இரா. அரிகரசுதன்
கற்சிலையாக்கப்பட்டிருந்த
காணாமல்போன
ஒரு நாட்டு மீன்கொத்தியைக்
கண்டேன்
கண்களைப் பொத்தி
அதன் மேலொரு மீன்கொத்தியென
பொருந்திப் பார்த்தேன்
மீன்கொத்தி
மீன்கொத்திதான்
ஏ கொழுத்த மீன்களே
உங்கள் வயிற்றுக்குள் கிடக்கும்
எம் நிலத்தின் மூதாததையரின்
சதைத்துணுக்குகளைக் கண்டடையும் வகையில்
நான் வேட்டையாடுவேன்
மீன்கொத்தியின் அலகில்
மினுங்குவது வேட்டையே அன்றி
மீன் அல்ல…
Leave a Reply