• By Magazine
  • |
இரா.சிவானந்தம் நலம் நலம் என்பது ஒரு ஊட்டச்சத்து சொல் நலமே ஒருவர் என்றே கடிதம் தொடர்கிறது சந்திக்கும் போது முதலில் கேட்பது நலமா? எத்தனை சொத்து- வசதி இருந்தாலும் நலமே முக்கியமானது நலம் தருவதற்கென்றே நாட்டில் எத்தனை மருத்துவமனைகள்? உறவு- நட்பென ஒருவர்க்கு நலமில்லை என்றால் என்ன பாடுபடுகிறோம் உழைப்பதற்கும் நலம் வேண்டும் தொண்டு செய்வதற்கும் நலமே வேண்டும் அரசு நலமாய் இருந்தால் நாடு நலமாய் இருக்கும் மக்கள் நலமாய் இருந்தால் நாடு செழிப்பாய் இருக்கும் நலம் […]
Read More
  • By Magazine
  • |
– பைசல். தக்கலை ஒரு கவிஞன் விவசாயிகளைப் போல மொழியை உழுது பயிரிடுகிறான் களையெடுக்கிறான் அறுவடையின் போது எந்த லாபமும் இல்லை செய்வதறியாது திகைக்கும் நிமிடங்களில் அவனால் ஒரு முழு கவிதைத் தொகுப்பினுள் தற்கொலை செய்யமுடியாது அந்தத் தொகுப்பில் மரம் ,கயிறு ,விஷம் குறித்த எந்த கவிதையும் அவன் எழுதவில்லை
Read More
கவிதை
  • By Magazine
  • |
குளச்சல் ரவிச்சந்திரன் குடும்பம் என்னும் மலர் வளையத்தில் வாசம் வீசும் அன்பு தேவதைகளே பெண்கள்,…! தோற்றுப் போனது தோல்விகள் உண்மைதான், காலங்காலம் தொட்டு கிழக்கும் மேற்கும் இதுவரை சமநீதி கண்டதுண்டோ?… இடப்பாகம் அளித்து-ஈசன் அர்த்தநாரி ஆகியும், பூசையோடு பெண்மை மறுக்கப்படுவது மாபெரும் உண்மை,…! இந்த ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் தியதி அன்று,,,, “உலகெங்கும் பெண்ணிற்கு எதிரான வன்முறைகள் இல்லை” யென செய்தி வந்தால்…… வெற்றிதான்,
Read More
கவிதை
  • By Magazine
  • |
பொறியாளர் சண்முக வடிவேலு, திருச்சி புலிகளின் உறுமலைப் புவியெங்கும் பரப்பியவன்! தமிழ்ப்பேரரசின்        தகைசால் பாணன்! பெரியார் பாசறையில்                முகிழ்த்த கவிமலர்! தேசியத்தலைவனின் தனித்தப்புகழை இசைத்தமிழ் வடிவமாக்கி பகல் இரவாகப் பாடிய இறவாப்பாடகன்!      தேனிசை செல்லப்பா! உலகத்தமிழரின் அடையாளமாய் நீ செல்லப்பா!  வீரவணக்கம் தோழர்!
Read More
கவிதை
  • By Magazine
  • |
குளச்சல் ரவிச்சந்திரன் குடும்பம் என்னும் மலர் வளையத்தில் வாசம் வீசும் அன்பு தேவதைகளே பெண்கள், தோற்றுப் போனது தோல்விகள் உண்மைதான், காலங்காலம் தொட்டு கிழக்கும் மேற்கும் இதுவரை சமநீதி கண்டதுண்டோ?… இடப்பாகம் அளித்து-ஈசன் அர்த்தநாரி ஆகியும், பூசையோடு பெண்மை மறுக்கப்படுவது மாபெரும் உண்மை, இந்த ஆண்டு மார்ச் மாதம் எட்டாம் தியதி அன்று,,,, “உலகெங்கும் பெண்ணிற்கு எதிரான வன்முறைகள் இன்று இல்லை” யென நாளை செய்தி வந்தால்…… வெற்றிதான்.
