புன்னகை

  • By Magazine
  • |

நா.சுயம்பு

வலிந்து வருவது புன்னகை அல்ல;

உன்னுள் வழிந்து வருவதே புன்னகை!

கனிந்து

ஊற்றெடுக்கும்

கனியின் சாறு போல்

உவந்து ஊற்று எடுப்பதே

உள்ளத்தின் புன்னகை!

மழையாய் பொழிவதுவானத்தின் புன்னகை;

தென்றலாய் வீசுவது காற்றின் புன்னகை!

அமுதமாய் இனிப்பது

அம்மாவின் புன்னகை ;

அறியாமை விலக்குவது ஆசிரியர் புன்னகை!

வெற்றியில் குளிப்பது வீரத்தின்

புன்னகை ;

வியர்வையில் குளிப்பது உழைப்பின் புன்னகை!

மொழியில் மலர்வது

கவிதையின் புன்னகை;

விழியில் மலர்வது காதலின் புன்னகை!

கடிகாரம் காட்டுவது

காலத்தின் புன்னகை;

கட்டழகு கூட்டுவது

இளமையின் புன்னகை!

மதுக்கோப்பையில் பிறப்பது குடிகாரனின் புன்னகை;

மனக்குப்பையில் பிறப்பது வஞ்சகர் புன்னகை!

நிலவில் ஒளிர்வது

சூரியன் புன்னகை;

நின்று நின்று ஒளிர்வது ஏழையின் புன்னகை!

மலராய் சிரிப்பது மண்மகள் புன்னகை;

மழலையாய் சிரிப்பது ஆண்டவன் புன்னகை!                           

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *