எதிர்வீடு
  • By Magazine
  • |
– கை. செல்லத்தங்கம் காலையிலே வெளியே போய் என்னத்த பார்த்துக்கிட்டிருக்கே கூப்பிட்டது கூட காதில் கேட்காம என்றபடி என் அருகில் வந்தார் என் கணவர் ஆமாங்க. ஏதோ சிந்தனைதான் என்றேன். எதிர்த்த வீட்டு பொண்ணை பற்றி நினைச்சி பார்த்தியாக்கும் என்றார் என்னவர். ஆமாங்க என்றேன். உன் முகத்திலே தெரியுது என்றார். பெரிய சைக்கியாட்ரிஸ்ட் தான் வாங்க டிபன் சாப்பிடுவோம் என்றேன். இருவரும் காலை உணவு அருந்திய பின் மீண்டும் பால்கனியில் வந்து செயரில் இருந்தேன் நினைவுகள் பின்னோக்கி […]
Read More
வாய்ப்புண்
  • By Magazine
  • |
டாக்டர் என்.கே. சுரேஷ் MD(S) வாயில் ஆரம்பித்து ஆசனவாயில் முடிவடையும் ஜீரணமண்டலத்தில், வாய் முதல் பகுதியாக உள்ளது. வாய்ப்புண் பல காரணங்களால் ஏற்பட்டு, உணவு உண்பதற்கும், உணவு விழுங்குவதற்கு சிரமத்தை கொடுக்கிறது. உதடுகளின் உட்புறம், கன்னத்தின் உட்புறம், நாக்கு, பல்ஈறு ஆகிய பகுதியில் ஏற்படும் புண்களை, வாய்ப்புண் என்று அழைக்கிறோம். பொதுவாக வாய்ப்புண் 4 நாட்களிலிருந்து 14 நாட்களுக்குள் ஆறிவிடும். வாய்ப்புண்ணை அக்கரம் என அழைப்பதுண்டு.  மேலும்  Apthousulcer, Stomatitis என்பதும் வாய்ப்புண்ணை குறிக்கும். வாய்ப்புண் உண்டாவதற்கான […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
– வழக்கறிஞர்   பி. விஜயகுமார் மனித உறுப்பு மாற்று முறை சட்டம் 1994 (The Transplantation of human organs & Tissues Act 1994) மேற்படி சட்டப்படி உடல் உறுப்பு தானம் செய்வோர் தாமாக முன் வந்து தானம் செய்ய வேண்டும். பிறர் வற்புறுத்தலால் தானம் செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் வியாபார ரீதியில் உறுப்புத்தானம் செய்வதற்கும் தடை உள்ளது. இதயம் கல்லீரல், சிறுநீரகம், கணையம், கண் போன்ற உடல் உறுப்புகள் தானம் செய்யப்படுகிறது. தானம் […]
Read More
வர்மம் எனும்  மர்மக்கலை!
  • By Magazine
  • |
– முனைவர் முல்லைத்தமிழ் புயவர்மம் சென்ற மாத இதழில் கையில் உள்ள வர்மங்களில் ஒன்றான கூட்டுக்காலம் பற்றி குறிப்பிட்டிருந்தோம். இந்த மாத இதழில் புயவர்மம் பற்றி அறிவோம். புயவர்மம் புயத்தின் நடுச்சுழியில் அமைந்துள்ளது. புஜ வர்மம், புஜப்பொருத்து வர்மம் என்னும் வேறுபெயர்களாலும் இவ்வர்மம் வழங்கப்படுகிறது. “புஜத்தின் நடுச்சுழியில் புயவர்மம்”.                                                                                 – வர்ம குருநூல் “தாக்குகின்ற காறை எல்லுமுனை அற்றத்தில் சார்வாக புயவர்மம்”.                                                                                – வர்ம கலைக்களஞ்சியம் என குறிப்பிடுகிறது. “தீருமடா காறையதின் முனையில் தானே திறமான […]
Read More
  • By Magazine
  • |
இரா. அரிகரசுதன். முகமது அலியின் உரை:                “ஏன் எல்லாம் வெள்ளையாக இருக்கிறது?” “நான் எப்போதும் என் அம்மாவிடம் கேட்பேன், ‘அம்மா, ஏன் இங்கே எல்லாமே வெள்ளையாக இருக்கிறது?’ என்று. நான் கேட்டேன்: ‘ஏன் இயேசு (Jesus) மட்டும் பொன்னிற தலைமுடியுடனும், நீல நிற கண்களுடனும் வெள்ளையாக இருக்கிறார்? ஏன் அந்த ‘இறுதி இரவு உணவு’ (The Lord’s Supper) ஓவியத்தில் இருப்பவர்கள் அனைவரும் வெள்ளை மனிதர்களாக இருக்கிறார்கள்? தேவதூதர்கள் வெள்ளையாக இருக்கிறார்கள், போப் ஆண்டவர், மேரி […]