Read More
கவிதை
  • By Magazine
  • |
பெட்ரோல்,டீசல் விலை!      எவ்வளவு என்றாலும்…..      உயர்த்திக் கொள்ளுங்கள்!      ஏனெனில் எங்களுக்கு      உலகம் தெரியாது. சமையல் எரிவாயு விலை!      எவ்வளவு என்றாலும்….      உயர்த்திக் கொள்ளுங்கள்!      ஏனெனில் எங்களுக்கு      சிந்திக்கத் தெரியாது. அந்தவரி இந்தவரியென்று,      எத்தனை வரிகளுண்டோ…..      வசூலித்துக் கொள்ளுங்கள்!      ஏனெனில் நாங்கள்      குட்டக் குட்ட குனிபவர்கள். வங்கிக் கடன்கள்!      எத்தனை லட்சங்கோடி என்றாலும்….      தள்ளுபடி செய்யுங்கள்!      ஏனெனில் […]
Read More
கவிதை
  • By Magazine
  • |
தாங்கிடத் தண்ணீர் இருந்தால் தான் தாமரையும் ஓங்கிடக் கதிர் வாங்கி மலரும்.. தடுக்கிடத் தடைகள் இருந்தால் தான் முடிந்திடும் வெற்றியும் முயற்சிக்கு கிடைத்த பரிசாகத் தெரியும்.. தாங்கவும் சிலர்.. தடுக்கவும் பலர்.. வாழ்வின் வெற்றிக்கு வேறென்ன வேண்டும் ?? கமல. அருள் குமார்
Read More
கவிதை
  • By Magazine
  • |
யானையொன்றை விழுங்குவதுபோல் நான் கண்ட கனவு விடிகாலையின் பாயில் சுருட்ட முடியாமலிருந்தது. யானையாகக் கண்டது எனது காலத்தையா கற்பனையையா என்னையா நானொரு கோயில் யானையிடம் நாலைந்து நாள் பேசிப்பார்த்தேன் யானை என்னிடம் பேசிய மொழி தமிழைப்போல் எனக்குப் புரிந்தது சாலையோரத்தில் வாகனங்களின் சக்கரங்கள் காறித்துப்பும் மழை வெளியில் எனது முகம் போய் அலைகிறது. யானை போல்  ஊர்திகள் சாலையை நிரப்புகின்றன எதுவும் சொல்வதற்கில்லை அனாதைக் கனவாய் திசைகளில் அடித்துச் செல்லப்படுகிறது பெருஞ்செவிகள். ஒருமுறை வானவில்லில் எனது நிறத்தையும் […]
Read More
கவிதை
  • By Magazine
  • |
கரிசனையோடு உச்சுகொட்டும் சிலரும் கண்டும் காணாமல் பலருமாயிருக்கும் ஒரு மத்தியான வெய்யிலின் உக்கிரத்தில் மாரெலும்பு தெந்நிய ரோட்டோரச் சிறுமி நெருப்பைக் கடப்பதுபோல ரோட்டைக் கடக்கிறாள் பட்டுப்போன மர இலைகளுக்கு நன்றியோடு நானெழுதிக்கொண்டிருக்கும் இந்த கவிதை என்னை அருவருப்பாய் பார்க்கிறது. – டாக்டர் கி. பாபு
Read More
  • By Magazine
  • |
– சிவ. விஜயபாரதி குவளையில் மதுவென மரணத்தை நிரப்பியிருக்கிறது காலம். பருகுகிறான் நீரோ சோடாவோ தேவைக்கு சேர்க்கப்படாத அதன் கசப்பு தொண்டையை இறுக்குகிறது விழிகளை மூடி பின் திறந்து உச்சுக்கொட்டியபடி துரோகத்தைச் சுவைக்கும் அவன் கண்களால் ஒருமுறை யாவரையும் அளக்கிறான் உலர்ந்த சொற்களோடு நான் இந்தக் கவிதையுடன் மன்றாடிக் கொண்டிருக்கிறேன்.
Read More