கவிதை

கவிதை

  • By Magazine
  • |

குளச்சல் ரவிச்சந்திரன்

குடும்பம்

என்னும்

மலர் வளையத்தில்

வாசம் வீசும்

அன்பு

தேவதைகளே

பெண்கள்,

தோற்றுப் போனது

தோல்விகள்

உண்மைதான்,

காலங்காலம்

தொட்டு

கிழக்கும்

மேற்கும்

இதுவரை

சமநீதி

கண்டதுண்டோ?…

இடப்பாகம்

அளித்து-ஈசன்

அர்த்தநாரி

ஆகியும்,

பூசையோடு

பெண்மை

மறுக்கப்படுவது

மாபெரும்

உண்மை,

இந்த ஆண்டு

மார்ச் மாதம்

எட்டாம் தியதி

அன்று,,,,

“உலகெங்கும்

பெண்ணிற்கு

எதிரான

வன்முறைகள்

இன்று

இல்லை” யென

நாளை

செய்தி வந்தால்……

வெற்றிதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *