• By Magazine
  • |
கே.பி. பத்மநாபன் உயர்வான உழவரையே போற்றி நாட்டின்                 உறுபசியைப் போக்குதற்கே முயல வேண்டும்; அயராதிங்(கு) உழைக்கின்ற பாட்டாளிக்கும்                 அனைத்துநல மேன்மையெலாம் கிட்ட வேண்டும்; இயலாத ஏழைக்கும் ஊணுடுக்கை                 எல்லாமே எந்நாளும் ஈதல் வேண்டும்; வயதான காலத்தில் வாட்டமின்றி                 வாழுவகை செய்யும் நல்திட்டம் வேண்டும்.! சுயமாகத் தொழில் செய்யும் இளைஞர்க்கெல்லாம்                 சோர்வின்றி அரசிங்கே உதவ வேண்டும்; புயவலியால் மாற்றாரை அடிமை செய்யும்                 போக்கினரை அடக்கித்தான் ஆக வேண்டும்; இயன்றவரை தாய்மொழியில் […]
Read More
வேணும் சிக்கனம்
  • By Magazine
  • |
இரா.சிவானந்தம் பிழைப்பிற்காக வெளிநாடு சென்றவன் நன்றாய் சம்பாதித்து அனுப்பினான் குடும்பத்திற்கு மனைவி மக்களும் வந்த பணத்தில் செல்வ செழிப்பாள் வாழ்ந்து மகிழ்ந்தனர் தேவையானவைகளைத் தவிர தேவையற்றதையும் வாங்கினர் சிக்கனம் என்பதை மறந்து போயினர். நான்காண்டு கழித்து விடுமுறையில் வந்தவனும் அள்ளி வந்தான் நிறைய ஆடம்பரப் பொருட்கள் உறவும் சுற்றமும் வியந்து நின்றன நட்பும் – அறிந்தோரும் சுற்றி வந்தனர் மீண்டும் புறப்பட்டான் வெளிநாட்டுக்கு ஆர்வமுடன் அங்கு மூண்ட அந்நிய நாட்டுச் சண்டையால் திகைத்து நின்றான். தாக்குதல்களால் பலரும் […]
Read More
  • By Magazine
  • |
குமரி எழிலன் மத்தகத்தே உடைபடும் தயிர்க்கட்டியாய் புத்தகம் படும்பாடு பெரும்பாடு …. வீட்டிலிருந்து பழைய புத்தகக் கடைக்கு பழைய புத்தகக் கடையிலிருந்து வீட்டுக்கு, மீண்டும் வீட்டிலிருந்து பழைய புத்தகக் கடைக்கு …. தாளம் படுமோ தறிபடுமோ காலவெள்ளத்தில் எறிபடுமோ …. அடுப்புக்கு நெருப்பாகாமல் அடுக்கிலாவது இருக்கட்டும் பேரீச்சம்பழம் ஆகாமல்
Read More
வான்புகழ் வள்ளுவர்!
  • By Magazine
  • |
– இரா.சிவானந்தம் திருவள்ளுவரின் அற்புதப்படைப்பால் வியந்து நிற்கிறது ஞாலம் ஒன்றே முக்கால் வரிகளில் தான் எத்தனையெத்தனை ஜாலம் முப்பாலின் உன்னதத்தை என்றும் மறக்காது காலம் மதம் இனம் கடந்த அற்புதப்படைப்பு வள்ளுவரின் காலமும் – வரலாறும் இன்னும் ஆராயப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதுவரை இதற்கீடான ஒரு நீதிநூல் தோன்றவில்லை இனியும் எம்மொழியிலும் தோன்றப் போவதுமில்லை அனைத்து மக்களாலும் ஏற்கப்பட்ட நூல் அனைத்து நாட்டாரும் ரசிக்கும் நூல் போற்றாத மனிதர் இல்லை போற்றாதவர் மனிதரே இல்லை ஞாலம் உள்ளளவும் வள்ளுவம் […]
Read More
புத்தக உலகம் !
