– கை. செல்லத்தங்கம்
ஞானத் தமிழ் வளர்ப்போம் – நாம்
விஞ்ஞானத் தமிழ் வளர்ப்போம்.
முக்கடல் முத்தமிடும் குமரி மண்ணில்
மும்மதமும் சேர்ந்துழைக்கும் குமரியிலே . ஞானத்
தமிழனுக்கோர் வானுயரச் சிலை
மெய்ஞ்ஞானத் தலைவனுக்கோர் கற்சி¢லை
சங்கம் வைத்து வளர்த்த தமிழ்
தரணியெங்கும் முழங்கும் தமிழ்
கற்க அதற்குத்தக நில் என்ற தமிழ்
அணுவை குறுகத் தரித்து ஏழ்கடலை
புகுத்தி குறளைச் சொன்ன தமிழ்
கம்பனும் கவியரசர்களும் கையாண்ட தமிழ்
மெய்ஞ்ஞானம் மூலம் வளர்ந்த தமிழ் – இன்று
¢விஞ்ஞானம் மூலம் விண்ணைத் தொட்ட தமிழ்
கண்கள் விரியட்டும் சமத்துவம் நோக்கி
எண்ணங்கள் விரியட்டும் சமூக நீதி நோக்கி
அறிவு வளரட்டும் அமைதி காண
அதரங்கள் பேசட்டும் இயற்கை காக்க
தமிழால் வளரட்டும் தமிழர் . ஞானத்
தமிழால் வளரட்டும் இளையோர்
பிஞ்சு மனதில் ஞானத் தமிழ் விதைத்து
ஞாலத்தில் நிமிரட்டும் வாசிப்பால் வானம் தொட்டு
நேசிப்பால் மனிதம் தொட்டு – ஞானத்
தமிழ் வளர்ப்போம் என்றும்
நம் உயிர்த் தமிழ் காப்போம்.
Leave a Reply