தோல்நோய்களுக்கு  சிறந்த‘பிரம்மதண்டு’
  • By Magazine
  • |
 நமது மூலிகை மருத்துவர் வெண்ணிற கோடுகளுடன் காம்பில்லாமல் கூரிய முட்களுடன் கூடிய பசுமையும் நீலம் கலந்த இலைகளுடன், அழகான மஞ்சள் நிற பூக்களையும், முட்கள் நிறைந்த நீள் உருண்ட காய்களும் அதனுள் கடுகு போன்ற விதைகளையும் கொண்டு, எப்பகுதியை உடைத்தாலும் மஞ்சள் நிற பால் வடியும் குணத்தை கொண்டு நேராக ஒரு மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய அழகான ஒரு களைச் செடி தான் பிரம்ம தண்டு. தரிசு நிலங்கள், ஆற்றங்கரையோரங்களில், சாலையோரங்களில் தானே வளர்கிறது. இதன் […]
Read More
வேடன் எனும் கருஞ்சூறாவளி
  • By Magazine
  • |
தக்கலை ஹாமீம் முஸ்தபா கூடி நிற்கும்  பெரும் மக்கள் திரள்முன் நின்று கொண்டு வேடன் என்னும் அந்தக் கலைஞன், “நான் பாணன் இல்லை  பறையன் இல்லை புலையன் இல்லை நீ தம்புரானும் இல்லை நீ தம்புரான் என்றால் எனக்கொரு மயிருமில்லை இனி காலமில்லை காத்திருக்கப் போவதுமில்லை பொறுத்துப் போகும் எண்ணமுமில்லை” என்று   ராப் இசையில் தன் குரலை அதிரவிடும்போது கூடிநிற்கும் பெரும் கூட்டமும் அவரோடு  சேர்ந்து ஆரவாரிக்கிறது. கேரள மக்கள் இசைமரபில் குறிப்பாக மலையாள நாடன் பாட்டு […]
Read More
வர்மம்’ எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் அல்லிவர்மம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான அழல்வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் அல்லிவர்மம் பற்றி அறிவோம். அல்லிவர்மம் நாபியின் நேர் பின்புறம் நான்குவிரலின் மேல் முதுகுத்தண்டில் அமைந்துள்ளது. இவ்வர்மம் அரசவர்மம், அல்லி அரச வர்மம், அல்லி அரசாணி வர்மம், சந்திர புஷ்கரணி வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. “சாதிக்கும் சந்திரபுஷ்கரணியோடு தாவி நிற்கும் மாய்கை மகரத்தூடுற்று வாதிக்கும் பின்பாகம் அல்லி அரசவர்மம்”.                                                                                                 – வர்மகுருநூல் […]
Read More
  • By Magazine
  • |
வேண்டும்! ஏழைகளின் நலனில் அக்கறை! உலகின் வல்லரசு நாடுகளில் முதலிடத்தில் உள்ள அமெரிக்காவில் கார்பரேட்டுகளுக்கு எதிராக மக்கள் 2008- ஆம் ஆண்டில் தீவிரமாக போராடத் தொடங்கி அஃது ஓய்வுற்று ஓரளவு சமாளிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதே போல் அதிகரித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் தாறுமாறான வரிவிதிப்புகள், உலக நாடுகளை ஒரு விதமான பார்வைக்குள் கொண்டு வந்துள்ளது. உள்நாட்டு அரசியல் பொருளாதார சூழலும் வெகுவாக பாதிப்படைந்து மக்கள் 2008-ம் ஆண்டை போல் மீண்டும் தெருக்களில் இறங்கி போராடி வருகின்றனர். […]
Read More
வர்மம் எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் அழல்வர்மம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான மாற்றான்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் அழல்வர்மம் பற்றி அறிவோம். அழல் வர்மம் மண்ணீரல் நடுவில் அமைந்த முதுகெலும்புத்தொடரின் இடதுபக்க சார்பில் அமைந்துள்ளது. இந்த வர்மம் மாத்திரையாய் கொண்டவுடன் உடல் எங்கும் அக்கினியால் எரிந்தது போல் வெப்பம் அதிகமாகி அழல் மிஞ்சுவதால் அழல் வர்மம் என்ற பெயராயிற்று. அக்கினி வர்மம், நெருப்பு வர்மம், அழலாடி வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் இவ்வர்மம் […]
Read More
“கிர்ணி” என்று அழைக்கப்படும் “முலாம்பழம்”
