தென்பாண்டி நாடு எனும் குமரிமண்
  • By Magazine
  • |
– மங்காவிளை  D. இராஜேந்திரன் பாண்டிய மன்னனை திவாகரம் என்னும் நூல் குமரிசேர்ப்பன் என்கிறது. இங்கே பாண்டியரின் செல்வாக்கு இருந்ததை சங்க இலக்கியமான மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது. கன்னியாகுமரியை சுற்றியுள்ள பகுதி புறத்தாய நாடு எனப்பட்டது. இது பாண்டிய நாட்டின் தென்கோடி. எனவே தென்பாண்டியநாடு என்றழைக்கப்பட்டது. பாண்டியரின் குலதெய்வமாக குமரி பகவதி குறிக்கப்படுகிறாள். புறநானூறு பாண்டியனை பஃறுளியின் தலைவன் என்கிறது. குமரிமாவட்ட கல்வெட்டுகளும், சின்னமனூர் செப்பேடுகளும் குமரிக்கும் பாண்டிக்கும் உள்ள தொடர்பைத் தருகின்றன. கி.பி. 140-ல் குமரிக்கு வருகைதந்த […]
Read More
வர்மம் எனும்  மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் தெக்ஷணைக்காலம் சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான புயவர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் தெக்ஷணைக்காலம் பற்றி அறிவோம். இவ்வர்மம் உள்ளங்கை வெள்ளை வர்மத்தின் நேர் பின்புறம் புறங்கையில், நடுவிரலுக்கும், மோதிர விரலுக்குமிடையில் அமைந்துள்ளது. இவ்வர்மத்திற்கு தெக்ஷண வர்மம், தெக்ஷணைக்காலம், மொழிப்பிறங்கண் வர்மம் என்னும் வேறுபெயர்களும் உண்டு. “அறுதியென்ற உள்ளங்கை வர்மத்தின் பின் தெக்ஷணையின் காலமென்பார்”.                                                                                                                 – வர்ம குருநூல் என குறிப்பிடுகிறது. சாந்தமாம் தெக்ஷணையின் காலம் […]
Read More
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் சுற்றுலா என்பது பொதுவாக மனதிற்கு இதமளிக்கும் கடற்கரைகளுக்கோ, அமைதி தரும் ஆன்மீகத் தலங்களுக்கோ அல்லது வரலாற்றைப் பறைசாற்றும் நினைவுச் சின்னங்களுக்கோ செல்வதாகவே இன்றும் பார்க்கப்படுகிறது. ஆனால்,  காலமாற்றத்திற்கு  தகுந்தோ அல்லது சுற்றுலா வணிகம் ஏற்படுத்தும் புதிய அறிமுகங்களுக்கு தகுந்தோ சுற்றுலாவின் பரிமாணங்கள் மாறி வருகின்றன. அந்த வகையில், தெலுங்கானா மாநில சிறைத்துறை நிர்வாகம் சஞ்சல்குடாவில் அறிமுகப்படுத்தியுள்ள “Feel the Jail”  (சிறையை உணர்) என்ற திட்டம், சுற்றுலாத் துறையில் ஒரு புதிய விவாதத்தை […]
Read More
குவாண்டம் பிணைப்பு பிரபஞ்சப் பயணம்
  • By Magazine
  • |
– காளீஸ்வர் பிரபஞ்சத்தின் இரு முனைகள் தமிழ்நாட்டின் கொடைக்கானல் மலைப்பகுதியில், இரவு நேரத்து மேகமூட்டத்திற்கு இடையே நட்சத்திரங்களை உற்று நோக்கிக் கொண்டிருந்தான் அன்பு. அவன் சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT Madras) குவாண்டம் கம்ப்யூட்டிங் துறையில் முனைவர் பட்டப் படிப்பு படிக்கும் மாணவன். அவனுடைய ஆய்வகம் முழுக்க சூப்பர் கண்டக்டிங் கியூ பிட்களும் (Superconducting Qubits), லேசர் கதிர்களும் நிறைந்திருந்தன. அன்று இரவு, அவனது கணினியில் ஒரு விசித்திரமான தரவுப் பின்னல் (Data anomaly) தோன்றியது. […]
Read More
கோடை
  • By Magazine
  • |
செ.பராந்தகன் வெப்ப நாட்களை வெறுப்பது ஏன்? வருத்தப்பட்டது சூரியன்… அசொளகரியங்கள் அதிகம், ஆகவே இந்த முணுமுணுப்பு. பதிலளித்தது பூமி.. வற்றல்,வடகம் ஊறுகாய், உப்புக் கண்டம் தயாரித்து அடுக்குகையில் மகிழ்கின்றனரே மக்கள்.. நகைத்து நகர்ந்தது சூரியன்..