Read More
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் 2021-ல் சீனா தனது கல்வி முறையில் ஒரு மிகப்பெரிய புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்தது. இது Double Reduction” Policy (Shuang Jian – இருமடங்கு குறைப்பு கொள்கை) என்று அழைக்கப்படுகிறது. இதன் முக்கிய நோக்கம், ஆரம்ப மற்றும் இடைநிலைக் கல்வி (K-9) வணிகமயமாகக் கூடாது என்பதாகும். இதன் பின்னணியில் உள்ள முக்கிய விவரங்கள் இதோ: சீன அதிபர் ஷி ஜின்பிங் (Xi Jinping),), இந்தக் கல்விச் சீர்திருத்தத்தை (Double Reduction Policy) […]
Read More
சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்
  • By Magazine
  • |
– வழக்கறிஞர்   பி. விஜயகுமார் Passive Euthanasia  (இயல்பான மரணத்தை அனுமதித்தல்) சண்டிகார் பல்கலைக்கழகத்தில் சுமார் பத்து ஆண்டுகள் முன்பாக படித்துக் கொண்டிருந்த ராணா என்ற மாணவர் நான்காவது மாடியிலிருந்து விழுந்து கடந்த 10 வருடங்களாக உயிருடன் இருந்தாலும் நினைவு மற்றும் உணர்வு இல்லாத நிலையில் இருந்து வந்தார். மனிதன் உயிருடன் இருப்பார். (மூச்சு, இதயத்துடிப்பு போன்றவை நடக்கும்) ஆனால் அறிவு இருக்காது. சுற்றியுள்ள உலகை உணர முடியாது. பேசவும் பதிலளிக்கவும் முடியாது. இயந்திர உதவியுடன் தான் […]
Read More
  • By Magazine
  • |
– பராந்தகன் தொடர்ந்து விண்ணிலே வேட்டுச் சத்தம்.. வானம் திகைத்துத்தான் போனது. பண்டிகைப் பொழுதும் இல்லை , திருமணக் கொண்டாட்டம் இத்தனை நாளா? பெருவாழ்வு வாழ்ந்தவர்களின் கல்யாண சாவா! வானின் அகண்ட பார்வையில் அகப்பட்டது, கனவைச் சுமந்த பிஞ்சுகளும் அவர்களை அரவணைத்த கட்டிடங்களும், அன்றாட அலுவல்களில் திளைத்த மாந்தர்களும் அகால மரணம் அடைந்த போர்காலம் இது என்று
Read More
ரெண்டு குடம் தண்ணி
  • By Magazine
  • |
விஜயபாரதி “இப்பதான் ரெண்டு குடம் புடிச்சிகிட்டு போன அதுக்குள்ள இன்னும் ரெண்டு கொடம் எடுத்துட்டு வந்து தண்ணி புடிக்கிற”என்றாள் தனம். “ம்ம்ம்ம்ம் ,,,,என இழுத்தபடி நீயும் தான்” என்று பதில் உரைத்தவள், மீண்டும் சொன்னாள் “அடுப்ப சிம்ல வச்சுட்டு ரெண்டு கொடத்த தூக்கிட்டு ஓடியாந்தேன் தண்ணி நின்னுடும்ல்ல அதான்” என்றாள் கல்யாணி.”ரெண்டு கொடம் பத்தாதா?” என்றாள் போதும். “அது எனக்கு புடிச்சிட்டு போனேன், இது என் மாமியாவுக்கு புடிச்சு வக்கிறேன், அது எங்க ஆட்டிட்டு வரப்போவுது, அதான் […]
Read More
  • By Magazine
  • |
கே.பி.பத்மநாபன் கம்பனது காவியம் தான் காசினியில் மாந்தக்                 கற்பனையின் கோட்டைக்குத் தூணாகிடும் காண் அம்பலத்தில் கற்புத்தீ ஆர்த்தெழுந்த காதை                 அளித்திட்ட இளங்கோவின் சிலம்பும் நற்றூண்தான் நம்பலமாம் நன்னெறியின் வாழ்வியலை ஈந்த                 நன்மறையாம் வள்ளுவரின் வள்ளுவமும் தூண்தான் உம்பரும்தாம் போற்றுமுயர் துறவுரைத்த நூலாம்                 உயர்வுமணி மேகலையோ ஞானமிகு தூண்தான்! அம்புவியில் மழலையென அவதரித்த நாளாய்                 அறிவூட்டும் நூல்களெலாம் அறந்தாங்கும் தூண்கள் செம்புலப்பெய் நீரெனவே சேர்த்தே நாம் அணைத்தால்                 சிந்தனையின் கோட்டையெலாம் […]
Read More