சூரியன் சாலை 2025
  • By Magazine
  • |
– கிருஷ்ணகோபால் மலைத் தொடர்களை  நோக்கி நீளும் மக்கள் நடமாடமற்ற  இந்தக் கிளைச்  சாலையில் பசுமையை புதைத்துக் கொண்டிருக்கும் சூரியனை சாட்சியாக வைத்து  டாரஸ் லாரிகள் மட்டுமே அதிவேகத்தோடு இரவும் பகலும்   அங்குமிங்கும் சென்று வருகின்றன.இந்த சாலையில்  டாரஸ் லாரிகள் செல்லும்  போது உண்டாகும் அதிர்வு சுற்று வட்டார வீடுகளில் எதிரொலித்தன.வயதானவர்கள் திடீர் விழிப்பு வந்த பிறகு தூக்கம் வராமல் தவித்தனர்.. . இதய நோயாளிகள் தூக்கம்  தடைப்பட்டு   பராணப்பட்டனர். வேகமாகச் செல்லும் போது  காற்று மோதி […]
Read More
புரட்சிக்கவிஞரின் பன்முகப் பார்வை
  • By Magazine
  • |
– பழனி அரங்கசாமி தேசியக்கவிஞர் பாரதியின் காலம் தொடங்கி, கவிதை என்பது பண்டிதர் பாஷையினின்றும் விடுதலை பெற்று மக்களின் சொத்தாக மாறிவிட்டது. யமகமும், திரிபும் அந்தாதியும், ஆசிரியப்பாவும், வஞ்சியும், கலிப்பாவும் மருட்பாவோடு சேர்ந்து மருட்டிய காலம் மறைந்து விட்டது. நாட்டு விடுதலைக்கு மட்டுமின்றி பாடல்களின் பகிரங்க விடுதலைக்கும் பச்சைக்கொடி காட்டியவன் பாரதி. சொல்லும் பொருளும் சுவைபடப்பாடி பண்டிதரையும் பாமரையும் தன்குடைக்கீழ் கொண்டு வந்தவன் பாரதி. அந்த பாட்டுக்கொரு புலவன் பாரதியோடு பத்து ஆண்டுகள் (1908-1918) பாண்டிச்சேரியில் நெருங்கிப் […]
Read More
கவிதை
  • By Magazine
  • |
குளச்சல் ரவிச்சந்திரன் குடும்பம் என்னும் மலர் வளையத்தில் வாசம் வீசும் அன்பு தேவதைகளே பெண்கள்,…! தோற்றுப் போனது தோல்விகள் உண்மைதான், காலங்காலம் தொட்டு கிழக்கும் மேற்கும் இதுவரை சமநீதி கண்டதுண்டோ?… இடப்பாகம் அளித்து-ஈசன் அர்த்தநாரி ஆகியும், பூசையோடு பெண்மை மறுக்கப்படுவது மாபெரும் உண்மை,…! இந்த ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் தியதி அன்று,,,, “உலகெங்கும் பெண்ணிற்கு எதிரான வன்முறைகள் இல்லை” யென செய்தி வந்தால்…… வெற்றிதான்,
Read More
கல்வி
  • By Magazine
  • |
கவிமுகில்.பெ. அறிவுடைநம்பி கற்றல் என்பது மிகச் சிறப்பு- அது கைகூடும் போது பெருமதிப்பு ஓய்வறியா முயற்சிக்குப்பின் உச்சம் தொடுதல் சுலபம் பழுதில்லா பாதைப் பயணம் வெற்றியை நோக்கி நடைபோடும் இடையறா உழைப்பு- உந்தன் இலக்கை அடைய வழிகாட்டும் இளமையில் கற்றல் எளிதாகும் இன்முகத்தோடு பயின்றிடலாம் தொடரும் முயற்சி இருக்கும் போது தோல்வி என்பதை விரட்டிடலாம் திட்டமிட்ட கொள்கையினாலே திறம்பட வென்று காட்டிடலாம் எட்டுத் திக்கும் புகழ்பரவ எந்நாளும் வாகை சூடிடலாம் இளமை என்பது வசந்தமாகும் இனிதாய் வாழ்வை […]
Read More
  • By Magazine
  • |
வழக்கறிஞர்  பி. விஜயகுமார் திருநங்கையை மணமுடிக்க மறுத்தவர் மீது வழக்கு கிமாச்சல் பிரதேஷ் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு இது. ஃபேஸ்புக் மூலமாக ஒரு திருநங்கையும் கிமாச்சலைச் சேர்ந்த ஒரு இளைஞனும் பழகிக் கொண்டனர். திருநங்கை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பாள். பழக்கம் பிறகு தீவிர காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்வதற்குத் தயாராகினார்கள். இச்சம்பவம் இளைஞனின் பெற்றோருக்குத் தெரியவந்து இத் திருமணத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இருப்பினும் மகன் அவளைத் தான் கட்டுவேன் என ஒற்றைக்காலில் நின்றான். […]
Read More
  • By Magazine
  • |