  • By Magazine
  • |
கே.பி. பத்மநாபன் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தையே      புறக்கணித்தல் புதுமையென ஆன தின்று; சித்தத்தைச் சீர் செய்து தெளிவாயாக்கிச்      சிந்தனையைக் கூராக்கும் புத்தகங்கள் எத்தனையோ இங்கிருக்க எல்லாம் நீக்கி      எல்லோரும் முகநூலில், வலைதளத்தில் நித்தமும் மூழ்கியதில் நீந்துகின்றார்;      நிசமான மகிழ்வினையே தொலைத்து விட்டார்! நித்தமொரு புத்தகத்தைக் கையில் ஏந்தி      நீளாற்றின் கரையோரச் சோலை தன்னில் சத்தமிலாத் தென்றலுடன் சரசமாடிச்      சாய்ந்தமரக் கிளைமீதில் படுத்தவாறு சித்தமெலாம் ஒன்றிணைய வாசிக்கின்ற      செவ்வியநல் […]
Read More
ஆழிக்கரையில் ஆசை நுரையோடு
  • By Magazine
  • |
– ஸ்ரீதர், கோவை பெ:       ஆறறிலோடும் நீரைப்போல                 துள்ளியாடி வாரேனே                 அமிழ்தம் பொங்கும்                 ஆழிக்கரையோரம் வாரேனே ஆ:        பாவை அவளைக் காண                 பறக்கும் படகேறி வாரேனே                 கரையில் நிறையும் ஆசை                 நுரையோடு வாரேனே பெ:       என் தினமலரின் பூக்களானவனே ஆ:        என் பூக்களின் இதழ்களானவளே பெ:       என் கருநீல வானம் மழையாய்                 மண்ணில் விழ எழுகிறதே ஆ         மணலை நனைக்கும் மழையின் […]
Read More
மலை எங்கே மக்கா                       (வெறியாட்டு அல்லது முடியாட்டம் பாடல்)
  • By Magazine
  • |
– மருந்துவாழ் மலையன் மலை எங்கே – என் மக்கா மலை எங்கே மக்கா முழங்கும் அருவியும் கிளிகளின் கதைப்பும் இலைகளின் உரசலும் எங்கே என் மக்கா இலைமழைப் பொழிய நனைந்து விலங்கொடு வாழ்ந்தக் காட்டில் நிலவொளி தங்கிக் குரவையாடிய மலை எங்கே – என் மக்கா                                                               – (மலை எங்கே) நெஞ்சம் பெடைக்கவே மக்கா மலையில் வேட்டு வெடிக்குதே மக்கா வெடியில் குயில்கள் அழுகுதே மக்கா மரங்கள் இரத்தம் வடிக்குதே மக்கா                                     – […]
Read More
பனங்குருவியின் பாடல்
  • By Magazine
  • |
(குமரி மாவட்ட கழியல் சந்தப்பாடல்) – மருந்துவாழ் மலையன் பனைமரத்தின் மேலிருந்து பனங்குருவி பாடுது கூடிழந்தக் கதையைச் சொல்லி கழியெடுத்து ஆடுது பாளை சீவி இறக்கையிலே பயினி மணம் தூக்குது பனங்கருக்கு கிழித்த காயம் ஓலைப்பூவால் ஆறுது பனம்பழத்த அவிச்சிதின்ன காலம் மாறிப் போனது பனங்கிலுக்கு பெல்லடித்து நுங்கு வண்டி ஓட்டினோம் பயனி காய்ஞ்ச கூப்பனியை தொட்டு நக்கி ஓடினோம் புளிப்பயனி புட்டு செஞ்ச செரட்ட எல்லாம் காணல பனங்கிழங்கு எடுக்கையிலே தவணு வெட்டித் திங்குவோம் நுங்கு […]
Read More
ஆஞ்சனேயா   லாரி சர்வீஸ்
  • By Magazine
  • |
ராஜன் ஆத்தியப்பன் ஏனோ தெரியவில்லை சிறுவயதுமுதல் லாரிகளின்மேல் பகையோடிருக்கிறேன். அதன் முகம் எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. பகைக்கு காரணம் பயமாகவும் இருக்கலாமென்று பழங்கதைகள் சொல்வதும் உண்மையாயிருக்கக்கூடும். எதிரே ஹாரன் பிளிறலோடு லாரி வரும்போது நடைபாதையின் விளிம்புக்கு என்னைத் தள்ளிக்கொண்டு போகிறேன் கவனமற்ற நேரத்தில் பின்னிருந்துத் துடிக்கவைத்து கடந்துபோனால் குலசாமிகள் செவிகளைப் பொத்துமளவு என் உள்மனம் கூச்சலிட்டு அடங்கும். “பண்டொரு காலம் பாதாளமாயிருந்த இந்த நகரம் லாரிகளின் டயர்களை அடுக்கி அடுக்கி உயர்ந்து உயர்ந்து நீ நிற்கும் இப்பெருநகரம் உண்டாகியிருக்கிறது. […]
Read More
  • By Magazine
  • |
பெண்ணில்லா வாழ்க்கை… மண்ணில்லா பூமி… கண்ணில்லா மனிதர்கள் இதை… எண்ணாமலே வண்ணமிழந்து வாழும் சூட்சுமம்… வாழ்க்கையின் இழப்பு. முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள் என்னும் நூலிலிருந்து
Read More