“கவிதை உறவு”(கவியரங்கக் கவிதை)
  • By Magazine
  • |
குமரி எழிலன் மேடையில் அமர்ந்திருக்கும் மேன்மை மிக்கோரே… விதைதான் உறவாக பூமியை துளைப்பதற்கு வேர்தான் உருவாக காரணம் நீர்தானே.. தைமகள் தவழ்ந்துவர துணையாய் நின்றது மார்கழிமாதத்து பனிமழை நீர் தானே. அய்யன் வள்ளுவனைபாப் பாடிப் பரவுதற்கு பையன் வருகை தந்தேன்… ஈராயிரமாண்டு இளைய மெய்யன் வருகை தந்தேன்.. அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடியும் வள்ளுவத்தைபாடவந்தேன்.. ஊர்கூடி வள்ளுவநார்க்கு எடுக்கின்ற விழாவிலே ஓர்பாட்டுப் பாடவந்தேன்… திருக்குறளில் அரசியல் என்னும் தலைப்பிலே சிறுகவிதை படிக்க வந்தேன்.. அரசியல் பிழைத்தாற்கு அறம் […]
Read More
விலவூர் பேரூராட்சியில் புதிய அலுவலகக் கட்டிடத் திறப்பு விழா
  • By Magazine
  • |
கன்னியாகுமரி மாவட்டம் விலவூர் பேரூராட்சியில் மக்கள் சேவையை துரிதப்படுத்தும் நோக்கில் விரிவாக்கம் செய்யப்பட்ட நவீன அலுவலகக் கட்டிடத்தின் திறப்பு விழா மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அண்மையில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்குப் பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி. கமலேஸ்வரி அவர்கள் தலைமை தாங்கினார். பேரூராட்சித் துணைத் தலைவர் ஞானஜெபின் மற்றும் கவுன்சிலர்கள் கிரிஜா, பவித்ரா, விஜயலெட்சுமி, ஜேக்கப் ஜெயராஜ், சதீஸ்ணகுமாரி, சுதாபாய், கவிதா, நியமன உறுப்பினர் கிறிஸ்டோபர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நவீன வசதிகளுடன் […]
Read More
அண்டத்தோற்றத்தின் அறிவியல் கொள்கைகள்
  • By Magazine
  • |
வர்ம அறிவியல் மாமேதை மூலச்சல் Dr.T. இராஜேந்திரன் அறிவியல், மதக் கோட்பாடுகளிலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள பல்வேறு அறிவாளிகளை பலிகொடுத்துள்ள கொடுங்கதைகள் மேற்கத்திய வரலாற்றில் உண்டு. அவ்வாறு பல்வேறு இன்னல்களையும், இடர்களையும் தாண்டி முன்னேறிய அறிவியல் தளம் மேற்கத்திய நாட்டிலிருந்து தொடங்கியதால் அந்த வழி மரபினர்களும் – அவ்வழி மரபினர் சொல்லாட்சிகளுமே இன்றுவரை அறிவியல் உலகின் முக்கிய இடங்களைப் பெற்றுள்ளனர். ஆனால், அறிவுத்திறனும், ஆற்றலும் படைத்த கிழக்கத்திய சமூக நாகரீகம் சமயப் பிடிப்புகளிலிருந்து தன்னை பிரித்தறிய முடியாமல் இருந்ததாலும், […]
Read More
பேப்பர் குருவி
  • By Magazine
  • |
– அன்பாதவன் காலம் பல ஆண்டுகளைத் தாண்டி  விட்டது. தேவராஜ் இப்போது வளர்ந்த பெரியவன்.  அம்மா இல்லை; அம்மாவின் புகைப்படம் மாலையணிவித்து கவுரவிக்கப்பட்டிருந்தது. காலம் அவளை மெல்ல அழைத்துச் சென்றது. அவனும்  நகரங்கள்  பல மாறி வேலையிலும் வாழ்க்கையிலும் மூழ்கியிருந்தான். ஆனால் சில இரவுகளில், வானம் வெளுக்காமல் நிற்கும் பொழுதுகளில், அவனுக்குள் அந்த பனந்தோப்பின் காட்சி உயிர்த்தெழும் – சிட்டுக்குருவியின் சத்தம், “விர்” என்ற கல்லின் ஓசை, ராமலிங்கத்தின் அழுகை, விஜயனின் அலறல். அந்த நினைவுகள் அவனைக் […]
Read More
நூல் மதிப்புரை
  • By Magazine
  • |
இலக்கியங்கள் என்பவை சமூகத்தின் கண்ணாடி மட்டுமல்ல, அவை சமூகத்தை நல்வழிப்படுத்தும் ஒரு கருவியும் கூட. அந்த வகையில், முனைவர் செந்துறை சி. தங்கராசு அவர்கள் படைத்துள்ள ‘மங்கள நாட்டு மாணிக்கங்கள்’ நாவல், இன்றைய உலகளாவிய சமூகக் குழப்பங்களுக்குத் தீர்வாக ஒரு சிறந்த ஜனநாயகக் கட்டமைப்பை முன்மொழிகிறது. ஒரு தேசம் எப்படி இருக்க வேண்டும், அங்கு நிர்வாகம், சட்டம் மற்றும் நீதி எவ்வாறு அமைய வேண்டும் என்பதை மிக நுட்பமாக விவரிக்கும் இந்த நாவல், ஒரு கற்பனை நாட்டின் […]