செ.பராந்தகன் நோயில்லாத வாழ்வே குறைவில்லாத செல்வம் என்பதை அனைவரும் அறிவோம். உலகப் பொதுமறை’ திருக்குறள்’ என்னும் வாழ்வியல் நூல் வைத்தியத்திற்கு ‘மருந்து’ என்னும் அதிகாரத்தில் 10 குறள்களில் வியாதி உண்டாகும் வழிகள் மற்றும் அவற்றை தடுக்கும் முறைகளை எடுத்துரைக்கிறது.  ‘மிகினும் குறையினும் ‘என்று தொடங்கும் குறளில் காற்று, நீர் ,உணவு ஆகிய மூன்றில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் மிகுந்தாலும் நோய் உண்டாகும் என்கிறார் வள்ளுவர். ‘மருந்தென வேண்டாவாம்’ என்ற என்ற குறளில் அறுசுவைகளுடன் உண்ணப்படுகின்ற உணவு சீரணமாகிவிட்டது […]
Read More
கீழாநெல்லியின் மருத்துவகுணங்கள்
  • By Magazine
  • |
கஸ்தூரிபா   ஜாண்ஸன் தாவர இயலில் பைலானதஸ் அமரஸ் (Phyllanthus amarus) என்று அழைக்கப்படும் இம்மூலிகை யூபோர் பயேசியே (Euphorbiaceae) என்ற குடும்பத்தை சேர்ந்தது. தமிழ்நாட்டில் பரவலாக மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு குறுஞ்செடி. சுமார் 15 சென்டிமீட்டர் உயரம் வரை வளரும். இம்மூலிகையின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன் தருகிறது. பயன்கள் மஞ்சள் காமால நோய் தீர்க்க வேருடன் கூடிய முழுச் செடியையும் நீரில் கழுவி அரைத்து 5 முதல் 7 நாட்கள் மோரில் கலந்து காலை […]
Read More
சுருதி இழந்த ருத்ர வீணை
  • By Magazine
  • |
 மகேஷ் பாலகிருஷ்ணன் எல்லோராலும் பாதுகாக்கப்பட்டு பெரிதும் மதிக்கப்பட்ட நல்ல ருத்ர வீணை அது. இசை வித்வான்கள் வாழ்ந்த அந்த குடும்பத்தின் அடையாளம் அது. கால மாற்றத்தினாலும், வாழ்க்கை மாற்றத்தினாலும், மெல்ல மெல்ல காட்சிப்பொருளாய் மாறியது. ஒரு வயதானவர் மட்டுமே வீட்டில் வாழ்ந்து வந்தார். அற்புதமாய் வடிவமைக்கப்பட்ட அந்த வீணை, காட்சி பொருளாக இருப்பதை விட. அந்த கடைசி வித்வான்க்கு உபயோகப்படுவதையே விரும்பியது!!! யாரும் மீட்ட தயாராக இல்லாத அந்த இடத்தில், தன்னை விற்கத் துணிந்தது. முயற்சிகள் தோல்வியுற்றது.. […]
Read More
அண்டத்தோற்றத்தின் அறிவியல் கொள்கைகள்
  • By Magazine
  • |
வர்ம அறிவியல் மாமேதை மூலச்சல் Dr.T. இராஜேந்திரன் சென்ற மாத இதழின் தொடர்ச்சி… பூமி தோற்றம் பற்றிய அலக்சாண்டர் ஒப்பாரின் மற்றும் ஜே.பி.எஸ். ஹால்டன் ஆய்வுகள்  பூமியானது 500 முதல் 600 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனிலிருந்து உடைந்த பகுதியாகவோ அல்லது விண்வெளி தூசுகளாகவோ இருந்த பொருட்கள் இணைந்தே இப்படி உருவாகியிருக்கும் என்று கருதினர். இன்றைய நமது சூரியமண்டலம் முழுவதும் கூட இப்படித்தான் உருவாகியிருக்கும் என ஒப்பாரின் ஹால்டன் போன்ற அறிவியல் அறிஞர்கள் தெளிவுபடுத்தினர். ஆரம்பத்தில் பூமியானது […]
Read More
குடல்புண்
  • By Magazine
  • |
டாக்டர் என்.கே. சுரேஷ் MD(S) வயிற்றில் ஏற்படும் புண்களையும், சிறுகுடலின் முன்பகுதியில் ஏற்படும் புண்களையும் பொதுவாக நாம் வழக்கத்தில் குடல்புண் (அல்சர் – Peptic ulcer) என்று அழைக்கிறோம். நாட்பட்ட குடல்புண்நோய் உள்ளவர்கள் உடலும், மனமும் குன்றி போவதால் இதனை குன்மம் என சித்தமருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வயிற்று பகுதியில் ஏற்படும் புண்களை வயிற்றுப்புண், Gastric ulcer, Stomach ulcer என்று அழைப்பதுண்டு. வயிற்றுபகுதியை தொடர்ந்து வரும் சிறுகுடலில் ஏற்படும் புண்களை- சிறுகுடல் புண் (duodenal ulcer)) என்று […]
Read More