வான்புகழ் வள்ளுவர்!
  • By Magazine
  • |
– இரா.சிவானந்தம் திருவள்ளுவரின் அற்புதப்படைப்பால் வியந்து நிற்கிறது ஞாலம் ஒன்றே முக்கால் வரிகளில் தான் எத்தனையெத்தனை ஜாலம் முப்பாலின் உன்னதத்தை என்றும் மறக்காது காலம் மதம் இனம் கடந்த அற்புதப்படைப்பு வள்ளுவரின் காலமும் – வரலாறும் இன்னும் ஆராயப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுவரை இதற்கீடான ஒரு நீதிநூல் தோன்றவில்லை இனியும் எம்மொழியிலும் தோன்றப் போவதுமில்லை அனைத்து மக்களாலும் ஏற்கப்பட்ட நூல் அனைத்து நாட்டாரும் ரசிக்கும் நூல் போற்றாத மனிதர் இல்லை போற்றாதவர் மனிதரே இல்லை ஞாலம் உள்ளளவும் வள்ளுவம் […]
Read More
புத்தக உலகம் !
  • By Magazine
  • |
கே.பி. பத்மநாபன் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தையே      புறக்கணித்தல் புதுமையென ஆன தின்று; சித்தத்தைச் சீர் செய்து தெளிவாயாக்கிச்      சிந்தனையைக் கூராக்கும் புத்தகங்கள் எத்தனையோ இங்கிருக்க எல்லாம் நீக்கி      எல்லோரும் முகநூலில், வலைதளத்தில் நித்தமும் மூழ்கியதில் நீந்துகின்றார்;      நிசமான மகிழ்வினையே தொலைத்து விட்டார்! நித்தமொரு புத்தகத்தைக் கையில் ஏந்தி      நீளாற்றின் கரையோரச் சோலை தன்னில் சத்தமிலாத் தென்றலுடன் சரசமாடிச்      சாய்ந்தமரக் கிளைமீதில் படுத்தவாறு சித்தமெலாம் ஒன்றிணைய வாசிக்கின்ற      செவ்வியநல் […]
Read More
ஆழிக்கரையில் ஆசை நுரையோடு
  • By Magazine
  • |
– ஸ்ரீதர், கோவை பெ:       ஆறறிலோடும் நீரைப்போல                 துள்ளியாடி வாரேனே                 அமிழ்தம் பொங்கும்                 ஆழிக்கரையோரம் வாரேனே ஆ:        பாவை அவளைக் காண                 பறக்கும் படகேறி வாரேனே                 கரையில் நிறையும் ஆசை                 நுரையோடு வாரேனே பெ:       என் தினமலரின் பூக்களானவனே ஆ:        என் பூக்களின் இதழ்களானவளே பெ:       என் கருநீல வானம் மழையாய்                 மண்ணில் விழ எழுகிறதே ஆ         மணலை நனைக்கும் மழையின் […]
Read More
மலை எங்கே மக்கா                       (வெறியாட்டு அல்லது முடியாட்டம் பாடல்)
  • By Magazine
  • |
– மருந்துவாழ் மலையன் மலை எங்கே – என் மக்கா மலை எங்கே மக்கா முழங்கும் அருவியும் கிளிகளின் கதைப்பும் இலைகளின் உரசலும் எங்கே என் மக்கா இலைமழைப் பொழிய நனைந்து விலங்கொடு வாழ்ந்தக் காட்டில் நிலவொளி தங்கிக் குரவையாடிய மலை எங்கே – என் மக்கா                                                               – (மலை எங்கே) நெஞ்சம் பெடைக்கவே மக்கா மலையில் வேட்டு வெடிக்குதே மக்கா வெடியில் குயில்கள் அழுகுதே மக்கா மரங்கள் இரத்தம் வடிக்குதே மக்கா                                     – […]
Read More
பனங்குருவியின் பாடல்
  • By Magazine
  • |
(குமரி மாவட்ட கழியல் சந்தப்பாடல்) – மருந்துவாழ் மலையன் பனைமரத்தின் மேலிருந்து பனங்குருவி பாடுது கூடிழந்தக் கதையைச் சொல்லி கழியெடுத்து ஆடுது பாளை சீவி இறக்கையிலே பயினி மணம் தூக்குது பனங்கருக்கு கிழித்த காயம் ஓலைப்பூவால் ஆறுது பனம்பழத்த அவிச்சிதின்ன காலம் மாறிப் போனது பனங்கிலுக்கு பெல்லடித்து நுங்கு வண்டி ஓட்டினோம் பயனி காய்ஞ்ச கூப்பனியை தொட்டு நக்கி ஓடினோம் புளிப்பயனி புட்டு செஞ்ச செரட்ட எல்லாம் காணல பனங்கிழங்கு எடுக்கையிலே தவணு வெட்டித் திங்குவோம் நுங்கு […]
