அரசியல் திட்டங்கள்!
  • By Magazine
  • |
முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்… வலது கைகொடுப்பது இடதுகைக்கு தெரியக்கூடாது என்பது ஆன்றோர் வாக்கு… அதை மதித்து அனைத்தையும் பதுக்கிவிட்டார் அடுத்த மக்கள் தெரியக்கூடாது என்று… இது அரசியல் சான்றோர்களின் சதிகாரத் திட்டம்.
Read More
  • By Magazine
  • |
சுமார் 900,000-800,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவை 1,280 இனப்பெருக்க உயிரினங்கள் மட்டுமே..! – முனைவர் மோகனா, பழனி பூமியில் மனிதர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனர். ஆனால் மனிதகுலம் கிட்டத்தட்ட முற்றிலுமாக அழிக்கப்பட்ட காலம் என்ற ஒன்று இருந்தது . அதுதான், சுமார் 900,000-800,000 ஆண்டுகளுக்கு முன்பு, உலக மக்கள் தொகை,என்பது சுமார் 1,280 இனப்பெருக்க உயிரினங்கள் மட்டுமே இருந்தன என்ற ஆபத்தான நிலையை அடைந்தது. இந்த மிகக் குறைந்த நிலையை அடைந்து, 117,000 ஆண்டுகள் இதே […]
Read More
வருணின்  சாகசம்
  • By Magazine
  • |
– காளீஸ்வர் அன்றைக்கு ராத்திரி 10 மணி ஆனதுக்கு அப்புறம் கூட வரும் டிவிய அணைக்காம கார்ட்டூன்ஸ் பார்த்துகிட்டே இருந்தான். அம்மா அவன திட்டி நாளைக்கு திங்கட்கிழமை ஸ்கூலுக்கு போகணும் போய் சீக்கிரம் தூங்குற வேலைய பாரு அப்படின்னு பெட்ரூமுக்கு விரட்டி விட்டாங்க. போகும்போதுதான் அருணுக்கு நாளைக்கு டீச்சர் கொடுத்த ஹோம் ஒர்க் ஞாபகத்துக்கு வந்தது. வழக்கமா ஏதாவது அஞ்சு பக்கம் எழுதணும் அப்படின்னா கூட, அம்மா அப்பா கிட்ட கேட்டு எதையாவது எழுதி கொடுத்துவிடுவான். இந்த […]
Read More
  • By Magazine
  • |
வெ. சின்னசாமி பிறந்தவுடன் பூச்சிகள் பறக்கவும், விலங்குகள் நடக்கவும், மீன்கள் நீந்தவும் தொடங்கி விடுகின்றன. ஆனால் மனிதன் மட்டும் பிறந்ததும் நடப்பதில்லை. சில மாதங்களுக்குப் பிறகு பிறர் துணையுடன் நடக்கக் கற்று கொள்கிறான். பேச, வளர, வாழ பிறர் மூலம் தான் கற்றுக் கொள்கிறான். கற்றுக் கொள்வது என்பது வாழ்வியலின் அடிப்படையாகும். வாழ்வியலை வகுத்து, பகுத்து, விரித்து சொல்கிறது திருவள்ளுவரின் அற்புதப் படைப்பாம் திருக்குறள். மெய், வாய் (நாக்கு, கண், மூக்கு, செவி இவற்றை ஐம்புலன் என்கிறோம். […]
Read More
தமிழ்நாட்டின் வானம்பாடி                          கவிஞர் முடியரசன்!