Read More
கிரீன் டீயும் ஆன்டி ஆக்ஸிடஸ்களும்
  • By Magazine
  • |
கஸ்தூரிபா ஜாண்ஸன் கிரீன் டீ தாவர இயலில் கேமிலியா சினென்சிஸ் (Camellia sinensis) எனப்படும் குறிப்பிட்ட ரகத் தேயிலைச் செடியின் இளம் தளிர்களும், மொட்டுகளும் சேமிக்கப்பட்டு குறைந்த பட்ச சூட்டில் இலைகளின் நிறம், மணம், ருசி மாறாமல் கிரீன் டீ எனப்படும் பசும் தேயிலை தயாரிக்கப்படுகிறது. கொதிக்கும் நீரில் பச்சைத் தேயிலை போட்டு பால் சேர்க்காமல் பற்களில் சிறிது சிறிதாகப் படும்படி அருந்த வேண்டும். சுக்கு, பட்டை, மிளகு, ஏலம், கிராம்பு, துளசி, புதினா இலைகள், ரோஜா இதழ்கள், […]
Read More
மியா என் பூனைக்குட்டி
  • By Magazine
  • |
– திலீபன் காளிதாஸ் – (தமிழாசிரியர்) எல்லைப்பகுதியில் மன்னன் என்ற ஓர் இளைஞன் இருந்தான்.  அவன் பெரும்கஞ்சன், அவனிடம் சேமிப்பு என்று எதுவும் கிடையாது. ஆசையாக ஒரு பூனையை களவாடி விட்டு தன்னுடைய வீட்டினுள்ளே பூட்டி வைத்திருந்தான். அதன் பெயர் மியா! நாள்தோறும் மீன்பிடி தொழிலென, நாளுக்கு ஒன்று மட்டுமே பிடித்து வருவான்.  பிடித்தமீனை உயிருடன் தொட்டியினுள் போட்டுவிட்டு அதற்கு காவலாக மியாவை விட்டுச் சென்றான். வேறெங்குச் செல்வான் அவன் இருக்கும் ஊரின் அருகில் வள்ளலார் நிறுவிய […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-வின்  296 -வது கருத்தாய்வுக் கூட்டம் 07.02.2026 அன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் திரு. இராஜன் ஆசான் தலைமையில் திரு.கே.செல்வநாதன் ஆசான், மரு.கமலகண்ணன். மூலச்சல் மருத்துவர்.த. இராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் இராஜேந்திரா மருத்துவமகை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் திரு.இராஜன் ஆசான் நரம்பு பிடிப்பு, எலும்புவலி, கைகால் கோச்சுதல் இவற்றுக்கு எளிய சூரணம் செய்முறையைக் கூறினார். அடுத்ததாக மரு.கமலகண்ணன் தடவுமுறை தைலம் தயாரிக்கும் முறையையும், இருதய படபடப்பு, வீக்கம், பலவீனத்துக்கு சூரணம் செய்முறை, அதி […]
Read More
மாமனிதர் நல்லகண்ணு
  • By Magazine
  • |
தமிழக அரசியலின் ‘அறம்’ என்கிற சொல்லுக்கு உருவம் கொடுத்தால், அது முதுபெரும் இந்திய கம்யூ. தலைவர் நல்லகண்ணுவாகத்தான் இருக்கும். 101-வது வயதில் அவர் இன்று விடைபெற்றிருப்பது, ஒரு கட்சியின் இழப்பல்ல; இந்த மண்ணின் அரசியல் எளிமையின் மறைவு! அரசியல்வாதிகள் என்றால் ‘சொத்து சேர்ப்பவர்கள்’ என்கிற பிம்பத்தை உடைத்தெறிந்தவர் நல்லகண்ணு. அவரது 80-வது பிறந்தநாளில், கட்சித் தொண்டர்கள் வியர்வை சிந்திச் சேர்த்த ஒரு கோடி ரூபாயையும், ஒரு புத்தம் புதிய காரையும் நல்லகண்ணுவிடம் அன்பளிப்பாக வழங்கினார்கள். மேடையில் அதனைப் […]
Read More
வர்மம் எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் கோச்சக்காலம் சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான கைமுட்டு வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் கோச்சக்காலம் பற்றி அறிவோம். கைமுட்டின் உட்புறக்கண்ணில் மேல் அருகு பற்றி ஒரு இறையில் கோச்சக்காலம் அமைந்துள்ளது. இவ்வர்மம் கோச்சல்காலம், கோச்சைக்காலம், கோச்சு வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. “மயங்கும் முட்டின்கண் சார்பில் கோச்சைக்காலம்”.                                                                                 – வர்ம குருநூல் “கைமுட்டின் உள் கண்ணின் மேலருகு                 பற்றி கோச்சுவர்மம்”.                                                 […]
Read More