கர்மான்வாலி
  • By Magazine
  • |
ஹிந்தி மூலம்: அம்ருதா ப்ரீதம் தமிழில்: நாணற்காடன் பெரிய மிக அழகான தந்தூர் ரொட்டி இருந்தது. ஆனால், வெஜிடபிள் கிரேவியால் தொட்டுக் கொண்ட கவளம் வாய்க்குப் பிடிக்கவில்லை. “இவ்வளவு காரம்…” நானும் என் குழந்தைகளும் ஆ… ஊ… என்று அலறிக் கொணடிருந்தோம். “இங்கே ஆட்களின் நடமாட்டம் அதிகம். இந்தப் பகுதியில் ஒரே ஒரு மதுபானக் கடைதான் இருக்கிறது. ஆட்கள் நன்றாகக் குடித்துவிட்டால் ?நல்ல காரமான கிரேவி தான் கேட்பார்கள்.” தந்தூரி கடைக்காரர் சொல்லிக் கொண்டிருந்தார். “இங்கே… சாராயம்…” […]
Read More
உழவனை வாழ்த்து !
  • By Magazine
  • |
– கே. பி. பத்மநாபன் கோழி கூவும் நேரத்தில்      குடிசை வீட்டில் எழுந்திடுவான்; மேழி தன்னை எடுத்திடுவான்;      மேட்டு வரப்பில் நடந்திடுவான்; ஆழி சூழ்ந்த உலகினிலே      அனைத்து மாந்தர் பசியாற நாழி உணவைப் பெறுதற்காய்      நன்றாய் நிலத்தை உழுதிடுவான்; தாழி தன்னில் கொண்டு வந்த      தண்ணீர் மோரும் கலந்திட்ட கூழினையே குடித்திடுவான்;       கொதிக்கும் வெயிலில் உழைத்திடுவான்; கீழிருக்கும் ஆழ்மண்ணைக்      கீழ் மேலாக ஆக்கிடுவான்; பூழிச்சேற்றில் காலூன்றிப்      […]
Read More
நெஞ்சு நிறை வாழ்த்து மடல்
  • By Magazine
  • |
பழனி அரங்கசாமி சித்த மருத்துவச் சிந்தனைக் குறிப்புடன் வர்ம அறிவியல் வண்டமிழ் வளமொடு சிறுகதை கட்டுரை சிறப்பொடு திகழும் குமரியின் தென்றல் குன்றாது வாழியவே! அரசியல் சூழல் அணுகிட விடாமல் நேர்மை நெறிநின்று வாய்மை வழி நடந்து சட்டங்கள் வழிகாட்டிச் சரித்திரம் படைத்திடும் தென்குமரித் தென்றல் திசையெங்கும் வாழியவே! சுற்றுச்சூழலொடு அறிவியல் கருத்துக்கள் வரலாறு புதினம் வளமான கவிதையொடு திங்களில் வீசிடும் தங்கத்தமி¢ழ்த் தென்றல் பொங்கிடும் புத்துணர்வாய் பொன்றாது வாழியவே! அனைவர்க்கும் பயன்தரும் அருங்கலைப்பெட்டகமாய் கலைக்களஞ்சியம் இதுவென […]
Read More
அதிக ஆயுளின் அதிசயம்
  • By Magazine
  • |
C. முருகன் 2014-ம் ஆண்டு அமெரிக்கா ஒரு ஆய்வு நடத்தியது. உலகில் அதிக வயது வரை வாழ்ந்தவர்களின் ஆய்வு. அமெரிக்கர்களை விட ஜப்பானில் தான் அதிக வயது வரை வாழ்ந்து சாதனை படைத்தவர்கள் அதிகம் என்று ஆய்வில் தெரிந்தது. 100 வயது 110 வயது தாண்டியும் நல்ல ஆரோக்கியம், மன உறுதியுடனும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய நீண்ட வாழ்க்கை பல நேரங்களில் கடினமாக இருந்துள்ள போதிலும் அவர்கள் தங்கள் வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ளும் போது அவற்றால் மனக்குழப்பம் […]
Read More
வெள்ளை எலி சகுனம்
  • By Magazine
  • |
– ஓஷோ ஜப்பானில் ஒரு கதை சொல்லுவார்கள். அதை இங்கு தருகிறோம். ஜப்பானில் வெள்ளை எலியை நல்ல சகுனம் என்பார்கள். திடீரென ஒரு வெள்ளை எலியை யாராவது பார்த்து விட்டால் உடனே வெகு மகிழ்ச்சி தான். என்னவோ நல்லது நடக்கப் போகிறது. ஒருநாள் ஒரு தந்தையும் மகனும் சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். திடீரென தந்தையின் முதுகுக்குப் பின்னால் ஒரு வெள்ளை எலியை மகன் பார்த்தான். சட்டெனத் திரும்பி விடாதீர்கள். உங்களுக்குப் பின்னால் ஒரு விருந்தாளி இருக்கிறார். நல்ல சகுனம். […]
Read More
உயிரற்றவைகளின் உரையாடல்கள்
  • By Magazine
  • |
சிவ. விஜயபாரதி தாகத்திற்கு இறைஞ்சுகிறது பாவப்பட்ட உயிர். கைககளை அகல விரிக்கின்றன ஞானமிகு பழைமைகள். தற்காலிக கதையொன்றினை அளந்து ஒருக்களித்து நகர்கிறார்கள் நிலைமை உணர்ந்த யாவரும். குரல்வளை நெறிக்கின்றன கையளிக்கப்பட்ட நீரினை கேட்டு வரும் அலையழைப்புகள் . வற்றும் முன் வழிந்தோடிய உப்பு நீர்த்தடங்கள் குறித்து அதன் சிற்றுயிர்கள் எழுப்பும் வினாவிற்கு உயிர்ப்பற்ற புன்னகையைப் பதிலெனக் கொடுப்பதற்குள் விளையாட்டு பொம்மைகள் கேட்டு அழ மலங்க மலங்க விழிக்கிறதந்த உயிர் மங்கும் விழிகளோடு மரங்களிடம் இறைஞ்ச அசைந்து அது […]
Read More
உடல் உஷ்ணமகற்றும் “முள் இலவு”
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் இலவு மரம், ஏரிக்கரை ஓரம், தரிசு நிலம், சாலை ஓரங்கள் மற்றும் மலைசார்ந்த நிலங்களில் தானாகவே வறட்சியை தாக்கு பிடித்து வளரும் மரவகை ஆகும். இதனை விதை மூலம் நடவு செய்யலாம். 3 முதல் 5 வருடங்களில் காய்கள் உண்டாகி பலன் கொடுக்கும். வறட்சி மற்றும் பூச்சி தொல்லைகளை தாக்கு பிடித்து பராமரிப்பு செலவு இன்றி வளர்கிறது. இம்மரம் நேராக சுமார் 70 அடி வரை வளரும். முள் இலவு மரத்தின் தண்டில் […]
Read More
உலகின் தங்க பெட்டகம் – நியூயார்க், பெடரல் பேங்க்
  • By Magazine
  • |
– முனைவர் மோகனா, பழனி அட தங்கமே…யாரறிவார் உந்தன் அரியாசனம் ..? வாழ்க்கையில் ஏதாவது ஒரு நிகழ்வு/ செயல்பாடுகளில் தங்கத்தை போட்டிருப்பீர்கள்.   அல்லது யாருக்காவது தங்கம் வாங்கிக் கொடுக்கும்படி நேர்ந்திருக்கும். அந்த தங்கத்துக்கு எங்கு விலை, யாரால் நிர்ணயிக்கப்படுகிறது தெரியுமா? அதன் தரத்தை நிர்ணயம் செய்வது யார்? எங்கே? இதெல்லாம் என்றைக்காவது நினைத்துக்கூட பார்த்திருப்போமா? இப்பவும் கூட நம்மில் நிறைய பேருக்கு இது  தெரியாது. கண்டுபிடித்தது எப்படி?      மனிதன் எப்போது தங்கத்தைப் பயன்படுத்தினான், எப்படி கண்டுபிடித்தான், […]
Read More
என்னுடைய பயணத்தில் புகைவண்டிகள்
  • By Magazine
  • |
எம்.முகுந்தன். மலையாள நாவலாசிரியர். தமிழில் :கிருஷ்ணகோபால் இரயில் ஒரு வாகனம் மட்டுமல்ல அனுபவம் கூட தான். பல வேளைகளிலும் அது வீட்டு நினைவுகளும் நிறைந்ததே… என்னுடைய வாழ்க்கையில் இரயில் பயணத்திற்கென தனியொரு இடம் உண்டு. அரை நூற்றாண்டிற்கும் மேலாக நான் தொடர்ந்து இரயிலில் பயணம் செய்திருக்கிறேன்.அந்த அலைச்சலைக் குறித்து ஒர்மை வரும் போது சென்னை நகரத்தைக்  குறித்து சொல்லாமல் கடந்துச் செல்ல இயலாது. மய்யழியில் புகைவண்டி நிலையத்தை அடுத்துத்தான் என்னுடைய பழைய காலத்து  வீடு. அன்று  அது […]
Read More
சுற்றுச்சூழல் அக்கறையோடு
  • By Magazine
  • |
பண்டிகைகளைக் கொண்டாடுவோம் பண்டிகைகள் என்றாலே கொண்டாட்டங்களுக்கு குறைவிருக்காது. உறவுகள் கூடி கொண்டாடுவதற்கானவைதான் பண்டிகைகளும் திருவிழாக்களும். ஆனால் இந்த அவசரகால தொழில்நுட்ப வாழ்வில் தொலைவுகளில் வாழும் நாம் இப்பண்டிகைக் காலங்களில் உறவுகளை சந்தித்து கூடி மகிழ்ந்திருப்பதற்கான முக்கியத்துவத்தைக் குறைத்துக் கொண்டு நுகர்வுசார்ந்த கொண்டாட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றோம். சொந்தங்களைச் சந்தி¢த்தல் என்பது சுமூகமான கூட்டுக்குடும்பங்களில் நடைபெறும் நிகழ்வாகும். தற்போதைய வாழ்விற்கான பொருளாதாரத் தேடலில் எங்கெங்கோ படிப்பு, பணி என பிரிந்து வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் உறவு ரீதியாக தொலைவிலிருந்தாலும் கூட்டுக்குடும்ப […]
Read More