நீரிழிவு நோய் வர்ம மருத்துவ கருத்தரங்கம்
  • By Magazine
  • |
நாகர்கோவில் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் நீரிழிவு நோய் வர்ம மருத்துவ கருத்தரங்கம்   நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மூலச்சல். இராஜேந்திரா மருத்துவமனை ஆடிட்டோரியத்தில் வைத்து நீரிழிவு நோயும் வர்ம மருத்துவமும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.  இந்த கருத்தரங்கத்தில் வர்ம மருத்துவ மறுமலர்ச்சியின் தந்தை டாக்டர்.த.  இராஜேந்திரன் அவர்கள் வர்ம மருத்துவத்தில் நீரழிவு நோயின் வரலாறு , வர்ம மருத்துவத்தின் மூலம் நீரிழிவை எப்படி கட்டுப்படுத்துவது என்பது போன்ற தலைப்புகளில் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் நீரிழிவும் […]
Read More
இதயத்தை பாதுகாக்கும் மாதுளை!
  • By Magazine
  • |
தினமும் வெறும் வயிற்றில் 1 மாதுளையை சாப்பிட்டு வந்தால் உடலில் பாக்டீரியா தொற்று ஏற்படும் அபாயம் குறைகிறது. மாதுளையை தொடர்ந்து சாப்பிடுவதால் மன அழுத்தம் மற்றும் உடலில் உள்ள வீக்கம் குறைவதாக சுகாதார நிபுணர்களின் கூறுகிறார்கள். மாதுளை இதய நோய், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோயிலிருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது.      மாதுளையில் ஆண்டி-ஆக்சிடெண்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகமாக உள்ளன. மாதுளை இதய நோய்களுக்கு நிவாரணம் அளிக்கின்றது. மாதுளை சாப்பிடுவது உடலில் கொலஸ்ட்ரால் அளவு […]
Read More
மக்களின் பயத்தை போக்குவதற்காக பஜனை பாடினேன்
  • By Magazine
  • |
ஆசான் கோலப்பன் அவர்கள் பேட்டி கன்னியாகுமரி மாவட்டம் திக்கணங்கோடு அருகே மத்திகோடு பகுதியில் வாழ்ந்து வருபவர் கோலப்பன் ஆசான் அவர்கள். புதிய தென்றலுக்காக அவரை சந்திப்பதற்காக அவரது வீட்டுக்கு சென்ற போது அவர் தனது விவசாயத் தோட்டத்திற்கு சென்றுள்ளதாக தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தோட்டத்தில் சுறுசுறுப்பாக இளைஞரை போல வேலை செய்து கொண்டிருந்த சிலம்ப ஆசான் கோலப்பன் அவர்களை சந்தித்தோம். அப்போது அவர் தனது வாழ்வில் நடந்த சம்பவங்களையும் தனது வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்கள் குறித்தும் நம்முடன் […]
Read More
‘வர்மம்’எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
கைக்கிட்டிக்காலம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான தும்மிக்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் கைக்கிட்டிக்காலம் பற்றி அறிவோம். “பார் சிப்பி கீழ்வாறின் பக்க சார்வில் பரிவான கைக்கிட்டிக்காலம்”.                                 – வர்ம குருநூல் “……………….. தும்பிக்காலம் நின்றதன் நாலிறையின் கீழ் கைக்கிட்டிக்காலம்”.                                 – வர்ம கடிகார நரம்புச்சூத்திரம் மேலும், கொள்ளும் கைகெட்டிக்காலம் கொண்டால்                 குருவருளால் குறியதினை கூறக்கேளு            விள்ளும் வாய்பிளந்து நீர் பாயுமப்பா                 வெகுவான […]
Read More
குமரிமாவட்ட பாரம்பரிய  மருத்துவம்’- ஒரு பார்வை
  • By Magazine
  • |
இந்தியாவின் தென் எல்லையாக விளங்கும் கன்னியாகுமரி பல கலைகள் சிறப்புற்று காணப்படும் மாவட்டமாகும். இங்கு மன்னர்கள் ஆட்சி செலுத்தி உள்ளனர். நீர்வளம், நிலவளம் மட்டுமின்றி தொன்று தொட்டே கல்வி வளமும், கலை வளமும் மிக்க பகுதியாகவே விளங்கிய இம்மாவட்டம், மருத்துவகலையில் ஓர் ஒப்பற்ற இடத்தைப் பெற்றுள்ளது. தொன்றுதொட்டே குருமுறை கல்வியாக மருத்துவம், களரி போன்ற கலைகள் கற்பிக்கப்பட்டன. கி.பி. 4-ஆம் நூற்றாண்டு முதல் 7- ஆம் நூற்றாண்டு வரை தமிழகத்தில் ஆட்சி புரிந்த பல்லவ மன்னர்களால் இங்கு […]