  • By Magazine
  • |
பூ.வ.தமிழ்க்கனல் ‘தன்மானக்குன்றம்-கொள்கைமாறாச்சிங்கம்- திராவிட இயக்கத்தின் முன்னோடிக்கவிஞர், இயக்கத்தின் ஈடு இணையற்ற தளகர்த்தர்களில் ஒருவர்… இன்று திராவிட இயக்கம் நிமிர்ந்து நின்று கோலோச்சுகிறதென்றால்…. அன்று முடியரசனார் ஆற்றிய இலக்கியப் பணியும் காரணம்” என கருணாநிதியால் போற்றப்பட்ட அன்பு உடன்பிறப்பு அவர்தான், ‘தமிழ்நாட்டின் வானம்பாடி” எனப் போற்றப்பட்ட கவிஞர் முடியரசன். ‘ கவிஞன் யார் என்பதற்கு எடுத்துக்காட்டு தானய்யா பகுத்தறிவுக் கவிஞர் முடியரசன்” என்கிற பெரியாரின் பாராட்டுச் சான்றிதழ் முடியரசின் கொள்கை உரத்துக்குக் காலத்துக்கும் அழியாத சான்று! தேனிமாவட்டம், பெரியகுளம் […]
Read More
மாற்றுத் திறனாளிகள்குறித்த பார்வைகள்
  • By Magazine
  • |
A. தர்மராஜ் (த.ராசு) முந்தைய பாகத்தின் தொடர்ச்சி… 2021-ஜீன் மாதத்தில் தமிழக முதலமைச்சரின் உத்தரவுப்படி சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்ற போது, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 5 நபர்களுக்கு சுமார் 3 லட்சம் மதிப்பீட்டில் இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. அதே ஆண்டு அதே மாதத்தில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் தலைமையில் மாற்றுத் திறனாளிகள் நலத்துறைத் திட்டங்கள் […]
Read More
வீரனாக ஆவதற்காக களரி படித்தேன்    களரி ஆசான் பூராடன் பேட்டி
  • By Magazine
  • |
வீரன் ஆவதற்காக ஆசைப்பட்டு களரி கலையை படித்தேன் என்கிறார் 85 வயதான பூராடன் ஆசான் அவர்கள். கன்னியாகுமரி மாவட்டம் எஸ். டி. மங்காடு, அருகே பருத்திவிளை என்ற கிராமத்தில் உள்ள  அவரது வீட்டில் புதிய தென்றலுக்காக சந்தித்தோம் . தள்ளாத வயதிலும் படிக்கட்டு இல்லாத தனது பழைய வீட்டில் இருந்து தனியாக இறங்கிவந்து தன்னம்பிக்கையுடன்    வீரமாக அவர் பேட்டி கொடுத்தார். இதோ அவர் சொல்வதை நீங்களும் கேளுங்கள்.. நீங்கள் களரி கலையை பயிற்சி செய்ய காரணம் என்ன […]
Read More
மதுவின் நடனம்
  • By Magazine
  • |
முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்… வீட்டுக்குள் பாட்டில்களின் ஊர்கோலம் பசியில் துடிக்கும் குழந்தைகளின் முன் டாஸ்மாக்கின் சாகஸம்.
Read More
பொரி உருண்டை
  • By Magazine
  • |
– கை. செல்லத்தங்கம் வெளியூரில் இருக்கும் என் மகனிடம் செல்போனில் பேசிக் கொண்டிருந்தேன். அம்மா உங்க பேரன் உங்ககிட்ட பேசணுமாம் கொடு என்றேன். என்பேரன் ஆதினியன் பாட்டி எனக்கு பொரி உருண்டையும் காசிமுறுக்கும் வேண்டும் என்றான். என்னப்பா கேட்கின்றாய் என்றேன். எங்க அப்பாவுக்கு அவர்கள் சின்னப்பிள்ளையாய் இருக்கும் போது அவங்க தாத்தா பொரி உருண்டையும் காசிமுறுக்கும் தானே வாங்கிக் கொடுத்தார்களாம். அது எனக்கும் வேணும். தாத்தாக்கிட்டே சொல்லி வாங்கித் தாங்க. நாங்க அடுத்த வாரம் அங்கே வருவோம்ல […]
Read More
  • By Magazine
  • |
கே.பி.பத்மநாபன் உடலில் குறைகள் இருந்தாலும்                 உள்ளத்துள்ளே நிறைந்திட்ட திடமாம் அன்பால் வெல்லுகிற                 திறத்தோர் மாற்றுத் திறனாளி கடலின் அளவுக் கருணையினைக்                 காயம் முழுதும் கொண்டவர் தாம் உடனே உதவும் பண்பாலே                 உயர்ந்தோர் மாற்றுத் திறனாளி முடவராக இருந்தாலும்                 முகத்து நகையின் அரவணைப்பால் முற்றாய் நம்மை ஆட்கொள்ளும்                 முதிர்ந்த மனத்தோர் அவரே தாம் முடக்கம் நாவில் இருந்தாலென்?                 முத்தாள் ஒளிரும் அவர் விழிகள் சுடராய் நேய மொழியுரைக்கும்                 […]
Read More