• By Magazine
  • |
– சா. ஸ்ரீதர், காரமடை (இளங்கலைத் தமிழ், பாரதிதாசன் பல்கலைக்கழகம், திருச்சி) இயற்கையோடு இயைந்த வாழ்வை வாழ்ந்தவர்கள் நம் தமிழ் முன்னோர். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மனித வாழ்வின் ஒவ்வொரு படிநிலையையும் செம்மைப்படுத்தி, நெறிமுற வகுத்த பெருமை தமிழர்க்கு உண்டு. இலக்கியம், அறிவியல், மருத்துவம், ஆன்மிகம், வேளாண்மை எனப் பன்னெடுங்காலமாகத் தமிழர் வளர்த்தெடுத்த வாழ்வியல் நெறிகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம். இலக்கியம் காட்டும் வாழ்வியல் தமிழர் தம் வாழ்க்கை முறையை அகம், புறம் என இரு பெரும் […]
Read More
குளம்
  • By Magazine
  • |
– பைசல். தக்கலை குளம் என்ற கவிதையை எழுதினேன் கலங்கியது மெல்லமெல்ல தெளியட்டும் குளத்தினுள் ஒரு மீனாக வாழ்கிறேன் குளத்தை  ஒரு தவளை  சுமப்பதைப் பார்த்தேன் இரவில் குளம்  தன்னைத்தானே நீராடுகிறது நட்டநடுவெளியில் ஒரு முதியவன் ஒரு சிறு ஆயுதத்தால் பெருங்குளத்தைத் தோண்டிக் கொண்டிருக்கிறான் ஒருவன் குளத்தை மயிலிறகால் ஆற்றுப்படுத்துகிறான் ஒரு குளத்தை நதிபோல் இழுக்கிறார்கள் இருவர் கைவிடும் போது குளமாகிவிடுகிறது குளத்தின் மேல் பாலம் போட முயல இயந்திரங்கள் மிதக்கிறது பாலங்களும் மிதக்கிறது நீர் நிறைந்த […]
Read More
  • By Magazine
  • |
– முனைவர் மோகனா, பழனி “புதிய கண்டுபிடிப்பு  புதிய அறிவியல் ஒளி” வயிறு வீங்குகிறதா லேசாக  சுற்றளவில்….! நமக்கு வயதாகும்போது, காலம் நம் தலைமுடியில் நரையை மட்டும் வரைவதிது இல்லை.  மிக அமைதியாக நம் இடுப்பைச்சுற்றி, புதிய வளையம் உருவாகிறது. .வயதானால் இது சகஜம்தானே என்கிறீர்களா? உண்மைதான்.  பலருக்கு வயது கூடக் கூட,  உடல் எடை பெரிதாக மாறாமல், வயிற்றுப் பகுதி மட்டும் மெதுவாக பலூன் போல பருத்து விடுகிறது .அனுபவம். இது வெறும் மாயத் தோற்றமல்ல. […]
Read More
மீன்கொத்தியின் அலகில் மினுங்குகிறேன்
  • By Magazine
  • |
இரா. அரிகரசுதன் கற்சிலையாக்கப்பட்டிருந்த காணாமல்போன ஒரு நாட்டு மீன்கொத்தியைக் கண்டேன் கண்களைப் பொத்தி அதன் மேலொரு மீன்கொத்தியென பொருந்திப் பார்த்தேன் மீன்கொத்தி மீன்கொத்திதான் ஏ கொழுத்த மீன்களே உங்கள் வயிற்றுக்குள் கிடக்கும் எம் நிலத்தின் மூதாததையரின் சதைத்துணுக்குகளைக் கண்டடையும் வகையில் நான் வேட்டையாடுவேன் மீன்கொத்தியின் அலகில் மினுங்குவது வேட்டையே அன்றி மீன் அல்ல…
Read More
மெரினாவின் சுந்தரி அக்கா கடை
  • By Magazine
  • |
– இரா. அரிகரசுதன் 2018 ஆண்டில் சென்னையில் பழங்குடியினர் கலைவிழாவான ” பழங்குடிநாதம்” நிகழ்விற்கு அன்பு நண்பர் பேராசிரியர் ஊட்டி பழங்குடி ஆய்வு மையத்தின் தலைவராக இருந்த முனைவர் சுப்ரமணியன் (அன்பு நண்பரும் வழிகாட்டியுமான அவரை கொரொனா காலக்கட்டத்தில் இழந்தது எனது பெருந்துயரங்களுள் ஒன்று) அவர்களின் அழைப்பின் பேரில் எனது காட்சித் தொடர்பியல் துறை மாணவர்களோடு சென்றிருந்தேன். அன்றைய விழாவின் நிறைவில் அப்போது மெரினா கடற்கரையின் பிரபலமாக இருந்த தள்ளுவண்டி உணவுக்கடையான சுந்தரி அக்கா உணவுக்கடையில் மீன்சோறும் […]
Read More
திரையின் திணைக்கோட்பாடும்  பிரதி அழகியலும்
  • By Magazine
  • |
பாரதிராஜா – பாக்கியராஜ் காலத்தின் நதிக்கரையில் இரு பெரும் அழகியல் துருவங்கள் – இரா. அரிகரசுதன் கலையின் ஆகச்சிறந்த நோக்கம் என்பது எதார்த்தத்தை நகலெடுப்பது அல்ல; மாறாக, எதார்த்தத்தின் ஆன்மாவை ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பின் வழியே உலகளாவிய மானுடப் பிரக்ஞையாக மாற்றுவதுதான். இத்தகையதொரு அழகியல் புரட்சியைத் தமிழ் நிலத்தில் நிகழ்த்திய இரு பெரும் கலை ஆளுமைகள்-இயக்கத்தின் இமயம் பாரதிராஜா மற்றும் திரை மொழியின் தனித்துவக் குறியீடு கே. பாக்கியராஜ். இவர்கள் வெறும் வணிகத் திரைப்பட இயக்குனர்கள் அல்லர்; […]
Read More
மதுவின் சாதனை!
