வழிகாட்டும் ஒளிவிளக்கு
  • By Magazine
  • |
பேசும்போதே மின்னலாய் உற்சாகத்தைப் பாய்ச்சும் மினிப் பிரியாவின் பேட்டி.       கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மினிப்பிரியா, ஒருதொழில்முனைவர் மட்டுமல்லர். ஏராளமான தொழில் முனைவோரைஉருவாக்கிக் கொண்டிருப்பவர். அறிவியல் படிப்பில் ஆராய்ச்சிப் பட்டத்தகுதி கொண்ட மினிப்பிரியா, தன்னைப் போல பலரும் கல்வியிலும் உயர்ந்து வாழ்வில் சாதிக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறார். ‘நான் கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் பிறந்தேன். எனக்குச் சுமார் 6 வயதாக இருக்கும் போது குழித்துறைக்கு இடம் பெயர்ந்தோம்.      எளிய குடும்பப் பின்னணியைச் சேர்ந்தவள் தான் நான். […]
Read More
“கனா கண்டேன் தோழி”…
  • By Magazine
  • |
சொந்த ஊருக்கு கிளம்பி கொண்டிருந்த இந்துமதி அம்மாவிற்கு … மனது ஒரு வித குதூகலமாகவே இருந்தது. வழக்கமாக அவள் பயணிக்கும் பயணம் தான் அது. அன்று…. ஏனோ!…. அந்த பயணம் அவளுக்கு ஒரு சுகத்தை குடுத்தது. சொந்த மண்ணின் பாசமோ?… தெரியலையே… அல்லது நேற்று அவள் கண்ட கனவு தான் காரணமா? அவள் கண்ட கனவைப்பற்றி … அவள் கணவனிடம் கூற முயற்சித்த போதல்லா …. அவர் காது குடுக்கவேயில்லை. அவளுக்கும் அது தடையாக படவே… சொல்லவேயில்லை. […]
Read More
அரசு அலுவலகங்களில் தவிக்கும் மக்களுக்காக சமூக சேவகர் ஆனேன்
  • By Magazine
  • |
சமூக சேவகர் திரு. ஷாகுல் ஹமீது பேட்டி அரசு அலுவலகங்களில் தங்களுக்கு தேவையான காரியங்களை சாதிக்க வழி தெரியாமல் தவிக்கும் மக்களின் மேல் பரிதாபம் கொண்டு சமூக சேவகர் ஆனேன் என்கிறார் கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்த சமூக சேவகர் திரு. ஷாகுல் ஹமீது. புதிய தென்றலுக்காக அவரை குளச்சலில் உள்ள அவரது வீட்டில் சந்தித்தோம். அப்போது அவர் கூறியதாவது தாங்கள் சமூக சேவகர் ஆனது எப்படி? நான் சுமார் 30 ஆண்டுகளாக சமூக சேவை […]
Read More
உழவனை வாழ்த்து !
  • By Magazine
  • |
– கே. பி. பத்மநாபன் கோழி கூவும் நேரத்தில்      குடிசை வீட்டில் எழுந்திடுவான்; மேழி தன்னை எடுத்திடுவான்;      மேட்டு வரப்பில் நடந்திடுவான்; ஆழி சூழ்ந்த உலகினிலே      அனைத்து மாந்தர் பசியாற நாழி உணவைப் பெறுதற்காய்      நன்றாய் நிலத்தை உழுதிடுவான்; தாழி தன்னில் கொண்டு வந்த      தண்ணீர் மோரும் கலந்திட்ட கூழினையே குடித்திடுவான்;       கொதிக்கும் வெயிலில் உழைத்திடுவான்; கீழிருக்கும் ஆழ்மண்ணைக்      கீழ் மேலாக ஆக்கிடுவான்; பூழிச்சேற்றில் காலூன்றிப்      […]
Read More
கவிதை
  • By Magazine
  • |
யானையொன்றை விழுங்குவதுபோல் நான் கண்ட கனவு விடிகாலையின் பாயில் சுருட்ட முடியாமலிருந்தது. யானையாகக் கண்டது எனது காலத்தையா கற்பனையையா என்னையா நானொரு கோயில் யானையிடம் நாலைந்து நாள் பேசிப்பார்த்தேன் யானை என்னிடம் பேசிய மொழி தமிழைப்போல் எனக்குப் புரிந்தது சாலையோரத்தில் வாகனங்களின் சக்கரங்கள் காறித்துப்பும் மழை வெளியில் எனது முகம் போய் அலைகிறது. யானை போல்  ஊர்திகள் சாலையை நிரப்புகின்றன எதுவும் சொல்வதற்கில்லை அனாதைக் கனவாய் திசைகளில் அடித்துச் செல்லப்படுகிறது பெருஞ்செவிகள். ஒருமுறை வானவில்லில் எனது நிறத்தையும் […]
Read More
ஆன முதலில் அதிகம் செலவானால்
  • By Magazine
  • |
