைக் கை கொள்வது அடிமைத்தனமாகத் தெரிகிறது. ஒரு தளையாகிப் […]
Read More
ஜானகி
  • By Magazine
  • |
அருள்மொழிவர்மன் வெந்தயக்கீரை, அரக்கீரை, மணத்தக்காளி கீரை, முடக்கத்தான் கீரை. கீரை வேணுமா தாயி? தடித்த பெண் குரல் மூடிய கதவையும் தாண்டி காதில் அறைந்தது. ஜானு கதவைத் திறந்து எட்டிப் பார்த்தாள். வெளியே நின்றவள் ஆறடி உயரம். நல்ல கருப்பு. வெறும் நெற்றி. வெளுத்துப்போன கவரிங் செயின். பழைய புடவை. கீரைக்காரியும் காமாட்சியை அளந்தாள். என்ன தாயி நீதான் இந்த வீட்டுக்கு புதுசா குடிவந்திருக்கியா? கீரை வேணுமா. ஜானு கீரைக்கட்டுகளை புரட்டினாள். இது என்ன தங்கமா? பட்டா? […]
Read More
புத்தக உலகம் !
  • By Magazine
  • |
கே.பி. பத்மநாபன் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தையே      புறக்கணித்தல் புதுமையென ஆன தின்று; சித்தத்தைச் சீர் செய்து தெளிவாயாக்கிச்      சிந்தனையைக் கூராக்கும் புத்தகங்கள் எத்தனையோ இங்கிருக்க எல்லாம் நீக்கி      எல்லோரும் முகநூலில், வலைதளத்தில் நித்தமும் மூழ்கியதில் நீந்துகின்றார்;      நிசமான மகிழ்வினையே தொலைத்து விட்டார்! நித்தமொரு புத்தகத்தைக் கையில் ஏந்தி      நீளாற்றின் கரையோரச் சோலை தன்னில் சத்தமிலாத் தென்றலுடன் சரசமாடிச்      சாய்ந்தமரக் கிளைமீதில் படுத்தவாறு சித்தமெலாம் ஒன்றிணைய வாசிக்கின்ற      செவ்வியநல் […]
Read More
ஆழிக்கரையில் ஆசை நுரையோடு
  • By Magazine
  • |
– ஸ்ரீதர், கோவை பெ:       ஆறறிலோடும் நீரைப்போல                 துள்ளியாடி வாரேனே                 அமிழ்தம் பொங்கும்                 ஆழிக்கரையோரம் வாரேனே ஆ:        பாவை அவளைக் காண                 பறக்கும் படகேறி வாரேனே                 கரையில் நிறையும் ஆசை                 நுரையோடு வாரேனே பெ:       என் தினமலரின் பூக்களானவனே ஆ:        என் பூக்களின் இதழ்களானவளே பெ:       என் கருநீல வானம் மழையாய்                 மண்ணில் விழ எழுகிறதே ஆ         மணலை நனைக்கும் மழையின் […]
Read More
வர்மம்  எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் மாற்றான்காலம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான பித்துக்காய் வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் மாற்றான்காலம் பற்றி அறிவோம். மாற்றான்காலம், மார்புப்பகுதியிலுள்ள நேர்வர்மத்திற்கு பின்பாக நடுமுடிச்சிற்குள் அமைந்துள்ளது. இவ்வர்மம் வினோத வர்மம், மாற்றானை செய்யும் காலம், நடுமுடிச்சி வர்மம், நட்டெல் வர்மம், சோரதீண்டாக்காலம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. “மாற்றானை செய்கின்ற காலந்தன்னை வழுத்துகிறேன்  நடுமுடிச்சிக்குள்ளேயப்பா”.                                                                                                 – வர்ம குருநூல் மேலும், “கூற்றான தமரின் நடுவூன்றிட்டாலோ குலை […]
Read More
முதியோர் இல்லம்
  • By Magazine
  • |
– எம்.செந்தில்குமார் தினந்தோறும் மாலையில் மாலாவும், தினேஷூம் மெரினா கடற்கரையில் கடலை வாங்கி தின்று தங்களது அன்பை பரிமாறி கொள்வது வாடிக்கையாக இருந்தது. மாலா கடலை பாக்கெட்டுகளை அதிகமான அளவுக்கு வாங்கி வைத்துக் கொள்வாள். அதற்கு தினேஷ்தான் காசு கொடுக்க வேண்டும். அதனால் தினேஷ் மாலாவிடம் ஏன் இவ்வளவு கடலையை வாங்குகிறாய் என்று அடிக்கடி மாலாவிடம் கடிந்து கொள்வான். அதற்கு மாலா தினேஷிடம் கடலையை அதிகமாக சாப்பிட்டால் ஹார்மோன்ஸ்க்கு நல்லது என்பாள். மாலாவின் அன்பை தட்ட முடியாமல் […]
Read More