ஓலமிடும்  உலகின்  மனசாட்சி
  • By Magazine
  • |
ஜனநாயக இந்தியாவில் மக்களாட்சி மக்களுக்காக நடத்தப்படுகின்றது என்பது தான் ஏழைமக்களின் நம்பிக்கை. அம்மக்களில் வலிமை குன்றி, நலிவுற்று, வாழ வழி தெரியாமல் தவிக்கும் மக்களுக்கு கால்வயிற்றுக் கூழுக்காவது வாழ வழிவகுக்கும் ஒருவகைப் பணிமுறை தான் நூறு நாள் வேலைத்திட்டம். அந்த வேலையில் ஒன்றிய அரசு கை வைத்துவிட்டது. அதற்கான ஒதுக்கீட்டுத் தொகையை குறைத்து அதற்கேற்ப ஆட்குறைப்பும் செய்துவிட்டது. இது சாதாரண ஏழை மக்களைப் பற்றிய கவலையே அவர்களுக்கு இல்லை என்னும் உணர்வைக் காட்டுவதாக தெருவெங்கும் பேசும் பேச்சாகக் […]
Read More
குழந்தைகளைப் பேணுவோம்
  • By Magazine
  • |
கை. செல்லத்தங்கம் குழந்தைகள் நமது செல்வங்கள். எதிர்காலத்தின் தூண்கள். குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்பர். குழந்தைப்பருவம் மிக முக்கியமானது. அந்தப் பருவத்தில் அவர்கள் பார்த்து, கேட்டு அறிவது பசிமரத்தாணி போல மனதில் பதிந்து விடும். இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் பராமரிப்பது என்பது பெற்றோர் இருவரும் பணிக்குச் செல்லும் குடும்பங்களில் சவாலாகவே உள்ளது. கூட்டுக்குடும்ப வாழ்க்கை மறந்து போன நிலையில் குழந்தைகள் உறவுகள், தாத்தா பாட்டியிடம் இருந்து பெறும் அன்பும் அனுபவ அறிவும் கிடைப்பதில்லை. இரவு பகலாக […]
Read More
  • By Magazine
  • |
மழையின் மண் வாசம் ! அறியாத தமிழ் தேசம் ! காரணம் மண் இல்லாமையே ! எங்கும் தார் சாலை ….. அனைத்தும் அறிந்தவன் பித்தனானான்! ஆயுர்வேதம் அறிந்தவன் சித்தனானான்! உன்னை அறிந்தவன் உலகளந்தான் ! உயரிய விருதையும் பெற துணிந்தான் ! காரணம் தமிழே கதி என்றான் ….                                                      கா.திலீபன்
Read More
ஆறா காயங்கள்
  • By Magazine
  • |
கா.திலீபன், தமிழாசிரியர்  மேடு பள்ளம் நிறைந்த மலை கிராமம் அது.  முகிலன்  காலையில் குதூகலமாய் பள்ளிக்கு கிளம்பினான். மேட்டில் ஏறி பள்ளிக்குச் செல்லும் வேளையில் ஏடே! நில்லுடா என்ற கூச்சலுடன்  ஓடோடி வந்தாள் முகிலனின் செல்லப் பாட்டி. என்ன கிழவி இவ்வளவு நேரம் வீட்டுல தான இருந்தேன். இப்டி துரத்திக்கிட்டு வர்ற என்று  கோபத்தில் முகிலன் திட்டினான்.  தள்ளாடும் வயதில் இளப்புடன் தன் முந்தானையில் முடிந்து வைத்திருந்த இரண்டு ரூபாயைக் கையிற்குள் மறைத்து தந்தாள். சரி வர்றேன்.. […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA -வின் 288-வது கருத்தாய்வுக் கூட்டமானது மருத்துவர்.கமலகண்ணன் அவர்கள் தலைமையில் மூலச்சல் மரு.த.இராஜேந்திரன், திரு.கே.செல்வநாதன் ஆகியோர் முன்னிலையில் 07.06.2025 அன்று மதியம் சுமார் 2.30 மணியளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் மருத்துவர்.கமலகண்ணன் அவர்கள் சோரியாசிஸ் குணமாவதற்கான தைலம் மற்றும் மேல்பூச்சு முறைகளைத் தெளிவாகக் கூறினார். மேலும் வாயுப்பிரச்சனைகளுக்கு சூரணம் செய்முறையையும் கூறினார். அடுத்ததாக திரு.கே.செல்வநாதன் ஆசான் அஸ்வகெந்தி சூரணம் செய்முறையை கூறினார். அடுத்ததாக மரு.ஷேக் முகமது ஏங்கலிழைப்பு, இரைப்பு இவற்றுக்கு தங்க ரத்தினாதி […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