Read More
வர்மம்’எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான வாறிளகி வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் தும்மிக்காலம் பற்றி அறிவோம். “ஈடழியும் பித்துக்காய் அதன் பின்பக்கம் தும்மி என்ற வர்மம்”.                                                                                – வர்ம குருநூல் “வளமான வன்னெல்லு ஒட்டையின் கீழ் தும்மிக்காலம்”. – வர்ம அகஸ்தியசாரி “பண்பான தும்மியதன் காலம் கேள் தொடரான பித்துக்காய் பிறமேதானே”.                                                                                                – கால வர்மநூல் மேலும், போமப்பா காறயஸ்தி பூணெல்லின் கீழ்                                 […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA-வின் 282-வது கருத்தாய்வுக் கூட்டமானது, திரு.அசரி ஆசான் தலைமையில் மரு.கமலகண்ணன்,  மூலச்சல் மருத்துவர் த. இராஜேந்திரன், திரு.இராஜன் ஆசான், திரு.கே.செல்வநாதன் ஆசான் ஆகியோர் முன்னிலையில் 07.12.2024 அன்று மதியம் 2.30 மணி அளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில், மரு.கமலக்கண்ணன் வாயுப்பிரச்சனை குணமாவதற்கான மருந்து செய்முறையை கூறினார். அடுத்ததாக, திரு.இராஜன் ஆசான் மலச்சிக்கலுக்கு நிலவாகை சூரணம் செய்முறையை கூறினார். அடுத்ததாக, திரு.அசரி ஆசான் இரத்த மேக கசாயம் செய்முறையையும், மேகம், குடல்சுரம் இவற்றுக்கு சிப்பிநெய் […]
Read More
மூலரோக நிவாரணி “துத்தி”
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் துத்திமூலநோய்களுக்கு  மிகவும் பிரபலமானது. இது 5 அடி உயரம் வரை வளரக் கூடியது. சாலையோரங்களில் அதிகமாக காணப்படும். இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் அதிகம் வளர்கிறது.  மேலும், இலங்கை, மலேசியா, அமெரிக்காவிலும் இது காணப்படுகிறது.                 இலை வெல்வெட் போன்று மென்மையாக, சாம்பல் நிறம் கலந்த பச்சை நிறத்தில் இதயவடிவில் காணப்படும். பூ மஞ்சள் நிறத்தில் இருக்கும். காய் கம்மல் போன்று காணப்படும்.                 துத்தியின் அனைத்து பகுதிகளும் மருத்துவகுணங்களை கொண்டுள்ளது. தாவரவியல் பெயர் […]
Read More
நரம்புச்சுருள் நோய் (Vericose Vein)
  • By Magazine
  • |
– கஸ்தூரிபா ஜாண்ஸன் வெரிகோஸ் வெயின் என்னும் நரம்புச்சுருள் நோய் இரத்தக் குழாய்களில் ஏற்படும் புடைப்பு சுருள் பிரச்சினையாகும். இந்த நோய் ஏற்பட உடற்பருமன், பரம்பரை, வயது போன்றவை காரணங்களாகும். இந்த நோய் ஏற்படுபவர்களுக்கு காலில் இரத்தக் குழாய்கள் சுருள் சுருளாக புடைத்துப் போய் தென்படும். உட்கார்தல், நிற்றல் என்று மாறி மாறி செயல்படாமல் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்து இருப்பவர்கள் 30 நிமிடங்களுக்கு ஒருமுறை நடப்பதால் தசைகளுக்கு பயிற்சி கிடைக்கும். அதிக நேரம் நிற்க நேரிட்டால் […]
Read More
இரணகள்ளியின் மகத்துவம்….
  • By Magazine
  • |
– கஸ்தூரிபா ஜாண்ஸன் நம் உடல் நலத்துக்காக, நோய்களை தீர்ப்பதற்காக நாம் பயன்படுத்தும் பல்வகைத் தாவரங்களில் ஒன்று இரணகள்ளி. இது ஒரு கள்ளி இனத்தைச் சேர்ந்த செடி. இத்தாவரம் நீளவட்ட வடிவில் நீர் பற்று அதிகமாகவும் காணப்படும். இலைகளின் விளிம்புகள் வளைவுகளாகவும் காணப்படுகிறது. இது ஓர் விதையற்ற தாவரம். இதன் இலைகளின் ஓரங்கள் அல்லது விளிம்புகளிலிருந்து புதிய கன்றுகள் வளர்வதைக் காணலாம். இதற்கு மலைக்கள்ளி என்ற பெயரும் உண்டு. இரணகள்ளி மூலிகையின் இலைகளை காலையில் வெறும் வயிற்றில் […]
Read More