• By Magazine
  • |
செ.பராந்தகன் அரச மரத்தடி பிள்ளையாரிடம் ஆயிரக்கணக்கில் வேண்டுதல்கள்… மழை வேண்டி உருகி நின்றான் உழவன்.. வேண்டாம் என்கிறான் அருகிலேயே உப்பள உரிமையாளன்.. நோயாளி கூட்டம் அதிகம் வேண்டுமென மருத்துவன் ஏங்கி நிற்க நோயில்லா வாழ்வுக்கு பிரார்தித்தனர் அதிகம்பேர்.. வெட்டியானும் வேலை வேண்டும் என மன்றாடினான் ஒருபுறம், வியாபாரம் தழைக்க வியாபாரிகளோ மறுபுறம்.. இப்படிக் கேட்டுக் கேட்டே பெரிய காதோடு அமர்ந்துள்ளார் அரசமரத்தடி பிள்ளையார்..
Read More
  • By Magazine
  • |
இரா. அரிகரசுதன் கவிதைகள் என்னை நான் எப்படி எதிர்கொள்வது எதிர்நிற்கும் மலைத்தொடர்களின் முன் ஒரு சிறு செடிக்குச்சி கையிலிருக்கிறதென்று நிமிர்ந்து நிற்கின்றேன் கையிருப்பிலிருந்த சின்ன பனிக்கட்டியும் உருகியபின் ஈர மணலை கைப்பிடி மண்ணென இறுக்கிப் பிடித்திருக்கிறேன் என்னை நான் எப்படி எதிர்கொள்வது மலையாகவும் பனியுருக்கும் வெப்பமாகவும் இருக்கும் அந்த என்னை எதிர்கொள்ளும் நானின் களைத்த தோள்களை மகனின் பிஞ்சு விரல்கள் தொட்டு தடவி ஆசுவாசப்படுத்துகையில் கையிருக்கும் சிறுகுச்சி வளர்கிறது சிலம்பமாக எழுந்து சுழற்றுகிறேன் படைவீச்சை உச்சி அடித்து […]
Read More
தர்மம் செய் மனமே…
  • By Magazine
  • |
இரா. அரிகரசுதன் கவிதைகள் உரு கொள்கிறார்கள்! புரியவே மாட்டேன் என்கின்றது. குளித்து முடித்து ஈரமான நகத்தை வெட்டி எறிவதைப் போன்ற லாவகத்தில் செய்துவிடுகிறார்கள்! பயிற்சிப் பெற்ற தொழில் வல்லுனர்களாக இருக்கிறார்கள் அல்லவா! ஆச்சரியம் தருகின்றது. அன்பெனும் உறையுள் துருப்பிடித்திருக்கும் கூரியக் கத்தியை எவ்வளவுதான் இறுக்கிப் பிடிப்பது! தன்னை ஒரு ஈர்க்காம் பெட்டியென அடக்கி வைப்பதற்குள்ளிருக்கும் துயரம், ஒரு வெடித்தலின் சிதறல்களை அள்ளிப் பருகுவதைப் பரிசளிக்கின்றது. ஞாயம் தன்னைத் தின்று சீரணித்தவர்களின் வயிற்றுக்குள் உருண்டு கொண்டிருக்கின்றது தாழக் கிடப்பாரை […]
Read More
ஞானத் தமிழ் வளர்ப்போம்
  • By Magazine
  • |
– கை. செல்லத்தங்கம் ஞானத் தமிழ் வளர்ப்போம் – நாம் விஞ்ஞானத் தமிழ் வளர்ப்போம். முக்கடல் முத்தமிடும் குமரி மண்ணில் மும்மதமும் சேர்ந்துழைக்கும் குமரியிலே . ஞானத் தமிழனுக்கோர் வானுயரச் சிலை மெய்ஞ்ஞானத் தலைவனுக்கோர் கற்சி¢லை சங்கம் வைத்து வளர்த்த தமிழ் தரணியெங்கும் முழங்கும் தமிழ் கற்க அதற்குத்தக நில் என்ற தமிழ் அணுவை குறுகத் தரித்து ஏழ்கடலை புகுத்தி குறளைச் சொன்ன தமிழ் கம்பனும் கவியரசர்களும் கையாண்ட தமிழ் மெய்ஞ்ஞானம் மூலம் வளர்ந்த தமிழ் – […]
Read More
பணி ஓய்வு நாள்
  • By Magazine
  • |
செ.பராந்தகன் நாளை முதல் செய்த வேலையையே திரும்பிச்  செய்ய வேண்டியதில்லை.. நேரங்கலெல்லாம் இனி என் கையில் தவழும். மலர்ந்த பூக்களையும் காய் கனிகளையும் கவனித்து மகிழலாம். உண்ணும் உணவின் ருசி நன்கு புரியும். கண்கள் காணாத காட்சியெல்லாம் காணப்போகின்றது.. அடுக்கிவைத்த வாசிக்காத புத்தகங்கள் வரவேற்கும் நான் வாசிக்க போகும் நேரங்களை… ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கம் நாளைமுதல்
