– முனைவர் மோகனா, பழனி
“நினைவுகள் நம்மை உருவாக்குகின்றன. மறதிகள் நம்மை பாதுகாக்கின்றன.”
மரணிப்பு.. வேதனை -துக்கம் – மறதி!
நமது நெருங்கிய நண்பர்/ உறவினர் ஒருவர் மரணித்துவிட்டால், நாம் வேதனைப்பட்டு துடிதுடித்துப் போகிறோம். துக்கம் நெஞ்சை அடைக்கிறது. அழுது புலம்புகிறோம். அல்லது ஒரு விபத்தைப் பார்த்தாலோ/ கேள்விப்பட்டாலோ, அதே போல மனம் கலங்குகிறது. ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போகிறோம். ஆனால் நாளாக, நாளாக இது குறைகிறது. அல்லது அதனை கொஞ்சம் கொஞ்சமாக மறக்காது துவங்குகிறோம்.இது ஏன்? மறதி இல்லை என்றால், மனிதன் நிம்மதியாக வாழ முடியாது. மனிதன் வாழ்வதற்கான ஒரு கூறுதான் மறதி.
நினைவோ ஒரு பறவை
மனிதன் நினைவுகளின் தொகுப்பு என்று நாம் கூறுகிறோம். ஆனால், நினைவுகளால் மட்டும் மனிதன் உருவாகவில்லை; அவன் மறந்தவற்றாலும் உருவாகிறான். நினைவு என்பது அறிவின் சேமிப்பு எனில், மறதி என்பது அறிவின் வடிகட்டி. மறதி என்பது ஒரு குறைபாடு அல்ல. அது உயிரியல் தேவையுடன் கூடிய ஒரு செயல். மூளை, தேவையற்ற தகவல்களை அழித்து, தேவையானவற்றை மட்டும் பாதுகாக்கும் திறன் பெற்றுள்ளது. இதுவே மனிதனின் அறிவாற்றலுக்கான அடித்தளம்.
மறதி
அறிவியல் ரீதியில், மறதி என்பது ஏற்கனவே சேமிக்கப்பட்ட தகவலை மீண்டும் நினைவிற்கு கொண்டு வர இயலாத நிலை.
நினைவை உருவாக்கும் மூன்று நிலைகள்
1. பதிவு செய்தல் (Encoding)
2. சேமித்தல் (Storage)
3. மீட்டெடுத்தல் (Retrieval) இந்த மூன்றில் ஏதேனும் ஒரு கட்டத்தில் குறைவு ஏற்பட்டால் மறதி நிகழ்கிறது. ஆனால், இது அழிவு அல்ல. அது “செயல்முறை மாறுதல்”.
நினைவுகள் மூளையின் பல பகுதிகளின் ஒருங்கிணைப்பால் உருவாகின்றன.
1. புதிய நினைவுகளின் உருவாக்கம்- Hippocampus
2. உணர்ச்சி நினைவுகள்- Amygdala
3. தீர்மானம், திட்டமிடல்- Prefrontal Cortex
4. பழக்க இயக்கங்கள்- Cerebellum
நினைவு என்பது ஒரு “நரம்புக் கூட்டிணைப்புகளின் உரையாடல் ஆகும். (Synaptic dialogue). ஒரு தகவல் அடிக்கடி பயன்படுத்தப்படும்போது, “Long-term Potentiation (LTP)” ஏற்படுகிறது. பயன்படுத்தப்படாத இணைப்புகள் “Long Term Depression (LTD)” மூலம் பலவீனமடைகின்றன. இதுவே மறதியின் உயிரியல் அடிப்படை.
“சோகமான நிகழ்ச்சி உடனே மனதை ஆட்கொள்கிறது; சில நாட்களில் அது மங்கிவிடுகிறது” இது மனித மூளையின் இயல்பான பாதுகாப்பு செயல்முறை.
இது மூன்று அடுக்குகளால் ஆனது
1. நரம்பியல் (Brain circuits)
2. வேதியியல் (Neurochemistry)
3. நினைவியல் (Memory processing)
உணர்ச்சி எப்படி உருவாகிறது?
ஒரு சோகமான செய்தி வந்தவுடன், முதலில் செயல்படும் பகுதி.

இது எவ்வாறு செயல்படுகிறது?
நமது மூளையில் பல பகுதிகள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகின்றன. குறிப்பாக,
வேதியல் செயல்பாடுகள் மற்றும் உதாரணங்கள்
உதாரணம்: ஒரு நெருங்கிய நபருக்கு நோய் வந்தது என்று தெரிந்தது
சோகத்தின் போது சில முக்கிய வேதிப்பொருட்கள்
கார்டிசால் (Cortisol) இது மன அழுத்த ஹார்மோன் ஆகும் (Stress hormone)
அப்படியென்றால் ஏன் இரண்டு மூன்று நாட்களில்சோக உணர்வு ஏன் மங்குகிறது?
இது மிகவும் சுவாரஸ்யமான பகுதியாகும்.
மறதி எப்படி ஏற்படுகிறது?
மறதி என்பது உண்மையில் அழிவல்ல. அது முக்கியமற்ற தகவலை மூளை ஒதுக்குவது.
முக்கிய காரணங்கள்
ஒரு சோகமான நிகழ்வு நடந்த சில நாட்களில் அதன் தாக்கம் குறைந்து, நாம் இயல்பு நிலைக்குத் திரும்புவது முற்றிலும் இயற்கையான செயல்முறையாகும். இதற்கு நமது மூளையின் நியூரோபிளாஸ்டிசிட்டி (Neuroplasticity) திறனே முக்கிய காரணமாகும்.
Leave a Reply