கவிமுகில்.பெ.அறிவுடைநம்பி
அறிவின் பாய்ச்சலில்
அறியாமை நீங்கும்
அறிவியல் நீட்சியில்
அகிலம் மயங்கும்
புவியின் இயக்கம்
புதுமை படைக்கும்
புதிய விடியலில்
பூமியும் சிரிக்கும்
கேள்வியின் பிறப்பிடம்
மனிதனின் மனங்கள்
தெளிவின் இருப்பிடம்
பகுத்தறிவின் இனங்கள்
கவியின் நெஞ்சம்
கவிதையில் தஞ்சம்
காவியங்கள் யாவும்
கல்வியின் மேன்மை!
Leave a Reply