Read More
போன்சாய் வாழ்க்கை
  • By Magazine
  • |
ரா.சண்முகவள்ளி ஸ்ரீனிவாசன் கொஞ்சம் வளர்ந்தாலும் கிளைகளை உடைத்துவிட்டு கொஞ்சுகிறான் நான் அழகி என்று ! என் இயல்பில் படராமல் அவன் இசைவுக்கு வளரும் எனக்கோ போன்சாய் மரங்கள் பிடித்தமில்லை வட்டத்தொட்டிக்குள் வாழும் போன்சாய் போல் வீட்டுச்சுவருக்குள் முடிகிறது என்வாழ்வும் நீர் தேடி அழையமுடியா வேரின் வலியும் இலக்கின்றி ஓடும் என் வாழ்வின் வலியும் ஒத்த பாதையில் பயணிக்கிறது
Read More
  • By Magazine
  • |
இரா.சிவானந்தம் பயனளிக்கும் கைத்தொழிலை தக்க காலத்தில் கற்றுக்கொண்டால் வாழ்க்கைக்கு வளம் ஊட்டும் கற்ற கைத்தொழில் யாருக்கும் எப்போதும் அடிமையாக்காது காட்டும் கைத்தொழில் சிறப்புறக்கற்றால் பலருக்கு கொடுக்கலாம் வேலைவாய்ப்பு கைத்தொழில் கற்றவர் தானே தொழிலாளி தானே முதலாளி வேலை நேர கட்டுப்பாடில்லை எப்போதும் உழைக்கலாம் எந்த நேரத்திலும் ஓய்வு எடுக்கலாம் உழைப்பிற்கேற்ப வருவாய் கூடும் வாழ்க்கைதரமும் பெருகும். தணிக்கை – வரி ஏய்ப்பு சோதனை பிரச்சனை இல்லை பயமின்றி உழைக்கலாம் சிறந்த கைத்தொழில்களால் நாமும் உயர்வோம் நாடும் உயரும்.
Read More
ஏக்கம்
  • By Magazine
  • |
குமரி எழிலன் சன்னலில் ஒரு சாயல் தெரிந்தது… அது வானத்து நிலவோ … நிலவைத் தொட கைகள் துடித்தன கண்கள் மட்டுமே தழுவி மீண்டன… தோற்ற மயக்கமா? உண்மைத் தோற்றமா? நிலவுக்கும் தெரியும் கண்களுக்கும் புரியும்..  நாள் நட்சத்திரம் தேதி குறிப்பிட்டா கைகள் குலுக்கும் காயங்கள் சேரும்.. காய்ச்சலுக்கு மருந்து காத்திருக்குது கடைகளில் அல்ல … கண்களில் …. கைகளில் … இதயங்களில் …. காலம் உருண்டோடுகிறது உலகம் சுழன்று கொண்டிருக்கிறது கற்பனையில் மட்டும் வாழ்வது கனவல்லவா […]
Read More
வேடன் எனும் கருஞ்சூறாவளி
  • By Magazine
  • |
தக்கலை ஹாமீம் முஸ்தபா கூடி நிற்கும்  பெரும் மக்கள் திரள்முன் நின்று கொண்டு வேடன் என்னும் அந்தக் கலைஞன், “நான் பாணன் இல்லை  பறையன் இல்லை புலையன் இல்லை நீ தம்புரானும் இல்லை நீ தம்புரான் என்றால் எனக்கொரு மயிருமில்லை இனி காலமில்லை காத்திருக்கப் போவதுமில்லை பொறுத்துப் போகும் எண்ணமுமில்லை” என்று   ராப் இசையில் தன் குரலை அதிரவிடும்போது கூடிநிற்கும் பெரும் கூட்டமும் அவரோடு  சேர்ந்து ஆரவாரிக்கிறது. கேரள மக்கள் இசைமரபில் குறிப்பாக மலையாள நாடன் பாட்டு […]
Read More
  • By Magazine
  • |
கே.பி. பத்மநாபன் உயர்வான உழவரையே போற்றி நாட்டின்                 உறுபசியைப் போக்குதற்கே முயல வேண்டும்; அயராதிங்(கு) உழைக்கின்ற பாட்டாளிக்கும்                 அனைத்துநல மேன்மையெலாம் கிட்ட வேண்டும்; இயலாத ஏழைக்கும் ஊணுடுக்கை                 எல்லாமே எந்நாளும் ஈதல் வேண்டும்; வயதான காலத்தில் வாட்டமின்றி                 வாழுவகை செய்யும் நல்திட்டம் வேண்டும்.! சுயமாகத் தொழில் செய்யும் இளைஞர்க்கெல்லாம்                 சோர்வின்றி அரசிங்கே உதவ வேண்டும்; புயவலியால் மாற்றாரை அடிமை செய்யும்                 போக்கினரை அடக்கித்தான் ஆக வேண்டும்; இயன்றவரை தாய்மொழியில் […]
Read More