புரட்சிக்கவிஞரின் பன்முகப் பார்வை
  • By Magazine
  • |
– பழனி அரங்கசாமி தேசியக்கவிஞர் பாரதியின் காலம் தொடங்கி, கவிதை என்பது பண்டிதர் பாஷையினின்றும் விடுதலை பெற்று மக்களின் சொத்தாக மாறிவிட்டது. யமகமும், திரிபும் அந்தாதியும், ஆசிரியப்பாவும், வஞ்சியும், கலிப்பாவும் மருட்பாவோடு சேர்ந்து மருட்டிய காலம் மறைந்து விட்டது. நாட்டு விடுதலைக்கு மட்டுமின்றி பாடல்களின் பகிரங்க விடுதலைக்கும் பச்சைக்கொடி காட்டியவன் பாரதி. சொல்லும் பொருளும் சுவைபடப்பாடி பண்டிதரையும் பாமரையும் தன்குடைக்கீழ் கொண்டு வந்தவன் பாரதி. அந்த பாட்டுக்கொரு புலவன் பாரதியோடு பத்து ஆண்டுகள் (1908-1918) பாண்டிச்சேரியில் நெருங்கிப் […]
Read More
  • By Magazine
  • |
வழக்கறிஞர்  பி. விஜயகுமார் திருநங்கையை மணமுடிக்க மறுத்தவர் மீது வழக்கு கிமாச்சல் பிரதேஷ் உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு இது. ஃபேஸ்புக் மூலமாக ஒரு திருநங்கையும் கிமாச்சலைச் சேர்ந்த ஒரு இளைஞனும் பழகிக் கொண்டனர். திருநங்கை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பாள். பழக்கம் பிறகு தீவிர காதலாக மாறியது. இருவரும் திருமணம் செய்வதற்குத் தயாராகினார்கள். இச்சம்பவம் இளைஞனின் பெற்றோருக்குத் தெரியவந்து இத் திருமணத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இருப்பினும் மகன் அவளைத் தான் கட்டுவேன் என ஒற்றைக்காலில் நின்றான். […]
Read More
கீழாநெல்லியின் மருத்துவகுணங்கள்
  • By Magazine
  • |
கஸ்தூரிபா   ஜாண்ஸன் தாவர இயலில் பைலானதஸ் அமரஸ் (Phyllanthus amarus) என்று அழைக்கப்படும் இம்மூலிகை யூபோர் பயேசியே (Euphorbiaceae) என்ற குடும்பத்தை சேர்ந்தது. தமிழ்நாட்டில் பரவலாக மக்களால் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு குறுஞ்செடி. சுமார் 15 சென்டிமீட்டர் உயரம் வரை வளரும். இம்மூலிகையின் அனைத்து பாகங்களும் மருத்துவ பயன் தருகிறது. பயன்கள் மஞ்சள் காமால நோய் தீர்க்க வேருடன் கூடிய முழுச் செடியையும் நீரில் கழுவி அரைத்து 5 முதல் 7 நாட்கள் மோரில் கலந்து காலை […]
Read More
அண்டத்தோற்றத்தின் அறிவியல் கொள்கைகள்
  • By Magazine
  • |
வர்ம அறிவியல் மாமேதை மூலச்சல் Dr.T. இராஜேந்திரன் சென்ற மாத இதழின் தொடர்ச்சி… பூமி தோற்றம் பற்றிய அலக்சாண்டர் ஒப்பாரின் மற்றும் ஜே.பி.எஸ். ஹால்டன் ஆய்வுகள்  பூமியானது 500 முதல் 600 கோடி ஆண்டுகளுக்கு முன் சூரியனிலிருந்து உடைந்த பகுதியாகவோ அல்லது விண்வெளி தூசுகளாகவோ இருந்த பொருட்கள் இணைந்தே இப்படி உருவாகியிருக்கும் என்று கருதினர். இன்றைய நமது சூரியமண்டலம் முழுவதும் கூட இப்படித்தான் உருவாகியிருக்கும் என ஒப்பாரின் ஹால்டன் போன்ற அறிவியல் அறிஞர்கள் தெளிவுபடுத்தினர். ஆரம்பத்தில் பூமியானது […]
Read More
குடல்புண்
  • By Magazine
  • |
டாக்டர் என்.கே. சுரேஷ் MD(S) வயிற்றில் ஏற்படும் புண்களையும், சிறுகுடலின் முன்பகுதியில் ஏற்படும் புண்களையும் பொதுவாக நாம் வழக்கத்தில் குடல்புண் (அல்சர் – Peptic ulcer) என்று அழைக்கிறோம். நாட்பட்ட குடல்புண்நோய் உள்ளவர்கள் உடலும், மனமும் குன்றி போவதால் இதனை குன்மம் என சித்தமருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வயிற்று பகுதியில் ஏற்படும் புண்களை வயிற்றுப்புண், Gastric ulcer, Stomach ulcer என்று அழைப்பதுண்டு. வயிற்றுபகுதியை தொடர்ந்து வரும் சிறுகுடலில் ஏற்படும் புண்களை- சிறுகுடல் புண் (duodenal ulcer)) என்று […]
Read More