வரவு எட்டணா செலவு பத்தணா என்றால் அதிகம் இரண்டணா கடனில் போய் தானே முடியும். நம் முன்னோர்களில் பெரும்பான்மையோர் கடன் வாங்குவதை மிகவும் அவமானமாகவே நினைத்து வாழ்ந்தனர். வருவாய்க்கு ஏற்பவே செலவுகளைச் சுருக்கி வருவாய்க்குள் வாழவே முற்பட்டனர். குடும்பத்தில் உள்ள இல்லதரசிகளும் கணவன் உழைத்துப் பொருள் தேடிக்கொண்டு வந்து கொடுப்பதைச் சிக்கனமாகச் செலவிட்டு அதில் சிறு தொகையை (சிறுவாடு) கணவருக்குக் கூட தெரியாமல் சேமித்து வைப்பர். அதனைக் குடும்பத்தின் அவசர அவசியத் தேவைக்குத் தக்க சமயத்தில் கொடுத்துக் […]
Read More
ஒரு பஞ்ச் ஒரு கிக் அவ்வளவுதான்
  • By Magazine
  • |
சிரிப்புகள் ஒன்றை ஒன்று முட்டிப் திரியும் வகுப்பறைக்குள்ளே ஆசிரியை சொல்லிக்கொண்டிருந்தார் “குழந்தைகளே உங்களை யாராவது விரும்பத் தகாத வழியில் தொட அனுமதிக்கக் கூடாது” உடலின் குறிப்பிட்டப் பாகங்களை சுட்டிக் காட்டினார். கிச்சுகிச்சு மூட்டிய உணர்வோடான சிரிப்பில் குழந்தை முகங்கள் “அவ்வாறானசூழலில் என்ன செய்வீர்?” ஆசிரியையின் கேள்வியில் வகுப்பறை அமைதியாயிற்று. கிணற்றுள் கல்லெறியும் தொனியில் ஒரு குழந்தை “அவங்களுக்கு டிஸ்யும் டிஸ்யும்தான் ஒரு பஞ்ச் ஒரு கிக் அவ்வளவுதான் அப்படியே காலி பண்ணிருவேன்” குழந்தையின் அடவுகளில் கராத்தேவின்  மஞ்சள் […]
Read More
கதவுக்குள்ளிருந்து கிரீச்சிடுவது ஒரு வட்டமே
  • By Magazine
  • |
இருபக்கங்களிலும் ஒவ்வாமையை வளர்த்தியிருக்கிறது கதவு உளுத்துபோன மரத்தால் ஆகியிருக்கின்றது கதவின் மனம் சிலுவை என அடிக்கப்பட்டிருக்கும் நிலையின் கண்ணி விடுவதாயில்லை கதவை அதன் கனத்தையும் தாண்டி புலம்பலை ஒரு சாபமென துப்பிக்கொண்டிருக்கின்றது கதவு இருபக்கங்களிலும் அங்கிருக்கும் இருபக்கங்களும் தனக்கான இருபக்கங்களை உற்பத்தி திறன்கொண்டு வடிவமைத்துக் கொண்டிருக்கின்றன அவ்வாறே கதவுகளும் பக்கங்களும் பக்கங்களும் கதவுகளும் என சுழலும் ஒரு வட்டம் தன்னுள் ஒளி பொருந்தியதாய் தன்னை நினைத்துக் கொள்கிறது பார்த்துக்கொண்டிருக்கும் சிறுவன் தன்கை ஓட்டுச்சில்லால் அடிக்கின்றான் சில்லு சில்லாகும் […]
Read More
சரித்திரப்பதிவின் முதல்பெண் மருத்துவர் மெரிட் ப்ட்டா
  • By Magazine
  • |
நண்பர்களே, இப்போது நான் கூறுவது ஒரு சரித்திரம் பதிவிட்ட உண்மை நிகழ்வுகள். பொதுவாக பெண்களைப் பற்றிய பதிவுகள் குறைவாக  கிடைக்கின்றன. நான் ஆதிகால பெண் மருத்துவர்களைத் தேடியபோது எதிர்பாராமல் கிடைத்தவர் தான் மெரிட் ட்டா (Merit-Ptah) என்ற பெண் மருத்துவர். இதில் Ptah என்பதற்கு “Ptah கடவுளின் பிரியமானவர்” என்று பொருளாம். இவர் மெரிட் ட்டா (Merit-Ptah) எகிப்தின் இரண்டாம் வம்சத்தின் போது, பாரோவின் நீதிமன்றத்தின் ஒரு பெண் தலைமை மருத்துவராக கருதப்பட்டார். அவரது காலம் கிமு […]
Read More
கோபம் தானாக அடங்கிப் போகிறது!
  • By Magazine
  • |
ஜப்பானில் தியானத்தை ஜா.ஜென் என்பார்கள். ஜா.ஜென் என்றால் உட்கார்ந்து விடுவது என்று பொருள். ஒன்றும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருப்பது. ஒரு ஜென் துறவி ஒரு நாளுக்கு ஆறிலிருந்து எட்டு மணிநேரம் சும்மா உட்கார்ந்திருக்கிறார். ஒன்றும் செய்யாமல் சும்மா அப்படியே உட்கார்ந்திருக்கிறார். அப்படிச் சில நாட்கள், வாரங்கள், மாதங்கள் உட்கார்ந்திருக்கும் போது மனம் தானாக ஓய்ந்து போகிறது. புத்தி பேதலித்தவர்களை ஜென் மடங்களுக்கு அழைத்து வருவார்கள். அங்கே அவர்களுக்கு எந்த சிகிச்சையும் தருவதில்லை. உட்கார்ந்திருக்க உதவுவார்கள். உணவு தருவார்கள். […]
Read More