– குமரி எழிலன்
…. கல்வி, தேசுமிக்கது தேச எல்லைக் கடந்தும் பேசப்படுவது, கொடுக்க கொடுக்க வளருமே தவிர குறையாது, பிறரால் திருட முடியாதது, கல்வியால் பெறும்புகழ்
காலம் கடந்தும் நிற்கும்.
புத்தக விரும்பிகளாகிய நேரு விவேகானந்தர், அம்பேத்கர், காந்தி, பகத்சிங், அண்ணா, ஆப்ரகாம் லிங்கன், நெப்போலியன் … போன்றோர், அழியாத கல்வியைப் பெற்று, அவனியை ஆண்டவர்கள் .
“கல்வி, அறிதலுக்கான கருவி, என்கிறார் கல்வியாளர் நேரு”
உலகப் பார்வை
கியூபா பின்லந்து நாடுகளில், ஏழு வயதிற்குப் பிறகுதான் குழந்தைகளை, பள்ளிகளில் சேர்த்துக் கொள்கிறார்கள்.
உலக முழுவதும் மத அமைப்புகள், தங்கள் கருத்துகளை இளம் உள்ளங்களில் பதிய வைக்க, பள்ளிகளையும் மதாலயங்களையும் சேர்த்து நடத்துகின்றனர்.
அரசு, தனியாரிடம், கல்வியைக் கொடுத்து விட்டு, மது விற்பனையை, அரசே நடத்துவது, ஒரு அவலம்தான்.
வள்ளுவரும்வள்ளலாரும்
தோன்றிற் புகழொடு தோன்றுக, என்பதை பிறத்தல் என்று சிலர் பொருள் கொள்கின்றனர், கல்வி அறிவுமிக்கவர்களின் அவையில் தோன்றுவதே, புகழொடு தோன்றுவதாகும்.
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் வகுத்தவற்றுள் எல்லாம் தலை”
நூல்கள் கற்பதன் மூலமே வள்ளலாரின் பகுத்துண்டு ஓம்பும் இவ்வரிய குணம் வரும் என்கிறது வள்ளுவம்.
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் ….
“இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றியான்” என்ற குறள்வழி வாழ்ந்தவரல்லவா?
உணவுக்கல்வி
“மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு – அருந்தியது
அற்றது போற்றி உணின் “ எனும் குறளைக் கற்றவன்
“அற்றால் அளவறிந்து உண்டு, நெடிது உய்க்கும் “ , ஆயபயன் கிட்டியிருக்கும், இதையே
ஒரு போது உண்டவன் யோகி
இரு போது உண்டவன் யோகி
முப்போது உண்டவன் ரோகி
நாற்போது உண்பவன் துரோகி –
எக்கிறது ஒரு சொல்வழக்கு.
“ நோய்நாடி , நோய் முதல் நாடி அது தணிக்கும்
வாய்நாடி
வாய்ப்பச் செயல்”
எனும் பாடலில் மதத்துவம் கற்பிக்கிறார் மறைநூல் மறையவன்.
இல்லறக்கல்வி
இன்பத்துப்பாலில் இரு நூற்று ஐம்பது குறள்களில், ஆம் குறளின் ஐந்தில் ஒரு பகுதியை, இல்லறம் சிறப்பதே நல்லறம் , என்று சித்தரித்துள்ளார், சிந்தனை வள்ளல் சென்றாப்புலவர் வள்ளுவர்.
நிறைவாக்கு
வள்ளுவர் செய் அருங்குறளி ஆயிரத்து முன்னற்று முப்பதையும் கற்றியன் ஆயினும் கேட்க.
தின்குறள்
பக்தியுள்ளோருக்கு இறைவாக்கு
மற்றையோருக்கு
மறைவாக்கு
என்பதே நிறைவாக்கு நன்றி வணக்கம்.
Leave a Reply