குளம்
  • By Magazine
  • |
– பைசல். தக்கலை குளம் என்ற கவிதையை எழுதினேன் கலங்கியது மெல்லமெல்ல தெளியட்டும் குளத்தினுள் ஒரு மீனாக வாழ்கிறேன் குளத்தை  ஒரு தவளை  சுமப்பதைப் பார்த்தேன் இரவில் குளம்  தன்னைத்தானே நீராடுகிறது நட்டநடுவெளியில் ஒரு முதியவன் ஒரு சிறு ஆயுதத்தால் பெருங்குளத்தைத் தோண்டிக் கொண்டிருக்கிறான் ஒருவன் குளத்தை மயிலிறகால் ஆற்றுப்படுத்துகிறான் ஒரு குளத்தை நதிபோல் இழுக்கிறார்கள் இருவர் கைவிடும் போது குளமாகிவிடுகிறது குளத்தின் மேல் பாலம் போட முயல இயந்திரங்கள் மிதக்கிறது பாலங்களும் மிதக்கிறது நீர் நிறைந்த […]
Read More
மீன்கொத்தியின் அலகில் மினுங்குகிறேன்
  • By Magazine
  • |
இரா. அரிகரசுதன் கற்சிலையாக்கப்பட்டிருந்த காணாமல்போன ஒரு நாட்டு மீன்கொத்தியைக் கண்டேன் கண்களைப் பொத்தி அதன் மேலொரு மீன்கொத்தியென பொருந்திப் பார்த்தேன் மீன்கொத்தி மீன்கொத்திதான் ஏ கொழுத்த மீன்களே உங்கள் வயிற்றுக்குள் கிடக்கும் எம் நிலத்தின் மூதாததையரின் சதைத்துணுக்குகளைக் கண்டடையும் வகையில் நான் வேட்டையாடுவேன் மீன்கொத்தியின் அலகில் மினுங்குவது வேட்டையே அன்றி மீன் அல்ல…
Read More
மதுவின் சாதனை!
  • By Magazine
  • |
முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்… குலத்துக்கு ஒரே விளக்காய் வெளிச்சமிட்ட மருத்துவ மாணவியின் சேவைக்கு கிடைத்த பரிசு குடிகார வெறியனின் கொலைவெறித் தாக்குதல்… விளக்கும் அணைந்துவிட்டது விடிவுமிழந்துவிட்டது இது கேரளமண்ணின் மதுவின் சாதனை!
Read More
கல்விக்கண்
  • By Magazine
  • |
பத்மநாபன் அறியாமை இமையிங்கே அடைந்திருந்தால்      அவனியிலே அனைவருக்கும் குருட்டுப் பார்வை அறியாமை புரைவிழியின் படலம் தன்னை      அடைத்திருந்தால் அனைவருக்கும் மங்கும் பார்வை அறியாமை எனும் நீண்ட துயிலைக் கொண்டால்      அவனியதன் அசைவினையே அறிதல் ஏது? அறியாமை எனும் போலித் தவமிருந்தால்      ஆன்மாவின் துடிப்பறிதல் என்ப தேது? அறியாமை எனுமிருட்டு அடர்வனத்துள்      அடிவைத்து நடப்போர்கள் வாழ்வுப் பாதை நெறியேதும் தெரியாமல் தத்தளித்தே      நெடுமாழப் புதைக்குழிக்குள் வீழ்ந்தே மாய்வர் அறியாமை இமைதிறந்து […]
Read More
சமூக அவலம்
  • By Magazine
  • |
ஏழையின் குமுறல்! முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்… வாங்கிய கடனுக்கு வழியில்லை வரதட்சணைக் கொடுமையின் வாழாவெட்டியான மகள்… வழிமறிக்கும் கந்துவட்டியின் கத்திக்குத்துக்குப் பயந்து… ஒரு லட்சம் கடன் வாங்கி ஒழுகிய வீட்டையும் வார்க்கை வீடாக்கியது தவறாகிப்போனது கொரானாவின் கொடுமையில் வசிப்பதற்கே வழியில்லை ஏலத்தால்… நிலத்தையும் இழந்த சோகம்! பசிதீர்க்க வழியில்லை படுத்து இளைப்பாறவும் இடமில்லை…! அரசுகளின் அநியாய ஆட்சிகளால்… அகால மரணத்துக்குள் தள்ளப்படும் நாங்கள் யாரிடம் சொல்லி அழ… கோடிகள் ஆயிரம் வாங்கினால் ஓடிவிடலாம் அயல்நாட்டுக்கு… வாங்கிய கடன்களுக்காய் வாழ்விழந்து […]
