• By Magazine
  • |
கைபேசி கையடக்க கைபேசி கையில் வைத்து பேசுவதினால் கைபேசி வாஞ்சையுடன் அன்பை பகிர்ந்திட கைபேசி வகைவாயாய் வர்த்தகம் செய்ய கைபேசி தபால் தந்தி காணாமல் போகச் செய்த கைப்பேசி காலையில் எழுந்திட அலாரமான கைபேசி ஊரிலிருந்து கொண்டே வேறு ஊரில் இருக்கிறேன் என்று பொய் பேசி நாடகமாட கைபேசி நன்மைகள் நடக்க உடனடி தகவல் தர கைபேசி உள்ளங்கையில் உலகை காட்டும் கைபேசி வங்கிக்கடன் பரிமாற்றத்துக்கு கைபேசி வழிதுணையாக நண்பன் போலான கைபேசி கர்ணன் கவச குண்டலம் […]
Read More
கை கொடுத்த கால்வாய்பாடு
  • By Magazine
  • |
– குமரி எழிலன் ஒரு ரூபாய்க்கு நாலு பென்சில் நாலு ரூபாய்க்கு எத்தன பென்சில் ? பதினாறு பென்சில் …. ஒரு வகுப்பில் (அரசுப்பள்ளி) நாலு மாணவர்கள் உள்ளனர் (40 இருந்த காலம் மலை ஏறிற்று) நாலு வகுப்பில் எத்தனை மாணவர்கள்? பதினாறு மாணவர்கள் … ஒரு மாச கண்ணுக்குட்டிக்கு நாலு காலு, நாலு மாசக் கண்ணுக்குட்டிக்கு எத்தன காலு? பதினாறு காலு … மாணவர் கூட்டம்  கொல்லென்று சிரித்தது.. ஆசிரியையும் தான் …. அமைதியாக எழுந்து […]
Read More
வழிகாட்டும் ஒளிவிளக்கு
  • By Magazine
  • |
பேசும்போதே மின்னலாய் உற்சாகத்தைப் பாய்ச்சும் மினிப் பிரியாவின் பேட்டி.       கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மினிப்பிரியா, ஒருதொழில்முனைவர் மட்டுமல்லர். ஏராளமான தொழில் முனைவோரைஉருவாக்கிக் கொண்டிருப்பவர். அறிவியல் படிப்பில் ஆராய்ச்சிப் பட்டத்தகுதி கொண்ட மினிப்பிரியா, தன்னைப் போல பலரும் கல்வியிலும் உயர்ந்து வாழ்வில் சாதிக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார். ‘நான் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் பிறந்தேன். எனக்குச் சுமார் 6 வயதாக இருக்கும் போது குழித்துறைக்கு இடம் பெயர்ந்தோம்.      எளிய குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவள் தான் நான். […]
Read More
“கனா கண்டேன் தோழி”…
  • By Magazine
  • |
சொந்த ஊருக்கு கிளம்பி கொண்டிருந்த இந்துமதி அம்மாவிற்கு … மனது ஒரு வித குதூகலமாகவே இருந்தது. வழக்கமாக அவள் பயணிக்கும் பயணம் தான் அது. அன்று…. ஏனோ!…. அந்த பயணம் அவளுக்கு ஒரு சுகத்தை குடுத்தது. சொந்த மண்ணின் பாசமோ?… தெரியலையே… அல்லது நேற்று அவள் கண்ட கனவு தான் காரணமா? அவள் கண்ட கனவைப்பற்றி … அவள் கணவனிடம் கூற முயற்சித்த போதல்லா …. அவர் காது குடுக்கவேயில்லை. அவளுக்கும் அது தடையாக படவே… சொல்லவேயில்லை. […]
Read More
அரசு அலுவலகங்களில் தவிக்கும் மக்களுக்காக சமூக சேவகர் ஆனேன்
  • By Magazine
  • |
சமூக சேவகர் திரு. ஷாகுல் ஹமீது பேட்டி அரசு அலுவலகங்களில் தங்களுக்கு தேவையான காரியங்களை சாதிக்க வழி தெரியாமல் தவிக்கும் மக்களின் மேல் பரிதாபம் கொண்டு சமூக சேவகர் ஆனேன் என்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த சமூக சேவகர் திரு. ஷாகுல் ஹமீது. புதிய தென்றலுக்காக அவரை குளச்சலில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தோம். அப்போது அவர் கூறியதாவது தாங்கள் சமூக சேவகர் ஆனது எப்படி? நான் சுமார் 30 ஆண்டுகளாக சமூக சேவை […]
Read More
பிழைப்பு
  • By Magazine
  • |
போதை தலைக்கு ஏறியது… கிரிக்கெட் மட்டை, கம்பு, இரும்புக்கம்பி என்று கையில் எது கிடைத்ததோ எடுத்துக் கொண்டார்கள். பத்துபேர் நான்கு இரு சக்கர வாகனங்களில் கிளம்பினார்கள். சமத்துவ கழகம் கட்சியின் வாசலில் குறுக்கும் நெடுக்குமாக வாகனங்களை நிறுத்திய இளைஞர்கள் கட்டையையும் கம்பியையும் எடுத்துக் கொண்டு வெறித்தனமாய் கட்சி அலுவலகத்திற்குள் நுழைந்தார்கள். யேய்… யாருப்பா நீங்க… என்ன பண்றீங்க… வட்டமாய் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த வெள்ளை வேட்டி பெரியவர்கள் வெலவெலத்து போனார்கள். போலீஸ்க்கு போன் போடுங்க… சுந்தரத்துக்கு போன் […]
Read More
மனதின் சக்தி
  • By Magazine
  • |
– சஜிபிரபு மாறச்சன் மனோசக்தி இருந்தால் ஒரு மனிதனால் எதையும் சாதிக்க முடியும். எப்போதும் தன்னைத்தானே குறைத்து மதிப்பீடு செய்து கொள்ளுதல் கூடாது. இவ்வுலகில் யாரும் யாருக்கும் தாழ்ந்தவர் அல்ல. சக மனிதரையும் மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களுடைய மகிழ்ச்சி உங்கள் கைகளில் இருக்கிறது. அதை உங்களைத் தவிர யாரும் தட்டிப் பறித்திட முடியாது. உங்களுக்கு நண்பனும் நீங்கள் தான். உங்களுக்கு எதிரியும் நீங்கள் தான். உங்களுக்கு எஜமான் நீங்கள் தான். மனிதனாக பிறந்த அனைவருக்கும் இறைவன் […]
Read More
  • By Magazine
  • |
– வழக்கறிஞர் பி. விஜயகுமார் வக்கீல்களுக்கு சில நிபந்தனைகள் கணவன் – மனைவியிடையே நடந்த விவாகரத்து வழக்கு இது. மனைவி  எதற்கெடுத்தாலும் கணவனிடம் தகராறு செய்யும் நிலையை கொண்டவராக இருந்தாள். இறுதியில் உச்சக்கட்டமாக கணவனிடம் உனது பெற்றோர்களிடமிருந்து பாகப்பிரிவினை செய்து சொத்து வாங்கவில்லை என்றால் நான் தூக்குப்போட்டு சாவேன் என மிரட்டல் விட்டுக் கொண்டிருந்தார். இதனால் கணவரும் அவர் குடும்ப உறுப்பினர்களும் கலக்கத்தில் இருந்தனர். மனைவி தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லவே தாக்குப்பிடிக்காத கணவன் அவள் […]
Read More
  • By Magazine
  • |
கமல. அருள் குமார் காற்றுக் கூட சிலநேரம் மூங்கிலைத் தேடும் இசையாகத் தன் குரலை கேட்க… நாற்றுக் கூட சிலநேரம் தென்றலைத் தேடும் தன் பச்சை பட்டாடையை ஸ்பரிசித்துப் பார்க்க.. அலைகள் கூட சிலநேரம் படகினைத் தேடும் தன் முகடுகளின் உதடுகளில் முத்தமிட்டுச் செல்ல.. முகத்தை மலரும் மலரென்றோ அகத்தை ஒளிரும் நிலவென்றோ வர்ணனை கேட்க சில வயது அகங்களும் காத்திருக்கும்… பேராசைகளும் பெரும் ஓசைகளும் அல்ல.. சின்னச் சின்ன ஆசைகளும் சன்னமான ஒசைகளுமே இதயப் பூட்டினை […]
Read More
கர்மான்வாலி
  • By Magazine
  • |
ஹிந்தி மூலம்: அம்ருதா ப்ரீதம் தமிழில்: நாணற்காடன் பெரிய மிக அழகான தந்தூர் ரொட்டி இருந்தது. ஆனால், வெஜிடபிள் கிரேவியால் தொட்டுக் கொண்ட கவளம் வாய்க்குப் பிடிக்கவில்லை. “இவ்வளவு காரம்…” நானும் என் குழந்தைகளும் ஆ… ஊ… என்று அலறிக் கொணடிருந்தோம். “இங்கே ஆட்களின் நடமாட்டம் அதிகம். இந்தப் பகுதியில் ஒரே ஒரு மதுபானக் கடைதான் இருக்கிறது. ஆட்கள் நன்றாகக் குடித்துவிட்டால் ?நல்ல காரமான கிரேவி தான் கேட்பார்கள்.” தந்தூரி கடைக்காரர் சொல்லிக் கொண்டிருந்தார். “இங்கே… சாராயம்…” […]
Read More