உலகம் தழுவிய ஏறுதழுவல்
  • By Magazine
  • |
பழனி அரங்கசாமி தமிழகத்தில் தைத்திங்கள் முதல் நாளில் பொங்கல் விழா கொண்டாடப் பெறுகிறது. அறுவடைக்கு பின்னர் வந்த பச்சரியோடு மஞ்சளும், இஞ்சியும், வாழையும், கரும்பும் முக்கிய பங்கு பெறுகின்றன. மக்களுக்கான பொங்கல் முதல் நாளென்றால், மாட்டுப் பொங்கலுக்கான இரண்டாம் நாளில் மாடுகளுக்கு பொட்டிட்டும், பூமாலை போட்டும், பொங்கல் சோறு ஊட்டியும் மகிழ்கிறோம். இந்தியப் பெருநிலத்தின் வேறெந்த மாநிலத்திலும் இது நிகழ்வதாகத் தெரியவில்லை. எனவே இந்த வீர விளையாட்டு தமிழகத்துக்கே உரியது ஆகும். தொழுவத்தில் அடைக்கப் பெற்றுள்ள மாடுகளை […]
Read More
சில மூலிகை பழமொழிகள்
  • By Magazine
  • |
– கஸ்தூரிபா ஜாண்ஸன் உணவு மருந்தாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் மருந்தே நமக்கு உணவாகும் நிலைமை உருவாகும். சில மூலிகை பழமொழிகள் பற்றி பார்ப்போம். அங்காரிக் காரியைச் சங்கீதம் பாடச் சொன்னால் வெங்காயம், கறிவேப்பிலை என்று தான் பாடுவாள்.
Read More
புத்தக மதிப்புரை
  • By Magazine
  • |
“பாற்கடலும் தேவதையின் பூனைக்குட்டியும்” என்ற இத்தொகுப்பு, கவிதை உலகில் ஒரு புதிய அதிர்வையும், பரவலான சிந்தனையையும் நமக்கு அள்ளித் தருகிறது. பாரதி கவிதைகளின் முன்னோடி வடிவம் போல, இந்த எளிய கவிதை வடிவத்தின் முன்னோடியாக சுதே கண்ணன் திகழ்கிறார் என்று கூறினால் அது மிகையாகாது. இந்நூலில் சுதே கண்ணன் அவர்கள் கவிதைகளைச் சிறுகதை வடிவிலும், வாசிப்பாரை மயக்கும் எளிய நடையிலும் தந்துள்ளார். இக்கவிதைகளைப் படிக்கும் வாசகர்களுக்கு எந்தவொரு ஐயமும் இன்றி, கதையைப் போல மனதை நெகிழச் செய்து, […]
Read More
மூலநோய்
  • By Magazine
  • |
டாக்டர் என்.கே. சுரேஷ் MD(S) ஜீரணமண்டலப் பாதையின் கடைசி பகுதியான மலக்குடலின் (Rectum) உள்ளே உள்ள இரத்தநாளங்களில் வீக்கம் மற்றும் தாபிதம் ஏற்பட்டு இரத்தம் கசிதல், வலி, எரிச்சல் மற்றும் வெளியில் முளை பிதுங்கி காணுதல் போன்ற குறிகுணங்களை காட்டி துன்பப்படுத்தும் நோயை மூலநோய் என்கிறோம். மூலநோயால் இந்தியாவில் சுமார் 11 சதவீதம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். மூலநோய் பொதுவாக உணவுபழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறை மாற்றங்களால் உருவாகிறது. மூலநோயால் பாதிக்கப்படுபவர்கள் புத்துணர்ச்சி இன்றி, எரிச்சலுடன், கடுகடுப்பாக இருக்கும் மனநிலைக்கு […]
Read More
வர்மம் எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான தெக்ஷணைக்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் கவளிக்காலம் பற்றி அறிவோம். புறங்கையின் பெருவிரல் கவளியில் கவளிக்காலம் அமைந்துள்ளது. இவ்வர்மம் கவளி வர்மம், கைக்கவளி வர்மம், கைக்கவளிக்காலம் எனவும் அழைக்கப்படுகிறது.                 “மரணமென்று கவர் நேர் ஒன்றரையிறைக்கும்                 மைந்தனே கவளிவர்மம்”.                                                                 – வர்ம குருநூல்                 “கைப்பெருவிரல் கவளியில் கவளிவர்மம்”.                                                                                                 – வர்ம கலைக்களஞ்சியம் என குறிப்பிடுகிறது. போடும் […]
Read More
மறுமலர்ச்சி என்பது…
  • By Magazine
  • |
ஆசிரியர்  மருத்துவர். த. இராஜேந்திரன் இந்தியாவின் அரசியல் சூழல் வெளியுலகத்திற்கு ஒரு வெப்ப ஆற்றலை விதைத்து வருகிறது. உலகின் பலநாடுகள் இந்தியாவின் அனைத்து வளங்களின் மீதும் ஒரு கழுகு பார்வையைக் கொண்டிருந்தாலும் எளிதில் ஏறி விளையாடி விடலாம் எனும் நினைப்பில் மண் விழுந்தவர்களாகவே உள்ளனர். எனினும் பகுத்தலுக்கேற்ற ஓர் ஒப்பற்ற நாடாகக் கருதி இயங்க அவர்கள் தயங்குவதில்லை. எத்தனையோ வளங்களிலிருந்தும் கோடிக்கணக்கான மக்கள் வாழ்வில் முன்னேற முடியாத முன்னேற்றப்படாத சூளல். வறுமையில் வாடும் பொருள் வளமற்ற வீழல். […]
Read More
விடத்தை  தங்கமாக மாற்றலாமா ?
