ஆழிக்கரையில் ஆசை நுரையோடு

ஆழிக்கரையில் ஆசை நுரையோடு

  • By Magazine
  • |

– ஸ்ரீதர், கோவை

பெ:       ஆறறிலோடும் நீரைப்போல

                துள்ளியாடி வாரேனே

                அமிழ்தம் பொங்கும்

                ஆழிக்கரையோரம் வாரேனே

ஆ:        பாவை அவளைக் காண

                பறக்கும் படகேறி வாரேனே

                கரையில் நிறையும் ஆசை

                நுரையோடு வாரேனே

பெ:       என் தினமலரின் பூக்களானவனே

ஆ:        என் பூக்களின் இதழ்களானவளே

பெ:       என் கருநீல வானம் மழையாய்

                மண்ணில் விழ எழுகிறதே

ஆ         மணலை நனைக்கும் மழையின்

                ஈரம் காதலால் என்னை நனைக்குதே

பெ:       காற்றின் அலையைப் போல

                உணரும் உயிருக்குப் புரிதலானேனே

                அலையை உணரும் கரையைப் போல

                மனதை உணரும் உயிரானேனே

பெ:       கரையின் இறுதிவரை

                அலைகள் இறப்பதில்லை

                நம் வாழ்வின் கடைசி வரை

                கைகோர்த்து வாழ்வோம் வா

ஆ:        உலகம் அழிந்தாலும்

                உதிக்கும் சூரியன் அழிவதில்லை

                வாழ்வின் எல்லை வரை

                நெஞ்சம் சேர்ந்து வாழ்வோம் வா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *