அணுக்கனிமப் படிவங்கள்
  • By Magazine
  • |
அணுக்கனிமப் படிமங்கள் அகழ்வு, இரண்டு அடுக்குச் செயல்பாடுகளாக இருக்கும். அணுக்கனிமப் படிமங்கள் நிலத்தின் மேற்பரப்பில் அமைந்துள்ளது. முதலில் நிலமேற்பரப்பில் இருந்து 2.5 முதல் 3 மீட்டர் ஆழம் வரையில் அகழ்வுப்பணிகள் நடத்தப்படும். அடுத்தகட்டமாக அடுத்த அடுக்கு அகழ்விக்கப்படும். 2 ஆவது அகழ்விப்பு முடிக்கும் போது கனிமப்பிரிவு ஆலையில் இருந்து கொண்டு வரப்படும் நிராகரிக்கப்பட்ட அணுக்கனிமங்கள் இல்லாத மண்ணைக் கொண்டு பள்ளங்கள் நிரப்பப்படும். அகழ்விப்பு சராசரி 6 மீட்டர் வரையிலும் அதிகபட்சம் 9 மீட்டர் ஆழம் வரையிலும் இருக்கும். […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-வின் 280-வது கருத்தாய்வுக் கூட்டமானது, திரு.அருள்தாஸ் ஆசான் தலைமையில் மருத்துவர்.த.இராஜேந்திரன், மருத்துவ கமலகண்ணன், திரு.கே. செல்வநாதன் ஆசான் ஆகியோர் முன்னிலையில் 05.10.2024 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் மருத்துவர். கமலகண்ணன் மூட்டுவலிக்கு எளிய முறையில் சூரணம் செய்முறையை கூறினார். அடுத்ததாக திரு.கே.செல்வநாதன் ஆசான் பாரம்பரிய மருத்துவம் குறித்து தெளிவாக உரையாற்றினார். அடுத்ததாக, திரு.ஸ்டீபன் ஆசான் நாபிரணம் மாற எளிய மருந்தினையும், பெரும்பாடு குணமாக எளிய மருந்து […]
Read More
  • By Magazine
  • |
பிறரை வென்று வாழ்வதற்காய்ப்                 பித்தலாட்டம் செய்வதுவும் உறவை எல்லாம் மிதிப்பதுவும்                 உண்மை தன்னை மறைப்பதுவும் திறமையாக ஏய்ப்பதுவும்                 திருடிப் பொருளைச் சேர்ப்பதுவும் புறமே கூறி நடப்பதுவும்                 புகழைத் தருமென்(று) எண்ணாதே! அறமே இல்லாச் செய்கைகளால்                 ஆதிநாளில் கிடைப்பதெலாம் இறவாப் புகழென்றாகாதே;                 ஈசல் வாழ்வே அதற்குண்டு: மறந்தும் கேடு செய்யாமல்                 மனிதநேயத் தொண்டுடனே சிறந்த செயலைச் செய்வோர்க்கே                 சீரும் பேரும் நிலைத்திருக்கும்! நிறமும் இனமும் மதமுமெலாம்                 […]
Read More
வித்தைகள் கற்க வாழ்நாள் போதாது
  • By Magazine
  • |
மத்திகோடு சிவகுமார் ஆசான்பேட்டி கண்டவர் : ஜி.ஜெயகர்ணன் ஆசான்கள் என்பவர்கள் ஆழம் காண முடியாத அறிவு பொக்கிஷங்கள் என்றால் மிகையல்ல. ஆம்புலன்ஸ், அதிநவீன மருத்துவமனைகள் ஒன்றுமே இல்லாத காலத்தில் கூட இவர்கள் பாரம்பரியமாக கற்றுக் கொண்ட கல்வியாலும் தங்களது அனுபவ அறிவினாலும் எண்ணிலடங்காத மனித உயிர்களை காப்பாற்றி வந்துள்ளனர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். அத்தகைய அறிவு ஜீவிகளான ஆசான்கள் தமிழகத்தின் தென்கோடியிலும் கேரளா போன்ற மாநிலங்களிலும் அதிகமாக காணப்படுகின்றனர். அப்படிப்பட்ட ஆசான்கள் ஆயிரக்கணக்கானவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் […]
Read More
இட்லி புராணம்
  • By Magazine
  • |
தமிழன் கண்டுபிடித்த தலையாய உணவு இதன் வரலாற்றுக்காலம் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி உண்பது காய்ந்த வயிற்றிற்கும் காய்ச்சல் காரருக்கும் உதவுவது மருத்துவர் மருந்துசீட்டில் எழுதாத மருந்து. எப்போது உண்ணலாம் எதனுடனும் உண்ணலாம் ஒரே மாவுதான் சுவை வேறு- தோசை- இட்லியாய் எந்த தமிழர் விருந்திலும் இதற்கு இடமுண்டு பலரின் பயணத்தில் உடன் வருவது துணியுடன் ஒட்டி அவிழ்ந்தாலும்- பிரிக்கப்படுவது மாலை வரை தாக்கு பிடிக்கும் மறுநாள் இட்லி உப்புமாவாக மலரும். […]
Read More
உலகைப் படிப்பவன்
