உலகின் புதிரான முதல் கொலையும் மிகப்பழமையான மனித இரத்தமும்
  • By Magazine
  • |
– முனைவர் மோகனா, பழனி அற்புதமான அறிவியல்..! அறிவியல் உலகில்,   அதிரடித் திருப்பு  முனையாக, உலகத்தைத் திருப்பிபோட்ட, பிரமிக்கச் செய்த ஒரு தகவல்  இப்போது   கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது . அது  என்ன   என்று  தெரிந்தால்  நீங்களெல்லாம்  ஆச்சரியத்தில்  மயக்கம்  போட்டு விடுவீர்கள் . உடலிலிருந்து  இரத்தம்  வெளியேறிய, கண நேரத்தில், காற்று அதன் மேல் பட்டவுடன், இரத்தம் இறுகிக்    கட்டியாகிவிடும். இதுதான் இரத்தத்தின் இயல்புத் தன்மையும்  கூட. அது நிகழவில்லை என்றால், சின்ன காயம் பட்டால் கூட அது […]
Read More
விவசாயம் ஒரு தொழில் அல்ல   அது வாழ்க்கையே
  • By Magazine
  • |
– பசுமை சாம்பியன் விருதுபெற்ற அக்ரி.ஒய்.ராஜகுமார் உணவு இல்லாமல் மனிதனால் உயிர் வாழ முடியாது அத்தகைய உணவு கிடைப்பதற்கு விவசாயிகள் உயிர்நாடியாக செயல்படுகிறார்கள் விவசாயம் இல்லாவிட்டால் மக்கள் பட்டினியால் உயிர் இழக்க வேண்டிய நிலை வரும் ஆனால் அந்த விவசாயிகளை கவுரவிக்கவோ பாராட்டவோ யாரும் முன்வருவதில்லை மட்டுமல்ல இன்றைய தலைமுறையினர் யாரும் விவசாயத்தை விரும்பவில்லை என்பதுடன் விவசாயம் செய்வது இன்று கேலிக்குரிய தொழிலாக மாறியிருக்கும் சூழலில் விவசாயிகளை ஊக்குவித்து கவுரவித்து  விவசாயம் பற்றிய விழிப்புணர்வை விதைத்து ஏற்படுத்தி […]
Read More
போதைப் பழக்கத்தால்   மதியிழந்த மனிதர்கள்
  • By Magazine
  • |
C. முருகன் மக்கள் சமுதாயத்திற்கும் ஆரோக்கியத்திற்கும் எதிராக உலகளவில் எழுந்திருக்கும் பிரச்சனை போதைப்பழக்கம் ஆகும். வயது வித்தியாசம் இன்றி சமுதாயத்தில் போதைப்பழக்கம் வேரூன்றி உள்ளது என்பது கவலைக்குரியது ஆகும். போதைப்பழக்கத்தை தடுக்கும் விதமாக பல சட்டங்கள் முன் வைக்கப்பட்டாலும் அதை முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. இப்பழக்கம் ஆண்கள் மட்டுமின்றி பெண்களிடத்தும் அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜீன் 26-ம் தேதி சர்வதேச போதை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நாட்டில் நோய்களும், தற்கொலைகளும் போதை […]
Read More
  • By Magazine
  • |
 ஓஷோ குழப்பத்திலிருந்தும், துன்பத்திலிருந்தும் விடுபடுவதற்கான வழி ஒன்றுமில்லாத பூமியில் தாவோவுடன் வாழ்வதாகும். எவன் மற்றவர்களை அடக்கி ஆள்கிறானோ அவன் துன்பத்தில் வாழ்கிறான். நீங்கள் மற்றவர்கள் மீது அதிகாரம் செலுத்தும் போது குழப்பத்தில் வாழ்வீர்கள், அதே போல் மற்றவர்கள் உங்கள் மீது அதிகாரம் செலுத்த அனுமதிக்கும் போதும் நீங்கள் துன்பத்தில் வாழ்கின்றீர்கள். ஏனெனில் ஒரு அடிமை பேரானந்தத்தில் இருக்க முடியாது. சீன மதமான தாவோ வேண்டுவது என்னவெனில் யாரையும் வசப்படுத்த வேண்டாம். யாராலும் வசப்பட வேண்டாம்; நீங்கள் ஒருவரையும் […]
Read More
மாலிப்டினம் சுரங்கத்திட்டம்
  • By Magazine
  • |
பூ.வ.தமிழ்க்கனல் பேராபத்து ஒன்று தமிழ்நாட்டு மக்களை நோக்கி வந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், பழநியில் மாலிப்டினம் சுரங்கம் அமைக்க ஒன்றியஅரசு திட்டமிட்டிருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல், அப்பகுதிமக்களைத் தூக்கமிழக்கச் செய்துள்ளது.                 திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 400 சதுரகிலோமீட்டர் (சுமார் 1 லட்சம் ஏக்கர்) பரப்பளவில் மாலிப்டினம் எனும் அரியவகைத் தனிமம் இருப்பதாகவும் அதனை வெட்டி எடுக்க ஒன்றியஅரசு முடிவு செய்திருப்பதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த மாலிப்டினம் தனிமம் எடுப்பதற்காக, பழநி வட்டத்திற்குட்பட்ட மேற்குத்தொடர்ச்சி மலை […]
