டாக்டர் என்.கே. சுரேஷ் MD(S)
ஆசனவாயின் உட்புறம் சிறிய கீறல் ஏற்பட்டு தாங்க முடியாத வலியையும், அதிலிருந்து சில சொட்டுகள் இரத்தம் கசிந்து துன்பத்தை கொடுக்கும் ஒரு வியாதி தான் ஆசனவாய் வெடிப்பு என்பது.
இந்நோயில் பொதுவாக 20 வயது முதல் 40 வயதுள்ள நபர்கள், குறிப்பாக அதிக அளவில் ஆண்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
ஆங்கிலத்தில் இந்நோயை Fissure in Ano என்றழைப்பார்கள்.
ஆசனவாய் பகுதியின் உட்புறம் சற்று மேலாக உள் ஆசன சுருக்கு தசை ((Internal anal sphincter muscle)) உள்ளது. இது தானியங்கி நரம்பு மண்டலத்தில் இயங்க கூடியது. நம்மால் கட்டுப்படுத்த முடியாது.
ஆசனவாய் வெளிப்புறமாக கீழ்பகுதியில் இருப்பது. வெளி ஆசன சுருக்குதசை (External anal sphincter muscle) இதனை நம்மால் கட்டுப்படுத்த இயலும்.
ஆசனவாய் மேல்பகுதியிலுள்ள உள் ஆசன சுருக்குதசை பகுதியில் (Internal anal sphincter muscle) வறண்ட மலம் அதிக அளவில் வேகமாக உரசி கொண்டு வரும் போது கீறல் உண்டாகி விடுகிறது. இதனையே ஆசனவாய் வெடிப்பு (Fissure in Ano) என்கிறோம்.
ஆசனவாய் வெடிப்பு வருவதற்கான காரணங்கள்
ஆசனவாய் வெடிப்பு நோயின் குறிகுணங்கள்
ஆசனவாய் வெடிப்பு நோய்க்கும், மூலநோய்க்கும் உள்ள வேறுபாடுகள்
வரிசை எண் ஆசனவாய் வெடிப்பு நோய் மூலநோய்
1. ஆசனவாய் பகுதியில் கீறல்கள் இரத்த நாளங்கள் வீங்கி
உண்டாகி வருவது. உண்டாவது.
2. தாங்கமுடியாத வலி மலம் கழிக்கும் அதிக அளவில் வலி
போதும் கழித்த பின்னும் இருக்கும். இருப்பதில்லை
3. மலத்தில் சிவப்புநிற கோடு மற்றும் அதிக அளவில் இரத்தம்
சில சொட்டு இரத்தம் வடியலாம். வடியும் அல்லது இரத்தம் பீச்சி அடிக்கும்
4. ஊறல் அதிக அளவில் இருப்பதில்லை. ஊறல் அதிகம் காணப்படும்.
5. நாட்பட்ட நோயால் மட்டும் வெளிமூலத்தில் – வெளிப்
சிலருக்கு சிறிய தசை நீட்சி தெரியலாம் புறமாக திறட்சி தெரியும்.
ஆசனவாய் வெடிப்புநோய் வராமல் தடுக்கும் முறைகள்
ஆசனவாய் வெடிப்பு நோய்க்கான மருத்துவக்குறிப்புகள்
இதில் ஒரு கரண்டி அளவு மருந்தை இரவு ஆகாரத்திற்கு பின் குடித்து பின் வெந்நீரில் அருந்தவும். (அல்லது)
புதிதாக பறித்த நாயுருவி இலை 20 எண்ணம், புதிதாக பறித்த குப்பைமேனி இலை 20 எண்ணம். இவைகளை பசு வெண்ணெயில் வதக்கி ஆகாரத்திற்கு முன் தினமும் காலையில் 20 நாட்கள் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
வாய்விரிந்த பாத்திரத்தில் 3 முதல் 4 அங்குலம் வரை வெதுவெதுப்பான நீர் எடுத்துக் கொண்டு, அதில் இரு கரண்டி திரிபலா சூரணத்தை கலந்து 15 நிமிடங்கள் காலை பாத்திரத்தின் வெளியே இட்டு, ஆசனவாய் பகுதி கீழ் இடுப்புபகுதி நனையுமாறு உட்கார வேண்டும். இவ்வாறு தினம் இருவேளை செய்ய வேண்டும். இதனால் வலிகுறையும். ஆசனவாய் உள்சுருக்கு தசைபகுதி இறுக்கம் குறையும். இதனால் இரத்தஓட்டடத்தை அதிகரிக்க செய்து புண் விரைவாக குணமாகும்.
வஜ்ராசனம், பாலாசனம், பவனமுத்தாசனம், பாதகோணாசனம், மலாசனம் போன்ற பல ஆசனங்கள் ஆசனவாய் உள் சுருக்குதசை பகுதியை தளர்வடைய செய்து அதன் இறுக்கத்தை குறைத்து புண் ஆறுவதற்கு உதவி செய்கிறது.
கவனிக்க வேண்டியவைகள் ஆசனவாயு வெடிப்பிற்கான வீட்டு வைத்தியம் மற்றும் மலச்சிக்கலுக்கான நிவாரணம் செய்து 10 நாட்களுக்குள் சரியாகவில்லை எனில் அருகில் உள்ள மருத்துவ நிபுணரை அணுகி உரிய மருத்துவம் மேற்கொள்ள வேண்டும்.
Leave a Reply