Read More
கவிதை
  • By Magazine
  • |
பொறியாளர் சண்முக வடிவேலு, திருச்சி புலிகளின் உறுமலைப் புவியெங்கும் பரப்பியவன்! தமிழ்ப்பேரரசின்        தகைசால் பாணன்! பெரியார் பாசறையில்                முகிழ்த்த கவிமலர்! தேசியத்தலைவனின் தனித்தப்புகழை இசைத்தமிழ் வடிவமாக்கி பகல் இரவாகப் பாடிய இறவாப்பாடகன்!      தேனிசை செல்லப்பா! உலகத்தமிழரின் அடையாளமாய் நீ செல்லப்பா!  வீரவணக்கம் தோழர்!
Read More
நின்று துடிக்கிறது
  • By Magazine
  • |
– சிவ. விஜயபாரதி அதீத குரலெடுத்து கத்தி பாய்கின்றன கணைகள் விழுந்து வெடிக்கின்றன குண்டுகள். வீடுகளுக்குள்ளேயும் பதுங்கு குழிகளுக்குள்ளேயும் இருக்கச்சொல்லி எச்சரிக்கை செய்கின்றன சைரன் ஒலிகள். எதற்காகவும் யாருக்கும் அஞ்சவும் அடிபணியவும் மாட்டோமென எதிர்ப்புக் குரலை அதன் சகாக்களுடன் குண்டுகள் பொழிந்து நசுக்கியது. எதிர் குரல் சூளுரைத்த காணொளிகளை மறுபடி மறுபடி ஒளிபரப்புச் செய்கின்றன தொலைக்காட்சிகள். இடிபாடுகளில் சிக்கிய உடல்கள் இரத்தத்தில் தோய்ந்திருந்தது.
Read More
பெருமை மின்னும் ராசா
  • By Magazine
  • |
– சிவ. விஜயபாரதி மழிக்காத தாடி அழுக்கேறியச் சட்டை பழுப்பேறிய தலை அப்பாவின் அடையாளம். நைந்த வாழ்வை ஊக்குக்கோர்த்து பிய்ந்த செருப்போடு அணிந்திருப்பார். பண்டிகை நாட்களில் புலர்வதற்குள் செல்பவர் யாரிடம் கடன் வாங்குவாரோ துண்டின் ஒரு முனையில் மளிகை சாமான்களை உருண்டையாக  மூட்டைபோல் கட்டி முதுகுப்பக்கம் தொங்கவிட்டு கையில் ஆட்டின் தலையோடு பெருமை மின்னும் ராசா போல உறுமத்தில்தான் வீடு வருவார். நாங்கள் உறங்குவதாய் படுத்திருக்கும் இரவுகளில் நீளும் வறுமை பட்டியலை அம்மாவின் காதுகளுக்குச் சொல்லும் அவர் […]
Read More
  • By Magazine
  • |
– எஸ்.கே. கங்கா மரணங்கள் இயல்பானதுதான் என்று சொல்லி அத்தனை எளிதாகக் கடந்து போக முடியாத ஒரு மரணம் நேற்று சம்பவித்திருக்கிறது. (26.05.2026) பெரிய பட்டங்களிலோ, அதிகாரத்தின் ஆசனங்களிலோ அவன் அமர்ந்திருக்கவில்லை. ஆனால், நேற்று பிற்பகல் தொடங்கி முகநூல் முழுக்க அவன் நினைவுகளால் நிறைந்திருக்கிறார். தன் வாழ்க்கைப்பயணத்தில் அவன் யாரையெல்லாம் பாதித்தாரோ, அந்த உள்ளங்கள் யாவும் இன்று நிலைகுலைந்து போயிருக்கின்றன. அவனை அறிந்தவர்கள் எவராலும் இந்த மரணத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 60 வயதைக் கூடக் கடக்காதவன். […]
Read More
  • By Magazine
  • |
– காளீஸ்வர் 1. பிளாஸ்க் (Flask) பாட்டிலுக்குள் வைக்கப்படும் நீர் மட்டும் சூடாகவே இருப்பதற்கு காரணம் என்ன? பிளாஸ்க்கின் உட்புறம் மற்றும் வெளிப்புறச் சுவர்களுக்கு இடையே வெற்றிடம் (Flask) இருக்கும். வெப்பம் கடத்தப்படுவதற்கு ஏதேனும் ஒரு ஊடகம் (காற்று அல்லது பொருள்) தேவை. வெற்றிடத்தில் வெப்பம் கடத்தல் மற்றும் வெப்பச் சலனம் நடைபெறாது என்பதால் வெப்பம் வெளியேறாமல் நீர் சூடாகவே இருக்கிறது. 2. பாதரசம் மட்டும் ஏன் திரவ நிலையில் இருக்கிறது? பாதரச அணுக்களுக்கிடையேயான பிணைப்பு (Metallic […]
Read More