– வழக்கறிஞர் பி. விஜயகுமார் 1986-ல் நடந்த சம்பவத்துக்கு  நாற்பது வருடம் கழித்து தீர்ப்பா? இது ராஜஸ்தான் மாநிலத்தில் 1986-ம் ஆண்டு நடந்த சம்பவம். ஒரு ஆறு வயது ஒரு சிறுமியை ஒரு காமுகன் சிதைத்து விட்டான். பாலைவனத்தில் கஷ்டப்பட்டு ஒட்டகத்தில் வந்து சிறுமியின் தாய் போலீசில் புகார் செய்தார். வழக்கு நீதிமன்றத்திற்கு விசாரணக்கு வந்தது. அப்போது இந்த போக்சோ சட்டம், அதாவது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் 2012 கிடையாது. பாலியல் குற்றங்களுக்கு அப்போது […]
Read More
  • By Magazine
  • |
 ஜெகன் தங்கையா. B பறந்து திரியும் வண்ணத்துப்பூச்சிகளின் இறகுகளில் பளபளக்கும் வண்ணத்துகள்கள் பிடிக்கும் விரல்களில் ஒட்டிக் கொள்ளும் வசீகரம் குறைந்து போகும்… உதிர்ந்த மயிர் என்பதால் மனிதகுலமே ஒதுக்கித் தள்ளினாலும் மயிலிறகின் வசீகரம் வாழ்நாள் முடிந்த பின்பும் வாழ்ந்து கொண்டிருக்கும்..!                   
Read More
  • By Magazine
  • |
குமரி எழிலன் சிவகாமி சிவகா…. மி சிவகா ……..மி உனக்கென்ன வருணன் வந்து வாசல் தெளிப்பான் …. வாயு வந்து முற்றம் பெருக்குவான் ……. மழைத்துளி வந்து புள்ளி வைக்கும் …. மேகப்பொடிகள் கோலம் போடும் ….. அக்கினி அடுக்களை சமையல் செய்யும் பார்வதி (பக்கத்து தெரு பார்வதி அல்ல) வந்து பாத்திரம் பூசுவாள் சரஸ்வதி (பக்கத்துவீட்டு சரஸ்வதி அல்ல) சமைக்க கறிகாய் நறுக்குவாள் …. திருமகள் திருகையில் (mix- யில்) காணம் திரிப்பாள் தேவதை வந்து […]
Read More
வெள்ளையரை எதிர்த்து போராடிய   வீரமங்கை ராணி அவந்திபாய்
  • By Magazine
  • |
பேராசிரியர் முளங்குழி பா.லாசர் மத்திய பிரதேச ராம்கார்க் நாட்டின் ராஜா விக்ரமாதித்ய சிங்கின் மனைவி ராணி அவந்திபாய். பேரழகு நிறைந்த அவர் துணிச்சல் மிக்கவர். போர்க்கலைகள் அனைத்தையும் பயின்றவர். லோதி இனத்தைச் சேர்ந்த அவந்திபாயின் இளம் பருவத்திலேயே அவர் கணவர் விக்ரமாதித்ய சிங் வாரிசு இல்லாமல் இறந்தார். கணவர் இறந்ததும் அவந்திபாய் அரசியாய் முடிசூட்டிக் கொண்டு ஆட்சி புரிந்தார்.  நாடு பிடிக்கும் ஆசையிலிருந்த ஆங்கில அரசு, ஆண் வாரிசுகள் மட்டுமே நாட்டை ஆள வேண்டும் என்று சட்டம் […]
Read More
படிப்பதற்கு நேரம் ஓதுக்குங்கள் !
  • By Magazine
  • |
 – சஜிபிரபு மாறச்சன் மனிதனுக்கும் அவனுடைய தலைவிதிக்கும் இடையே உண்மையாக உரையாடி அவனை நடுநிலைப்படுத்துவதே புத்தகம் தான். மனிதனாக பிறந்துள்ள ஒவ்வொருவரும் விலக்க முடியாத முடிவாக புத்தகங்களுடன் பிணைக்கப்பட்டுள்ளன. மனித இனத்தில் சிறப்புடைய மனிதனாக உயர, நாளைய தினம் நன்மைகளைக் கண்டுபிடிக்க உதவுவது புத்தகம் தான். மனிதனுக்கு நிறைய கனவுகள் உள்ளன. போற்றி வைத்து பாதுகாத்து வரும் அந்த கனவுகள், உண்மையில் நிஜமாக உருவானதால் தான் ஜெயித்தோம். கனவுகளை நிஜமாக்க முயற்சி செய்யும் போது ஏற்படும் தடைகள் […]
Read More