  • By Magazine
  • |
முல்லைத்தமிழின் கவிதைக்குமுறல்கள்… குலத்துக்கு ஒரே விளக்காய் வெளிச்சமிட்ட மருத்துவ மாணவியின் சேவைக்கு கிடைத்த பரிசு குடிகார வெறியனின் கொலைவெறித் தாக்குதல்… விளக்கும் அணைந்துவிட்டது விடிவுமிழந்துவிட்டது இது கேரளமண்ணின் மதுவின் சாதனை!
Read More
  • By Magazine
  • |
– ஓஷோ எதையும் தெளிவாக பார்த்து பழகு. குழப்பத்தை கவனித்துப் பார். நன்றாக பார். வேடிக்கை பார்பவனாக இரு. உன்னை அதனோடு அடையாளப்படுத்திக் கொள்ளாதே. உனக்கும் உன் மனதுக்குமிடையே ஒரு தூரத்தை படைத்து வை. இந்தத் தூரத்தை படைக்க நீ ஒரு சந்நியாசியாக வேண்டும். உன் மாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறை இந்த இடைவெளி உருவாக்கும். முடிச்சுகளை அவிழ்த்து விடு. எப்படி முடிச்சுகளை அவிழ்ப்பது? அவிழ்ப்பது என்று ஆரம்பித்து விட்டால் சிக்கல் அதிகமாகித்தான் போகும். அவிழ்ப்பதற்கான ஒரே […]
Read More
  • By Magazine
  • |
– கை. செல்லத்தங்கம் அங்கே. அது பொது மருத்துவமனை இயன்முறை சிகிச்சை (பிசியோதெரபி) செய்யும் இடம். இதற்காக நான் சென்று வருவது வழக்கம். நாற்பது தாண்டினாலே எல்லோருக்கும் கால்வலி வந்து விடுகிறது போன்ற பலர் அங்கே வருவதுண்டு. இன்றைய வாழ்வியல் முறையும் உணவும் பழக்கமும் கூட அதற்கு காரணம் தான். மாத்திரை மருந்துகளை உட்கொள்ள விரும்பாதவர்கள் மசாஜ் செய்து தற்காலிக தீர்வு பெற்று வருகின்றனர். நானும் இருமுறை செல்வதுண்டு. வாரம்தோறும் தொடர்ந்து செல்வதால் அறுபதுக்கு மேற்பட்டோர் பலர் […]
Read More
குவாண்டம் உலகம்
  • By Magazine
  • |
ஸ்ரீ காளீஸ்வரர் செ நம்மால் பார்க்க முடிகிற, தொட முடிகிற பொருட்களைப் பற்றிப் படிப்பது சாதாரண இயற்பியல். ஆனால், அணுக்களுக்கும் அதைவிடச் சிறிய துகள்களுக்கும் உள்ளே போனால், அங்கு நடப்பதெல்லாம் நம்பவே முடியாத மாயாஜாலங்கள். இதைத்தான் நாம் ‘குவாண்டம் இயற்பியல்’ (Quantum Physics) என்கிறோம். “அணுக்களுக்குள் அப்படி என்னதான் நடக்கிறது?” என்று எப்போதாவது யோசித்ததுண்டா? இந்த குவாண்டம் உலகம் இல்லாமல் போனால், இன்று நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள், லேப்டாப்கள் எதுவுமே இருந்திருக்காது. வாருங்கள், இந்த விசித்திரமான உலகத்திற்கு […]
Read More