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் கோடைக்காலத்திற்கு ஏற்ற முலாம்பழச்செடி ஒரு கொடி வகை. இது வெள்ளரிக்காய், பூசணிக்காய், தர்பூசணியின் குடும்பத்தை சார்ந்தது. இதன் பூர்வீகம் ஆசியா கண்டத்தின் மத்தியபகுதி. இலை பசுமையாக பெரியதாகவும், பூக்கள் மஞ்சள் நிறத்திலும், ஆண்பூவும் பெண்பூவும் ஒரே செடியில் இருக்கும். காய்கள் உருண்டையாக இருக்கும். முலாம்பழம் தோல் சற்று கடினமாக மஞ்சள் பசுமை கலந்த நிறத்தில் வலைப்பின்னல் தோற்றத்துடன் காணப்படும். பழத்தின் உட்பக்கம் ஆரஞ்சி நிறத்தில் சதைபற்றுடன் காணப்படும். முலாம்பழச் செடியை விதை மூலம் […]
Read More
நம்மைப்பற்றிய பொய்களை நாமே ஏற்றுக்கொள்கிறோம்
  • By Magazine
  • |
– ஓஷோ நம் வாழ்க்கை உலகம் சம்மந்தப்பட்ட பொய்களை மட்டும் ஏற்றுக்கொள்வது மட்டுமல்ல. அந்தப் பொய்கள் மகிழ்ச்சிகரமாகவும், மிகவும் கவர்ச்சிகரமாகவும் இருக்கிறது. உயிரினங்களிலே மனித இனத்தைத்தான் உயர்வாகக் கடவுள் படைததிருக்கிறார் என்று மக்களிடம் சொல்லுங்கள், அவர்கள் உடனே ஏற்றுக் கொள்வார்கள். அது அவர்களின் மனத்திற்கு ஒரு பெரிய நிறைவைத் தருகிறது. ஆனால் அவர்கள் இதைப் பற்றி பறவைகளிடமும், மிருகங்களிடமும் கேட்டிருக்கிறார்களா? பறவைகளும், மிருகங்களும் நீங்கள் தான் எங்களை விட உயர்ந்தவர்கள் என்று சொல்லியிருக்கிறதா? அவைகளிடம் மக்கள் இதைப்பற்றி […]
Read More
திரிச்சூர்  15-வது  உலக நாடக விழா- 2025
  • By Magazine
  • |
– கிருஷ்ணகோபால்.. புகைப்படங்கள் கணேஷ் ராமையா கேரளாவில் கொச்சின்  எர்ணாகுளம், கோட்டயம், கோழிக்கோடு, கொல்லம், கண்ணூர் உள்ளிட்ட பல நகரங்களுக்கு வரலாற்றுச்  சுற்றுலாவுக்குகென நண்பர்களோடு  பயணப்பட்டிருக்கிறேன் ஆனால் தூரத்திலிருந்து என்னை எப்போதும்  வசீகரித்துக் கொண்டிருக்கும்  திரிச்சூர் நகரத்திற்கு இது வரையிலும்  பயணப்படவில்லையே என்ற கவலையிருந்தது. திரிச்சூரில் நடந்த நாடகவிழாவுக்கு போயிற்று வந்ததிலிருந்து அந்தக் கவலை தீர்ந்தது .  பத்து வருடத்திற்கு முன்பு நாகர்கோவில் இந்துக்கல்லூரி வளாக திறந்த  வெளி   மைதானத்தில் வைத்து  முருக பூபதியின் ‘குகைமரவாசிகள் ‘நாடகம் […]
Read More
வெள்ளையரை எதிர்த்து போராடிய வீரமங்கை கிட்டூர்ராணி சென்னம்மா
  • By Magazine
  • |
பேராசிரியர். முளங்குழி.பா.லாசர் தமிழ்நாட்டில் வீரமங்கை வேலுநாச்சியார் போல் கர்நாடகாவில் மக்களால் போற்றி புகழப்படுபவர் வீரமங்கை கிட்டூர்ராணி சென்னம்மா.  1778- ஆம் ஆண்டு கர்நாடக மாநில கிட்டூர் காகத்தி நகரில், தூலப்பக்கவுண்டர் தேசாய் மகளாகப் பிறந்தார். கிட்டூர் சமஸ்தான மன்னர் முல்லை சர்ஜா சென்னம்மாவை மணம் புரிந்து கொண்டார். 1812-ஆம் ஆண்டு மன்னர் முல்லை சர்ஜா மரணமடைய பின்னர் ஒரே மகனும் இறந்து விட்டான். ராணி சென்னம்மா சிவலிங்கப்பாவை வளர்ப்பு மகனாக்கி மன்னனாக முடி சூட்டி, ஆட்சிக்கட்டிலில் அமர்த்தினார். […]
Read More
மனிதனின் விந்தணுவில் நுழைந்த நானோநெகிழிகள்
  • By Magazine
  • |
– முனைவர் மோகனா, பழனி நண்பர்களே..இப்போது, நெகிழி இன்றி நம் வாழ்க்கை இல்லை எனற நிலையில் தான் எல்லோரும் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இந்த நிலையில் நெகிழியின் துணுக்களான, மைக்ரோ பிளாஸ்டிக் மற்றும் நானோ பிளாஸ்டிக் ஆகிய இரண்டும் மனித உயிரணுக்களில் (விந்தணுக்கள்) நுழைந்திருப்பது என்ற தகவல் நம் இதயத்தில் அதிர்ச்சியை உண்டுபண்ணும் விஷயம் ஆகும். இது ஏன் ஏற்பட்டது இதன் காரணி என்ன? இதனால் விளையும் பாதிப்புகள் என்ன ? என்பதை அறியும்போது இன்னும் அதிக […]
Read More