Read More
  • By Magazine
  • |
– பைசல். தக்கலை ஒரு கவிஞன் விவசாயிகளைப் போல மொழியை உழுது பயிரிடுகிறான் களையெடுக்கிறான் அறுவடையின் போது எந்த லாபமும் இல்லை செய்வதறியாது திகைக்கும் நிமிடங்களில் அவனால் ஒரு முழு கவிதைத் தொகுப்பினுள் தற்கொலை செய்யமுடியாது அந்தத் தொகுப்பில் மரம் ,கயிறு ,விஷம் குறித்த எந்த கவிதையும் அவன் எழுதவில்லை
Read More
கவிதை
  • By Magazine
  • |
குளச்சல் ரவிச்சந்திரன் குடும்பம் என்னும் மலர் வளையத்தில் வாசம் வீசும் அன்பு தேவதைகளே பெண்கள்,…! தோற்றுப் போனது தோல்விகள் உண்மைதான், காலங்காலம் தொட்டு கிழக்கும் மேற்கும் இதுவரை சமநீதி கண்டதுண்டோ?… இடப்பாகம் அளித்து-ஈசன் அர்த்தநாரி ஆகியும், பூசையோடு பெண்மை மறுக்கப்படுவது மாபெரும் உண்மை,…! இந்த ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் தியதி அன்று,,,, “உலகெங்கும் பெண்ணிற்கு எதிரான வன்முறைகள் இல்லை” யென செய்தி வந்தால்…… வெற்றிதான்,
Read More
கல்வி
  • By Magazine
  • |
கவிமுகில்.பெ. அறிவுடைநம்பி கற்றல் என்பது மிகச் சிறப்பு- அது கைகூடும் போது பெருமதிப்பு ஓய்வறியா முயற்சிக்குப்பின் உச்சம் தொடுதல் சுலபம் பழுதில்லா பாதைப் பயணம் வெற்றியை நோக்கி நடைபோடும் இடையறா உழைப்பு- உந்தன் இலக்கை அடைய வழிகாட்டும் இளமையில் கற்றல் எளிதாகும் இன்முகத்தோடு பயின்றிடலாம் தொடரும் முயற்சி இருக்கும் போது தோல்வி என்பதை விரட்டிடலாம் திட்டமிட்ட கொள்கையினாலே திறம்பட வென்று காட்டிடலாம் எட்டுத் திக்கும் புகழ்பரவ எந்நாளும் வாகை சூடிடலாம் இளமை என்பது வசந்தமாகும் இனிதாய் வாழ்வை […]
Read More
கோடை
  • By Magazine
  • |
செ.பராந்தகன் வெப்ப நாட்களை வெறுப்பது ஏன்? வருத்தப்பட்டது சூரியன்… அசொளகரியங்கள் அதிகம், ஆகவே இந்த முணுமுணுப்பு. பதிலளித்தது பூமி.. வற்றல்,வடகம் ஊறுகாய், உப்புக் கண்டம் தயாரித்து அடுக்குகையில் மகிழ்கின்றனரே மக்கள்.. நகைத்து நகர்ந்தது சூரியன்..
Read More
கவிதை
  • By Magazine
  • |
பொறியாளர் சண்முக வடிவேலு, திருச்சி புலிகளின் உறுமலைப் புவியெங்கும் பரப்பியவன்! தமிழ்ப்பேரரசின்        தகைசால் பாணன்! பெரியார் பாசறையில்                முகிழ்த்த கவிமலர்! தேசியத்தலைவனின் தனித்தப்புகழை இசைத்தமிழ் வடிவமாக்கி பகல் இரவாகப் பாடிய இறவாப்பாடகன்!      தேனிசை செல்லப்பா! உலகத்தமிழரின் அடையாளமாய் நீ செல்லப்பா!  வீரவணக்கம் தோழர்!
Read More