வர்மம் எனும்  மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் தெக்ஷணைக்காலம் சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான புயவர்மம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் தெக்ஷணைக்காலம் பற்றி அறிவோம். இவ்வர்மம் உள்ளங்கை வெள்ளை வர்மத்தின் நேர் பின்புறம் புறங்கையில், நடுவிரலுக்கும், மோதிர விரலுக்குமிடையில் அமைந்துள்ளது. இவ்வர்மத்திற்கு தெக்ஷண வர்மம், தெக்ஷணைக்காலம், மொழிப்பிறங்கண் வர்மம் என்னும் வேறுபெயர்களும் உண்டு. “அறுதியென்ற உள்ளங்கை வர்மத்தின் பின் தெக்ஷணையின் காலமென்பார்”.                                                                                                                 – வர்ம குருநூல் என குறிப்பிடுகிறது. சாந்தமாம் தெக்ஷணையின் காலம் […]
Read More
குவாண்டம் பிணைப்பு பிரபஞ்சப் பயணம்
  • By Magazine
  • |
– காளீஸ்வர் பிரபஞ்சத்தின் இரு முனைகள் தமிழ்நாட்டின் கொடைக்கானல் மலைப்பகுதியில், இரவு நேரத்து மேகமூட்டத்திற்கு இடையே நட்சத்திரங்களை உற்று நோக்கிக் கொண்டிருந்தான் அன்பு. அவன் சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT Madras) குவாண்டம் கம்ப்யூட்டிங் துறையில் முனைவர் பட்டப் படிப்பு படிக்கும் மாணவன். அவனுடைய ஆய்வகம் முழுக்க சூப்பர் கண்டக்டிங் கியூ பிட்களும் (Superconducting Qubits), லேசர் கதிர்களும் நிறைந்திருந்தன. அன்று இரவு, அவனது கணினியில் ஒரு விசித்திரமான தரவுப் பின்னல் (Data anomaly) தோன்றியது. […]
Read More
  • By Magazine
  • |
வர்ம அறிவியல் மாமேதை மூலச்சல் Dr.T. இராஜேந்திரன் சென்ற மாத இதழின் தொடர்ச்சி… 5.1.2 வான் கங்கைகள் (Galaxies) நாம் கண்ணால் காணுகின்ற கோடிக்கணக்கான விண்மீன்களால் செறிவுற்று காணப்படும் மிகப்பெரிய தொகுப்புகளே “வான் கங்கைகள்” எனப்படும். அவைகள் ஒவ்வொன்றும் கோடிக்கணக்கான நட்சத்திரங்களை தன்னகத்தே கொண்டுள்ளன. ஒரு சிறிய வான்கங்கையானது (Galaxy) கோடிக்கும் மேற்பட்ட விண்மீன்களைப் பெற்றிருக்கும். ஒரு பெரிய வான்கங்கையானது முப்பது லட்சம் கோடி (3000x10000x1000000 lakhs) (3000 billion) விண்மீன்களைப் பெற்றிருக்கலாம் எனவும் விண்ணறிவாளர்கள் கருதுகின்றனர். […]
Read More
சித்த மருத்துவ கருத்தாய்வுக் கூட்டம்
  • By Magazine
  • |
SAVKIA – 298-வது கருத்தாய்வு கூட்டமானது திரு.அருள்தாஸ் ஆசான் தலைமையில், திரு. கே.செல்வநாதன் ஆசான், மரு.கமலக்கண்ணன், மூலச்சல் டாக்டர்.த.இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் 04.04.2026 அன்று மதியம் சுமார் 2 மணியளவில் இராஜேந்திரா மருத்துவமனை வளாகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்தில் திரு. அருள்தாஸ் ஆசான் ஆறறிவு விளக்கம் குறித்துப் பேசினார். மேலும் மூலநோய்களுக்கு கந்தக செந்தூரம், நரம்புச்சுருக்கம், கட்டிகளுக்கு வெடியுப்பு சுண்ணம் செய்முறையைக் கூறினார். திரு. சுப்பிரமணிய ஆசான் தமரக வாயு குணமாக மருந்து, சொறி, சிரங்கு, படை, […]
Read More
கிரியேட்டினின் பற்றி அறிவோம்
  • By Magazine
  • |
– கஸ்தூரிபா ஜாண்ஸன் கிரியேட்டினின் (Creatinine) என்பது அன்றாட செயல்பாட்டின் போது தசைநார்கள் சிதைவடைவதால் உருவாகும் ஒரு கழிவுப்பொருளாகும். சுருக்கமாகச் சொன்னால் கிரியேட்டினின் சிறுநீரகத்தின் செயல்பாட்டை அளவிட உதவும் ஒரு முக்கியமான இரத்தக் கழிவுப்பொருள் எனலாம். கிரியேட்டின் சில செய்திகள் இரத்தத்தில் கிரியேட்டின் அளவு அதிகரிப்பது, சிறுநீரகங்கள் சரியாகச் செயல்படவில்லை என்பதைக் குறிக்கும் முக்கிய அறிகுறியாகும். ஆரோக்கியமான சிறுநீரகங்கள் இரத்தத்தில் உள்ள இந்த கழிவைக் வடிகட்டி சிறுநீர் வழியாக வெளியேற்றுகின்றன. தசை ஆற்றலை பயன்படுத்தும் போது கிரியேட்டினின் […]
Read More