செந்தாமரையின் தாய்மை உள்ளம்! மற்றும் வாழ்வியல் கதைகள் என்ற நூலை எழுதியுள்ளார் முனைவர் செந்துறை. சி. தங்கராசு அவர்கள் சிறுகதை தொகுப்பாக வெளிவந்துள்ள இந்த நூலில்
(1)-செந்தாமரையின் தாய்மை உள்ளம்,
(2)-புனிதவதி வெண்ணிலாவின் புதுமை காதல் வாழ்வு,
(3)-வெள்ளையம்மாளின் அர்ப்பணிப்பு,
(4)- கேள்விக்குறியில் காவேரியின் வாழ்வு,
(5)-கோப்பெருந்தேவியின் நிறைவேறாத ஆசை,
(6)-மலர்மங்கையின் பரிதாப வாழ்வு
(7)- குடியினால் குலமே அறுந்தது
(8)- இறையருளில் இரத்தினவேலு
(9)- ஆசிரியர் -மாணவர்களின் அற்புத உறவுகள் என்ற ஏழு கதைகளிலும் இரண்டு அத்தியாயங்களிலும் வெவ்வேறு பெண்களின் உணர்வுகளையும், பிரச்சனைகளையும், சமுதாயத்தில் அவர்கள் எதிர்த்துப் போராடும் அன்றாட சவால்களையும், அவற்றை எதிர்கொள்ளும் விதங்களையும், அவர்கள் சமுதாயத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ளும் பண்புகளையும், அவர்கள் செய்த அர்ப்பணிப்புகளையும், பிரச்சனைகளையே சாதனைகளாக்கிக் கொள்ளும் தன்மையையும், சமுதாயத்தில் பெண்கள் எதிர்நோக்கி வரும் அன்றாட பிரச்சனைகளையும் திருமணம் என்ற ஒன்று எல்லா மதத்தினரையும் ஆட்டி வைக்கும் விதமும், இதற்கு என்ன தான் வழி என்ற நிலையும் அங்கங்கு இடியும், மின்னலுமாய் தோன்றி மறைகின்றன.
பெண்களுக்கு சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி தெளிவாக பதிவு செய்திருக்கிறது இந்நூல்.
நூல்: செந்தாமரையின் தாய்மை உள்ளம்! மற்றும் வாழ்வியல் கதைகள் !
ஆசிரியர்: முனைவர் செந்துறை சி. தங்கராசு,
பக்கங்கள்: 240/
விலை : 250
வெளியீடு:
மணிமேகலை பிரசுரம், 07,
தணிகாசலம் சாலை,
தியாகராய நகர்,
சென்னை 17
தொலைபேசி: 044-24342926/ 24346082/917645193
Leave a Reply