  • By Magazine
  • |
– முனைவர் மோகனா, பழனி நண்பர்களே, உங்களுக்கு ஓர் அறிவியல் தகவல் சொல்லப் போகிறேன். உங்களால் நம்ப முடியாது, “விஷம் குடித்து வெறும் “கருத்த கண்டனை” மட்டுமே பெற்ற பெருமை சிவபெருமானுக்கல்ல, இந்தப் புவியில் நஞ்சுண்டு பொன்னை உமிழும் ஓர் உயிரினம் உண்டு”.   அது செய்வது சூனியமன்று; முழுக்க முழுக்க அறிவியல். நான் ரீல் விடுவதாக நினைப்பீர்கள். ஆனால் அது 916 உண்மை. இப்போ விஷயத்துக்கு வருவோமா? இயற்கை விடத்தை பொன்னாக மாற்றுகிறது என்ற ஓர் […]
Read More
தென்பாண்டி நாடு எனும் குமரிமண்
  • By Magazine
  • |
– மங்காவிளை  D. இராஜேந்திரன் பாண்டிய மன்னனை திவாகரம் என்னும் நூல் குமரிசேர்ப்பன் என்கிறது. இங்கே பாண்டியரின் செல்வாக்கு இருந்ததை சங்க இலக்கியமான மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது. கன்னியாகுமரியை சுற்றியுள்ள பகுதி புறத்தாய நாடு எனப்பட்டது. இது பாண்டிய நாட்டின் தென்கோடி. எனவே தென்பாண்டியநாடு என்றழைக்கப்பட்டது. பாண்டியரின் குலதெய்வமாக குமரி பகவதி குறிக்கப்படுகிறாள். புறநானூறு பாண்டியனை பஃறுளியின் தலைவன் என்கிறது. குமரிமாவட்ட கல்வெட்டுகளும், சின்னமனூர் செப்பேடுகளும் குமரிக்கும் பாண்டிக்கும் உள்ள தொடர்பைத் தருகின்றன. கி.பி. 140-ல் குமரிக்கு வருகைதந்த […]
Read More
கூடாரத்தில் கசிந்த குளம்படி
  • By Magazine
  • |
அகிலா கிருஷ்ணமூர்த்தி மருத்துவமனையின் நுழைவு வாயில். வெள்ளை வண்ணம் பூசிய பழங்காலத்துக் கட்டிடமாக இருந்தது. அதற்கு நூற்றாண்டுகால வரலாறு இருப்பதாகச் சொன்னார்கள். ஏதோ ஒரு வகையில் அங்கே பணிபுரிவதற்கான வாய்ப்பு கிடைப்பது அரிதாக இருந்தது. அதன் வலப்பக்கத்தில் சிறிது தூரத்தில் பெரிய வேப்ப மரம். அதைக்கடந்து தான் பிரசவ வார்டுக்கு செல்ல வேண்டும். எந்தக் காலமும் அந்த மரத்தை தனித்துப் பார்த்ததே இல்லை. பறவைகளோடு சேர்த்து பிரசவத்திற்கு வந்தவர்கள், அவர்களுக்காகக் காத்திருப்பவர்கள், உணவு, உறைவிடம் என இல்லாதவர்களுக்கு […]
Read More
தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம் அய்யா வைகுண்டர்
  • By Magazine
  • |
– கிருஷ்ணகோபால்  பிரெட்ரிக் ஏங்கல்ஸ், காரல் மார்க்ஸ் இருவரும் சேர்ந்து  1848 ஆம் ஆண்டு ஏழைப் பணக்காரன் என்றப் பாகுபாடு இல்லாத சமத்துவ உலகை கற்பனைச் செய்து கம்மியூனிச அறிக்கையை வெளியிட்டனர். அவர்கள் சமதர்மக் கொள்கையை உலகிற்கு அறிமுகம் செய்வதற்கு 15  வருடத்திற்கு முன்பே   1833 -ம் ஆண்டு  கல்வி  அறிவில் தாழ்ந்து இருப்பவர்களையும், பொருளாதாரத்தில் வீழ்ந்து கிடப்போரையும் உயர்த்திடும் நோக்கம் கொண்டு தாழக்கிடப்பாரை தற்காப்பதே தர்மம்’ என்று எளியவர்கள் பக்கம் நின்று  கிளர்ச்சி முழக்கமிட்டவர் அய்யா […]
Read More