  • By Magazine
  • |
எப்போதும் எதிலும் ஒழுங்கைக் கடைபிடிக்கும் பக்கத்து வீட்டுக்காரருக்கு காணும் எல்லாவற்றிலும் நீளும் தாமதம் காணச் சகிக்காமல் தலைக்கேறும் கோபத்தில் தானாகவே கிடைத்து விடுகிறது சிடுமூஞ்சிப் பட்டம் தேவையின் உச்சத்தில் காலைப் பிடித்தும் காயை நகர்த்தியும் காரியம் சாதித்துவிடும் எதிர் வீட்டுக்காரருக்கு சாமர்த்தியசாலிப் பட்டம் பொருந்திப் போகிறது. எப்போதும் உதவியென யார் கேட்டாலும் ஓடிச்செய்யும் மாடி வீட்டு நண்பருக்கு எளிதில் கிடைக்கிறது இளிச்சவாயன் பட்டம் எப்படி வாழ்வதென்ற கேள்வியோடும் எதைப் படிப்பதென்ற ஏக்கத்தோடும் எனைச் சுற்றியுள்ளோரைக் கண்டு மனிதர்களின் […]
Read More
மது ஒழிப்பு மாரத்தான்
  • By Magazine
  • |
எத்தனை நாளைக்குத்தான் தொண்டனாகவே இருக்கிறது. கொடி பிடிக்கிறதும் சுவரொட்டி ஒட்டுறதுமாகவே போய்ட்டுருந்துச்சுண்ணா நமக்கு என்ன மதிப்பு… திருமூர்த்தி தீவிரமாய் யோசித்தான். நாமளும் கவுன்சிரலாகணும். அப்புறம் எம்.எல்.ஏ அமைச்சர்னு போய்ட்டே இருக்கணும். சீட்டு கிடைக்கணும், மக்களையும் நம்ம பக்கம் திருப்பணும். சட்டென்று ஒரு திட்டம் மனதில் பட்டது. அன்று மாலையே நண்பர்களை சந்தித்தான். திங்கள்கிழமை கலெக்டர் ஆபீஸ்க்கு மனு கொடுக்க போவணும்டா… என்ன மனு… எப்படி மனு… சும்மா மொட்டையா மனு கொடுக்க போகணும்னு சொன்னா எப்படி… நண்பர்கள் […]
Read More
  • By Magazine
  • |
ஒரு நாட்டினுடைய முன்னேற்றம் என்பது பல கோணங்களைச் சார்ந்தது. அதில் அரசின் முதல் நோக்கம் மக்களின் வாழ்வியல் சார்ந்த அக்கரை. உணவு, வாழ்விடம், ஆரோக்கியம், கல்வி, விழிப்புணர்வு போன்றவைகளாகும். அதை சார்ந்து விவசாயம், சுகாதாரம், அறிவியல் கல்வி, நீராதாரம் போன்றவைகள் முதன்மையாக பராமரிக்கப்பட வேண்டியதும் கவனிக்கப்பட வேண்டியதுமாகும். மக்களின் விழிப்புணர்வுக்குள் இத்தகைய அவசிய தேவைகளின் முக்கியத்துவம் உணர்த்தப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டியது அரசின் கடமையாகும். எங்கு மக்கள் அச்சத்தாலும், பொருளாதார நெருக்கடியாலும் துன்பப்பட்டு வாழ்கிறார்களோ அங்கு மனவளமும், உடல்நலமும் […]
Read More
வ.உ.சி-க்கு உதவி செய்த கைதிகள்
  • By Magazine
  • |
வ.உ.சி-க்கு கோவை சிறைதான் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது..! அந்த ஜெயிலர் பெயர் மிஞ்ஜேல்… ரொம்ப மோசமானவன்.. கொடூரக்காரன்..! வ.உ.சி -யைஜெயிலுக்குள் கொண்டு செல்லும்போதே,  கை, கால்களை கட்டித் தெருவெல்லாம் இழுத்துச் சென்றுள்ளனர்..! வஉசிக்கு சிறைக்குள் தனிஅறை.. ஆனால் அதில் காற்று வசதி இல்லை.. சுத்தமும் சுகாதாரமும் இல்லை.. கால்களில் விலங்கு பூட்டப்பட்டுத்தான் வஉசியை அடைத்து வைத்தனர்..! சிறைக்குள் சென்றதுமே தலையை மொட்டை அடித்திருக்கிறார்கள்..  ஒரே ஒரு உடைதந்திருக்கிறார்கள்.. அதுகூட சாக்குப் பையால் தைத்தது. ஒருநாளைக்கு ஆயிரம் […]
Read More
சுதனும் மதனும் சுனாமியும்
  • By Magazine
  • |
ஒரு விடுமுறை நாள். மதனை சுதன் விருந்துக்கு கூப்பிட்டிருந்தான். பூவரச மரமும், புன்னை மரமும் நின்றிருந்த சுதனின் வீட்டிற்கு வந்த மதனை வரவேற்று உபசரித்தார்கள் சுதனின் அம்மா.  சுதனின் அம்மாவை மதனும் அம்மா என்றே அழைப்பான். மதனின் அம்மாவை சுதனும் அம்மா என்றே அழைப்பான்.  மத்தியானச் சாப்பாட்டிற்கு நல்ல சாளை மீன் அவியல், சூரத்துண்டு பொரியல், மஞ்சத் தண்ணீ மீன்குழம்பு என வித விதமா பரிமாறி வயிறு நிறைய உண்ண வச்சாங்க அம்மா.  சாப்பிட்டப் பிறகு, அதற்கு […]
Read More