வதந்தீ
  • By Magazine
  • |
– குமரி எழிலன் மதியம் ஒன்றரை மணிக்கு குளத்ல போயி குளிக்காட்டா குடியாமுழுகியாப் போகும்….முணுமுணுத்தாள்…தர்மப் பத்தினி… கோசலை “வீடு சொல்லி கேக்காட்டா ஊரு சொல்லி கேக்கும்” என்ற சொலவடை வந்து விழுந்திருக்கும். “முங்கிக் குளிக்கிற சுகம் டவுன்ல பொறந்த உனக்கு எப்பிடித் தெரியும்” பதிலுக்கு முனங்கிக் கொண்டே பைக்கில் பறந்தேன் நான்.. குளத்தின் தொண்ணூறு விழுக்காடு நீர்ப்பரப்பு தாமரை இலை கொண்டு    மூடப்பட்டிருந்தது.பத்து விழுக்காடு இடம் ஆலமர நிழலால் தண்ணீரை குளிரச் செய்தது….. தண்ணீரின் அடி ஆழம் […]
Read More
மந்தத்தை போக்கும் “மந்தாரை”
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் அழகிற்காக தோட்டத்தில் வளர்க்கப்படும் சிறு செடிவகையை சார்ந்த மந்தாரை, அதிக மருத்துவ குணங்களையும் பெற்றுள்ளது. மந்தாரையின் பூர்விகம் மலேசியா, இந்தோனேசியா, இந்தியா மற்றும் சைனா என்றும் சொல்லப்படுகிறது. மந்தாரையில் பல இனங்கள் உண்டு. அவைகளில் முக்கியமானவை. வெள்ளை, சிவப்பு, மஞ்சள் நிற பூக்களை கொண்டது. இதில் சிவப்பு நிற பூக்களை கொண்ட மந்தாரை அதிக மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. மந்தாரையின் இலைகள் பிளவுபட்டு வண்ணத்துப்பூச்சியின் இறகு போன்ற வடிவத்தில் காணப்படும். பூக்கள் 5 […]
Read More
  • By Magazine
  • |
– வழக்கறிஞர்   பி. விஜயகுமார் மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் பெருந்தன்மை மாரீஸ்வரி- எதிர்- தமிழ்நாடு அரசு என்ற வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் 2015-ம் ஆண்டுகால கட்டத்தில் நடந்தது. வழக்கின் தன்மை என்னவென்றால் கணவன் மனைவி இருவரும் பார்வை இல்லாத தம்பதியர்கள். கணவருக்கு பிறவியிலேயே பார்வை கிடையாது. மனைவிக்கோ 12-ம் வகுப்பு முடிக்கவும் பார்வை போயிற்று. இருவருக்கும் திருமணம் நடந்த முதலில் மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. தம்பதியர்கள் சிகிட்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்குச் […]
Read More
  • By Magazine
  • |
S. லெட்சுமி தங்கம் பாலகிருஷ்ணன். காரவிளை தேன் அருவியாய் பிறந்து தத்தும் அலை யென தவழ்ந்து புன்னகை பூ சொரிந்து அனுப்புகிறோம் 2025 ஐ. வாரீர் வாரீர் இவ்வையக செல்வங்களே!!! பாரீர் பாரீர் சிங்கமென புறப்பட்ட 20 26 ஐ!! செங்கதிரோன் காலையில் மெதுவாக கண்விழிக; செம்மாங்கு பாடியே பறவைகள் பாட்டடிசைக்க.; மானியமும் மீனினமும்; நடனமாடி மகிழ்ந்திருக்க!! செவ்வனே மெல்ல மெல்ல நடை போட்டு மெதுவாய் பிறந்தது புத்தாண்டு!!! மேகமெனும் இரும்பு கதவை திறந்து வந்தான்; செவ்விதழ் […]
Read More
வர்மம் எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் விசபந்த வர்மம் சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான துதிக்கை வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் விசபந்த வர்மம் பற்றி அறிவோம். இவ்வர்மம் மேற்புற முழங்கை மத்தியில் அமைந்துள்ளது. விஷபந்த வர்மம், விசபந்தக்காலம், விஷமணிபந்த வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் இவ்வர்மம் வழங்கப்படுகிறது. “ஆரடா பெருவிரல் மேல் சுட்டுவர்மம் அப்பனே அஞ்சிறை மேல் விசமணியின்பந்தம்”.                                                                                                                                 – ஒடிமுறிவு நூல் “வீழுமந்த முழங்கையில் மையம் பற்றி விசமான மணிபந்த […]
Read More
சீனிவாசன்
  • By Magazine
  • |
– பைசல் நான் ஒரு தேநீர் கடையில் தேனீர் குடிக்கும் போது ஒரு முதிர்ந்த கண்கள் என்னை கூர்ந்து நோக்கியது. என்ன காரணம் என்பது தெரியவில்லை திரும்பவும் கூர்ந்து நோக்கினார். நான் கண்களின் பார்வையை மாற்றி அமைக்க வேண்டியதாயிருந்தது. அப்படியான கண்களுக்கு சொந்தக்காரர் தான் நடிகர் சீனிவாசன் சமூகத்தை உற்று நோக்கி விமர்சிக்கும் பகடி செய்யும் கலையறிந்தவர் பல வேளைகளில் அவரையே அவர் பகடி செய்து கொள்வார். சென்னை திரைப்படக் கல்லூரியில் நடிப்பு கலையை கற்றவர் அந்த […]
Read More
புத்தாண்டின் நம்பிக்கை
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் ஒவ்வொரு புத்தாண்டும் வருகையிலும் மனிதர்கள் இந்த ஆண்டு நாம் பெற்ற கஷ்டங்கள் எல்லாம் தீர்ந்து அடுத்த ஆண்டில் நல்ல விஷயங்கள் நடக்காதா? என்கின்ற எதிர்பார்ப்புகளை சுமந்து புத்தாண்டுகளை எதிர்கொள்கிறார்கள். மனித மனம் அன்றாடங்களில் உள்ள சிக்கல்களின் வழியாக பெற்ற அனுபவங்களின் மூலம் எதிர்காலத்தின் மீது நம்பிக்கையைத் தவிற வேறு என்ன வைக்க இயலும் என்கின்ற அடிப்படையில் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.      மனிதர்களுக்கு ஒன்று முடிந்து இன்னொன்று துவங்க வேண்டும் என்கின்ற வாழ்வின் […]
Read More
டீக்கடை
  • By Magazine
  • |
– கை. செல்லத்தங்கம் காலை மணி ஒன்பது எப் எம்மில் வானொலி திரைப்பட பாடல்கள் நேயர் விருப்பம் கேட்டுக் கொண்டிருக்கிறது. அந்த டீக்கடையின் வெளியில் உள்ள பெஞ்சில் ஒருவர் தினத்தந்தி நாளிதழை படித்துக் கொண்டிருக்கிறார்,”அண்ணே ஒரு டீ போடுங்க” என்றபடி. நான் எத்தனை தடவை சார் சொல்றேன். நான் உங்களை விட சின்னவன், “தம்பின்னு சொல்லுங்க சார்” என்றார் டீக்கடை முதலாளி ராஜா. புன்சிரிப்போடு நானும் சரி தம்பின்னு சொல்லிக்கிட்டு கடையில் கூட்டமில்லாததால் குடும்பத்தைப் பற்றி கேட்டேன். […]
Read More
? ? ? அன்றாட  வாழ்வின் கேள்விகள்
  • By Magazine
  • |
– காளீஸ்வர் 1. கார் மற்றும் பைக் இஞ்சின்களை சிசி (CC) எனும் அளவீட்டில் குறிப்பிடுகிறார்களே அப்படி என்றால் என்ன? CC என்பது Cubic Centimeter (கன சென்டிமீட்டர்) என்பதன் சுருக்கம். இது என்ஜினின் சிலிண்டருக்குள் பிஸ்டன் (Piston) நகரும்போது ஏற்படும் இடத்தின் மொத்த கன அளவைக் குறிக்கிறது. அதிக சிசி இருந்தால், அதிக எரிபொருள் எரிக்கப்பட்டு அதிக ஆற்றல் (Power) உருவாகும். அதனால்தான் இருசக்கர வாகனங்களுக்கு குறைந்த சிசி அளவிலான என்ஜின் வழங்கபடுகிறது 2. மின்னல் […]
Read More
“பல்பு திருடன்”
  • By Magazine
  • |
– குமரி எழிலன் மாலை மயங்கும் நேரம்…. கடையின் வாசல் விளக்கை எரியவிட பொத்தானைஅழுத்தினார் மெடிக்கல் நம்பி… விளக்கு வெளிச்சமில்லை…. “மின்வெட்டுப் போலிருக்கிறது…. பூசைப்பட விளக்கு எரிகிறதே…அது மின்சேமிப்பானிலுள்ள (வீஸீஸ்மீக்ஷீtஷீக்ஷீ) மின்சார மோ…. இல்லையே… மின்சேமிப்பானுடன் பூசைப்பட விளக்குக்குத்  தொடர்பில்லையே ….” தனக்குள் பேசிக்கொண்டே வாசலில்  மேலே பார்த்தார்…  பல்பைக் காணவில்லை…  எதிர்த்த பலசரக்குக் கடை,  தங்கண்ணன், “தம்பியோ என்னத்தத் தேடுக…. கரண்ட காணல்லியா…?” என கிண்டலுடன் விசாரித்தார்.  “இல்லண்ணே கரண்டுல்லாம் இருக்கு பல்பத்தான்…காணல்ல…”என்றார் மெடிக்கல்க்காரர்.  “உங்க […]
Read More