Read More
ஆஞ்சனேயா   லாரி சர்வீஸ்
  • By Magazine
  • |
ராஜன் ஆத்தியப்பன் ஏனோ தெரியவில்லை சிறுவயதுமுதல் லாரிகளின்மேல் பகையோடிருக்கிறேன். அதன் முகம் எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. பகைக்கு காரணம் பயமாகவும் இருக்கலாமென்று பழங்கதைகள் சொல்வதும் உண்மையாயிருக்கக்கூடும். எதிரே ஹாரன் பிளிறலோடு லாரி வரும்போது நடைபாதையின் விளிம்புக்கு என்னைத் தள்ளிக்கொண்டு போகிறேன் கவனமற்ற நேரத்தில் பின்னிருந்துத் துடிக்கவைத்து கடந்துபோனால் குலசாமிகள் செவிகளைப் பொத்துமளவு என் உள்மனம் கூச்சலிட்டு அடங்கும். “பண்டொரு காலம் பாதாளமாயிருந்த இந்த நகரம் லாரிகளின் டயர்களை அடுக்கி அடுக்கி உயர்ந்து உயர்ந்து நீ நிற்கும் இப்பெருநகரம் உண்டாகியிருக்கிறது. […]
Read More
  • By Magazine
  • |
பெண்ணில்லா வாழ்க்கை… மண்ணில்லா பூமி… கண்ணில்லா மனிதர்கள் இதை… எண்ணாமலே வண்ணமிழந்து வாழும் சூட்சுமம்… வாழ்க்கையின் இழப்பு. முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள் என்னும் நூலிலிருந்து
Read More
பெண்களைப் பேணுவோம்
  • By Magazine
  • |
பெண்ணற்ற வாழ்க்கையும் கண்ணற்ற முகமும் ஒன்று பெண்களைப் பேணுவோம் கண்கள் தெளிவாகும் கசடர்கள் எழுதி வைத்த பெண்ணடிமை வார்த்தைகளை தீயிட்டு கொழுத்திடுவோம் ஆக்கிப்படைத்து நமை ஆளுகின்ற இயற்கையும் பெண்ணாகும்… போற்றி வளர்த்து நமை பூத்துக்குலுங்க வைக்கும் நீரும் பெண்ணாகும் காற்றாய் நாம் வாழ கணக்கறிந்துள்ளே ஊற்றி வெளியேறும் உட்காற்றும் பெண்ணாகும் ஆற்றி உடலுள்ளே… ஆற்றலாய் நிற்பவளும் பெண்ணாகும்… நுட்ப அறிவாலே நூறாண்டு சென்றாலும் மாறாத நுண்ணிமையும் பெண்ணாகும்… ஆண் பெண் என இருவரையும் தான் சுமக்கும் எண்ணாயிரம் […]
Read More
மனித நேயம்
  • By Magazine
  • |
புண்பட்ட நெஞ்சம் தேறுதல் பெற்றது மழலை பேச்சால் காத்திருப்பதும்  ஏமாறுவதும் சகஜந்தான் காதல் பாதையில் உழைப்பும் நம்பிக்கையும் இருந்தால் புறமுதுகு காட்டும் தோல்வி எத்தனை தலைமுறைக்கு தாக்கம் தரப்போகிறதோ மதுவின் ஆட்டம்? படிப்பிற்கும் அறிவிற்கும் சம்பந்தம் இல்லாமல் அமைந்து விடுகிறது பலருக்கு வேலை எத்தனை கொலைகள் உறவுகளுக்குள் எங்கே போனது மனித நேயம் எல்லோருக்கும் கிடைக்கட்டும் உணவு அதன்பின் பேசுவோம் ஜனநாயகத்தைப் பற்றி கடும்பசி பார்ப்பதில்லை உணவின் சுவையை கட்சி மாநாடு நல்ல கூட்டம் பிரியாணி வழங்குமிடத்தில் […]
Read More
நீர், வன, நிலவளம் காப்போம்!
  • By Magazine
  • |
– கே.பி.பத்மநாபன் நீர்நிலைகள் நிலத்தினிலே இல்லாதாயின்                 நெடுமரங்கள் நீள்வயல்கள் மாய்ந்து போகும் ; கார்மேகம் திரண்டெழுந்து மழை பெய்தற்குக்                 காடுகளே காரணமென்றறிதல் வேண்டும்; நீர்வளமும் நிலவளமும் ஓங்குதற்கு                 நிச்சயமாய் வனவளத்தைக் காத்தல் வேண்டும்; சேர்ந்திந்த முவ்வளமும் சிறந்திட்டால் தான்                 செகத்தினிலே உயிர்த்துடிப்பை காண்போம், தின்னம்! ஊர்வெளியில் வீணாகும் நீரை எல்லாம்                 ஊருணியில் சேமித்தால் இயற்கை அன்னை மார்பினிலே சுரந்திடுமே உயிர்நீர் என்றும்;                 மண்செழிக்கும் மழைநீரை ஏரி தன்னில் சேர்த்திட்டால் […]
Read More