Read More
மின்னணுவியலின் கதை
  • By Magazine
  • |
 – காளீஸ்வர் நமது நவீன உலகின் அடித்தளமாக விளங்கும் மின்னணுவியல், ஒரே இரவில் தோன்றிய மாயாஜாலம் அல்ல. இது படிப்படியாக, பல கண்டுபிடிப்பாளர்களின் உழைப்பாலும், விடாமுயற்சியாலும் உருவான பிரம்மாண்ட அறிவியல் பயணம். எலெக்ட்ரான்கள் பற்றிய புரிதல் ஏற்பட்ட பின்னர்தான் ‘மின்னணுவியல்’ என்ற தனித் துறையே உருவானது.  எலெக்ட்ரானின் பிறப்பு மின்னணுவியலின் தொடக்க புள்ளியானது, ஜே.ஜே. தாம்சன் (J.J.Thomson) என்ற ஆங்கில இயற்பியலாளரின் ஒரு அற்புதமான கண்டுபிடிப்பில்தான் இருக்கிறது. 1897 ஆம் ஆண்டில், கேத்தோடு கதிர்க் குழாய்கள் (Cathode […]
Read More
  • By Magazine
  • |
– வழக்கறிஞர்   பி. விஜயகுமார் எப்படியெல்லாம் சட்டம் வேலை செய்யுது பாருங்க! கண்ணன் மற்றும் ராதா இருவரும் கணவன் மனைவியர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. ஆனால் கண்ணன் பெயரில் ஏகப்பட்ட சொத்துக்கள் இருந்தன. வயது ஆகிக் கொண்டே இருந்தது. தமது காலத்திற்குப் பிறகு தமது சொத்துக்களை யாருக்காவது சென்றடைய வேண்டும் எண்ணத்தில் கண்ணன் ஒரு உயில் எழுதினார். தனது இறப்பிற்குப் பிறகு மனைவி ராதா உயிரோடு இருந்தால் அவரது சொத்துக்கள் அனைத்தும் ராதாவிற்கு செல்ல வேண்டுமென்றும், ஒருவேளை […]
Read More
  • By Magazine
  • |
பேராசிரியர் முளங்குழி பா.லாசர் வங்கம் வணங்குகின்ற வீரமங்கை பிரித்திலதா. வெள்ளையரை எதிர்த்து ஆயுதமேந்தி நேருக்கு நேர் போர் செய்து வரலாற்றில் இடம் பிடித்த வீரமங்கை பிரித்திலதா. இன்றைய வங்காள தேச சிட்டகாங் நகரில், நகராட்சி தலைமை எழுத்தரின் மகளாய் செல்வக்குடும்பத்தில் பிறந்தார். கல்கத்தா பெதுனே கல்லூரியில் படித்து பட்டம் பெற்றார். விடுதலை வேட்கையால் மாபெரும் புரட்சி வீரன் சூர்யா சென்னின் யுகாந்தர் அமைப்பில் சேர்ந்தார். அவரின் நம்பிக்கையைப் பெற்று கல்பனாதத்தாவும், பிரித்திலதாவும் வீர சாகசங்கள் செய்தனர். சூர்யாசென் […]
Read More
“முடவாட்டின்கால்” கிழங்கு
  • By Magazine
  • |
நமது மூலிகை மருத்துவர் நீர்ச்சத்துள்ள பாறைகளின் இடுக்குகளிலும், பெரிய மரங்களின் பட்டைகளிலும் ஒட்டி வளரும். பெரணி வகை செடி தான் முடவாட்டின் கால் செடி. இதன் வேர்தான் கிழங்கின் மற்றுருவம் பெற்றுள்ளது. இக்கிழங்கு மற்றவகை கிழங்குகளை போன்று மண்ணிற்குள் புதைந்திருப்பதில்லை. இதன் பூர்வீகம் தென்னிந்தியா. தமிழ்நாட்டில் கொல்லிமலை, ஏற்காடு, சேர்வராயன் மலை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு மலைப் பகுதிகளிலும் காணப்படுகிறது. இக்கிழங்கு ரோமம் நிறைந்து செம்மறி ஆட்டின் கால் போன்று காணப்படும். இலை பெரியதாக இறக்கை […]
Read More
வர்மம்’ எனும் மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் பூவல் வர்மம் சென்ற மாத இதழில் முதுகில் உள்ள வர்மங்களில் ஒன்றான மலப்பிற வர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் பூவல் வர்மம் பற்றி அறிவோம். பூவல் வர்மம் மூலத்தின் கடைசி எல்முனையின் அடியில் அமைந்துள்ளது. இவ்வர்மம் மூலவர்மம், கண்கலங்கி வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் வழங்கப்படுகிறது. “மேருவெல்லின் கீழ் பாகம் குமிள்போல் இருக்கும் எலும்பின் முறை பூவல்வர்மம்”.                                                                                                                 – வர்ம குருநூல் “கண்ணியமாம் பூவல்வர்மம் கொண்டிட்டாலோ கொளுத்துடனே களைப்புண்டாகி தரிப்புமாகும் […]
Read More